சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை எடுத்து மேற்கின் ஊடகங்களில் வெளியிட்டனர். நேற்று கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவான மேற்கு ஊடகவியாலாளர்களே அலேப்போ பகுதிகளை அரச படைகள் மீண்டும் கையகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர். குறிப்பாக கிளர்ச்சிப்படை ஆதரவு ஊடகங்களில் ஒன்றான , பி.பி.சி கிளர்ச்சிப்படைத் தலைவரை ஆதாரம்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. சிரிய சுதந்திர இராணுவம் (Free Syrian Army (FSA)
வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத அளவிற்கு தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜபக்ச அரசால் மறைக்கப்படுகின்றது. இவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதால் ஏனையோருக்கு இதுகுறித்த தகவல்கள் தெரியவரவில்லை என்று கருத்துத் தெரிவித்த ஒருவர் குறிப்பிட்டார். வன்முறைகளிலும், கொலைகளிலும், பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபட்ட
வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை செக் குடியரசு மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் வழங்கியுள்ளன. இது தொடர்பான குறுந்தகடுகளை தங்களது தூதரகங்கள் மூலமாக மத்திய அரசிடம் பின்லாந்து, செக் குடியரசு ஒப்படைத்துள்ளன. ஆனால் இதில் உள்ள பல பெயர்கள் பினாமிகள் என்று தெரியவந்துள்ளன. இவர்கள் மூலமாக பணத்தை பதுக்கி வைத்துள்ள முதலாளிகள் குறித்து தகவல் சேகரிக்க வருமான வரித்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுவரை ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், தென்
இலங்கையில் இன்னும் 383 முன்னாள் போராளிகள் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சமாதானத்தை இறுதிப்படுத்தலும், நிலைகொள்ள செய்யலும்” என்ற தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் புனவர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சரணடைந்த போதும், அவர்களை கட்டம்கட்டமாக புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்தி,
சென்னையில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வரும் கட்சித் தொண்டர்கள், தாங்கள் சார்ந்த கட்சியின் கொடிகளையோ, கட்சியின் தலைவர்களின் புகைப்படம் அடங்கிய பேனர்களையோ கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு புறத்தில் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சந்தர்ப்பவாதைனவாதிகளாலும், மறு புறத்தில் ஏகாதிபத்திய ஆதரவு, இலங்கை அரச ஆதரவு சக்திகளாலும் சீரழிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான