Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

இனியொரு... by இனியொரு...
04/23/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
329
Home பிரதான பதிவுகள் | Principle posts

வியட்னாமியப் போராட்டம் குறித்துப் பேசும் போது, கோச்சிமினை நிராகரித்துப் பேசமுடியாது. வியட்னாமியப் போராட்ட வரலாற்றையே அவரின் வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் அது மிகையற்றது.

ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.

தேசியத் தலைவர், சூரியத்தேவன், கடவுளின் மறு அவதாரம், போன்று நூற்றுக்கணக்கான அடை மொழிகளுக்குள் பிரபாகரனை முக்கியப்படுத்திய ஒரு பகுதி, அதிலும் பெரும்பான்மையான பகுதி, தூய தேசியவாதிகள் பிரபாகரன் மரணித்துப் போனதைக் கூட நம்ப மறுக்கிறார்கள்.

இதன் மறுபுறத்தில் இன்னொரு பகுதியினர், பிரபாகரன் ஒரு மன நோயாளி, கோரமான மிருகம், மன்ன்னிக்க முடியாத கொலையாளி என்ற தலையங்களில் அவரைச் சுற்றிய ஒரு விம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

இதில் இந்த இரண்டு பகுதியனருமே பிரபாகரன் ஆரம்பத்திலிருந்தே வரித்துக்கொண்ட அரசியல் குறித்தும் சமூகத்தின் மீதான அதன் ஆளுமை குறித்தும், ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் பேச மறுக்கின்றனர்.

எழுபதுகளின் ஆரம்பங்களில் பிரபாகரன் என்ற தனிமனிதன் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் அரச சார்பான தனி நபர்களைக் “களயெடுப்பதை”த் தனது விடுதலைக்கான வழியாக வரித்துக்கொள்கிறார்.

70 களிலிருந்து தேசிய அலை தமிழ்ப் பேசும் இலங்கையர்கள் மத்தியிலிருந்து எழுச்சி பெறுகிறது. இந்தத் தேசிய அலையானது ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தையும் கொண்டிருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடரும் பெருந்தேசிய வாதம் இலங்கையின் பிரதான முரண்பாடாகத் தேசிய முரண்பாட்டை உருவாக்கின்றது.

தீர்மானகரமான முரண்பாடாக உருவாகும் தேசிய இன முரண்பாற்கான தீர்விலிருந்தே இலங்கை மக்களின் விடுதலை என்பது சாத்தியமானது என்ற நிலைக்கு இலங்கையின் புற நிலை யதார்த்தம் காணப்பட்டது.

தேசிய இன முரண்பாட்டைக் கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று இடதுசாரிகளிடம் காணப்பட்டாத நிலையில் பிரபாகரன் போன்ற தன்னிச்சையான போராளிகள் உருவாகின்றனர்.
சமூகத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் அதன் இருப்பிலிருந்தவாறே ஏற்றுக்கொண்டு அதனைப் பாதுகாப்பதற்கான இராணுவத்தைக் கட்டமைப்பதே பிரபாகரன் முன்வைத்த அரசியல்.

இது குறுந்தேசிய வாத அரசியல் என்று அதன் அடிப்படையான உள்ளர்த்தில் கூற முடியாவிட்டாலும் அதனைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியலாக மாற்றமடைகிறது.

பிரபாகரன் உருவாக்க எண்ணிய சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் பாதுகாக்கும் இராணுவக் குழுவைக் கட்டமைக்கும் அரசியலுக்குப் பிரபாகரன் ஒரு போதும் துரோகம் செய்தவரல்ல. ஆனால் பிரபாகரனின் வரித்துக்கொண்ட அரசியலின் அடிப்படையே சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் பிரிவுகளுக்கு அதன் மேலணிகள் இழைத்த துரோகங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டது.

துரோகிகளைக் களையெடுக்கும் பிரபாகரனின் வழி முறை சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்கான இராணுவ வழிமுறைக்கு எதிரானதாகக் கருதப்பட்ட அனைவரையும் அழிக்கும் அரசியல் செயற்பாடாக முன்னெடுக்கப்படுகிறது.

தான் சார்ந்த அமைப்புக்களின் போராளிகளை, இராணுவக் கட்டமைப்பிற்கு எதிரான உட்கட்சி ஜனநாயகத்தை விரும்பியவர்களை அழிக்கும் பிரபாகரனின் அரசியல் இந்திய மேலாதிக்க நலன்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கும் உகந்தாக அமைய அவர்களின் ஆதரவைப் பிரபாகாரன் சார்ந்த அரசியலைக் கொண்ட அமைப்புப் பெற்றுக்கொள்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் இவ்வாறு சொல்கிறார்:

“நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.”

இந்திய நலன்களுக்கு அடிப்படையில் எதிரியாக அமைந்திராத பிரபாகரனின் அரசியல், அதாவது சமூகத்தின் பிற்போக்கான இருப்பைப் பாதுகாக்கின்ற அரசியல் இந்தியாவினால் வளர்க்கப்பட்டது. சமூகத்தின் பிற்போக்கான கூறுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், வெற்றியை நோக்கிப் போராட்டத்தை வழி நடத்த முயன்ற அனைத்துப் பகுதிகளையும் அது அழிவிற்கு உட்படுத்தியது.

போட்டி இராணுவக் குழுக்களாக வளர்ச்சியடைய முற்பட்ட ஏனைய அமைப்புக்களை அழிப்பது என்ற போர்வைக்குள் கோரமான கொலைகளை நிகழ்த்தியது.

ஒரு ஏகபோக இராணுவ அரசிற்கு உரிய சிறைக் கூடங்கள், வதை முகாம்கள், கொலைப்படைகள் போன்ற அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. உயிரோடு எரிக்கப்பட்ட போராளிகள், இருட்டு அறைகளில் இறந்து போனவர்கள் போன்ற ஆயிரம் துயரச் சம்பவங்களைக் கொண்டது இந்த புலிகளின் இராணுவம்.
தனது இராணுவ நலனுக்காக தமது சொந்த நிலங்களிலிருந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கபட்டிருக்கிறார்கள். கிழக்கில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல சிங்கள அப்பாவிகள் ஏன் கொல்லபடுகிறோம் என்று தெரியாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஏனைய இயக்கங்களுக்கும் பிரபாகரன் வழிநடத்திய புலிகளின் அரசியல் திசை வழியில் பெரிதான முரண் ஏதும் இருந்ததில்லை. 83 இற்குப் பின்னான காலம் முழுவதும் அறியப்பட்ட எந்த தேசிய விடுதலை இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பகு கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

எது எவ்வாறாயினும் ஏனைய இயக்கங்களின் உள்ளகக் கட்டமைப்பில் காணப்பட்ட குறித்தளவான ஜனநாயகக் கட்டமைப்பானது, குறித்தளவிலான முற்போக்கு சக்திகளையும் கொண்டிருந்தது. இந்திய அரச பின்புலத்தில் புலிகளால் இவர்கள் அழிக்கப்பட்ட வேளையில் இந்த முற்போக்கு அணியே அதிகமாக அழிந்து போனது.

புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த வெகுஜன அமைப்புக்கள், மக்கள் குழுக்கள் புலிகளின் அங்கங்களாக பலவந்தமாக இணைக்கப்பட்டன.

ஏனைய இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு அணிகள் இலங்கை அல்லது இந்திய அரசுகளின் துணைப்படைகளாக மாற்றமடைந்தன. இப்போது தமிழ்ப் பேசும் மக்களின் தலைமை புலிகள் ஒருபுறத்திலும் மறு புறத்தில் அரச ஆதரவு புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிற்போக்கு அணிகள் வசமானது.

இந்த இரு அணிகளும் நிகழ்த்திய இராணுவத் தர்பாரில் அழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் தமிழ்ப் பேசும் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் பெருந்தேசிய அடக்குமுறையின் பாதிப்பிற்கு உள்ளானவர்களே.
தமிழ்ச் சமூகத்தின் இருப்பைப் பேணுவதற்கான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரனின் அரசியல் மக்களின் அழிவோடு முள்ளிவாய்க்காலில் கரைந்துபோனது.

இதை விடுத்து பிரபாகரனினைக் கடவுளாக்குவதும், சூர்யத்தேவனாகப் புனைவுகளைக் கட்டமைப்பதும் அழிவுகளை அங்கீகரிப்பதாகும். தவிர, பிரபாகரனின் அரசியல் ஏற்படுத்திய அழிவுகளை விமர்சிப்பதை விடுத்து பிரபாகரனை வெறுமனே துரோகியாகவும் மன நோயாளியாகவும் சித்தரிப்பது சமூகப்பற்றற் செயற்பாடாகும். பழிக்குப் பழி என்ற, இரத்ததிற்கு இரத்தம் என்ற நிலப்பிரபுத்துவ குழு மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.

prabhakranபிரபாகரன் முன்வைத்த அரசியலின் மிகப் பெரும் துரோகம் என்பது ஒரு நியாயமான போராட்டத்தை அழித்தததாகும். பிரபாகரன் தியாகியா துரோகியா என்ற தனி நபர் வாதங்களுக்கு அப்பால் அவரின் அரசியல் இழைத்த துரோகம் என்பது தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைப் பலவருடங்கள் பிந்தள்ளியிருக்கிறது.

பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்ப்பட வேண்டும். அதன் வெளிச்சத்திலிருந்தே புதிய போராட்டம் சரியான நெறியைக் கண்டறிய முடியும்.

பிரபாகரன் அரசியலின் மீள்கட்டமைப்பென்பது மறுபடி ஒரு முறை அரசியல் துரோகத்தை அரங்கேற்றுவதாகும்.

கூட்டம் கூட்டமாகத் தமிழ்ப் பேசும் மக்களை அழித்துப் போட்டுவிட்டு அவர்களின் அடையாளத்தைச் சிறுகச் சிறுக அழித்துக்கொண்டிருக்கும் கொடிய பேரினவாத இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைத் புதிய வழிகளில் மக்கள் பற்றுள்ளவர்கள் திட்டமிடத் தவறும் துரோகம் நிகழுமானால் பிரபாகரனின் உயிர்ப்பு தவிர்க்க முடியாதாகிவிடும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விமலேஸ்வரன் அஞ்சலி நிகழ்வு

Comments 329

  1. muunjsooru, says:
    16 years ago

    பிரபாகரன் தியாகியா துரோகியா? என்ற கேள்வியை கட்டுரையாளர் எழுப்பியிருந்தாலும் அவர் ஒரு முடிவுக்கு வந்து எழுதிய கட்டுரையாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது, பிரபாகரன் கொடுமையானவர் என்னும் தீர்ப்பை எதிர்பார்த்து மோசமான மனநோயோடு கட்டுரையாளர் அஜித் தனது பக்கம் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார் என்பது மட்டும் பளிச்சென புலப்படுகிறது, அவருக்கு கூறக்கூடிய அறிவுரை ,உலக நடவடிக்கைகளை நோக்கி அதிலிருந்து அனுபவரீதியாகக்கிடைப்பதுதான் யதார்த்த அரசியல் “ஊரோடு ஒத்தோடு தனியொருவனாக ஓடுவதானால் கேட்டோடு என்பதுதான்,

    • mamani says:
      16 years ago

      பிரபாகரன் துரோகியல்ல ஆனால் இரும்பையும் , வெடிமருந்தையும் நம்பி வாழ்ந்த ஒருவரிடம் எமது போராட்டம் சிக்குண்டு சின்னாபின்னமாகி விட்டது. ஆனால் போராட்டம் முற்றாக ஒடுக்கபடுமேயானால் பிரபாகரன் அந்த வகையில் ஏகபிரனிதித்துவ துரோகியாக கருதப்படலாம். தனி மனித வழிபாடு எவ்வாறு தவறானதோ அவ்வாறே தனி மனித தூற்றலும் தவறானது.

      • saravanan says:
        16 years ago

        நீர் செய்வது தனிமனித தூற்றுதல் தானே.உன்னை திருத்து உலகம் தானாக திருந்தும்

    • a voter says:
      16 years ago

      உலக நடவடிக்கைகளை நோக்கி அதிலிருந்து அனுபவரீதியாகக்கிடைப்பதுதான் யதார்த்த அரசியல்

      — Re inventing the wheel. 🙂

  2. Vijey says:
    16 years ago

    இப்போது தமிழ்ப் பேசும் மக்களின் தலைமை புலிகள் ஒருபுறத்திலும் மறு புறத்தில் அரச ஆதரவு புலி எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிற்போக்கு அணிகள் வசமானது. இது முரண்படும் பகுதி? புலிகள் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள்.

    பழிக்குப் பழி என்றஇ இரத்ததிற்கு இரத்தம் என்ற நிலப்பிரபுத்துவ குழு மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.
    அவ்விடயம் குறித்து அதாவது தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளிடத்தில் நிலவிய நிலப்புரபுத்துவ சிந்தனகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கிறது.

    எது எப்படியோ .. வட கிழக்கில் மக்கள் புலிகள் இன்னமும் இயங்குவதாகவே கருதுகிறார்கள். பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக ஒரு தாக்குதலையாவது அவர்கள் மேற்கொள்ளமாட்டார்களா எ ன ஏங்கிக்கிடக்கிறார்கள்.
    விஜய்

    • ala says:
      15 years ago

      வடகிழக்கில் இன்னும் புலிகள் இயங்குவதாகவும் இன்னும் ஒரு தாக்குதலயாவது மேற்க்கொள்ளுவார்களா என்று ஏங்குவதாக நிங்கள் சொல்லலாம் அதை மக்கள் ஏங்குவதாக சொன்னிர்கள் பாருங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையிலும் குறிப்பாகக ஒரு விடயம் சொல்ல ப்பாட்டது அதுதான் அகதி அந்தஸ்துடன் வெளிநாடுகளில் குடிஎறிவாலும் தமிழர்கள் புலிகளை போராட்டத்துக்கு ஊக்குவிப்பதில் தான் இருந்தார்கள்  என்று அப்படி இலங்கையில் புலிகள் இருந்தால் தான் இவர்கள் வெளிநாடுகளில் அகதியாக சொகுசுவாழ்க்கை வாழ முடியும் நிங்களும் இதுபோல வெளிநாட்டில் வால்பவராகலாம் அதனால் தான் இலங்கையில் இன்னும் ஒரு தாக்குதலையும் அழிந்தது போக மீதி சந்தோசத்துடன் முப்பது வருட பயம் போய் இன்று நிம்மதியாக வாழும் மக்களின் சந்தோசம் கேட்டுப்போகவேண்டும் என்று விரும்புகிறீர்கள் 

      • kingsley says:
        15 years ago

        Who is living happily in Sri lanka (Military?)

  3. moonjsooru, says:
    16 years ago

    மேதகு வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்கள், வீரமறவன், சூரியத்தேவன், உலகத்தமிழர்கள் எல்லோரும் தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதால் ,தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட மூச்சுக்காற்று, தமிழர் என்றொரு இனம் உலகில் வாழ்கின்றதென்பதை வெளிக்கொண்டுவந்த விடிவெள்ளி, வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்,

    • vijay says:
      16 years ago

      Super, sariyana pathiladi…

    • raavan says:
      15 years ago

      arumaiyaana karuththu…!!

  4. பிச்சைக்காரன் says:
    16 years ago

    பிரபாகரன் அவர்களை தவிர்த்துவிட்டு , ஈழ போராட்டத்தை பேச முடியாது.
    அதே போல அமைதி புயல் அமிர்தலிங்கம் ,சீரிய போராளி சிறீ.சபாரத்தினம் , உண்மை போராளி உமா மகேஸ்வரன் ஆகியோரையும் மறக்க முடியாது

    • ramohan says:
      16 years ago

      அனைத்து விடுதலை அமைப்புகளும், அதன் தலைவர்களும் துரோகிகளே,
      இவர்கள் எல்லோரும் மக்களுக்கு செய்த துரோகத்தை மறக்கமுடியாதது.

      • mamani says:
        16 years ago

        அனைத்து அமைப்புக்களும் துரோகிகள் என்றால் நீங்களும் துரோகிதான்
        ஏனெனில் அதில் ஏதோ அமைப்பை ஏதாவது ஒரு வகையில் பிரதிநிதித்துவ படுத்தியிருப்பீர்.

        • saravanan says:
          16 years ago

          அப்ப நீர் ??

          • mamani says:
            16 years ago

            அப்படி யாருமே துரோகியல்ல என்பதைதான் கூற வந்தேன்.

    • ala says:
      15 years ago

      அது தானே ஒரு தேசியவாதி ஆனால் தன்போன்ர மற்ற தலைவர்களை எதற்கு கொள்ளவேண்டும் தான் மட்டுமே தலைவனாகவேண்டும் தன்னை நியாயம் அநியாயம் என்று எதை பேசினாலும் வர்களையும் கொல்லுவது புலிகள் ஐயத்தில் இருந்து    தனது நெருங்கிய தலைவர்களை எல்லாம் கொள்ளவேண்டிய அவசியம் என்ன ???

  5. Soorya says:
    16 years ago

    ” ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமை, அதிகாரம், துரோகம், வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.”
     
    கட்டுரையாளர் மிகச் சாதுரியமாக துரோகம் என்ற பதத்தையும் இணைத்துள்ளார். 
    ஒரு நியாயமான போராட்டத்தை அழித்ததது பிரபாகரனா? இதை முதலில் விளங்கிக்கொள்ளாமல் கட்டுரை எழுதத் தொடங்குவது பாடசாலைக்குப் போகாமல் பரீட்சை எழுதி பட்டம் வாங்கலாம் என்று பகல் கனவு காண்பதுபோல் உள்ளது.

    • ramohan says:
      16 years ago

      பிரபாகரனே இதில் என்ன சந்தேகம், சூர்யா…
      பிரபாகரன், யாழ் மேட்டுக்குடி புத்திஜிவிகளின்,
      என்னத்தின் பிரதிபலிப்பாக செயற்பட்டார்,
      அவர்கள் நினைத்ததை இவர் செய்து முடித்தார்,
      பிரதேசவாதத்தை மேன்மைப்ப்டுத்தி அழகு பார்க்கும்
      யாழ்தேசியவாதிகளின் வக்கிரகுணத்தை கண்டுகொண்ட
      பிரபாகரன், அவர்கள் இழைத்த துரோகத்தையும் புரிந்துகொண்டார்,
      (துரோகத்திற்கே துரோகமா!)அவர்களை பழிக்குப் பழிவாங்க
      அவர் எடுத்த ஆயுதம் -துரோகி- யாழ்தேசியவாதிகளில்
      ஆரம்பித்த கொலைவெறி பின் இலங்கைவாழ் புத்திஜீவிக்ள்,
      அறிவாழிகள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள்,
      பொதுமக்கள் என தொடர்ந்து, முள்ளிவாய்க்காலிள் முடிவுற்றது,
      -துரோகியாக-

    • raavan says:
      15 years ago

      மோடன் பீயில மிதிச்சா எத்தினையோ இடத்துக்கு சேதமாம்…இப்டிதான் பாஸ் இவங்கள்.ஊரில சுவரில கரிக்கட்டியால பொடி பெட்டையளுக்கு சோடி கட்டினவைக்கு,இப்ப ஒரு இணையமும்,பிரபாகரனும் கிடைச்சிருக்கு.சும்மா விடுவினமோ??

  6. JAMES FRIEDRICH says:
    16 years ago

    மறவர்கள் “கனைக்கால் இரும்பொறை” போல்(நடிகர் கருணாஸ்!?) தலைவணங்கி அடிப்பணிய மாட்டார்கள் என்பது சுத்த “ஹம்பக்”!.பிரபாகரனோ,வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களோ, கரையார்களோ,”மறவர்கள் இல்லை”!.காலங்காலமாக அவர்கள் சுதந்திர போராட்த்திலோ,ஆயுத”அரசியலிலோ”,ஈடுபடவில்லை!.மீன்பிடி தொழிலுக்கே உள்ள உடல் வலிமை,கஷ்டங்களை ஏற்கும் திறன்தான் இதில் தொழில்பட்டது(ஆராய்க). தமிழ்நாட்டில் மறவர்கள் என்று கூறப்படும்,”வன்னியர்கள்,முக்குலதோரின்” வீரம்? அன்னியபடையெடுப்புகள்,ஐரோப்பியர் வருகையுடன் காலாவதியாகிவிட்டது.அதற்கு காரணம்,”ஜாதி அமைப்பின் சமூக பொறுப்புகள்” நீர்த்துப் போனது!,அன்னிய வருகைகளுக்கு தகுந்த மாதிரி விசுவசங்கள் மாறியது.பிராமணர்கள் என்பதும் அவர்களுக்கான சலுகைகள் என்பதும்,தற்போது மேற்குலகில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுக்கான மானியங்களின் பங்கே வகித்தது.அதற்கான சமூக பொறுப்பு பிராமணர்களுக்கு நீங்கிய பிறகு அவர்களுக்கான (பசு)சலுகைகள் தேவையில்லை.”செட்டியார்கள்” சமூகத்தின் பொருளாதார உற்பத்திக்கு ஆதரவாக மற்ற ஜதிகளின் அரவணைப்பை பெற்றவர்கள் ஆனால் தற்போதைய எச்சில்கையால் காக்காய் ஓட்டாமல் சொத்து சேர்க்கும்(புலுட்டோகிராஸி),சமூக பொறுப்பற்ற,சமூககடமைக்கு, ஜாதி அமைப்பு ஒத்துழைப்பது அநியாயம்!.”பரையர்கள் ,பள்ளர்கள்”..தங்கள் தொழில்களில் கவுரவக்குறைவு என்பது சிலநூற்றாண்டு என்றாலும்(ஆராய்க),பரிணாம வளர்ச்சியில்,ச்மூக நீதி போராட்டங்கள் மூலம் பல நன்மைகள் அடைந்து வந்தார்கள்,ஆனால்,திராவிட இயக்கங்களின் கத்தோலிக்க(கிருஸ்தவ?) ஆதரவு அதன் மூலம்,மேற்குலக இந்திய வரலாற்று திரிபுகளில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட “பரிதாப உணர்வு” போன்றவை மேற்குலக(என் ஜி ஓ) அதிகாரங்கள் விரிவாக்கத்தின் கைப்பாவையாக செயல்படும் நிலை வந்துள்ளது!.ஆகையல் “மறவர்கள்?” என்பவர்கள் “இந்தியா முழுவதும்”,மேற்குலக “இந்துமத – புத்தமத” திரிபுகளில் சிக்கி,தனிமைப்படுத்தப்பட்டு “பரிதாபகரமான” நிலையில்,பொருளதார,சமூக நிலைகளில் உள்ளனர்!.இந்த மேற்குலக தரவுகளில்,வீரபாண்டிய கட்டபொம்மன்? வசனம் பேசி தங்களை தாங்களே சிக்கவைத்துக் கொண்ட இலங்கைத்தமிழர்களின் நிலை மேலும் பரிதாபம்.முதலியார்கள்,வெள்ளாளர்கள் என்பவர்களும் விசுவாசங்களை மாற்றிக் கொண்டு,சமூக பொறுபிலிருந்து எஸ்கேப் ஆகி,நிர்வாகம்(சட்ட) புலிவியபாரம் போன்றவற்றின் மூலம் கொடுமையான காட்டிக் கொடுப்புகளை செய்துள்ளனர்?(ஆராய்க). மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று ஒன்று இல்லை!.அவர் பெயர் பொம்முலு நாயக்கர்.பல சுதந்திர போராட்ட வீரர்களின்? பரிதாபங்கள் இதனால்(அதிக சத்தத்தால்) மறைக்கப்பட்டு விட்டது.இது இயக்குனர்.ஆர்.பந்துலு மற்றும் கதைவசன கர்த்தா சக்தி ஆர் கிருஷ்ணசாமி ஆகியோரால் செய்யப்பட்ட குசும்பு வேலைகள் ஆகும்!.

    • xxx says:
      16 years ago

      கொட்டைப்பாக்கு இடுகை மீன்டுவிட்டது.
      பராக்! பராக்!! பராக்!!!

    • S.G.Raghavan (Canada) says:
      16 years ago

      ஜேம்ஸ் உமக்கு எதோ பிரச்சினை சாதிய பிரச்சினையா? மத பிரச்சினையா? எதையாவது தெளிவாகவும் யதார்த்தமாகவும் கதைத்து பழகவும் பினாத்தாதீர்கள். உங்களை போன்ற பினாத்திகளாலும் தொங்கு தசைகளாலும் மற்றும் தகட்டு (அண்டி பிளைத்தல் – உ + ம்: தகட்டு தினேஷ் – தமிழ்ச்செல்வன்) பன்னிகளாலும் போராட்டம் தலை கீழாக மாறியது.

    • mamani says:
      16 years ago

      வெள்ளைகார கிருஸ்தவன் காலை நக்குவது சிலருக்கு கை வந்த கலை.

    • raavan says:
      15 years ago

      டேய்….இங்க பாருங்கடா…இந்தாளும் ஏதோ கதைக்குது…நீ கேளேன் மச்சான்…நீ கேளு…அடநீ கேளு மச்சான்(நடிகர் கருணாஸ்)

  7. Shiva says:
    16 years ago

    “தேசிய இன முரண்பாட்டைக் கையாள்வதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று இடதுசாரிகளிடம் காணப்பட்டாத நிலையில் பிரபாகரன் போன்ற தன்னிச்சையான போராளிகள் உருவாகின்றனர்.” — இது மிகையாக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு விளக்கம்
    இடதுசாரிகள் தமிழர் அரசியலில் எவ்வாறு தமிழ்த் தேசியவாதத்தால் ஒரங்கட்டப் பட்டனர் என்பதையும் இடதுசாரிகள் தமிழ்த் தேசிய அலையின் முன்பு தாக்குப்பிடிக்க இயலாதநிலையிலுமெ இளைஞர் இயக்கங்கள் எழுச்சி பெற்றன.
    இடதுசாரிகள் மட்டுமல்ல, எவருமே, பிரிவினைக் கோரிக்கையை மறுத்து, நிதானமான ஒரு பார்வையை விருத்தி செய்ய இயலாத அன்றைய சூழலை நிதானமாக ஆராய்வோம்.

    “பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம் துப்பாக்கி தூக்காத பிரபாகரன்” என்பது தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிப் போக்கின் ஒரு அளவுகோல்.
    பிரபாகரனும் புலிகளும் மட்டுமல்ல: வேறெந்த முக்கிய தமிழ்ப் போராளி அமைப்புமே புலிகளினின்று வித்தியாசமாக நடந்திருக்கும் என நம்ப இடமில்லை.

    என்.எல்.எப்.டி. போன்ற அமைப்புக்கள் இடதுசாரிப் பாரம்பரிய உரிமை கோரியவை. அவை மேற் கூறிய மாற்று வழியைக் கூறவில்லையா?
    பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் பழி சுமத்திவிட்டுப் பிற தமிழ்த் தேசியவாதிகள் நழுவ இயலாது.

  8. KRISHNAN says:
    16 years ago

    போராட்டம் மீள்கட்டமைப்பு செய்யபட வேண்டும். பிரபாகரன் தவருகளில் இருந்து பாடம் படித்துக் கொண்டு தான் முன்னேற வேண்டும். அது உண்மை

  9. Mahendra says:
    16 years ago

    “பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்பட வேண்டும்” என்ற தன் இடுகைமூலம் மக்களை ஒரு மயக்கநிலைக்குள் வைத்து பிரபாகரன் துரோகிதான் என்பதை வலியுறித்திக் காட்டமுயல்வது அப்பட்டமாக தெரிகிறது. இந்த அஜித் என்பவர் உறங்குவதுபோல் நடிப்பவரே அன்றி உறங்குபவர் அல்ல.

    “முற்றாகவே அரசியலற்ற பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார்” என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான பாரத்குமார் கூறியிருந்தால் அது எட்டாப்பழம் புளிக்கும் என்ற கூற்றிற்கு நிகரானதே.

    பெரும் படைவலிமையும், அரசியற் பலமும், பிறநாடுகளின் உதவியும்கொண்ட மிகப்பெரிய நாடான ஈராக்நகரை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது ஒருசில நாடுகளின் உதவியே. ஆனால் உலகில் குன்றுமணி அளவிலான இலங்கைத்தீவில் ஒரு புள்ளியாகத்தெரிந்த பிரபாகரனின் படையை அழிப்பதற்கு அணுசக்திப் பலம்கொண்ட நாடுகளுடன், வல்லரசு நாடுகளும் இணைந்த 28 நாடுகளின் ஆயுதங்களும், அறிவுரைகளும் சிறீலங்காவிற்கும், இந்தியாவிற்கும் தேவைப்பட்டதே… இது எதனை வெளிப்படுத்தி நிற்கிறது?. அரசியல் அறிவும் அதன் நுட்பமும் இன்றி, வெறும் படைபலம் மட்டுமே பிரபாகரனிடம் இருந்திருக்குமானால் பிரிந்துபோன கருணாவே அதனை அழித்திருப்பான்.

    கொடிய பேரினவாத இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைத் புதிய வழிகளில் மக்கள் பற்றுள்ளவர்கள் திட்டமிடும் வேளைகளில் அதற்கு எதிராக செயற்படும் சந்தர்ப்பவாதிகளான, புலிவேடமிட்டு உலவிவரும் பினாமிகளுக்கும், தமிழின விரோதிகளுக்கும் முண்டுகொடுக்கும் வகையில் இடுகைகளை மேற்கொள்ளும் அஜித் போன்றவர்கள் சாதிக்கப்போவதுதான் என்ன?.

    தமிழன் என்று ஆரியத்தால் உள்வாங்கப்பட்டு அடிமைப்பட்டானோ அன்றே நாய்வால்போல் சுருண்டுவிட்டான், அப்படி சுருண்டவனையே நிமிர்த்திக் காட்டியவன்தான் தேசியத் தலைவன், சூரியத்தேவன், இது அவனைத்தவிர வேறு எவராலுமே இயலாத பெரும் செயற்திறன். அவனுடைய ஒளி என்றுமே அணையாது. முள்ளிவாய்க்காலில் ஆயிரங்கள் அகோரமாக அழிக்கப்பட்டது. அதன் வேதனை சாகும்வரை தீராது, ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இன்று உலகில் கோடியாக சூரியத்தேவன் தேடிய தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களால் தமிழர் வாழ்வு நிச்சயம் விடியும். ,

    • moonjsooru, says:
      16 years ago

      மேதகு வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்கள், வீரமறவன், சூரியத்தேவன், உலகத்தமிழர்கள் எல்லோரும் தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதால் ,தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட மூச்சுக்காற்று, தமிழர் என்றொரு இனம் உலகில் வாழ்கின்றதென்பதை வெளிக்கொண்டுவந்த விடிவெள்ளி, வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்,mm

    • son says:
      16 years ago

      அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது ஒரு சில நாடுகளே,உண்மைதான் ஐரோப்பா,அவுஸ்ரேலியா ,கனடா,பிரித்தானியா,இந்தியா,பாகிஸ்தான், தென்கொரியா ,சௌதி,குவைத் போன்ற சில நாடுகளே,புலிகளுக்கெதிராக தென்னாபிரிக்கா,பாகிஸ்தான்,சீனா,அமேரிக்கா, போன்ற பல நாடுகள்,இங்கு கவனத்துக்குரியது அமெரிக்காவின் தாக்குதலின் போது எந்தா நாடும் இராக்கையோ அப்கானிஸ்தானையோ ஆதரித்து குரல் கொடுக்கவில்லை, தமிழருக்கு தமிழர் வாழும் நாடுகள் குரலாவது கொடுத்தன.இராக்கை அமேரிக்கா ஆக்கிரமித்ததற்கு தகுந்த ஆதாரபூர்வ,நிரூபிக்கப்பட குற்றச்சாட்டு இல்லை,வேறொரு நாட்டு ஆக்கிரமிப்புக்கே உலகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,உள்நாட்டு கலவரமாயின் எல்லா நாடுகளும் சட்டபூர்வ அரசையே ஆதரிக்கும்,சிறந்த அறிவாளி,தொலைநோக்கு கொண்ட,சிறந்த உளவுத்துறையை கொண்ட புலிகளால் இதையெல்லாம் அறிந்துகொள்ள முடியாமல் போனதோ???உலகத்துக்கு தமிழரை 1600 களிலேயே தெரியும்,பயங்கரவாதிகள் என்பது 2006 இற்கு பின்பே தெரியும்,அதற்கு முன் இரு நாட்டு அமைச்சர்,அதிபர்களை கொன்ற கொலைகாரராகவும் தெரியும்.வீரர் என்று நாங்கள்தான்,எங்களை வைத்து பயமுறுத்தி தங்களை வளர்த்தவர்கள்தான் சொல்லிக்கொள்கிறோம்.நியாயமான போராட்ட்டத்தை அழித்துவிட்டு தலைமை,தலைமை என்று அடிமை வசனம் பேசும் அடிமையானதும் இந்தப்போராட்டத்தில்தான்.

    • ramohan says:
      16 years ago

      /அரசியல் அறிவும் அதன் நுட்பமும் இன்றி, வெறும் படைபலம் மட்டுமே பிரபாகரனிடம் இருந்திருக்குமானால் பிரிந்துபோன கருணாவே அதனை அழித்திருப்பான். /

      புலிகளின் அழிவிற்க்கு கருணாவும், கிழக்குப் போராளிகளும் பிரிடந்து போனதால்தான், அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு.

      • Soorya says:
        16 years ago

        தருணம் பார்த்துக்கொண்டிருந்த கருணா பிரிந்து போகவில்லை விலைக்கு வாங்கப்பட்டார்.
        பல கிழக்குப் போராளிகளுக்கு கருணாவுடன் போவதைவிட வேறு வழி இருக்கவில்லை.

        • sAm says:
          16 years ago

          சூர்யா ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள மறுக்கு றீர்கள்.. கிழக்கு மக்களைக் கால காலமாக அடக்கி ஒடுக்கிய இரண்டாம்தர பிரசைகளாக நடத்திய யாழ்பாண மக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?

          • S.G.Raghavan (Canada) says:
            16 years ago

            தொம்பி சாம் யாழ்பாண மக்களை வம்புக்கு இளுத்து மட்டக்களப்பு மக்களுடன் மோத விட உனக்கு விருப்பமோ? அல்லது உனக்கு யாரும் தமது நிகழ்ச்சி நிரலை விற்பதற்க்கு பணம் தந்தவர்களா? கூழ் கதை கதையாதையும். புலிகளில் உள்ள சில்லா பன்னிகள் கருணா உட்பட விற்ற நாறல் மீன் தான் பிரதேச வாதம். இதனை ஈழத் தமிழர்கள் பலர் பிரதேசம் கடந்து செய்தனர் மட்டகளப்பான், யாழ்பாணி, வன்னியான் சுண்…… யான் என்பன எங்கள் அனைவரினதும் நாய் குணமாகும்.

          • S.G.Raghavan (Canada) says:
            16 years ago

            தமிழ்மாறன்
            லண்டனில் வெள்ளக்காரர் தம்மை நோதேர்ன் என்றூம் சதேர்ன் என்றூம் அழைபதைப் பார்த்திருக்கிறேன்.இதையே ஸ்பெயின், இத்தாலியர்களீடமும் கண்டிருக்கிறேன்.இவையெல்லாம்நோமலானவை.ஆனால் தன்னை மேதாவியாகக் கருதி தனது தமிழனை மனிதனாகவே கருதாத இழி குண்ம் தமிழரிடமே அதிகம்.

            மட்டகளப்பான், யாழ்பாணி, வன்னியான் சுண்…… யான் என்பன எங்கள் அனைவரினதும் நாய் குணமாகும்.
            //எஸ் .ஜீ.ராகவன்

            ஒரு திருத்தம் யாழ்ப்பாணிகளின் நாய்க் குணம். மற்றவர்களை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
            *சாம்*
            திரு சாம் அவர்களே தயவு செய்து இப்படி எழுதாதீர்கள். சில யாழ்ப்பாணிகள் உயர் பதவியில் இருந்து கொண்டு மற்றவர்களை மதிக்காமல் நடந்தார்கள் விடுதலை புலிகளிட்குளும் இதுதான் நடந்தது. புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி தமிழில் கதைப்பதில்லை மற்றவர்களை மடையனாக நினைத்து அம்மண வார்த்தைகளாக கதைபாராம். புலிகளில் இருந்த பல உயர் மட்டங்கள் அப்படித்தான். பிரபாகரன் அப்படி கதைப் பதில்லை. தமிழர்கள் தமிழ் என்பவற்றின் மீது இருந்த பற்று இனத்துவ சிந்தனை என்பன காரணமாக பிரபாகரன் ஈழ விடுதலையை ராணுவ ரீதியில் வென்றெடுத்த பின் சமுக மாற்றத்தை உண்டாக்கலாம்என கனவு கண்டார். இதனால் சமுக சமய பிரதேச வர்க்க சாத்திய வேறுபாடுகளை களைந்து அதனுடன் இணைந்த ஆயுத போராட்டத்தில் அவர் அக்கறை செலுத்தவில்லை. எனவே இனியாவது இந்த பிரதேச வேறுபாடுகளை இல்லாமல் செய்யும் கருத்துக்களை நாம் முன் வைக்காமல் இருப்போம். நான் இலங்கையில் வேலை செய்த சமயம் ஒரு பல்கலை கழக பேராசிரியர் தொழில் சார்ந்த விடயமாக கதைக்கும் போது (நான் அவருடன் வேலை செய்தேன் பல்கலை கழகத்தில் அல்ல பிற தொழில் நிறுவனம் ஒன்றில்) நான் வடமராச்சியான் எனக்கு நீ பட்டம் கட்டுறியா என்றார் நான் யதார்த்தத்துடன் ஒன்றிபோகிறவன் யாருக்கும் நான் பட்டம் கட்டுவதில்லை இருப்பினும் இப்படி சிலர் சின்ன பிள்ளைத்தனமாக கதைத்து தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். இதில் பகிடி என்னவென்றால் நானும் வடமராச்சிதான் அது அவருக்கும் தெரியும். மற்றவர்களை மதியாத தன்மை பெரும் பாலான தமிழர்களின் பிறவிக்குணம் அல்லது நாய்குணம். யாழ்பாணத்தில் படித்தவர்கள் சற்று அதிகம் தான் அதற்காக ஏனைய மாவட்டங்களில் உள்ளோர் படிக்காதவர்கள் அல்லது முட்டாள்கள் அல்ல. சில மூதேவிகள் வாழ்கையில் மற்றவர்களோடு கதைக்க பேசதெரியாதவர்கள். அதற்க்காக எல்லா யாழ்பாணாத்தவரகளையும் குறை சொல்ல முடியாது. மேலே தமிழ்மாறன் சொன்ன விடயத்தை நன்கு வாசியுங்கள் அதுதான் உண்மையுமாகும்.

        • mamani says:
          16 years ago

          யாழ் மக்களின் குட்டி முதலாளித்துவ பொருளாதார முன்னெடுப்பும் அதனால் ஏற்பட்ட பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு எதிரான பொறாமை உணர்வும் கிழக்கு மாகாண மக்களைநேரடியாகவும் , வன்னி மக்களை மறைமுகமாகவும் அன்னியபடுத்தியே வந்திருக்கிறது. அதன் வடிவங்கள் எல்லா அரசியல் அமைப்புகளிலும் காணப்பட்டது. இராசதுரை, காசி ஆனந்தன், தராக்கி சிவராம், கருணாவை விட அதிகம் பிரதேச வாதம் பேசியவர்கள். கருணா பிரிந்திருகாவிட்டால் சண்டை சிறிது காலம்நீடித்திருக்கும்.

        • mamani says:
          16 years ago

          நாம் எமது முதன்மை எதிரியை விட பலம் வாய்ந்த தத்துவாத்த ரீதியில் எதிர்க்க வேண்டியவர்களையும் இராணுவ வலயத்திற்குள் கொண்டு வந்துவிட்டோம். புலிகள் எவ்வளவு பலமாக இருந்திருந்தாலும் அவர்கள் அழிக்க பட்டிருப்பார்கள்.

    • saravanan says:
      16 years ago

      unmai thaan nanpare

      • mamani says:
        16 years ago

        என்ன சரவணனன் உண்மை பேசும்போது தமிங்கிலிஸ் பேசுகிறீர்கள்.

        • saravanan says:
          16 years ago

          தமிழில் பேசினால் தான் உம்மை போன்றவர்களுக்கு புரியுதில்லையே

    • a voter says:
      16 years ago

      இங்கு பேசப்படுவது பிரபாகரன் என்ற தனிமனிதன் பற்றியல்ல. பிரபாகரனின் அரசியலே இங்கு பேசு போருள்.
      எதிரி யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவனது பலம் பலவீனம் என்ன? நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?
      நாம் யார்? நாமது பலம் பலவீனம் என்ன? நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

      இவைகளைச் சரிவரக் கணிப்பிடாமையே பிரபாகரனின் அரசியலின் தோல்விக்குக் காரணம். ஆனால் இதனைத் துரோகம் என வரையறுக்கவாமா என்பது விவாதத்திற்குரியது.

    • raavan says:
      15 years ago

      பெரும் படைவலிமையும், அரசியற் பலமும், பிறநாடுகளின் உதவியும்கொண்ட மிகப்பெரிய நாடான ஈராக்நகரை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது ஒருசில நாடுகளின் உதவியே. ஆனால் உலகில் குன்றுமணி அளவிலான இலங்கைத்தீவில் ஒரு புள்ளியாகத்தெரிந்த பிரபாகரனின் படையை அழிப்பதற்கு அணுசக்திப் பலம்கொண்ட நாடுகளுடன், வல்லரசு நாடுகளும் இணைந்த 28 நாடுகளின் ஆயுதங்களும், அறிவுரைகளும் சிறீலங்காவிற்கும், இந்தியாவிற்கும் தேவைப்பட்டதே… இது எதனை வெளிப்படுத்தி நிற்கிறது?. அரசியல் அறிவும் அதன் நுட்பமும் இன்றி, வெறும் படைபலம் மட்டுமே பிரபாகரனிடம் இருந்திருக்குமானால் பிரிந்துபோன கருணாவே அதனை அழித்திருப்பான். //
      kalakkiddeenga nanbaa….arumai…!!

  10. ravana says:
    16 years ago

    என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்கள் முன்வைத்த வழிமுறையைக் கூட இடதுசாரிகள் ஏற்கவிலிலையே. அவற்றையும் தேசியவாத இயக்கங்களாகத் தானே இடதுசாரிகள் பார்த்தார்கள். 

    • Shiva says:
      16 years ago

      தமிழீழக் கோரிக்கை அடிப்படையில் தவறனது என்ற நிலைப்பட்டில் இன்னமும் தெளிவாக நிற்பவர்கள் எப்படி என்.எல்.எவ்.டி. போன்ற அமைப்புக்கள் எடுத்த நிலைப்பட்டை ஆதரித்திருக்க இயலும்?
      நான் சொல்ல முயன்றது பேரினவாதமும் குறுந்தேசியமும் உருவாக்கிய இனப் பகைச் சூழலில் தேசிய இன்ப் பிரச்சனை பற்றிய நிதானமான பார்வைகளால் தாக்குப் பிடிக்க இயலாது போயிற்று என்பதுடன் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த என்.எல்.எவ்.டி. போன்ற அமைப்புக்களால் கூடக் குறுந் தேசியவாதிகளுடன் போட்டியிட இயலவில்லை என்பது தான்.

      இப்போது தமிழரின் சுயநிர்ணய உரிமையைக் கூட எதிர்ப்போர் யார்? ஒரு காலத்துத் தமிழ்த் தேசியவாதிகளல்லவா!

      • a voter says:
        16 years ago

        இனப்பிரச்சினை உருவெடுத்த போது இடதுசாரிகளிடம் அது குறித்த வேலைத்திட்டம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் அதனை தமிழ் தேசியவாதிகளின் வாக்குப்பெறும் வழியாக மட்டுமே பார்த்தார்கள்.

        என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்கள் உருவானபோது விடயம் இடதுசாரிகளின் கையை மீறிப் போய் விட்டது.

        “பேரினவாதமும் குறுந்தேசியமும் உருவாக்கிய இனப் பகைச் சூழலில் தேசிய இன்ப் பிரச்சனை பற்றிய நிதானமான பார்வைகளால் தாக்குப் பிடிக்க இயலாது போயிற்று ”
        உண்மை தான். ஆனால் பகைச்சூழலின் ஆரம்ப காலத்தில் இடதுசாரிகளிற்கு வாய்ப்பு இருந்தது. அதனை நாம் சரிவரபயன்படுத்த வில்லை.

  11. Mahendra says:
    16 years ago

    அமைச்சர்களை, அதிபர்களை கொன்றவர்கள் கொலைகாரர்கள்!.
    அப்பாவி மக்களை அமைச்சர்கள், அதிபர்கள் கொல்லும்போது அவர்களுக்கு என்னபெயர் சூட்டி அழைக்கிறீர்கள்???.

    1956ம் ஆண்டு பகிரங்கமாக சிங்களம் தமிழின அழிப்பை மேற்கொண்டபோது குரல்கொடுத்த நாடுகள் 1983ம் ஆண்டுவரை தமிழர் வகைதொகையின்றி கொல்லப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு பங்கப்படுத்துவது தொடரப்பட்டபோது தூங்கிவிட்டார்களா?…. அவர்களால் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடிந்ததா. 83ல் பிரபாகரன் படை ஆயுதத்தை கையில் எடுத்தபோதுதான் திரும்பிப் பார்த்தார்கள். போரைத் திணித்தது சிங்கள அரசு, போரை அறிவித்தது சிங்கள அரசு, போரில் கொல்லப்படும்போது மட்டும் அமைச்சர்கள், அதிபர்கள் என்று இனம்கண்டு குரல்கொடுக்க தமிழ் விட்டேத்திகளே முன்நின்றார்கள். “வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்”, என்ற கருத்து…. ஆழ்ந்த அனுபவத்துடன் எழுதப்பட்டுள்ளது.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      //83ல் பிரபாகரன் படை ஆயுதத்தை கையில் எடுத்தபோதுதான் திரும்பிப் பார்த்தார்கள்// இனி நாங்கள் ஒண்டு செய்யாதவை இல்லை . இனி இவனே எல்லா படிச்ச வளமுள்ள தமிழனை அளிச்சிடுவான் என்று 30 வருடம் வளர விட்டார்கள் . 83 இக்கு பிறகு இன கலவரமே இல்லை. அந்த கைங்கரியத்தை தலைவர் சிரம் மேல் கொண்டு சீராக செய்ததினால். சிங்கள பேரினவாதிகள் நினைத்ததை சிறப்பாக செய்ததற்காக பிரபாகரனுக்கு சிலை எடுத்தாலும் ஆச்சரியமில்லை.அவ்வளவு செய்திருகாறு ..இறக்கு முன்னும் இறந்த பின்னும்.

    • a voter says:
      16 years ago

      பிரபாகரன் ஆயுதம் எடுத்தது 70 களில். 83ல் ஆயுதம் எடுத்தது இந்தியா – தனது நலனுக்காக. 86 – 87 ல் தான் தவிர்ந்த அனைத்துக் குழுக்களையும் பிரபாகரன் “தடைசெய்ததையும்” மறந்து விடக் கூடாது.

    • ramohan says:
      16 years ago

      மகேந்திரன்> பிரபாகரன் கொலைகாரன் என்பதை ஏற்றுக்கொள்கிறார், அதுமட்டுமல்லாமல் பிரபாகரன் செய்தகொலைகளை நியாயப்படுத்துகிறார்!
      இவர்தான் உண்மையான கொலைகாரன், துரையப்பா கொலையில் அரசபடை தேடும்போது வன்னிக்குள் தலைமறை வாழ்க்கையின்போது உதவிய பற்குணத்தையும், மைக்கலையும் எப்படிக்கொலை செய்தார் என்று தெரியுமா உமக்கு?, மகேந்திரன்.

  12. thamilmaran says:
    16 years ago

    மதிவதனியையும்,மகளயும் கொன்றூ மகிழ்ச்சி விழாக் கொண்டாடிய சிங்களம் தன் மனித தன்மையை இழந்து இழிந்த மனித இனமாயிற்றூ.சிங்கள இனத்தின் ஒற்றூமையும் குள்ளத்தனமும் நேர்மையற்ற வெற்றீயை பெற்றீருக்கிறது.இருந்தாலும் தமிழர் தம் சிந்தனைப் போக்கு மாறாமல் இன்னும் இருப்பதுவே வேதனையானது.

    • a voter says:
      16 years ago

      அதே போல சைக்கிள் பாதுகாப்பு நிலையம் வைத்திருந்த இரு உதவியாளர்கள் சுடப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்பட்டதையும் அப்படிக் கொன்றவர்களிற்கு தேனீர் கொடுத்தவர்களையும் “மனித தன்மையை இழந்து இழிந்த மனித இனமாயிற்றூ” என்றும் கூற நீங்கள் தயாரா?
      அன்று அவர்களின் “குள்ளத்தனம் நேர்மையற்ற வெற்றீயை “பெற்றது. இன்று வேறொருவர் முறை போலும்.

      அடிப்படை நேர்மையைப் பேணாதவரை தமிழருக்கு மட்டுமல்ல சிங்களவருக்கும் விடிவில்லை.

    • ramohan says:
      16 years ago

      தமிழ்மாறன்> மதிவதனியையும்,மகளயும் கொன்றூ மகிழ்ச்சி விழாக் கொண்டாடிய சிங்களம் தன் மனித தன்மையை இழந்து இழிந்த மனித இனமாயிற்றூ.சிங்கள இனத்தின் ஒற்றூமையும் குள்ளத்தனமும் நேர்மையற்ற வெற்றீயை பெற்றீருக்கிறது.இருந்தாலும் தமிழர் தம் சிந்தனைப் போக்கு மாறாமல் இன்னும் இருப்பதுவே வேதனையானது.< 1986 , பருத்தித்துறையில் TELO தோழர் புறுஸ் என்பரை தேடி அவர் வீட்டுக்குபேன புலிகள், அவர் அங்கு இல்லை என்பது தெரிந்து ஆத்திரம் அடைந்த புலிகள், தோழர் புறுஸ்சின் அப்பாவை சுட்டுக்கொன்றார்கள், தாயின் கண்முன்னாலே தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்,,,,, இதற்கு என்ன நியாயம் கொடுக்கப்பேறிர்கள்,, அந்தக்கொலையை செய்தவர் இன்று பிரான்ஸில்தான் வாழ்கிறார்.

      • thamilmaran says:
        16 years ago

        தங்கள் தகவலுக்கு நன்றீ.மதிவதனி குடும்பத்தினரை தெரியும் என்பதாலும் தீவகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இது மிகவும் சோகமாக இருக்கிறது.ஆனால் நேர்மையற்ற முறயில் எவர் நடந்தாலும் அது வேதனையானதே.

  13. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    //அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக // அட சண்டளனுகளா!..இத எப்பையோ சொல்லி இருந்தா கடைசில வெள்ளை கொடி தூக்கிற ரகசியத்தையும் கொஞ்சம் மத்தவங்களுக்கும் சொல்லி 45,000 மா வீரர உசிர காப்பாத்தி இருப்போமே.. ..கொலை கொலையாக தமிழ் உயர்களை போட்டு தள்ளும் பொது சொக்கிப்போய் நின்றோமே ..சிங்களவன் படையாக நேருக்கு நேர் வந்து மோதினான் ..எங்கட தலைவன் பதுங்கி பதுக்கி தமிழனை தமிழனுடன் இருந்தே கொல்லும்போது இது விளங்க வில்லையே ..அட கோதரி பிடிச்சவனுகளே!.. பிரேமதசவோடையும் சந்திரிகவோடையும் ரணிலோடையும் சேர்ந்துகொண்டு மத்த எல்லாரையும் ஒட்டு குளுவேண்டு , துரோகிகள் எண்டு ,சிங்களவண்ட காலை நக்குரவனுகள் எண்டு எலாரையும் பேய் காட்டு எண்டு பேய் காட்டி முழு தமிழனையும் மொக்காடு போட வெச்ச கதை இப்பதானே வெளங்குது..அட பாடைல போரவனுகளே!.. மத்தையாவோட செந்தவனுகள் எண்டு ஒரு தொகை போரையும் ..கருணாவோட செந்தவனுகள் எண்டு வெருகல் ஆறையே ரத்த ஆறா ஓடவிட்டு….ஐயோஒ..ஐயோஒ…வெளி நாட்டுல கொடி புடிச்சொமே..இந்த அறுவான் வெள்ளை கொடி பிடிக்கவா ?…ரோட்டெல்லாம் மறிச்சோமே..இந்த மன நோயாளி முழங்கால சரணடையவா ?…ஐயகோ ..ஐயகோ ..

    • rajan says:
      16 years ago

      pls c a doctor urmila

      • Soorya says:
        16 years ago

        இது மருந்து, மாத்திரை கொடுத்துக் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும். இது கூடுதலாக நாயகளுக்கு வரும். இந்த நாய கடித்தால் ஆட்கள் குரைத்துக் குரைத்துச் சாவதை கேள்விப்பட்டிருப்பீகள். குரைத்தல் கனநாட்ளுக்குக் கேட்காது.

        ஆனால் அதுவரையும் இது மனிதரைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிலருக்கு ஏற்கனவே இந்த வியாதி சாடையாக இருப்பதுபோல் தெரிகிறது.

        • saravanan says:
          16 years ago

          ரொம்ப முத்திப்போச்சு ஏதேதோ உளறுது.எல்லாம் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப

    • rukku says:
      16 years ago

      நல்லாத்தான் முத்திப்போச்சு, தலையிலை தண்ணியை ஊத்தினால் சரியாயிடும் யாராவது செய்யுங்கோ பர்த்துக்கொண்டு நிண்டால் கடிச்சு உலகத்தைக்கெடுத்திடும்,,,,,

  14. S.G.Raghavan (Canada) says:
    16 years ago

    தொம்பி சாம் யாழ்பாண மக்களை வம்புக்கு இளுத்து மட்டக்களப்பு மக்களுடன் மோத விட உனக்கு விருப்பமோ? அல்லது உனக்கு யாரும் தமது நிகழ்ச்சி நிரலை விற்பதற்க்கு பணம் தந்தவர்களா? கூழ் கதை கதையாதையும். புலிகளில் உள்ள எல்லா பன்னிகளும், கருணா உட்பட விற்ற நாறல் மீன் தான் பிரதேச வாதம். இதனை ஈழத் தமிழர்கள் பலர் பிரதேசம் கடந்து செய்தனர் மட்டகளப்பான், யாழ்பாணி, வன்னியான் சுண்…… யான் என்பன எங்கள் அனைவரினதும் நாய் குணமாகும்.

    • thamilmaran says:
      16 years ago

      லண்டனில் வெள்ளக்காரர் தம்மை நோதேர்ன் என்றூம் சதேர்ன் என்றூம் அழைபதைப் பார்த்திருக்கிறேன்.இதையே ஸ்பெயின், இத்தாலியர்களீடமும் கண்டிருக்கிறேன்.இவையெல்லாம்நோமலானவை.ஆனால் தன்னை மேதாவியாகக் கருதி தனது இன் தமிழனை மனிதனாகவே கருதாத இழி குண்ம் தமிழரிடமே அதிகம்.

    • a voter says:
      16 years ago

      ஐயா
      யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போள்ற பிளவு மட்டுமல்ல தமிழன் சிங்களவன் என்ற பிளவும் சாதி அடிப்படையிலான பிளவும் கொடியதே. தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான பிளவுகளிற்கு நாமும் காலாக இருந்திருக்கிறோம். இதனைக் கடந்து வந்தால் தான் விடிவு.
      கடந்து வருவது என்பது “போர்த்து மூடிவிட்டு” வருவதல்ல. சகல சமுகங்களும் சம – முழு – உரிமையுடன் வாழ அநுமதி கொடுப்பதே.
      பல வருடங்களிற்கு முன் ஒருவர் சொன்ன காரியம் இது. “இன்று எவ்வாறு தமிழர்கள் அரசால் புறக்கணிக்கப் படுகிறார்களோ அதே போல முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் தம்மை உயர் சாதி என்று கருதியவர்களால் புறக்கணிக்கப் பட்டார்கள். அதற்கெதிராக நாம் குரல் கொடுத்தால் அது சாதிவாதம். உங்களது போராட்டம் மட்டும் விடுதலைப்போராட்டம்”

  15. Mahendra says:
    16 years ago

    அஜித் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ கட்டுரை ஒன்று எழுதி பயிர் அழியும்போது செழிப்பைக்காட்டும் களைகளை இங்கு கொண்டுவந்து கருத்தெழுதி இனம்காட்டிக்கொள்ள வைத்தமைக்கு நன்றிகள். போராட்ட காலங்களில் ஏற்பட்ட சமாதான காலங்களில் போரினால் ஏற்பட்ட வலிகளையும், விடுதலைக்கான தேடலையும் நோக்காது, போட்டிபோட்டு திருவிழாக்கள் செய்வதற்கும், சீதனத்தை ஏலமிட்டு கல்யாணம் செய்வதற்கும், காணி வாங்கி, விற்று, வீடுகட்டி, சுற்றுலா போனவர்களும், பதவியும் பெருமையும் தேடிச்சென்று பிரபாகரன் படையில் தங்கள் சொந்தங்களை தேடிப்பழகி சொந்தத்தை புதுப்பித்துக் கொண்டவர்களும், இந்தக் களைகளில் நிறைந்து காணப்படுகின்றனர். புலிவேடமிட்ட பினாமிகளால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் கிடைப்பதற்கு அரியதாய் கிடைத்த அபூர்வப் பிறவியான தலைவனை, அவன் சிந்தனைகளை, செயற்பாடுகளை தமிழராகிய எங்களோடு வளர்த்தெடுக்கப்பட்ட காழ்ப்புணர்சியோடு விமர்ச்சிப்பது விடுதலை வேண்டிநிற்கும் உண்மையான தமிழர் மனங்களோடு. பிரபாகரனை அறிந்த எதிரிகளின் மனங்களைக்கூட புண்படுத்துவதாகும்.

    • saravanan says:
      16 years ago

      எங்கே மாமணி .மாமணியின் நண்பர் துரை இல்லாதது தான் அவவுக்கு பெரும் குறை.எங்கே துரை ஏதாவது நிதிப்பிரச்ச்சனையா

      • mamani says:
        16 years ago

        ஆம் நண்பரே நிதிப்பிரச்சனைதான் . உங்களைபோல் இறுதி யுத்தமென்று எங்களால் லபக்க முடியாது. மகிந்த அவ்வப்போது அளந்துதான் போடுவான்.

  16. நெருஞ்சி says:
    16 years ago

    பிழைப்புவாதிகளும்,ஏமாளிகளும் எழுதிய போராட்டம் சதிராட்டமானது.இதே பேர்வழிகள்,மீண்டும் ‘பிரபாகரனைச் சுற்றி’ பிறவிப் பயன் எடுக்கப் பார்க்கிறார்கள்.

  17. Ravathi says:
    16 years ago

    at the age of 18 i met prabakaran in Nallur while he gave a dinner to us as we won a drama competition. he talked to us. from whatever he talked i thought that he is actiong innocent, i realised later he is really an innocent guy. he must have thought that he can achieve Tamil Elam by kiiling all who are against tamil eelam or against his ideas. as a result of it milions of tamils died. that doesnt mean u can compare him to douglas or karuna.

    Ravathi

  18. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    Ravathi, You are right. HE should not be compaired with Duglas or Karuna. He should compared to Psycho like Hiltor, musolini , kambodiya general. Specialy Karuna is a very smart man. Duglas done a lot for common men

  19. Vijey says:
    16 years ago

     > ஈழப் போராட்ட வரலாறு என்பது பிரபாகரனை நிராகரித்து எழுதப்பட முடியாது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமை அழித்துச் சிதைக்கப்படும் வரையான போராட்டப் பின்புலம் பிரபாகரன் என்ற தனிமனிதனினின் ஆளுமைஇ அதிகாரம்இ துரோகம்இ வீரம் என்ற அனைத்துக் கற்பிதங்களையும் சூழவே தனது ஒவ்வொரு அசைவையும் கொண்டிருந்தது.உண்மைதான். ஈஈ
    1. முப்பதாண்டு காலமாக என்றுதான் கூறவேண்டும்.
    2. சமூகத்தில் காணப்பட்ட அத்தனை பிற்பொக்கு அம்சங்களையும் இருப்பிலிருந்தவாறே ஏற்றுக்கொண்டு அதனைப்பாதுகாப்பதற்கான இராணுவத்தைக்க கட்டமைத்து பிரபாகரன்… என நீங்கள் கூறுவதிலிருந்தே பிரபாகரனிற்கான – புலிகளிற்கான சமூகப்பின்புலம் இருப்பதனை கோடெ;டுக்காட்டுகிறது. அதனைக் காவல் காக்கும் ஒரு அமைப்பல்ல புலிகள். ஆதன் பிரதிநிதிகள்… தமிழ் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள்…

    >>பிரபாகரன் உருவாக்க எண்ணிய சமூகத்தின் அனைத்து விழுமியங்களையும் பாதுகாக்கும் இராணுவக் குழுவைக் கட்டமைக்கும் அரசியலுக்குப் பிரபாகரன் ஒரு போதும் துரோகம் செய்தவரல்ல.ஈஈ
    புலிகள்(பிரபாகரன்) கூறியவையும் செய்தவையும் முரண்பாடனவை. பிரபாகரனின் புலிகளின் 30 ஆண்டுகால வளர்ச்சியையும் அவர்கள் பின் நின்ற சமூக சக்திகளையும் > அச்சக்திகளின் அரசியலையும் கவனாமகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    >>தமிழ்ச் சமூகத்தின் இருப்பைப் பேணுவதற்கான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரனின் அரசியல் மக்களின் அழிவோடு முள்ளிவாய்க்காலில் கரைந்துபோனது.ஈஈ
    புpரபாகரனின் அரசியல் என்பது அவரது தனிப்பட்ட ஆளுமைக்குட்பட்ட ஒன்றல்ல. அவ்வாறாயின் சிங்கள் மக்கள் படுகொலைகளை> முஸ்லிம் மக்கள் படுகொலைகளை> முஸ்லிம்கள் வெளியேற்றத்தை> இயக்கப்படுகொலைகளை… புலிப்போராளிகள்> புலி ஆதரவாளர்கள்> தமிழ் மக்கள் ஏன் எதிர்க்கவில்லை. எதிர்க்க முடியாவிட்டாலும் ஏன் நியாயப்படுத்தினார்கள்? புலிகளின் அரசியல் தமிழ் அதிகார வர்க்கத்தின் அரசியல். புலிகள் தலைமைதான் அழிந்திருக்கிறது. அவர்களை ஆதரித்து நின்ற அதிகார வர்க்கம் உயிர்ப்புடனே இருக்கிறது. அது தன்னை மீளக்கட்டமைக்கும் பேரவாவுடன் காத்துநிற்கிறது.
    விஜய்

    • saravanan says:
      16 years ago

      கவலை பட வேண்டாம் இன்னமும் சிறிது காலத்தில் அந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் மகிந்த @ கோ அழித்துவிடும் மிஞ்சப்போவது மாமணி போன்றவர்கள் தான்

      • mamani says:
        16 years ago

        ஏன் சரவணா நீங்கள் கரும்புலியாகி என்னை அழித்து விடுங்களேன்.

        • பாரதிக்குஞ்சு, says:
          16 years ago

          சூப்பர் வேண்டுகோள்

  20. sAm says:
    16 years ago

    //மட்டகளப்பான், யாழ்பாணி, வன்னியான் சுண்…… யான் என்பன எங்கள் அனைவரினதும் நாய் குணமாகும்.
    //எச்.ஜீ.ராகவன்

    ஒரு திருத்தம் யாழ்ப்பாணிகளின் நாய்க் குணம். மற்றவர்களை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

    • Soorya says:
      16 years ago

      இங்கு எப்படியாவது வடக்கு கிழக்குப் பிரச்சினயைக் கிளப்பிவிடலாம் என்ற உங்கள் எண்ணம் சரிவராது

    • saravanan says:
      16 years ago

      மகிந்தா மாகாணத்தை பிரித்தான் .மக்களை பிரிக்கும் வேலையை மட்டும் இவர்களிடம் கொடுத்துவிட்டான் போலும்

  21. vinothan says:
    16 years ago

    ஒரு சிங்கள தெருபொறுக்கி எங்கள் இனத்தை கொலை செயதது பற்றி ஒருவார்த்தை சொல்லமுடியாத நீ எப்படி பிரபாகரனை பற்றி எழுதமுடியும் , சிங்கள ஆட்சி செய்வதை எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ள்மாட்டான், நல்லகுடும்பத்தில் பிற்க்காதவன் சிங்கள ஆட்சியை ஆகா ஒகோ எண்று ஆலவ்ட்டம் போட்டுத்தான் தீருவான், டகிள்ஸ், கருனா, போன்ற பொறுக்கிகளுடன் பிரபாகரனை ஒப்பிட கூடாதாம், கெளரவுத்துக்குரிய தெருப்பொறுக்கி யும் மனிதமாமிசம் சாப்பிடும் ராஜபக்கையனுடனா ஒப்பிடுவது, , இதுபற்றி மானத்தை விற்று தின்னும் கூட்டத்துக்கு புரியாது .

  22. kariyavan says:
    16 years ago

    //என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்கள் உருவானபோது விடயம் இடதுசாரிகளின் கையை மீறிப் போய் விட்டது.// வோட்டர்,
    என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்கள் உருவானபோது விடயம் இடதுசாரிகளின் கையை மீறிப் போய் விட்டது.
    என்.எல்.எப்.ரீ போன்ற இயக்கங்களுக்கும் மற்றவற்றுக்கும் என்ன வித்தியாசம்?
    என்னைப் பொறுத்தவரை எந்த அடிப்படையான அரசியல் வேறுப்பாடுகளும் கோட்பாட்டளவில் இருந்திருக்கவில்லை. என்.எல்.எப்.ரீ என்ற> இயக்கம் சில படித்த இடது சாரி அரசியல் ஆர்வமுள்ள சில இளைஞர்களையும், அவர்களுடன் கூட இடதுசாரி புத்திசீவிகள் சிலரையும் கொண்டிருந்தது. முறையான வேலைத்திட்டம் எதுவுமில்லாத ஒரு விவாதக் குழுவைப் போல அமைந்திருந்தது. இயங்களைப் பொறுத்தவரை மக்கள் வேலை என்பது இயக்கத்திற்கு ஆட்களைச் சேர்ப்பது தான், என்.எல்.எப்.ரீ கூட இதைத் தான் செய்தது. மக்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்துவதன் மூலம் அதன் வழியாக உறுப்பினர்களை இனம்கண்டு வழி நடத்துவது நடக்கவில்லை. மற்றைய இயக்கங்களைப் போலத் தான் நடந்தது.
    சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அரசியல் கல்வி என்ற வகையில் மாக்சியம் கற்பிக்கப்பட்டது. இதையே புளட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்றனவும் செய்தன.ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் வேலையில் கவனம் செலுத்திய அளவிற்காவது இவர்கள் கவன்ம் செலுத்தவில்லை என்பது உண்மை.

    கட்டன் நாசனல் வங்கி கொள்ளை அடிக்கப்பட்ட பின்னர் இயக்கத்தில் ஆயுதங்கள் வரத தொடங்கின. புலிகளால் என்.எல்.எப்.ரி அழிக்கப்பட முன்னர், ஆயுதங்களைப் பாவித்து சங்கக்கடை மனேச்சர்கள்> மேலும் சில விலக நினைத்த உறுப்பினர்கள் போன்றோர் மிரட்டப்பட்டனர். – இவற்றிற்கு ஆதாரம் உண்டு.
    என்.எல்.எப்.ரீ ஐ போலவே ஆரம்ப நாட்களில் ஈரோசும் இருந்தது. ஆனால் என்.எல்.எப்.ரி ஒரு இறுக்கமான அமைப்பக கூட இருக்கவில்லை. இன்று வரை ஒரு மில்லியன் டொலருக்கு கொள்ளையடித்த மக்களின் பணம் எங்கே யாரிடம் போனது என்பதற்கு ஊகங்கள் மட்டுமே உள்ளன.
    அதில் இருந்த உறுப்பினர்கள் எவரும் பணம் மாயமாக மறைந்ததற்கான காரணத்தைக் கூடச் சொல்லவில்லை. அவளவுக்கு இறுக்கமில்லாத கதம்ப கூட்டமாக தான் இந்த இயக்கம் இருந்தது. 80 இலிருந்தே இயங்கிய இந்த இயக்கத்தைப் போல பல குழுக்கள் இருந்தாலும் வங்கிப் பணத்தின் பின்னர் புலிகளால் தீவிரமாகக் குறிவைக்கப்பட்டனர் என்பதே உண்மை.

    • mamani says:
      16 years ago

      தமிழ் அரங்கம் இரயாகரனை கேட்டால் கட்டன் நாசனல் வங்கி பணம் பற்றி விலாவாரியாக ( பொய்) சொல்வார்.

      • saravanan says:
        16 years ago

        அம்மணி ஒரு கதையா எடுத்து விட வேண்டியது. துணைக்கு ஊர்மிளா பிரபா வருவா? வேண்டுமென்றால் துரையையும் ஆலோசனைக்கு அழைப்பது

        • mamani says:
          16 years ago

          உசுப்பேத்தலுக்கு அடிபணிந்தால் கடைசியில் சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் மாட்டுபடபோவது நீங்கள்தான். உங்கள் இன உணர்வு வரவேற்கதக்கது. ஆனால் புலி உணர்வு ஆபத்தானது ஏனெனில் டக்ளசை விட ஆபத்தானவர்கள் புலியிருந்து இன்று அரசுடன் வேலை செய்பவர்கள். அவர்களை எங்களால் அடையாளம் கூட காண முடியாதுள்ளது. அண்மையில்
          கே.பின் அழைப்பின் பேரில் சென்ற 9 பேரில் ஒருவரை தவிர மற்றவர்கள் தாம் சென்ற காரணத்தையோ,நிகழ்ச்சிநிரலையோ எமக்கு அறிவிக்கவில்லை. ஆனால் எமது பணம் அவர்கள் கையில் உள்ளது அதனால்தான் அவர்கள் முதன்மைபடுத்த பட்டார்கள்.

        • mamani says:
          16 years ago

          யார் உண்மையான தேசியவாதியென்று அடையாளம் காட்டுங்கள் . அல்லது எந்த வலை பக்கம் தமிழர் தேசியநலன் சார்ந்தது? நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்

          • Soorya says:
            16 years ago

            நேர்மை இல்லதவர் எப்படி நேர்மையை எதிபார்க்க முடியும்?

          • mamani says:
            16 years ago

            சூர்யா உங்கள் நேர்மையைபற்றி சுயவிமரிசனம் செய்ய சொல்லவில்லை. பதில் இல்லா விட்டால் நாங்கள் வெறும் பணம் பிடிங்கிகள் மட்டும்தான் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுங்கள். உங்களால் ஏமாற்றபட்ட மக்கள் நிச்சயம் உங்களை தண்டிபார்கள்.

    • xxx says:
      16 years ago

      தமிழ் அரங்கம் இரயாகரனை கேட்டால் அவர் பொய் சொல்லுவாரோ இல்லையோ, உங்களைப் பற்றி நீளமாக காளமேகம் ஸ்ற்றைலில் கவிதை எழுதுவார்.

    • a voter says:
      16 years ago

      நான் என்.எல்.எவ்.ரி யை ஒரு உதாரணமாகவே குறிப்பிட்டேன். நான் சொல்லவந்தது இதுவே. பெரும்பாலான இடதுசாரிகள் தமிழீழக் கோரிக்கை அடிப்படையில் தவறனது என்பதை நிராகரிக்கவில்லை. ஆனால் தமிழீழக் கோரிக்கையின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பெருமளவில் போராடவில்லை. இடதுசாரிப்போக்குடைய இயக்கங்கள் இவற்றை மையமாக வைத்துப்போராட முற்பட்டன. (இவற்றுள் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை ஆரம்பத்தில் தமிழீழத்தை முன்வைக்கவுமில்லை.)
      எனினும் அவை தலையெடுத்த காலம் 1983 க்குப் பின்னராகும். அப்போது ஆயதப்பயிற்சி என்ற கவர்ச்சி உருவாகியிருந்தது. அந்த அலையில் அவர்களால் பெரிதாக வளர முடியவில்லை.

    • xxx says:
      16 years ago

      அது போலத்தான் 1970களில் குறுகிய தமிழ்த் தேசியவாதமும் “தமிழீழ அலையும்” சிங்களப் பேரினவாதத்திற்குச் சமாந்தரமாக ஓங்கி விட்டன.
      எனவே என்.எல்.எவ்.ரிக்குக் காட்டுகிற கருணைக்கு, அதை விட உறுதியாகப் பிரிவினைக் கோரிக்கையை எதிர்த்த மர்க்சிய லெனினியர்கட்கு அதிக உருத்துண்டு. யாரும் போராடவில்லை என்று சொல்லாதீர்கள். ஒவ்வொரு முக்கிய பிரச்சனையின் போதும் அவர்கள் முன்னால் நின்றர்கள். அரசாங்கத்துக்குச் சப்பைக்கட்டுக் கட்டாமல் எதிர்த்து நின்றார்கள். ஆனால் அரஜகங்களை மறுத்தார்கள்.ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் முஸ்லிம்கட்கு எதிரான சுலோகங்கள் எழுப்பப் பட்டபோது தமிழ்த் தேசியவாதக் குண்டர்களிடம் உதைபட்டும் உறுதியாக நின்றார்கள்.

      பாராளுமன்ற இடதுசாரிகளையும் ஐக்கிய முன்னணி ஆட்சியை அண்டி ஆதரித்த பிற இடதுசாரிகளையும் விட்டுத்தள்ளுங்கள்.

  23. Shiva says:
    16 years ago

    எக் காரணத்தினாலோ எனது முந்திய இடுகை சேர்க்கப்படவில்லை.

    1970களில் குடாநாட்டில் சண் தலைமையில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை விரிவாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. அது ஏன் யாருக்கும் நினைவிலில்லை?
    மாக்சிய லெனினியர்கள் எப்போதுமே தமிழ் மக்களின் ஒடுக்குமுறையாளர்களை அடையாளம் கண்டு எதிர்த்தே வந்துள்ளனர். எந்தப் போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை.

    மாக்சிய லெனினியர்களின் நிலைப்பாடே ஏற்கப் பட இயலாத ஒரு உணர்ச்சி அரசியற் சூழலில், எத்தகைய “வேலைத் திட்டம்” ஒன்றை அவர்கள் முன்வைத்திருக்க வேன்டும் என்று, இப்பொது பின்னோகிய பார்வையில் அப்படி ஒன்றைக் கோருவோர் கூறுவார்களா?
    அவ்வாறான கோரிக்கை ஏன் எவராலும் அன்று முன்வைக்கப் படவில்லை?

    மாக்சிய லெனினியர்கள் தமது நிலைப்பாட்டில் இருந்து முன்வைத்திருக்கக் கூடிய “வேலைத் திட்டம்” ஒன்று இருந்திருந்தால் இயக்கங்களை நோக்கிப் போனவர்கள் தடுத்தாட்கொள்ளப் பட்டிருப்பார்களா?
    அப்படியாயின் மாக்சிய லெனினியர்களுடன் இயக்க இளைஞர்கள்நடத்திய உரையாடல்கள் எந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டன? அவை ஏன் ஒரு பயனையும் அளிக்கவில்லை?

    • a voter says:
      16 years ago

      தோழர் சிவா
      எனது கருத்து குற்றசாட்டு அல்ல. சுய விமரிசனம் மட்டுமே.
      “970களில் குடாநாட்டில் சண் தலைமையில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை விரிவாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. அது ஏன் யாருக்கும் நினைவிலில்லை?”
      பேசப்பட்டது உண்மை தான் ஆனால் இப்பிரச்சினைக்கான போராட்டம் என்ற நிலைக்கு அது வளரவில்லை. உவகளாவிய நெருக்கடிகள் ஒரு காரணமாயிருந்திருக்கக் கூடும்.
      தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை ஆரம்பித்தது 70களில் அல்ல. 50 களிலேயே இது பெரிதாகி விட்டது.
      அப்போது “மாக்சிய லெனினியர்களின் நிலைப்பாடே ஏற்கப் பட இயலாத ஒரு உணர்ச்சி அரசியற் சூழல்” நிலவியதாக எனக்குத் தெரியாது.
      “அவ்வாறான கோரிக்கை ஏன் எவராலும் அன்று முன்வைக்கப் படவில்லை?”
      எனக்குத் தெரியாது. நான் அப்போது பிறக்கவில்லை

      • Shiva says:
        16 years ago

        ” “அவ்வாறான கோரிக்கை ஏன் எவராலும் அன்று முன்வைக்கப் படவில்லை?”
        எனக்குத் தெரியாது. நான் அப்போது பிறக்கவில்லை”

        அப்படியானால் நீங்கள் பிறவாத காலத்துக் கதைகளைத் தான் இப்போது கதைதுக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.

        • a voter says:
          16 years ago

          அதிலென்ன தவறு.

      • Shiva says:
        16 years ago

        தவறென்று யார் சொன்னார்?
        “பிறவாமை” கேள்விக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்க உதவியுள்ளதே.
        மெச்ச மறந்து விட்டேன்.
        மன்னிக்கவும்.

        • a voter says:
          16 years ago

          உங்கள் பதிலை இன்று தான் கண்டேன்.
          எனது பதிலின் பொருள் இதற்குப் பதிலளிக்க வேண்டியவன் நானல்ல என்பதே. 50களில் அல்லது அதற்கு முன்னரே இனப்பிரச்சினை உருவாகி விட்டது. அப்போது இடதுசாரிகள் காத்திரமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அமிர்தலிங்கம் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். மாறாக 70களில் சில முயற்சிகள் நடந்தன. ஆனால் அப்போது காலம் தாழ்ந்து விட்டது.
          50களில் இனப்பிரச்சினை தோடர்பாக இடதுசாரிகள் காத்திரமான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துப் போராட வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழவில்லை என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. கீழ் மட்டத்தில் இவ்வாறான கோரிக்கைகள் எழுந்ததாகவும் எனினும் அவை தலைமையால் நிராகரிக்கப்பட்டதாகவும் கதைகள் உண்டு. இடதுசாரிகளிடையே இருந்த முரண்பாடுகள் பண்டாரநாயக்கவை “தேசிய முதலாளி – நட்பு சக்தி” என்று கூறி
          சில பாராளுமன்ற சக்திகள் சோரம் போனமை (எல்லோரும் அல்ல) என்பன இவற்றிற்குக் காரணமாக இருக்கலாம்.
          சண்முகதாசன் தமிழர் என்பதால் நிராகரிக்கப் படுகிறார் என்ற பிரச்சாரமும் ஒப்பீட்டளவில் சிங்கள மக்களிடையே கிடைத்த குறைந்த ஆதரவும் கூட தமிழ்த் தேசிய தலைமைகளிற்கு அனுகூலமாயிற்று.

    • a voter says:
      16 years ago

      சில கேள்விகளிற்குப் பதில் கூறுங்கள்:
      சாதி முரண்பாடும் சரி இன முரண்பாடும் சரி பகை முரண்பாடுகளல்ல.
      எனினும் இன முரண்பாட்டில் அரசின் நிலைப்பாடு காரணமாக அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது.
      இடதுசாரிகள் சாதி முரண்பாட்டில் ஆயுதம் தூக்கியதன் மூலம் அதனைப் பகை முரண்பாடாக வெளியே தெரிய வைத்தது உண்மையா?
      இனமுரண்பாட்டில் அவ்வாறான நடைமுறைக்கு எந்த இடதுசாரி வந்தார்?

      எந்த இயக்கம் எந்த மாக்சிய லெனினியர்களுடன் – அவர்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு உதவியைப் பெறுவது தவிர்ந்த நோக்கத்துடன் – பேச்சு வார்த்தை நடத்தியது?

    • Shiva says:
      16 years ago

      சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் சண்முகதாசன் தொடங்கியதல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு.
      ஆயுதம் தூக்குகிற முடிவு அதைப் பகை முரண்பாடாக்கி எடுத்த முடிவல்ல (பகை முரண்பாடாக்கல் தலித்தியவாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி).
      சாதிப் பகை என்ற கண்ணோட்டதில் இலங்கையில் கம்யூனிஸ்ட்டுக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்களது போராட்ட அணியில் “உயர் சாதியினர்” எனப்பட்டவர்கள் பலர் முன்னால் நின்றார்கள்.

      சாதியத்துக்கெதிரான போராட்டத்தில் மக்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னால் அணி திரளக் கூடிய ஒரு வரலாற்றுச் சூழல் இருந்தது. அப்படியான சூழல் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக ஏற்படாமைக்குப் பல காரணங்கள் உள்ளன. (இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றப் பாதையிற் போய்ச் சீரழிந்தது முக்கியமான ஆனால் அதி முக்கியமான காரணமல்ல).

      இயக்கங்கள் செயற்படத் தொடங்கிய காலத்தில், மார்க்சிய லெனினியர்களிடம் “வெளிநாட்டு உதவி பெறுகிற நோக்கத்துடன்” பேசுமளவுக்கு மார்க்சிய லெனினியர்கள் தங்கள் போராட்டங்களுக்கே அந்நிய உதவி பெறவில்லை.
      சண்முகதாசனிடமோ அவரிடமிருந்து பிரிந்து சென்ற கார்த்திகேசன், ராமையா, வொட்சன் பெர்னான்டோ போன்றோரிடமோ உதவி பெற்றுத் தரக்கூடிய ‘அயற் செல்வாக்கு’ இருக்கவில்லை.
      1980களில் கூடப் பேச்சுக்கள் நடந்துள்ளன. நோக்கம் எதுவானாலும் இடதுசாரிகளால் தமிழ்த் தேசியவாதிகளை நெறிப்படுதியிருக்க இயலாது என்பதே என் கணிப்பு.

      • a voter says:
        16 years ago

        இயக்கங்கள் செயற்படத் தொடங்கிய காலத்தில்இ மார்க்சிய லெனினியர்களிடம் “வெளிநாட்டு உதவி பெறுகிற நோக்கத்துடன்” பேசுமளவுக்கு மார்க்சிய லெனினியர்கள் தங்கள் போராட்டங்களுக்கே அந்நிய உதவி பெறவில்லை.
        சண்முகதாசனிடமோ அவரிடமிருந்து பிரிந்து சென்ற கார்த்திகேசன்இ ராமையாஇ வொட்சன் பெர்னான்டோ போன்றோரிடமோ உதவி பெற்றுத் தரக்கூடிய ‘அயற் செல்வாக்கு’ இருக்கவில்லை.

        “மாக்சிய லெனினியர்களின் நிலைப்பாடே ஏற்கப் பட இயலாத ஒரு உணர்ச்சி அரசியற் சூழலில்” இந்தப் பேச்சுவார்த்தைகள் மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று?

      • xxx says:
        16 years ago

        பேசப் போன அந்தச் சிலரிடம் கேளுங்கள்.
        அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அது பற்றிப் பேசும் ஐயருக்கு ஒரு வேளை தெரியலாம்.

  24. Harish says:
    16 years ago

    பிரபாகரனைப் பற்றி ஆய்வு செய்யமுன் எம் பிறப்பு வளர்பு பற்றி நாம் எம் மனக்கண்ணாடியில் பார்ப்போம்.

    பெற்ற தாய்க்கு மகனாக வாழ்ந்தேனா?
    கட்டிய மனைவிக்கு களவின்றி வாழ்ந்தேனா??
    பெற்ற பிள்ளைகளுக்கு உண்மையாக வாழ்ந்தேனா???
    உற்ரவர் நண்பர்களுக்கு விசுவாசமாக வாழ்ந்தேனா????

    உணர் உன்னை நீ உணர் !!! பின்பு பேசு பிரபாகரனைப்பற்றி பிரதேசத்தைப்பற்றி
    அதுவரை நிறுத்து ராசா நிறுத்து .எழுதவிரும்பினால் உன் சுயசரிதையை எழுது எங்களுக்கும் பொழுது போகும்.

    எப்படியும் வாழலாம் எதையும் பேசலாம் இது உன் உலகம்
    இப்படித்தான் வாழ வேண்டும் இதைத்தான் பேசவேண்டும் இது தமிழர் உலகம்
    உன் கொப்பன் முப்பாட்டன் பண்பு இது.

    ஒரு தேசம் ஒரு தலைவன் எமக்கு
    பல தேசம் பல தலைவர் உனக்கு பரதேசியே.
    சிந்தி செயற்படு சிறப்புறு.

  25. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    //பெற்ற தாய்க்கு மகனாக வாழ்ந்தேனா? //- தள்ளாத  வயதில் சிங்களவனிடம் அகதியாக சரணடைய வைத்து நோயாளியாக  சாகவும் வருந்தி வருந்தி நாதியட்ட்று  அலைய விட்ட  மகனை கூறுகிறீர்களா ?
    கட்டிய மனைவிக்கு களவின்றி வாழ்ந்தேனா??- No Comments
    பெற்ற பிள்ளைகளுக்கு உண்மையாக வாழ்ந்தேனா???  தந்தை செய்த பாவத்துக்கு எந்த குழந்தைகளும் இப்படி பலியாக கூடாது. இவர் மக்களை வாழவைத்த தந்தையா ?.
    //உற்ரவர் நண்பர்களுக்கு விசுவாசமாக வாழ்ந்தேனா????// விசுவாசம் ?. சுயநலத்தின் மட்டுமல்ல சந்தேகத்தின் முழு உருபமாய் மாத்தையா  முதல் யாரை விட்டு வைத்தான். கே பீ என்ற நண்பர் மட்டும் தப்பினாறு ..வெளி நாட்டில் வாழ்ந்ததாலும்..வன்னிக்கு அழைத்தும் போகாததாலும்.போய்களையும் பிசாசுகளையும் ஒரு கடவுளாக பூசிக்கும் நரபலி பக்த சாமிகள் இன்னமும் வாழுகிறார்கள் தான்.

    • saravanan says:
      16 years ago

      ///// //பெற்ற தாய்க்கு மகனாக வாழ்ந்தேனா? //- தள்ளாத வயதில் சிங்களவனிடம் அகதியாக சரணடைய வைத்து நோயாளியாக சாகவும் வருந்தி வருந்தி நாதியட்ட்று அலைய விட்ட மகனை கூறுகிறீர்களா ?/////-பிரபாகரன் தன தாய் தந்தையை காப்பாற்றி இருந்தால் “ஊராய் தாய்மார் கொல்லவிட்டு தன பெற்றோரை மட்டும் பாதுகாத்துவிட்டான் என்று சொல்லியிருப்பீர்.
      /////பெற்ற பிள்ளைகளுக்கு உண்மையாக வாழ்ந்தேனா??? தந்தை செய்த பாவத்துக்கு எந்த குழந்தைகளும் இப்படி பலியாக கூடாது. இவர் மக்களை வாழவைத்த தந்தையா ?///// பிள்ளைகளை பிரபாகரன் பாதுகாத்திருந்தால் “ஊரார் பிள்ளைகளை களமுனைக்கு அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை காத்துவிட்டார் என்று சொல்லியிருப்பீர்
      மொத்தத்தில பைத்தியம் நல்ல மனநல வைத்தியரை நாடவும் இல்லையெனில் முத்திவிடும்

      • ஊர்மிளா பிரபா says:
        16 years ago

        தன் மகளை வெளிநாட்டில் எஸ்டைளாக  படிபித்ததும் மூத்தமகனை சையனைக்கு குப்பி பக்கமே தலைகாடாமல் கூலாக வைத்திருந்ததும் , வன்னி குழந்தைகள் ஒருநாள் சோத்துக்கு கையேந்தி நிற்க கடைசிமகனுக்கு பர்த்டே கேக்கு வெட்டி நீச்சல் தடாகத்தில் நீந்தி  சுக வாழ்வு வாழ்ந்ததை  மறந்துடீங்களா.?. கடைசியாக “மகன்  தந்தைக்காற்றும் …” வள்ளூவனின் வாக்கு தெரிந்தால் விளங்கி கொள்ளுங்கள். வந்துடானுகள் விளக்கம் சொல்ல…

  26. vadivesamy says:
    16 years ago

    மேதகு வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்கள், வீரமறவன், சூரியத்தேவன், உலகத்தமிழர்கள் எல்லோரும் தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதால் ,தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட மூச்சுக்காற்று, தமிழர் என்றொரு இனம் உலகில் வாழ்கின்றதென்பதை வெளிக்கொண்டுவந்த விடிவெள்ளி, வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்,mm

    • chandran.raja says:
      16 years ago

      இதொல்லாம் புளிச்சுப் போன உவமைகள் புதிதாக ஏதாவது எடுத்துவிடுங்கள்.
      என்னிடம் கைவசம் இரண்டு இதோ!
      ஈழத்தமிழர் அழிவுக்கு ஒரு பிரபாகரன் போல…
      ஒட்டுமொத்த அழிவுக்கும் பத்துலட்சம் புலம்பெயர் தழிழர்கள் போல..

      • maniyin says:
        16 years ago

        தமிழினாழிவுக்கும் தாலியறுப்புக்கும் chandran.raja போல,

      • saravanan says:
        16 years ago

        நீர் தானே அந்த காமெடி புத்தகம் எழுதும்காமெடி புயல்

  27. vadivesamy says:
    16 years ago

    மேதகு வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்கள், வீரமறவன், சூரியத்தேவன், உலகத்தமிழர்கள் எல்லோரும் தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதால் ,தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட மூச்சுக்காற்று, தமிழர் என்றொரு இனம் உலகில் வாழ்கின்றதென்பதை வெளிக்கொண்டுவந்த விடிவெள்ளி, வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்,mm
    பிரபாகரனைப் பற்றி ஆய்வு செய்யமுன் எம் பிறப்பு வளர்பு பற்றி நாம் எம் மனக்கண்ணாடியில் பார்ப்போம்.

    பெற்ற தாய்க்கு மகனாக வாழ்ந்தேனா?
    கட்டிய மனைவிக்கு களவின்றி வாழ்ந்தேனா??
    பெற்ற பிள்ளைகளுக்கு உண்மையாக வாழ்ந்தேனா???
    உற்ரவர் நண்பர்களுக்கு விசுவாசமாக வாழ்ந்தேனா????

    உணர் உன்னை நீ உணர் !!! பின்பு பேசு பிரபாகரனைப்பற்றி பிரதேசத்தைப்பற்றி
    அதுவரை நிறுத்து ராசா நிறுத்து .எழுதவிரும்பினால் உன் சுயசரிதையை எழுது எங்களுக்கும் பொழுது போகும்.

    எப்படியும் வாழலாம் எதையும் பேசலாம் இது உன் உலகம்
    இப்படித்தான் வாழ வேண்டும் இதைத்தான் பேசவேண்டும் இது தமிழர் உலகம்
    உன் கொப்பன் முப்பாட்டன் பண்பு இது.

    ஒரு தேசம் ஒரு தலைவன் எமக்கு
    பல தேசம் பல தலைவர் உனக்கு பரதேசியே.
    சிந்தி செயற்படு சிறப்புறு.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      //பெற்ற தாய்க்கு மகனாக வாழ்ந்தேனா?// சிங்களவனிடம் அனாதையாக அகதியாக கைதியாக  கைவிட்ட  மகன்.
      //உற்ரவர் நண்பர்களுக்கு விசுவாசமாக வாழ்ந்தேனா????// விசுவாசம்.? இவரை நம்பிய யாரை விட்டு வைத்தார். கே பீ வன்னிக்கு வர மறுத்ததால் தப்பினார். அனால் இப்போது கே பீ கூருபவைகளை கேளுங்கள்..புரியும் ..

  28. kmar says:
    16 years ago

    வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை

  29. abcd says:
    16 years ago

    I don”t understand your article…Please clearly publish with clear meaning of the article….Ok..!

    Prabhakaran – The Person secure genoside of Tamils…..No body have the locus_standy to talk about him. He lost his mother land, Family, etc., to save his people….But we are simply talking about him…without knowing about anything….

    We need to change our country…….One day Ezham will arise else, the entire tamils may eradicate from sri lankan Land…..But…..We don’t have cuts to save them…….

  30. abcd says:
    16 years ago

    மேதகு வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்கள், வீரமறவன், சூரியத்தேவன், உலகத்தமிழர்கள் எல்லோரும் தேசியத்தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டதால் ,தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட மூச்சுக்காற்று, தமிழர் என்றொரு இனம் உலகில் வாழ்கின்றதென்பதை வெளிக்கொண்டுவந்த விடிவெள்ளி, வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் இருக்கிறார்களென்பதை இனிவரும் பினூட்டங்களில் இனம் காணலாம், பொறுத்துப்பாருங்கள்,mm

    a very good word from VadiveSamy

  31. velavan says:
    16 years ago

    ATTENTIONS:- MY DEAR FRIENDS.MANY OF YOUR COMMENTS DON’T HAVE ANY IDEAS AND ALSO SOMETIMES, YOU GUYS HAVE TO THINK LITTLE MORE TIME BEFORE YOU WRITING ANY COMMENTS OVER HERE.. WHEN WE WRITE SOME THING , IT SHOULD BE USEFUL FOR OUR SOCIETY. I HOPE THAT MOST OF YOU ALREADY LEFT BEHIND YOUR COUNTRY, RELATIVES, FRIENDS,RELIGIONS, LANGUAGE,CULTURE,FREEDOM, TAMIL EELAM, STRUGGLE,WAR,AMBITIONS, GOAL AND EVERYTHINGS, EVERYTHINGS A LONG TIME AGO.. AND NOW IN THE THIRTY YEARS, YOU WERE ALL IN A DREAM OF TAMIL EELAM AND STRONGLY BELIEVED THAT THE GREAT HERO , THE MAN OF HISTORY , THE HONORABLE LEADER PRABHAKARN WILL GET IT ONEDAY. HE FOUGHT HIS WAR AND HE FOUND THE END. THAT IS IT. IF YOU GET INVOLVED IN THE WAR, THEN ONE DAY, YOU WILL ALSO WOULD HAVE SOME END. OTHERWISE,HERE, IT IS NOT NICE OR IT IS NOT APPROPRIATE WAY OF WRITING AGAINST TO SUCH A LEADER OR EXCHANGING SOME KIND OF THIRD GRADE COMMENTS LIKE URUMILA’S ONE OR SHOWING TO THE REST OF THE WORLD THAT WE ARE NOT FIT TO BE LIVING TOGETHER. SO, IF YOU DON’T LIKE PRABHAKARAN, THAT IS FINE, IT IS NOT GOING DAMAGE HIS NAME AND CHANGE HIS HISTORY. PLEASE STOP WRTING AGAINST PRABHAKARAN ANYMORE BECAUSE IF DON’T STOP IT THAT MEANS EITHER YOU ARE NOT TAMIL OR YOU ARE TRYING CREATE SOME PROBLEMS AMONG THE TAMILS. IF YOU ARE REALLY INTRESTED IN TAMILS WELFARE AND FUTURE , STOP WRITING FOR FUN OR JUST PASSING YOUR TIME. BUT TRY SOMETHING GOOD FOR OUR PEOPLE AND FOR THEIR UNITY.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      MY DEAR FRIEND VALVAN, AS YOU WELL SAID WE SHOULD NOT WASTE OTHER PEOPLES TIME. YOU SHOULD HAVE FOLLOWED THAT FIRST. YOU TOOK THE LONG ROUTE TO SAY “HE ‘ IS A HERO”. DO YOU REMEMBER THE PERSON WHO SENT 48,000+ TO THE KILLING FIELD AND AT  LAST, ‘THE LEADER’ SURRENDERED WITH WHITE FLAGS..LET ME FINISH WITH ONE LAST SENTENCE. ”TELL ME WHAT HE HAS DONE EXCEPT EXECUTING TIMILS?”

      • Harish says:
        16 years ago

        ஊர்மிளா பிரபா நீர் உணமையாக ஒரு சமூகவிரோதி அதுவும் பாலியல் சம்பந்தமான ஒரு மன நோயாளி ஏன் என்றால் பிரபாகரன் மீது அதீத காழ்ப்புணர்வு உள்ளவர்கள் இப்படியானவர்கள் மனதில் காம வெறியும் கையில் பேனாவும் வைத்திருப்பது நித்தியானந்தாவின் ஆண்மீகப் பணி போன்றது. இதை வாசிக்கும் போது இப்படியும் மோப்பம் பிடிக்கும் புலித்தமிழன் (மட்டகளப்பான் யாழ்ப்பாணத்தான் வன்னியான் இன்னும்….) உள்ளான் என்று பயம் வரும் ஆனால் பயப்படாதே இவ்வாறு வெளியுலகத்திற்க்கு நீ வரவும் உனது குழாங்களை விட்டு உன்னைப் பற்றியும் உம்மவரைப்பற்றியும் நீ அறியவும் இச்சந்தர்ப்பங்கள் சீர்திருத்தப் பள்ளியாகும்
        நில் கவனி செல் …

        • vanniyan says:
          16 years ago

          காமாலைக்”கண்” காரருக்கு , பார்க்கின்றது எல்லாம் எப்படித் தெரியும் என்பது, தெரியும்தானே எல்லாருக்கும். மாமணி, ஊர்மிளா & கோ , க்கு இதுதான் பிரச்சனையே. இவெர்களுக்கு எல்லாம், அந்த கடவுளே வந்து , தமிழ் ஈழத்தை மீட்டுத் தந்தாலும், அவெர் மேலையும் குற்றம், குறை சொல்லுங்கள்: இதுகளுக்கு எல்லாம் தாங்கள் எல்லாம் ஏதோ”நக்கீரன்” பரம்பரை எண்டுநினைப்பு வேற… தேசியத்தலைவர் .மேதகு. பிரபாகரன் அவெர்கள் , ஊரார் வீட்டு பிள்ளைகளை பலி குடுத்தார் எண்டால், அப்ப, தோல்வியில் முடிந்த, கட்டெப்பொம்மென், சங்கிலியன், பண்டாரவன்னியன் எல்லாரும் , யார் வீட்டு பிள்ளைகளை பலி கொடுத்தவை.இவெர்கள் எல்லாரும் வரலாற்றில் நாயகர்கள்; எங்கள் தலைவர் மட்டும் என்ன கொலைகாறரோ..தமிழ் மக்களின் போராட்டத்தை , எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்துக்கு கொண்டு போகமுடியுமோ ,அவ்வளவுக்கு போராட்டத்தை உயரத்துக்கு உயர்த்திக் காட்டிய ஒரே தலைவன் எங்கள் மேதகு.பிராபாகரன் அவெர்களே. வீட்டையே ஆள முடியாததுகள் எல்லாம், ” யாழ்ப்பாணத்தான், வன்னியான், கிழக்கான் , கொழும்பான் எண்டு எல்லாத் தமிழனையும் வைச்சு , 30 வருசமாய் ஒரே குடையின் கீழ் ஈழத்தை ஆண்ட எங்கள் தேசியத் தலைவரைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை! [ உலகம் தனக்கு வேண்டியவர்களை ” தியாகியாகவும்” , தனக்கு வேண்டாதவர்களை ” துரோகி” யாகவும் பார்ப்பது இயல்புதானே. நெல்சன்மண்டேலா 24 வருசம் உலகத்துக்கு துரோகியாய்த்தானே தெரிந்தார். ஏன் இன்று ” லிபியாவின் கடாபியின் “நிலையைப் பார்த்தீர்கள் தானே . இதுதான் உலகம். தலைவர் சொன்னதையே நான் திரும்பவும் சொல்லுறன்…. பலமுள்ளது வாழும், பலவீனமானது வீழும். தமிழர்கள்நாம் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்து வாழப் போறோமோ..? அல்லது பிரிவடைந்து வீழப் போறோமோ..? முதலில் தேசத்தை மீட்போம். அதன்பிறகு , நீ யாழ்ப்பாணி,நான் வன்னியன் , அவென் கிழக்கான் எண்டும் ,நீ புளொட்,நான் புலி, அவென் டெலோ எண்டும் சண்டை பிடிப்போம் நண்பர்களே.

          • பாரதிக்குஞ்சு, says:
            16 years ago

            இந்தக்கருத்தை நாம், +நான் 100% வரவேகிறேன் , குப்பையை கிண்டிக்கிளறிக்கொண்டிருந்தால் குப்பைதான் சேரும் ,வலியது வாழும் என்பதுதான் யதார்த்தமான உண்மையும் கூட,

          • chandran.raja says:
            16 years ago

            அவன் டொலோ !
            இவன் புளொட்!!
            இவர்கள் ஈ.பி. ஆர்.எல்.எவ் !!!
            அந்த தமிழ்கூட்டம் முஸ்லீம்!!!!
            இவன் கிழக்கான் சந்தேகத்தோடு பார்கவேணும்!!!!!

            இப்படியெல்லாம் முதலிலே செய்து தேசத்தையும் நாசம் பண்ணி சுடலை
            கட்டி முடிந்துவிட்டது. நீர் என்ன பழைய பல்லவியோடு “றிவேஸ்” கியரில்
            திரும்ப வருகிறீர் மிஸ்டர் வன்னியான்.நீர் இப்ப வன்னியில் இல்லை வயிற்றுக்கு
            ஒழுங்கா தின்னக் கிடைக்கிறது என்ற திமிரோ! கொஞ்சம் அடைக்கி வாசிக்கவும்.

          • xxx says:
            16 years ago

            “முச்சந்தி இலக்கிய வட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்கிற உரிமையோ விமர்சிக்கிற தகுதியோ உங்களுக்கு வந்துவிடவில்லை என்பதை அழுத்ததிருத்தமாக …. “–chandran.raja

            “வயிற்றுக்கு ஒழுங்கா தின்னக் கிடைக்கிறது என்ற திமிரோ! கொஞ்சம் அடைக்கி வாசிக்கவும்.”–chandran.raja

            எல்லாருக்கும் வாய்ப் பூட்டுப் போடுகிற அதிகாரத்தை எந்தப் புண்ணாக்குப் பெருமான் உங்களுக்குத் தந்தருளினார் என்று சொல்லி அருளுமாறு மீண்டும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

          • rukku says:
            16 years ago

            எல்லோரும் தமது கருத்தை உரிமையுடன் விமர்சிக்கலாம் என்பதுதான் பண்பும் கூட, கோபம் வருவதென்பது , தனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுத்தானாகவேண்டுமென்பது ,கருத்துக்களம் அல்ல, அதன் தன்மை வேறு,

          • mamani says:
            16 years ago

            இந்த தெளிவு முன்பே இருந்திருந்தால் துரோகி என்ற சொல்லே போராட்ட வரலாற்றில் வந்திருக்காது வன்னியன். சரணடந்த சிறி சபாரத்தினம் எந்தனை தடவை கேட்டிருப்பார் பேசுவோம் கிட்டு சுடாதே என்று அதற்கு நியாயம் கேட்டோமா? அதுவும் சகோதர போரளியிடம் கிடைக்காத கருணை எப்படி எதிரியிடம் கிடைக்குமென நடேசன் நம்பினார். ஏக சொற்பிரயோகம் உமக்கு மட்டும் முடிந்த ஒன்றல்ல கவனம் தேவை.

        • a voter says:
          16 years ago

          ஐயா. கருத்தைஇ கருத்தால் எதிர் கொள்ள எவ்வளவோ வழிகள் உள்ளனவே. :காமவெறிஇ பாலியல் நோயாளி… இதெல்லாம் தேவையா?

        • xxx says:
          16 years ago

          வோட்டர்
          கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள நமக்குத் தெரிந்தால் நாம் ஏன் இந்த்த நிலையில் இருக்கிறோம்?

      • Garammasala says:
        16 years ago

        There is no evidence of a surrender by VP. KP too has recently rejected that possibility.
        (Even if VP did, that is not a matter of consequence to me, despite my rejection of his politics).

        The real tragedy is that many critics of VP here, seem so sick in mind that they refuse to denounce the brutal killings and the continuing cruelty perpeterated by the MR regime. Their obsession with VP and the LTTE seems to override any care that they may have for the people.

  32. ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். says:
    16 years ago

    எனக்கு தலை சுற்றுகிறது.  விமர்சன தாக்கத்தை முடித்து விட்டு கனத்த மனதோடு நகர்கின்றேன்.

  33. S.G.Raghavan (Canada) says:
    16 years ago

    லண்டனில் வெள்ளக்காரர் தம்மை நோதேர்ன் என்றூம் சதேர்ன் என்றூம் அழைபதைப் பார்த்திருக்கிறேன்.இதையே ஸ்பெயின், இத்தாலியர்களீடமும் கண்டிருக்கிறேன்.இவையெல்லாம்நோமலானவை.ஆனால் தன்னை மேதாவியாகக் கருதி தனது தமிழனை மனிதனாகவே கருதாத இழிகுணம் தமிழரிடமே அதிகம்.
    *தமிழ்மாறன்*
    மட்டகளப்பான், யாழ்பாணி, வன்னியான் சுண்…… யான் என்பன எங்கள் அனைவரினதும் நாய் குணமாகும்.
    //எஸ் .ஜீ.ராகவன்
    ஒரு திருத்தம் யாழ்ப்பாணிகளின் நாய்க் குணம். மற்றவர்களை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
    *சாம்*

    திரு சாம் அவர்களே தயவு செய்து இப்படி எழுதாதீர்கள். சில யாழ்ப்பாணிகள் உயர் பதவியில் இருந்து கொண்டு மற்றவர்களை மதிக்காமல் நடந்தார்கள் விடுதலை புலிகளிட்குளும் இதுதான் நடந்தது. புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி தமிழில் கதைப்பதில்லை மற்றவர்களை மடையனாக நினைத்து அம்மண வார்த்தைகளாக கதைபாராம். புலிகளில் இருந்த பல உயர் மட்டங்கள் அப்படித்தான். பிரபாகரன் அப்படி கதைப் பதில்லை. தமிழர்கள் தமிழ் என்பவற்றின் மீது இருந்த பற்று இனத்துவ சிந்தனை என்பன காரணமாக பிரபாகரன் ஈழ விடுதலையை ராணுவ ரீதியில் வென்றெடுத்த பின் சமுக மாற்றத்தை உண்டாக்கலாம்என கனவு கண்டார். இதனால் சமுக சமய பிரதேச வர்க்க சாத்திய வேறுபாடுகளை களைந்து அதனுடன் இணைந்த ஆயுத போராட்டத்தில் அவர் அக்கறை செலுத்தவில்லை. எனவே இனியாவது இந்த பிரதேச வேறுபாடுகளை இல்லாமல் செய்யும் கருத்துக்களை நாம் முன் வைக்காமல் இருப்போம். நான் இலங்கையில் வேலை செய்த சமயம் ஒரு பல்கலை கழக பேராசிரியர் தொழில் சார்ந்த விடயமாக கதைக்கும் போது (நான் அவருடன் வேலை செய்தேன் பல்கலை கழகத்தில் அல்ல பிற தொழில் நிறுவனம் ஒன்றில்) நான் வடமராச்சியான் எனக்கு நீ பட்டம் கட்டுறியா என்றார் நான் யதார்த்தத்துடன் ஒன்றிபோகிறவன் யாருக்கும் நான் பட்டம் கட்டுவதில்லை இருப்பினும் இப்படி சிலர் சின்ன பிள்ளைத்தனமாக கதைத்து தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். இதில் பகிடி என்னவென்றால் நானும் வடமராச்சிதான் அது அவருக்கும் தெரியும். மற்றவர்களை மதியாத தன்மை பெரும் பாலான தமிழர்களின் பிறவிக்குணம் அல்லது நாய்குணம். யாழ்பாணத்தில் படித்தவர்கள் சற்று அதிகம் தான் அதற்காக ஏனைய மாவட்டங்களில் உள்ளோர் படிக்காதவர்கள் அல்லது முட்டாள்கள் அல்ல. சில மூதேவிகள் வாழ்கையில் மற்றவர்களோடு கதைக்க பேசதெரியாதவர்கள். அதற்க்காக எல்லா யாழ்பாணாத்தவரகளையும் குறை சொல்ல முடியாது. மேலே தமிழ்மாறன் சொன்ன விடயத்தை நன்கு வாசியுங்கள் அதுதான் உண்மையுமாகும்.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      // யாழ்பாணத்தில் படித்தவர்கள் சற்று அதிகம் தான் // அது பிரபாகன் ஆயுதத்தால் பாடசாலை போன பிள்ளைகளை கடத்தி    பள்ளிகூடங்களை மூடும் முன்பு.  இப்ப கிழக்கு மகாணமும் முஸ்லிம் களும் தான் ..பழைய பெருமை மிச்சம் நாள் தாங்கதுங்கோ… அதுக்கு எல்லாம் பிரபா ஆப்பு வச்சுடாரில்லா !

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      “பிரபாகரன் அப்படி கதைப் பதில்லை.” என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?? எப்பொழுதாவது பிரபாகரனுடன் கதைத்து இருக்கிறீர்களா? அல்லது நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறீர்களா? நகைப்பிற்கு இடமான கருத்துக்கள் வரவேற்கத்தக்கதல்ல!!!….,..

      • S.G.Raghavan says:
        15 years ago

        நீண்ட கலத்திற்கு பிறகு இதனை ஏன் கிண்டுகிறீர்கள் இலங்கை இந்திய அரச புலனாய்வு ஏதாவது தகவல் கேட்டதா? என்னத்தை கேட்டு என்னத்தைச் சொல்லி எதை புலனாய்வு செய்து, சும்மா போங்கள் நாம் எல்லாம் அம்மணமாக…………….

        பிரபாகரன் கதைப்பதில்லை என கருணாவே கூறியிருக்கிறார் அவ்வளவுதான்.

  34. velavan says:
    16 years ago

    OH VADIVESAMY! YOU ARE REALLY GREAT. FEW MORE LIKE YOU MUST WRITE COMMENTS OVER HERE. THANK YOU SIR.

  35. moonjsooru, says:
    16 years ago

    வீரபாண்டியகட்டபொம்மனுக்கு எட்டப்பன் கூட்டம்போல, பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன் கூட்டம் போல விட்டேத்திகள் எத்தனை பேர் ,,கண்டுகொண்டோம்,, கண்டுகொண்டோம் ,,கண்டுகொண்டீர்,,கண்டுகொண்டீர்,,, ,,,பூச்சியத்துக்குள்ளே ஒரு ராய்ச்சிய்ச்த்தை காணத்துடிக்கும் பித்தர்களை மன்னிப்போம் , அவர்களின் பிதற்றல்களை புறந்தள்ளி தலைவனின் வழியில் எமது பணியில் தொடர்வோம்,,,

    • maniyin says:
      16 years ago

      காகம் திட்டி மாடு சாகிறதில்லை , அவைகளுக்கு ஐந்தறிவு ஆனால் ஆறறிவுபடைத்த மனித இனத்திலும் இப்படி என்று நினைக்கும்போது தாங்கமுடியவில்லை, தமிழனின் அழிவுக்கு வேறு எவருமே தேவையில்லை ,இந்தப்பத்துப்பேருமே போதும் முப்பத்திஐந்துவருடம் சிங்களவனையும் துரோகக்கும்பல்களையும் மூலையில் முடக்கிவைத்த போராட்டம் ,இப்பேற்பட்ட சதிகாரர்களால் நச்சுக்குண்டும் பொசுபரசும் பாய்ச்சப்படும்போது இவர்களெல்லாம் குழந்தை குட்டிகள் செத்துத்தொலைந்தபோது துடிக்காதவர்கள் இப்போ அந்தக்கொலைகளை நியாயப்படுத்தி எவ்வளவு சித்தாந்த நியாயங்கள்பேசுகின்றனர் வெட்கமும் வேதனையும்தான் வருகிறது, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும், ஒரு உண்மை மட்டும் நிம்மதியைத்தருகிறது, இந்தப்பத்துப்பதினைந்து பேர்களைத்தவிர ஒட்டுமொத்த தமிழினமும் ,தலைவன் வழி,,,,புலத்திலும்,,,, களத்திலும் ,,,அரசியலிலும் ,,,,சிவந்தனின் நடைபயணமாகவும் ,பரமேஸ்வரனின் பட்டிணிப்போராகவும் தலைவன் வழியிலே,

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      தமிழ் இனத்தின் காக்கை வன்னியன், எட்டப்பனும்  பிரபாகரன் தான் . ஜெயவர்த்தனா ஆட்சிக்கு பின் வந்த அத்தனை சிங்கள அரசுடனும் (ப்றேமேதாச ,சந்திரிகா , ரணில் ) கூட்டு வைத்து அவர்களுடன் நக்கி பிழைத்து மிஞ்சி இருந்த தமிழ் போராட்ட குழுக்களை “துரோகிகள்” என்று போட்டு தள்ளி இனத்தின் மீதான பற்றை காட்டியவர்கள்   அல்லவா. 

      • a voter says:
        16 years ago

        ஏன் மகிந்தவை விட்டு விட்டீர்கள்? மகிந்தவை பதவியில் அமர்த்தியதே இவர்களல்லவா?

  36. velavan says:
    16 years ago

    DEAR FRIEND URUMILA IF YOU TRY TO WRITE TO MY COMMENTS. SOMETIMES, IT MIGHT TAKE EVEN 50 YEARS FOR YOU TO UNDERSTAND WHAT I AM TRYING TO SAY IN MY COMMENTS. HERE , I AM GIVING YOU VERY SIMPLE CLUE TO THINK FOR SOME TIME. YOU HAVE BEEN WRITING ABOUT THE ACTION AND THE CONSEQUNCE OF THE ACTION OF THE LEADER. BUT I AM WRITING THE THINKING OF THE GREAT LEADER AND MOTIVE OF HIS ACTIVITIES. I THINK, FIRST YOU HAVE TO READ FEW GOOD BOOKS LIKE GITA BEFORE YOU START WRITING ABOUT SUCH A GREAT LEADER. FIRST OF ALL, NONE OF THOSE WHO FLED THE COUNTRY A LONG TIME AGO, HAVE NO RIGHTS TO WRITE ABOUT SUCH A GREAT LEADER.DO YOU KNOW WHO AND WHO ARE BIG GUYS, BIG LEADERS TRIED TO SPEAK TO HIM. SOME OF THEM FELT THAT IF THEY HAVE THE CHANCE TO MEET PARABHAKARAN , IT WILL BE A GREAT OPPORTUNITY FOR THEIR PUBLICITY. YOU ARE TOO SMALL IN YOUR KNOWLEDGE TO WRITE ABOUT PRABHAKARAN, DON’T WORRY, NO ONE WILL GET MAD WITH YOU BECAUSE THEY KNOW THAT YOU DON’T KNOW ANYTHING IN THIS WORLD. TELL ME SOMETHING ABOUT YOURSELF. HAVE YOU DONE ANYTHING FOR OUR PEOPLE IN THE PAST THIRTY YEARS. IS THERE ANY GROUP OF PEOPLE ARE TO RECOGNOIZE YOUR SERVICE IN ANY PART OF THIS WORLD. DON’T THINK THAT I AM TRYING INTERMIDATING YOU BY WRITING LIKE THAT. I WANT TO WRITE YOU A LOT BUT I DON’T HAVE TIME RIGHT NOW. LET IT CONTINUED IN THE EVENING.

  37. S.G.Raghavan (Canada) says:
    16 years ago

    பிரபாகரனையும் புலிகளையும் விமர்சனம் செய்வதில் தவறில்லை. மாற்று தமிழ் அமைப்புகளை புலிகள் போராட்டத்தின் பெயரால் கொன்றதிலும் எவ்வித நியாயமும் இல்லை. ஆனால் மாற்று தமிழ் அமைப்புகளின் கையும் ஒன்றும் சுத்தமும் இல்லை பிளாட், EPRLF TELO ENDLF இவர்கள் கொலைகளின் நாஜகர்கள் கொலையை ரசித்து செய்தவர்கள் புலிகளிற்ற்கு ஈடினையாக, அனால் சில வேளை புலிகளுடன் ஒப்பிடுகையில் எண்ணிகையில் வேறுபடலாம். தமிழர்களை தமிழர் நாம் வகை தொகையின்றி கொன்றோம். ஒருவரை ஒருவர் வசை பாடினோம், தூற்றினோம். மிகமோசமான பிற்போக்கான இனம் நாம். இதனை நாம் மாற்றுதல் வேண்டும். எமது இனத்தினை நாமே வெறுத்தல் கூடாது. சமூக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எமது இனத்தில் பாரிய சமூக மாற்றத்திற்காக இன்றே முயற்சிக்க வேண்டும். அதனை விட்டு வீண் விவாதங்கள் வேண்டாம்.
    சமூக உட்பிளவுகளை தூண்டும் விதத்தில் எதிர்வினைகள் அல்லது விவாதம் என்ற போர்வையில் சாம் மற்றும், ஊர்மிளா பிரபா போன்றோர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெருவிக்கின்றனர். அதில் வேறு அவ டாக்டர் ஊர்மிலாவாம். மேர்வின் சில்வாக்கு டாக்டர் பட்டம் குடுத்தவங்கள், நீங்களும் அங்கேயோ எடுத்தது. யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் கல்வியை சீர்குலைத்ததன் காரணமாக கிழக்கு மாகாணமும் முஸ்லிம் மக்களும் முன்னேறி விட்டதாக ஊர்மிளா கவலை படுகிறாரா?. மெய்சிலிர்க்கிறது உங்கள் சமூக பற்றை எண்ணி. உங்களை போன்றோரின் சிந்தனைகளை கொண்ட சமுகத்தில் இருந்து தான் பிரபாகரனும் பிறந்து வளர்ந்து சில பொறுப்பற்ற வேலைகளை செய்து விட்டுப் போனார். நீங்கள் புனிதர்களாயின் பிரபாகரனும் புனிதனே! உமாமகேசுவரனும் புனிதனே! மாத்தையாவும் கருணாவும் புனிதர்கள் தான்.
    வன்னியான்கள் இப்ப முன்னேறிட்டான்கள், மட்டகளப்பாங்களை பிடிக்கேலாது , வரணியான்கள் கொடியாமத்தான்களை இப்ப குளைகாட்டங்கள் எண்டு சொல்லேலாது, யாழ்பாணியளுக்கு ஒட்ட நறுக்க வேணும், வடமராட்சியானுகளுக்கு மண்டேகை பு……..டை இதுகள் எமது சிலேடைகள். இப்படி சில அரைப்பழசுகள் மற்றையோரை விண்ணாணிப்பதில் விண்ணர்கள். இதன் தொடர்ச்சிகளே எம்மத்தியில் பிரதேச ஊர் வேறுபாடுகளை பேணிவருகின்றது. இவைகள் சிறு விடயங்களே. இவற்றினை நாம் சீர்திருத்தி மாற்றியமைக்க முடியும். அதனை விட்டு விட்டு உப்பு சப்பற்ற விடயங்களை கதைத்து இறுதியில் இன்னமொரு பிரபாகரனை சூரியதேவனாக்கி இறுதியில் தூற்றி கொன்று விடும் சமூக முட்டாள் தனம் எமக்கு மீண்டும் வேண்டாம். ஒரு நெல்சன் மண்டேலாவை உருவாக்குங்கள்.

    • பாரதிக்குஞ்சு, says:
      16 years ago

      ராகவன் தோலிருக்க சுளை எடுக்கிற கலை நல்லாவே கற்றிருக்கிறார் ,,,, ,,,,.ராகவன் ,நெல்சன் மண்டேலாவைப்பற்றி தென்னாபிரிக்காவிலை பேசினால் சில இடங்களில் செருப்படி கிடைக்கும், அங்கையும் அவருக்கு எதிரான கோஸ்டி நிறைய இருக்கிறது,அத்துடன் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவுக்குரியவர் ஈழத்தமிழர்களின் தலைமை பற்றித்தான் இங்கை பேசப்படுகிறது,,அதென்ன்வோ தெரியவில்லை , ஈழத்துக்காந்தி, ஈழதுச்சவுந்தரராஜன்,என்று நம்மை நம்பாமல் உதாரணப்படுத்தியே பழக்கப்பட்டுப்போனோம் நாங்கள் நாங்களாக இருக்கப்பார்ப்போம்,

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      நன்றாக சொன்னீர்கள் ..வேண்டாம் இந்த கொலை வெறி பிடித்த பிரபாக்கள் ..சமுதாயத்தில் அமைதிகானும் …வெளிநாடுகளில் வெள்ளையரின் நாட்டு விதிக்கு அமைந்து நடப்பது போல் இலங்கையுளும் வாழுவோம். எட்டு வீதமும் இலாத இந்திய தமிழன் தான் முழு இந்தியாவையும்  ஆள்வதாக நினைபதையும் என்பது வீதத்துக்கும் அதிகமான சிங்கலவனுகள் க்கெனப்பயளுகள் என்று எண்ணுவதையும் மாற்றுவோம். 

      • பாரதிக்குஞ்சு, says:
        16 years ago

        உமமை யாரம்மா அவிட்டுவிட்டது தள்ளி நில்லும் , நான் நெல்சன் மண்ட்டேலா ஒண்டும் குறைச்சுகூறவுமில்லை கூறப்போவதுமில்லை,ஈழத்தில் பிறந்த சிலபேர் போல தென்னாபிரிக்காவிலும் தலைவன் நெல்சன் மண்டேலாவை தூற்றுபவர்களிருக்கிறார்கள் என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன் , தவிர தமிழர்க்ள் தலைவன் பிரபாகரன்தான் என்று ஏற்றுக்கொண்ட பலகோடித்தமிழர்களின் வெள்ளத்தில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா,

        • ஊர்மிளா பிரபா says:
          16 years ago

          பல கோடி ? நீங்க கொமிடி கிமிடி பண்ண இல்லிங்களே ?. இலங்கைல் மொத்த சன தொகையே சில  மில்லியன  தாண்டாது. இந்திய தமிழன் ஆறு கோடி இல “அவர்” பெயரை கூறி நாறிப்போய் தன கட்சின் அந்தஸ்த்தும் ஒரு சின்ன  எம்ம்பி பதவிக்கும் வக்கிலாமல், எண்டா புடிச்சோம் புலி வாலைஎன்று குமுறிக்கொண்டு   நாடு  ரோட்டில் கத்திக்கொண்டு திரியும் வை கோவின் நிலை பார்த்தால் தெரியும், எவ்வளவு கோடி அவரை  தையல வச்சு கொண்டடுகிரானுகள் என்று…யாருக்கு காதுல பூ சுத்துரீங்க…பஞ்ச் டயலாக்கு பெசாதியுங்கோ..

          • பார்த்திபராசன் says:
            15 years ago

            சூப்பர், நன்னா சொன்னீங்கோ!….

    • Garammasala says:
      16 years ago

      காந்தி, மன்டெலா என்று புனிதங்களை உண்டாக்கிக் கொண்டு அல்லற் படவேண்டுமா?
      ஆதரவு எதிர்ப்புக் கோஷ்டிகளை வைத்து எடையும் மதிப்பிடுவதானால் கருணனிதி, ஜயலலிதா, ராஜபக்ச, இப்படி எல்லருக்கும் பின்னலும் எதிராகவும் கும்பல்கள் உள்ளன தான்.

      மன்டெலா பற்றிய விமர்சனங்கள் என்ன கோணத்திலிருந்து வருகின்றன என்பதையும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஏகாதிபத்த்கியத்துடனும் வெள்ளைப் பெரு முதலாளித்துவத்துடனும் சமரசம் செய்து விட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்
      முக்கியமானவை ஒவ்வொருவரது அரசியல் முடிவுகளும் செயற்பாடுகளுமே ஒழியத் தனி மனிதப் பிரச்சனைகளல்ல.
      பிரபாகரன் பற்றிய கருத்துக்களில் தனிமனித வழிபாட்டினளவுக்கு தனிமனித நிந்தனைகளும் அவதூறுகளும் உள்ளமை நல்லதா?
      இவ்வாறான விவாதங்கள் மூலம் நாம் பெறப் போவதென்ன?

    • Ramohan says:
      16 years ago

      நன்றி ராகவன் உங்கள் கருத்துக்கு, இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் பேசுவதிற்க்கு அதில் எதுவும் இல்லை, நீங்கள் கூறுவதுபோல் எதிர்காலத்தைப்பற்றி மட்டும் சிந்திப்போம்.

  38. velavan says:
    16 years ago

    DEAR URUMILA PRABA. LET IT BE MY LAST ATTEMPT TO MAKE YOU UNDERSTAND WHO IS PRABHAKARAN. NOT ONLY FOR YOU BUT ALSO OTHERS WHO HAVE LACK OF KNOWLEDGE LIKE YOU.
    I KNOW IT FOR CERTAIN THAT YOU DON’T LIKE PRABHAKARAN. IT DOESN’T MATTER WHETHER YOU LIKE HIM OR NOT. NOW ,I AM COMING TO THE MAIN POINT. OK . YOUR MAIN ACCUSATION OF PRABHAKRAN IS OVER 20000 OR 30000 OR EVEN 40000 INNOCENT TAMILS WERE KILLED IN THE FINAL WAR. THE SECOND ACCUSATION OF PRABHAKARAN IS THAT HE TOOK THE WAR FOR SUCH A LONG TIME AND ENDED IN FAILURE. IF YOU ARE REALLY , REALLY WORRIED ABOUT THOSE WHO WERE KILLED , DID YOU EVER AND EVER THINK OF THE NUMBER OF ABOTIONS , OUR PEOPLE HAVE DONE IN THE WESTERN COUNTRIES LIKE CANADA, AMERICA, NORWAY, ENGLAND, GERMANY, AUSTERLIA, AND YOU NAME IT , EVERYWHERE IN THE WORLD? I TELL YOU URUMILA ,OUR TAMILS WHO LEFT THEIR MOTHER LAND AFTER 83, HAVE DONE MORE THAN 120,000 ABORTIONS IN THE SMALL PERIOD. IN CANADA ITSELF, THEY HAVE DESTROYED MORE 18000 THEIR OWN UNBORN CHILD. IT IS PURE FIRST DEGREE MURDER OF THEIR OWN UNBORN CHILDREN. IN THE THIRTY YEARS, SOME OF THE TAMILS WHO NEVER TRAVELLED EVEN BY TRAIN, FLYING FROM COUNTRY TO CONTRY FOR THEIR GRANDCHILD BIRTHDAY. SOME OF THEM HAVING LUXRIOUS HOUSE , CAR, COTTAGES, VACATION EVERN SUMMER TO MEET CUBAN YOUNG GIRLS, SPENDING AVARAGE 50 TO 60 THOUSANDS FOR THEIR DAUGHTER’S PUNITHANEERADU VILLZA. UNCLES COMING FROM NORWAY, ENGLAND, SWISS AND SO MANY CONTRIES TO CELEBERATE THOSE FUNCTIONS.NOW OUR PEOPLE AROND THE WORLD,HAVING ALL KIND OF FACILITIES AND STILL FLYING TO SRI LANKA FOR THEIR SECOND BUSINESS. WHO CREATED ALL THESE THINGS FOR THESE PEOPLE? IS IT YOU OR YOUR HEROS.I HAVE SEEN EVEN SINHALESE PEOPLE DID NOT LIKE HIM TO BE KILLED BUT THEY JUST WANT TO STOP THE WAR.BECAUSE EVEN SINHALESE PEOPLE KNOW WEEL THAT THERE WON’T BE ANOTHER PRABHAKAN IN ANOTHER MILLIONS YEARS. LOOK THESE KARUNA , PILLIAN OR K.P AND IT CAN BE ANYONE, BEING COMFORTABLE AMONG THE SINHALESE PARLIAMENT BECAUSE THEY THEY ALL TRAINED AND LEARNED IN PRABHAKARAN CAMP.IF YOU HAVE SOME KIND OF RESPECT WHEREVER YOU LIVE ,IT IS BECAUSE OF PRABHAKARAN. I DON’T WANT TO WASTE MY TIME TO TELL YOU MORE AND MORE ABOUT PRABHAKARAN. BECAUSE YOU CAN SPEAK ANYTAMIL WHO LOVE THEIR MOTHER LAND, WILL TELL YOU THE SAME THING WHAT I AM TRYING TO WRITE OVER HERE. MAY GOD BLESS YOU FOR YOU TO OPEN YOUR EYES TO SEE THINGS WITH CLEAR MIND. THANK YOU.

  39. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    Dear Valavan, IN THE FINAL WAR WHO HELD INNOCENT PEOPLE  AT GUN POINT TO PROTECT  “THEIR” LIFE IS A DIIFFERENT ISSUE.  I WAS WRITING ABOUT  48,000+ “MAVEERARKAL” WHO KILLED for over 20 Years (7300 day). SO HE SENT OVER  6 YOUNG BOYS OR GIRLS  TO THE KILLING FIELD EVERY DAY.  OH GOD . //STILL FLYING TO SRI LANKA FOR THEIR SECOND BUSINESS// WHY ? BECAUSE THEY WANTED TO BE KILLED IN SRI LANKA ? WHAT A STUPID ARGUMENT. SO YOU LOVE AND RESPECT “HIM” FOR THE COMFORT LIFE THE TAMILS HAVING IN FORGINE COUNTRIES.(IF YOU SAY THE WORD ‘TAMIL’ TO A FORIENER , THE FIRST THINK THAT  COMES TO THEIR MIND IS “REFUGEE”. THAT’S THE NAME WE EARED NOW. WHAT ABOUT THE PEOPLE SUPPRESSED AND ABUSED AND AT LAST LEFT IN THE REFUGEE CAMP? TAMILS WHO REALLY LIVED AND DIED FOR HIM ? WHO IS THE HERO FOR WHOM?. DO YOU KNOW HOW MANY “MAVEERAR’S” FAMILIES ARE BEGGING ON THE Jaffna STREETS? YOU, WHO HAVE COMFERT LIFE BECAUSE OF PRABAKARAN, HAVING ELECTIONS AND PARTY ALL OVER THE WORLD,. SHAME ON YOU!. TO ENJOY THE LIFE THAT YOU ALL HAVE BECAUSE OF THE “VANNI” PEOPLE WHO PAID THE UTIMATE PRICE.  TELL ME ANY OTHER REASON YOU HAVE THAT PRABAKARAN COULD BE A HERO. JUST OPEN YOUR MIND AND TELL ME  “ WHAT DID PRAPBAKARAN DO TO THE VANNI POOR PEOPLE ” AND WHAT HAS HE DONE TO THE VANNI LAND?

    • anbu(Jaffna) says:
      16 years ago

      I know I can’t convince any of you big guys.. But I would like to say something as I was in vanni when tragdy happened.
      * NO BODY IS BEGGING IN JAFFNA STREET AS MADAM SAID..
      I’m in jaffna.. I travel to all parts as I’m a field officer of an NGO. We are working with people. People blamed LTTE, but now things are changed. The same people stated to say “If they are here, these things won’t happen” Soldiars started to treat people like slaves, some rape incidents.. Specially one rape attempt on a 14 years kid in 14th mile stone, Visuvamadu by a soldiar was encountered by the people.. But there are lot of things which won’t come outside world.. But, you guys are blaming a person who was gone.. My openion is that he postponed these things to 30 years atleast.. He tried to save the tamils when others are caring only about themselves and their families.. Today I felt more sad than the day we lost the war and personally I lost many of my relations because you are misusing our sacrifices..

  40. S.G.Raghavan (Canada) says:
    16 years ago

    நெல்சன் மண்டேலாவை ஒரு உதாரணமாக சொன்னேனே ஒழிய அவரின் முழு அம்சங்களையும் உள்வாங்குகள் எனச் சொல்லவில்லை. துரதிஸ்டவசமாக எங்களது சமுகத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து தலைமைத்துவம் வழங்க சரியான தலைமைத்துவம் ஓன்று கிடைக்கவில்லை. சார் பொன்களும், ஜீ ஜீ, செல்வா, அமுதலிங்கம்,பிரபாகரன், ஏனையபோராளித்தலைவர்கள், சம்மந்தன்,டக்லஸ் யாருக்குமே இந்த தகுதி இல்லை அதனை யாருமே செய்யவில்லை. செய்தனர் என்றால், இன்று ஏன் எமது சமூகம் இவ்வளவு பிளவுகளையும் தாங்கி நிற்கிறது. விடதலை புலிகளின் சில மட்டங்கள் வெளிப்படையாகவே கஜேந்திரன் அணியை ஆதரித்தன நடந்தது என்ன நீங்களே அறிவீர்கள். புலிகள் காத்திரமான தலைமைத்துவம் ஒன்றை உண்மையில் வழங்கியிருந்தால் அவர்களின் அழிவு இப்படி நிகழ்த்திருக்காது, அல்லது இவ் அழிவிர்க்கு பின்னரும் எமது மக்களும் இனமும் இப்படி சிதறுண்டு போயிருக்க மாட்டார்கள். எனவே தான் எமது சமூகத்தில் அதன் இயங்கியலில் அடிப்படை குறைபாடு இருக்கின்றது அதனை சமூக கண்ணோடு பார்ப்பதன் மூலம் புதிய வழிமுறைகள் மூலம் சமுக மாற்றத்தை உண்டாக்க வேண்டும். தென்னாபிரிக்காவின் மாற்று குழுவான இன்காதா சுதந்திர கட்சி அதன் தலைவர் புத்தலகேசி, நெல்சனுடனும் அபிரிக்க தேசிய காங்கிரசுடனும் முரண்பட்டு ஆயுத மோதல் ஒன்றுக்கு தயாரானபோது அவரை ஆசுவாசப் படுத்தி தென்னாபிரிக்க தேசியத்தில் அதன் அரசுருவாகத்தில் இணைத்த அரசியல் சாணக்கியம், ஒன்றிணையும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பக்குவம் எம்மிடையே இவ்வளவு அழிவுக்கும் பின்னும் ஏற்றப்பட வில்லையே இன்னொருவில் வரும் பின்னூட்டங்களும் கட்டுரைகளும் எங்களது சமூகத்தின் பிறழ்வு வாதத்திற்க்கு போதுமான சாட்ச்சிகள். எனக்கொரு சந்தேகம் அனைத்து தமிழ் இணையங்களும் கே பி மாதிரி DPS ஜெயராஜ் மாதிரி கருணா மாதிரி தமிழக மஞ்சள் பத்திரிகை மாதிரி இந்து ராம் மாதிரி ரத்தினபுரி பெண்களையும் ரத்தினக் கற்களையும் கண்டு மயங்கி விட்டார்கள் போல் உள்ளது எப்படியாவது தமிழர்கள் ஒன்றுமையாக பேரினவாத அடக்கு முறைகளை ஒன்றாக இணைந்து முறியடிக்க அணிதிரள முடியாது குழப்பமான நிகச்சி நிரலுக்குள் சிக்குப்பட இந்த இணையங்கள் துணையாக உள்ளன.

  41. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு

  42. velavan says:
    16 years ago

    DEAR URUMILA PRABHA. YOU JUST KEEP ON PLAYING THE SAME RECORD AGAIN AND AGAIN. WHAT I AM SAYING TO YOU IS THIS. YOU HAVE TO CHANGE THE RECORDS AND LISTEN TO THE RECORD OF TRUTH. IN THE BEGINING , THE ARMY WAS NOT KNOWING EVEN WHERE THE PLACE CALLED “VANNI” AND EVENTUALLY ,WHEN THE WAR MOVED TO VANNI REGION BY 1987OR 1988 AND THEN ONLY THE ARMY STARTED MOVING TO VANNI REGION.BY THE TIME OF THE ARMY MOVING TO VANNI REGIONS, OUR VADAMARACHCHI REGIONS ARE ALREADY DESTROYED TO THE GROUND LEVEL. SOMETIMES, YOU THINK THAT PRABHAKRAN GAVE MONEY TO THE NOTHERN PEOPLE AND ASKED THEM LEAVE THE COUNTRY AND KEPT OTHERS TO FIGHT FOR THE FREEDOM. NO! ONCE , I CAN STILL REMEMBER PRABHAKARAN VERY BADLY CONDEMNED THOSE WHO WERE LEAVING THE COUNTRY. OTHER THINGS ,NOT ONLY IN OUR COUNTRY, IN ANY COUNTRY, WHEN THERE IS A WAR, THOSE WHO HAVE CHANCES ANB THOSE WHO HAVE MONEY WILL BE LEAVING FOR ANYOTHER COUNTRY FOR THEIR OWN SAFTY. IF YOU LOOK AT CANADA, YOU WILL SEE REFUGEES FROM ALL PARTS OF THIS WORLD. EVEN OVER 50 PER CENT OF THE WHITES CAME TO THIS COUNTRY AS REFUGEES AND ALSO COMPAREDT TO THOSE WHITES, WE ,THE TAMILS ARE THOUSANDS BETTER. BECAUSE THEY CAME FOR FOOD BUT WE CAME TO LIVE FOR PEACE. EVERY CANADIANS KNOW THAT TAMILS ARE NOT BEGGERS.BECAUSE THEY ALL SPEND ABOUT 50 THOUSDANDS CANADIAN DOLLARS TO COME TO CANADA. MORE THAN 30 PERCENT OF THE CANADIANS WOULD NOT HAVE SEEN IN THEIR LIFE. OTHER THINGS . I WISH TO TELL YOU ONE THING VERY CLEARLY. WE , THE TAMILS, HAVE DONE ENOUGH IN CANADA TO PROVE THE REST OF THE CANADIANS THAT WE NOT LESS THAN IN ANYTHING ,COMPAREDTO THE REST OF THE MINORITIES IN THIS CONTRY. WHERE EVER , YOU GO, THERE YOU WILL BE PROUD OF SEEING OUR PEOPLE. OF COURSE, IN THE BEGINING , THERE WERE SOME BAD NEWS ABOUT OUR COMMUNITIES BUT NOW THE THINGS ARE ENTIRELY DIFFERENT.

    OK , LET MOVE TO YOUR OTHER TOPIC. PEOPLE ARE BEGGING IN JAFFNA ON THE STREET. YOU SEE MILLIONS OF BEGGERS ON THE STREET IN OTHER COUNTRIES BUT IN OUR COUNTRY, THERE WAS WAR FOR THIRTY YEARS, SO LET THE PEOPLE BEG FOR THE TIME BEING, AND LATER THEY WILL STAND UP AND THEY WILL ALSO FIND THEIR WAY TO LIVE LIKE OTHERS. DO YOU THINK THE PEOPLE WHO ARE IN WESTERN COUNTRIES TODAY, WERE ALL MILLIONERS BEFORE THEY CAME TO THIS COUNTY? NO ! EVERYONE STRUGGLED AND FOUND SOME WAY TO LIVE SO AS THE SAME WAY, THOSE WHO ARE BEGGING MIGHT BE EVEN RICHER THAN YOU AND I TOMORROW.

    OK , LET MOVE TO YOUR LAST TOPIC. “MAVEERAR” THEY ARE NOT BELONGED TO ANY ONE PARTICULAR PLACE BUT THEY ARE ALL FROM EVERY PART OFTHE TAMIL REGIONS. THE GREAT “MAVEERAR” BELONGS TO EACH AND EVERY TAMIL. WHEN YOU ARE IN THE WAR, THERE IS ONLY ONE WAY THAT IS “KILL OR TO BE KILLED” WHEN THEY JOINED TO THE L.T.T.E FIGHTING FORCE, THEY KNEW IT WELL. AND ALSO , I TRIED TO STOP ONE FIGHTER( I CAN’T MENTION THE NAME) BUT HE/SHE LAUGHED AT ME AND SAID “DON’T WORRY BROTHER, I KNOW WHAT I AM DOING” SO, TELL ME SHOULD I WORRY ABOUT IT. “NO” . NOW , YOU ALL BLAMED PRABHAKARAN FOR EVERYTHING BUT YOU REMEMBER YOU ARE SAME PEOPLE WERE HAPPY AND WHEN THE TIGERS ATTACKED MULLAITHEEVU CAMP AND ELEPHANT PASS CAMP. YOU KNOW, WHEN THEY DESTROYED ELEPHANT PASS CAMP, HERE IN KIPPLING AND STEEL, OVER TWO HUNDRED GUYS GOT TOGETHER AND HAD A BIG FIRE WORKS AND CELEBRATED AS A GREAT VICTORY. YOU PEOPLE ARE VERY HAPPY WHEN THOUSANDS AND THOUSANDS ARMY KILLED BY TIGERS AND WHEN THE TIGERS ARE BEING KILLED , PARABHAKARAN IS NOT A GOOD LEADER. JUST THINK FOR SOME TIME. DON’T WORRY WAR IS WAR AND IF YOU WANT TO KNOW ABOUT WAR, YOU HAVE TO GO TO SOME AMERICAN’S WAR DOCUMENTRIES AND THEN YOU WILL NOT WRITE LIKE THIS ANY MORE. I THINK YOU DON’T HAVE EVEN GOOD PEOPLE AROUND YOU TO DISCUSS ABOUT THIS TOPIC. IT IS NOT YOUR MISTAKE BUT YOU HAVE TO READ A LOT. THAT IS ALL.

  43. velavan says:
    16 years ago

    DEAR URUMILA PRABHA. YOU JUST KEEP ON PLAYING THE SAME RECORD AGAIN AND AGAIN. WHAT I AM SAYING TO YOU IS THIS. YOU HAVE TO CHANGE THE RECORDS AND LISTEN TO THE RECORD OF TRUTH. IN THE BEGINING , THE ARMY WAS NOT KNOWING EVEN WHERE THE PLACE CALLED “VANNI” AND EVENTUALLY ,WHEN THE WAR MOVED TO VANNI REGION BY 1987OR 1988 AND THEN ONLY THE ARMY STARTED MOVING TO VANNI REGION.BY THE TIME OF THE ARMY MOVING TO VANNI REGIONS, OUR VADAMARACHCHI REGIONS ARE ALREADY DESTROYED TO THE GROUND LEVEL. SOMETIMES, YOU THINK THAT PRABHAKRAN GAVE MONEY TO THE NOTHERN PEOPLE AND ASKED THEM LEAVE THE COUNTRY AND KEPT OTHERS TO FIGHT FOR THE FREEDOM. NO! ONCE , I CAN STILL REMEMBER PRABHAKARAN VERY BADLY CONDEMNED THOSE WHO WERE LEAVING THE COUNTRY. OTHER THINGS ,NOT ONLY IN OUR COUNTRY, IN ANY COUNTRY, WHEN THERE IS A WAR, THOSE WHO HAVE CHANCES ANB THOSE WHO HAVE MONEY WILL BE LEAVING FOR ANYOTHER COUNTRY FOR THEIR OWN SAFTY. IF YOU LOOK AT CANADA, YOU WILL SEE REFUGEES FROM ALL PARTS OF THIS WORLD. EVEN OVER 50 PER CENT OF THE WHITES CAME TO THIS COUNTRY AS REFUGEES AND ALSO COMPAREDT TO THOSE WHITES, WE ,THE TAMILS ARE THOUSANDS BETTER. BECAUSE THEY CAME FOR FOOD BUT WE CAME TO LIVE FOR PEACE. EVERY CANADIANS KNOW THAT TAMILS ARE NOT BEGGERS.BECAUSE THEY ALL SPEND ABOUT 50 THOUSDANDS CANADIAN DOLLARS TO COME TO CANADA. MORE THAN 30 PERCENT OF THE CANADIANS WOULD NOT HAVE SEEN IN THEIR LIFE. OTHER THINGS . I WISH TO TELL YOU ONE THING VERY CLEARLY. WE , THE TAMILS, HAVE DONE ENOUGH IN CANADA TO PROVE THE REST OF THE CANADIANS THAT WE NOT LESS THAN IN ANYTHING ,COMPAREDTO THE REST OF THE MINORITIES IN THIS CONTRY. WHERE EVER , YOU GO, THERE YOU WILL BE PROUD OF SEEING OUR PEOPLE. OF COURSE, IN THE BEGINING , THERE WERE SOME BAD NEWS ABOUT OUR COMMUNITIES BUT NOW THE THINGS ARE ENTIRELY DIFFERENT. OK , LET MOVE TO YOUR OTHER TOPIC. PEOPLE ARE BEGGING IN JAFFNA ON THE STREET. YOU SEE MILLIONS OF BEGGERS ON THE STREET IN OTHER COUNTRIES BUT IN OUR COUNTRY, THERE WAS WAR FOR THIRTY YEARS, SO LET THE PEOPLE BEG FOR THE TIME BEING, AND LATER THEY WILL STAND UP AND THEY WILL ALSO FIND THEIR WAY TO LIVE LIKE OTHERS. DO YOU THINK THE PEOPLE WHO ARE IN WESTERN COUNTRIES TODAY, WERE ALL MILLIONERS BEFORE THEY CAME TO THIS COUNTY? NO ! EVERYONE STRUGGLED AND FOUND SOME WAY TO LIVE SO AS THE SAME WAY, THOSE WHO ARE BEGGING MIGHT BE EVEN RICHER THAN YOU AND I TOMORROW. OK , LET MOVE TO YOUR LAST TOPIC. “MAVEERAR” THEY ARE NOT BELONGED TO ANY ONE PARTICULAR PLACE BUT THEY ARE ALL FROM EVERY PART OFTHE TAMIL REGIONS. THE GREAT “MAVEERAR” BELONGS TO EACH AND EVERY TAMIL. WHEN YOU ARE IN THE WAR, THERE IS ONLY ONE WAY THAT IS “KILL OR TO BE KILLED” WHEN THEY JOINED TO THE L.T.T.E FIGHTING FORCE, THEY KNEW IT WELL. AND ALSO , I TRIED TO STOP ONE FIGHTER( I CAN’T MENTION THE NAME) BUT HE/SHE LAUGHED AT ME AND SAID “DON’T WORRY BROTHER, I KNOW WHAT I AM DOING” SO, TELL ME SHOULD I WORRY ABOUT IT. “NO” . NOW , YOU ALL BLAMED PRABHAKARAN FOR EVERYTHING BUT YOU REMEMBER YOU ARE SAME PEOPLE WERE HAPPY AND WHEN THE TIGERS ATTACKED MULLAITHEEVU CAMP AND ELEPHANT PASS CAMP. YOU KNOW, WHEN THEY DESTROYED ELEPHANT PASS CAMP, HERE IN KIPPLING AND STEEL, OVER TWO HUNDRED GUYS GOT TOGETHER AND HAD A BIG FIRE WORKS AND CELEBRATED AS A GREAT VICTORY. YOU PEOPLE ARE VERY HAPPY WHEN THOUSANDS AND THOUSANDS ARMY KILLED BY TIGERS AND WHEN THE TIGERS ARE BEING KILLED , PARABHAKARAN IS NOT A GOOD LEADER. JUST THINK FOR SOME TIME. DON’T WORRY WAR IS WAR AND IF YOU WANT TO KNOW ABOUT WAR, YOU HAVE TO GO TO SOME AMERICAN’S WAR DOCUMENTRIES AND THEN YOU WILL NOT WRITE LIKE THIS ANY MORE. I THINK YOU DON’T HAVE EVEN GOOD PEOPLE AROUND YOU TO DISCUSS ABOUT THIS TOPIC. IT IS NOT YOUR MISTAKE BUT YOU HAVE TO READ A LOT. THAT IS ALL.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      LETS MAKE IT VERY SIMPLE. 1. ONE THING YOU HAVE TO BE CLEAR ABOUT. I NEVER SUPPORTED HIM AFTER THE YEAR OF  1990. WHEN HE CHASED MUSLIMS OUT OF JAFFNA AND KILLED MUSLIMS IN 3 MOSQUES AND KILLED THOUSANDS OF TAMIL BOYS BECAUSE THEY BELONG TO A DIFFERENT GROUP.2. REFUGEES IN CANDA. I READ THE 22TH EDITION SUN NEWS PAPER ON-LINE. THE HEADING IS “BOGUS REFUGEES” IF YOU CAN READ REST OF THE ARTICLE YOU WILL UNDERSTAND WHAT THE WHITE PEOPLE ARE THINKING OF TORONTO TAMILS. I CAN SEE THE RESPECT TAMILS HAVE IN TORONTO. (40,000 DOLLAR PAID REFUGEES, MORE PEOPLE COMING TO BLOCK THE HIGHWAYS ETC…) 3. IN THE BEGINNING PRABAKARAN REJECTED THE FORIGN TAMILS. LATER HE BEGGED THEM FOR MONEY IN EACH AND EVERY MAVEERAR’S SPEECH.  HE REJECTED LISTENING FOR NOT HAVING ENOUGH SOLJERS. HE LOVED IT FOR FREE MONEY HE WAS GETTING.4. LATER PRABAKARAN REFUSED TO LET ANYBODY TO GO OUT OF VANNI. (IF HE ALLOWED THE PEOPLE, HE COULD HAVE BEEN THE ONLY ONE LEFT IN VANNI JUNGLES. PEOPLES WERE FED UP OF HIM) HE HELD THEM HOSTAGE TO CONTROL THE RELATIVES IN FOREIGN CONTRIES AND DURING THE FINAL WAR TO SAVE HIM-SELF.5. PRABAKARAN KIDNAPPED KIDS FROM THE SCHOOLS AND FORCED THE THEM TO FIGHT. REMEMBER?6. 75% WHO WERE KILLED IN PRABAHARN’S MISSINARY WERE EASTERN BOYS ANS GIRLS. NO LEADERSHIP OR ANY GOOD POSSISON GIVEN TO EAST BOYS EXCEPT KARUNAA.( DO NOT TELL ME HE WAS BAD ..LOTS OF OTHER LEADERS REJECTED AND BETRAID PRABA INCLUDING MATHAYA. KARUNAA  SAVED  THE EAST PEOPLE FROM THE ABUSE OF PRABAKARAN)7. THE WORST YOU WROTE IS //YOU SEE MILLIONS OF BEGGERS ON THE STREET IN OTHER COUNTRIES BUT IN OUR COUNTRY, THERE WAS WAR FOR THIRTY YEARS, SO LET THE PEOPLE BEG FOR THE TIME BEING, AND LATER THEY WILL STAND UP AND THEY WILL ALSO FIND THEIR WAY TO LIVE LIKE OTHERS// SO MAVEERAR FAMILY BEGGING ON THE STREET IS OK? WHY THE HELL YOU SEND THEIR KIDS TO KILLING FIELD. YOU FORCED THEM TO COMMIT SUCIDE FOR YOUR LEADERS AMBITION. WHAT ABOUT THEIR POOR PARENTS, WHO LEFT WITH NO KIDS OR RELATIVES.. GOD WILL NERVER FOGIVE YOU. YOU ARE A REAL MORAN AND MASS KILLER.

  44. velavan says:
    16 years ago

    DEAR URUMILA PRABHA , YOU KNOW THE PROBLEM IS THAT WHETHER YOU LIKE IT OR NOT. YOU ARE GOING TO READ ABOUT PRHABHAKARAN FOR THE REST OF YOUR LIFE. ENJOY YOURSELF. IN THE MEANTIME, SEE SOME GOOD DOCTOR AND SCAN YOUR HEAD AND SEE , IS THERE ANY DAMAGE IN YOUR HEAD. BECAUSE YOU LOOK GOOD BUT IT LOOKS SOMETHNG WRONG SOMEWHERE IN YOUR HEAD.

  45. Haris says:
    16 years ago

    ஐயா. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள எவ்வளவோ வழிகள் உள்ளனவே. :காமவெறிஇ பாலியல் நோயாளி… இதெல்லாம் தேவையா?

    உங்கள் ஆதங்கம் விழங்குகிறது ஆனால் கருத்தை துப்பாக்கி முனையில் வெல்லும் கயவர்கள் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அவர்களுக்கு ஆதரவாகக் கசாப்புக்கடை நடத்துபவர்கள் தம்மை கருத்தியல் உலகமாற்றத்தின்
    ஊற்றுக்கள் என்று பறைசாற்றுவது ஓணான்களின் ஊரில் கழுதைகளும் வித்துவான்கள் என்றாகிவிடுமல்லவா ?

    • Shiva says:
      16 years ago

      நாய் குரைத்தால் திருப்பிக் குரைப்பதா? கடித்தால் திருப்பிக் கடிப்பதா?
      சில கீழ்த்தரமான எழுத்துக்களைப் புற்க்கணிப்பதே தகும்.
      சிலருடைய இடுகைகளைக் கண்டு கொள்ளாதீர்கள். யாரும் கவனியாத போது ஒதுங்கிக் கொள்வார்கள்.
      வாசகர்கள் முட்டாள்களல்ல. பொய்களும் வன்மமும் தம்மை வேகமாகவே வெளிக்காட்டிவிடும்.

      • mamani says:
        16 years ago

        இல்லை சிவா இங்கு இல்லாததை இருக்கிறதாக கூறி மக்களை சிறிது காலம் மந்தத்தில் வைத்திருந்து அப்படியே அவர்களின் பணத்தை சுருட்டி அவர்களை எவர்மீதும் நம்பிக்கையீனப்படுத்தி பின் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலை நம்ப வைப்பதே இவர்கள் நோக்கம். 5 வருடத்தின் பின் தலைவர் தோன்றுவார் என்று கூறுவதன் உள்ளர்த்தம் அதுவரை மக்களின் போராட்ட உணர்வை மழுஙடிப்பதே. இவை திருப்பி கடிக்காவிடாலும் கல்லெறிந்து துரத்தப்பட வேண்டியவை.

        • rukku says:
          16 years ago

          ஈழ மக்களின் போராட்ட உணர்வை மழுஙடிப்பதே. இவைகளின் வெறி இவை திருப்பி கடிக்காவிடாலும் கல்லெறிந்து துரத்தப்பட வேண்டியவை.

      • Shiva says:
        16 years ago

        மாமணி
        கற்களைக் கவனமாக வீசுங்கள்..
        தனிமனிதத் தாக்குதல்களும் மனதை நோகடிக்கும் நிந்தனைகளும் பயனற்றவை மட்டுமல்ல, வாதங்களைப் பலவீனப்படுத்துவனவுங் கூட.

        • mamani says:
          16 years ago

          தெரிந்து செய்யும் தவறுகளில் இதுவுமொன்று.

  46. j.p josephine says:
    16 years ago

    தமிழனே தமிழனுடைய எதிரி என்றே புரிகின்றது.

  47. Soorya says:
    16 years ago

    அன்புடன் மாமணிக்கு,
    இதுவரை நீங்கள் எழுதுவதை வைத்து பலர் நீங்கள் யார் உங்கள் நேர்மை எப்படி என்று கணித்துளார்கள். எனது நேர்மையைபற்றி அல்லது நான் யார் இதுவரை எங்கிருந்தேன், என்ன செய்துள்ளேன் என்ற விபரமேதும் தெரியாமல் கற்பனையில் பட்டம்விடும் நீங்கள் ஓர் நியாயமான கேள்விக்கு முறையான பதில் இல்லையென்றால் இப்படியா எழுதுவது?

    ஒன்றுமட்டும் சொல்லுகிறேன், ஏமாற்றப்பட்டுளேன் ஆனால்நான் ஒருவரையும் இதுவரை ஏமாற்றவில்லை.

    பணம் புடுங்கிகள் என்று குற்றம் சாட்டும் ”மாமனிதரே” நீங்கள் யாருக்கு பணம் கொடுத்து ஏமாந்தீர்கள்?

    • mamani says:
      16 years ago

      மரியாதையுடன் சூர்யாவிற்கு,
      நீங்கள் கற்பனை உலகில் வாழ பழக்க படுத்தபட்டுவிட்டீர்கள் அத்துடன் உங்கள் சிந்தனை ஒரு பக்க சார்பாக வேறு இருக்கிறது. உங்களுக்கு உங்களை ஒரு புலிகளின் பண சேகரிப்பாளர் விகாரமான சொல்லை தாங்க முடியவில்லையாயின் மற்றவர்களின் கடந்த/தற்போதைய செயற்பாடுகளை அறியாமல் எப்படி அவர்களை துரோகிகள்,ஒட்டுகுழு என அழைக்கமுடியும்.
      எனது பதிவுகள் எப்போதாவது தமிழ் தேசியத்திற்கு எதிராகவோ, அல்லது தமிழ்,முஸ்லிம் சுயநிர்ணய உரிமைக்கு எதிராகவோ இருந்ததாக உங்களால் கூற முடியுமா? 1 சூர்யாவும் 1 சரவணனனும் பலராக முடியாது. ஆனால் சரவணனின் பதிவுகளை விட சூர்யாவின் பதிவுகள் பகுப்பாளக் கூடியவை.

  48. Mahendra says:
    16 years ago

    சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்றைய நூற்றாண்டில் தமிழர்களின் தலைவனாக விளங்கும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நடந்துவந்த பாதையில் பாரிய தடைகளை இட்டு காட்டுமிராண்டிகளாக செயற்பட்ட தமிழ்பேசும் ஒட்டுக்குழுக்களை செல்லப்பிள்ளைகளாக கொஞ்சி மகிழ்ந்த சிங்களம் இன்று மிஞ்சினால் ஜாக்கிரதை என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபாகரன் அவர்களை எங்கும் காரணம்காட்டி வசைபாடி கருத்தெழுதிவரும் கூட்டம் இதற்கும் வசைபாட உங்கள் மூளையை கசக்கிப் பிழியுங்கள்.

  49. பாரதிக்குஞ்சு, says:
    16 years ago

    muunjsooru,
    Posted on 08/17/2010 at 3:50 am

    பிரபாகரன் தியாகியா துரோகியா? என்ற கேள்வியை கட்டுரையாளர் எழுப்பியிருந்தாலும் அவர் ஒரு முடிவுக்கு வந்து எழுதிய கட்டுரையாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது, பிரபாகரன் கொடுமையானவர் என்னும் தீர்ப்பை எதிர்பார்த்து மோசமான மனநோயோடு கட்டுரையாளர் அஜித் தனது பக்கம் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறார் என்பது மட்டும் பளிச்சென புலப்படுகிறது, அவருக்கு கூறக்கூடிய அறிவுரை ,உலக நடவடிக்கைகளை நோக்கி அதிலிருந்து அனுபவரீதியாகக்கிடைப்பதுதான் யதார்த்த அரசியல் “ஊரோடு ஒத்தோடு தனியொருவனாக ஓடுவதானால் கேட்டோடு என்பதுதான்,
    maniyin
    Posted on 08/22/2010 at 9:38 am

    காகம் திட்டி மாடு சாகிறதில்லை , அவைகளுக்கு ஐந்தறிவு ஆனால் ஆறறிவுபடைத்த மனித இனத்திலும் இப்படி என்று நினைக்கும்போது தாங்கமுடியவில்லை, தமிழனின் அழிவுக்கு வேறு எவருமே தேவையில்லை ,இந்தப்பத்துப்பேருமே போதும் முப்பத்திஐந்துவருடம் சிங்களவனையும் துரோகக்கும்பல்களையும் மூலையில் முடக்கிவைத்த போராட்டம் ,இப்பேற்பட்ட சதிகாரர்களால் நச்சுக்குண்டும் பொசுபரசும் பாய்ச்சப்படும்போது இவர்களெல்லாம் குழந்தை குட்டிகள் செத்துத்தொலைந்தபோது துடிக்காதவர்கள் இப்போ அந்தக்கொலைகளை நியாயப்படுத்தி எவ்வளவு சித்தாந்த நியாயங்கள்பேசுகின்றனர் வெட்கமும் வேதனையும்தான் வருகிறது, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும், ஒரு உண்மை மட்டும் நிம்மதியைத்தருகிறது, இந்தப்பத்துப்பதினைந்து பேர்களைத்தவிர ஒட்டுமொத்த தமிழினமும் ,தலைவன் வழி,,,,புலத்திலும்,,,, களத்திலும் ,,,அரசியலிலும் ,,,,சிவந்தனின் நடைபயணமாகவும் ,பரமேஸ்வரனின் பட்டிணிப்போராகவும் தலைவன் வழியிலே,

  50. Vijay says:
    16 years ago

    பேச உங்களுக்கு வாயும் எழுத கையும் உள்ள கட்டுரையாளரே, இப்பொழுது பிரபாகரன் இல்லை சிங்களவன் தமிழனை கொன்று கொண்டுதான் இருக்கின்றான்நீங்கள் என்னத்தை செய்கின்றீர்கள்?

    கோவணத்தை கையில பிடித்துக்கொள்ள கூட தமிழனுக்கு – உங்களையும் சேர்த்துதான்நேரமில்லை – செயலாற்ற முடியலைனாலும் வாயப் பொத்திக்கொண்டு இருங்கள்.

  51. pradesh says:
    16 years ago

    அழிந்துகொன்டிருக்கும் ஈழ தமிழரை ,இனதை காப்பாட்ர என்ன செய்யலாம் என்ட விவாதட்தை தொடஙலாமெ யெஅன் இந்த பிரதெசவாதம ஏன் இந்த் கரைசசல் இது ஒன்ரும் காலம் கடத்தும் அரட்டைஅரஙகமா உருப்படியா ஏதாவது பன்ன முடியுமான்னு பாருங்கலேன்  இது உஙகலுக்கு பிரதேச வாதமாக இருக்கலாம் .  எங்கலை போன்ர உ

    • a voter says:
      16 years ago

      சரியான கருத்து. ஆனால் என்னைத்தவிர ஒருவரையும் நம்ப விடவில்லை கடந்த காலம்.

    • Shiva says:
      16 years ago

      உங்களையே உங்களால் நம்ப முடிகிறதா? முடிந்தால், சாதனை தான்.
      (இது பகிடி மட்டுமே).

  52. ஜோதிஜி தேவியர் இல்லம். திருப்பூர். says:
    16 years ago

    இந்த தளத்தின் சொந்தக்காரர் சபா நாவலன் (சரிதானே?)

    உங்கள் அக்கறையோ வேறு எதுவோ என்னுடைய மூன்று மின் அஞ்சல் முகவரிக்கும் ஒவ்வொரு தலைப்பு வெளிவரும் போது சரியாக வந்து விடுகின்றது.  மிக்க நன்றி.

    எப்போதும் படித்து விட்டு நகர்ந்து விடுவேன்.  மாற்றுக்கருத்து என்பது ஏற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி பலவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்?

    தெரியாத்தனமாக இந்த தலைப்பு குறிப்பு வருகின்ற பின்னோட்டத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக மின் அஞ்சல் வாயிலாக படித்துக் கொண்டு இருக்கின்றேன்.

    உங்கள் நோக்கம் தான் என்ன?  ஏற்கனவே தமிழர்கள் மிக எளிதாக உணர்ச்சி வசப்படுபவர்கள்.  அது ஈழம் இருந்தால் தான் என்ன?  தமிழ்நாடு என்றால் என்ன?  எல்லாமே ஒன்று தான்.

    கடைசியாக மேலே உள்ள வினோதன் பின்னோட்ட விமர்சனத்தை பார்த்து இதை எழுதியே ஆகவேண்டும் என்று இதை எழுதி வைக்கின்றேன்.  இதற்கு கூட எவராவது திட்டலாம்.

    பிரபாகரன் குறித்து “அக்கறையாக” உங்கள் தலைப்பு மற்றவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது போல தற்போது ஈழத்தில் “நடந்து கொண்டுருக்கின்ற” விடயங்களையும் புரிய வையுங்களேன்.

    இன்னும் எழுத வேண்டும் போல் உள்ளது.  அது வேறு விதமாக திசை திருப்பி விடக்கூடும் என்பதால் இத்துடன் முடிக்கின்றேன்.

    • peepaa, says:
      16 years ago

      மிக்க நல்லது போய் வாருங்கள், நன்றி!

    • Shiva says:
      16 years ago

      பீபா
      இவ்வாறன தொனி தேவை தானா?

  53. பார்த்திபராசன் says:
    16 years ago

    வல்வெட்டித்துறையில் கள்ளக்கடத்தல் செய்துகொண்டிருந்த ஒரு கும்பலைப் பொலிசார் கைது செய்ய முயன்ற பொழுது ஒரு பொலிகைக் கொலை செய்துவிட்டு அந்தக்கும்பல் தப்பிவிட்டது. மீண்டும் அந்தக்கும்பலைப்பிடிக்க இங்ஸ்பெக்டர் தலைமையில் பொலிசார் சென்றனர். மீண்டும் இங்ஸ்பெக்டரையும் இன்னுமொரு பொலிசையும் கொலை செய்துவிட்டு அந்தக்கும்பல் தப்பிவிட்டது. அதுமடடுமல்ல பெரிய பல  கடத்தல் முதலாலிமாருக்குப் பொருட்களைக் கடத்தித் தருவதாக ஆசைகாட்டி பொருட்களைக் கடத்தும் போது முதலாலியையும் கூடவே கூட்டிச் சென்று நடுக்கடலில் தள்ளிக் கொண்று விட்டு அந்தப் பொருட்களைக் கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருநத அந்தக்குழு காலப்போக்கில் போலிசாரைச் சமாளிக்கமுடியாமல் சிவகுமார் என்ற அறிவாளியுடன் கூட்டு அமைத்தனர்.அதாவது உண்மையாண விடுதலைப்போராளியுடன் கூட்டு அமைத்தனர். இறுதியில் குழுத்தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு சிகுமாரைப் பொலிசாருக்குக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி!. அந்தத் துரோகிதான் பிரபாகரன் என்னும் நரித்தமிழன்.இவனைப் போய் வீரன், மறவன், தேசியத்தலைவன் என்று கொண்டாடும் முட்டாள்த் தமிழனிடம் அரசாட்சியைக் கொடுத்தால் மக்களின் கதி என்னவாகும் என்பதனை நினைத்துப் பார்க்கவே குலைநடுங்குகிறது. அப்படி ஒரு இழினிலை வாழ்வு வாழ்வதைவிட எதிரியுடன் அனுசரித்து வாழ்வதே மேல் எனஅரசின் பக்கம் சாய்ந்தவர்களைத் துரோகி என்றனர் உண்மையாண தமிழினத் துரோகிகளான புலிகளின் வால் பிடித்து வாழவிரும்பிய கோழைத் தமிழர்கள். இவர்கள் விரும்பியது தமிழர்களுக்குச் சுதந்திரத்தைனா?! இல்லை! இவர்களுக்கு வேண்டியிருந்தது தங்களைப் பார்த்துப் பொலிசார் பயப்பட அதற்கு ஒரு கொத்தடிமைச் சண்டியனைத்தான்.இதிலே இங்கே எங்கேசுதந்திர விடுதலைக்காண நோக்கம் உண்டு?.

  54. mamani says:
    16 years ago

    பார்த்தீபராசன்! சிவகுமாரை பிரபா காட்டிகொடுத்தார் என்பது அபரிமிதமான குற்றசாட்டு
    ஆதாரமற்றது. குட்டிமணி, தங்கதுரை விடயத்தில் பிரபா பெயர் அடிபடுகிறது.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      தங்களின் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி.
      தங்கத்துரை குட்டிமணி இருவரும் கள்ளக்கடத்தல்ப் பங்காளிகள். பிரபாகரன் அவர்களிடம் எடுபிடியாக வேலை செய்த ஒரு சிறு பெடியன். அதனாலத்தான் அவனைத் தம்பி என அவர்கள் அழைத்தனர். பிற்காலத்தில் அதுவே தம்பி பிரபாகரன் என அழைக்கக் காரணமாயிருந்தது. சிவகுமார் மறறும் அமிர்தலிங்கத்தின் சகோதரன் அவர்களுக்கு அவர்களின் கடல்கடந்த போக்கு வரத்துக்கு குட்டிமணி தங்கத்துரை அவர்களின் உதவிதேவைப்பட்டது. அவாகளுடன் எடுபிடியாகச் சென்றவன் பிரபாகரன். மற்றும்படி இவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இது எல்லாத் தமிழ்ச்சினிமாக்களிலும் வரும் ரௌடிக் கதானாயகலீலை தான். மற்றும் குட்டிமணி தங்கத்துரை இருவரும் நாகர் கோவில் கடற்கரையில் வைத்தே கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் அப்போது அங்கு இருக்கவில்லை. அதனால்ப் பலருக்கு பிரபாகரன்மேல் சந்தேகமுள்ளது வாஸ்தவம்தான். ஆனாலும் அதற்கு மேலும் ஒரு விடயம் இருக்கிறது. யுஎன்பி முகவர்களுக்கும் இவர்களுக்கும் ஒத்துப் போகாமல் இருந்த காலம் அது. அந்தநேரங்களில்த் தமிழர்கள் வன்முறையை விரும்பியிருக்காத காலகட்டம். இவர்கள் பொரிசாரிடம் மட்டும் தங்கள் வன்முறைகளைப் பிரயோகிக்கவில்லை. சந்தேகப்படும் பொது மக்களிடமும் தங்கள் வன்முறையைப் பிரயோகித்தனர். அதுவும் அவர்களது விதிக்குக் காரணமாக இருந்திருக்கலாம். நீர் எனக்குக்கூறியது போல்த்தான் உறுதியான ஆதாரங்கள் இல்லை. 1978 முதல் 1987 வரை நான் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஆதரித்து 1987 யூலையுடன் புறமுதுகிட்டு ஓடியவன் என்றரீதியில்ப் எனககுப் பலவிடயங்கள் தெரிந்திருக்கக் கூடியதாய் இருந்தது. அதில் அறிந்ததைத்தான் கூறினேள். தவறிருந்தால் மன்னிக்கவும்.:

      • mamani says:
        16 years ago

        தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. பிரபாவும் சிவகுமாரனும் ஒரு தடவை கூட நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை இதனை லண்டனில் நடந்த கலந்துரையாடலொன்றில் “கிட்டு” உறுதிபடுத்தியிருக்கிறார். அத்துடன் சிவகுமாரின் தாயாருடன் சிலமணி நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போ அவர் பிரபாகரன் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை ஆனால் அங்கு பெற்றோல்நிரப்பு நிலயம் நடத்திய ஒருவரின் பெயரை குறிப்பிட்டார் பெயர் நினைவில்லை. சில நிகழ்வுகள் நாம்நினைப்பதற்கு எதிர்மாறாக இருக்கும் உ+ம் கிட்டுவிற்கு குண்டெறிந்தது உள்வீட்டு வேலையென்றும் அதை எறிந்தவர் இம்ரான் என்ற புலியென்றும் அதிக காலம் நம்பிக்கொண்டிருந்தேன். புலிகள் ஈ. பி .ஆர்.எல்.எவ் இல் குற்றம்சாட்டினர். ஆனால் அதனை செய்தவர் பி.எல்.ஓ பயிற்சி பெற்ற முன்னாள் புளொட் உறுப்பினர்.

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          தங்களின் புரிதலுக்கு நன்றி;  கிட்டுவின் விடயம் நானும் உட்பூசலாகவே அறிந்திருந்தேன். அப்போதய எம்மூர்ப் புலித்தலைவன் நேரடியாகக் கூறாவிடினும் நையாண்டியாகச் சொன்ன சில தகவல்களின்படி அப்படித்தான் எம்மூரவர் நம்பி இருந்தனர். உண்மைகள் உறங்குவதில்லை என்பது இப்படித்தானோ!!

  55. thamilan says:
    16 years ago

    ஒரு கதியாலை மற்றவன் தன் காணிக்குள் செருகிவிட்டான் என்று பக்கத்து வீட்டுக்காரனை கொல்லும் கும்பலைசேர்ந்தவர்தான் இந்த பார்த்திப்ராசன். ஒரு கதியாலுக்காண்டி சொந்தச்சகோதரனையே கொன்றுவிட்டு வாழ்க்கை முழுக்க கோட்படியேறிநிற்கும் இந்தக்க்கும்பல்லில் இருந்து வந்தவர்தான் சிவகுமார் என்று சொல்லாமல் சொல்கிறார். அவரைக்காட்டிக்கொடுத்தவன் இன்னொரு கதியால் சொருகிதான்.கடததல் என்பது ஒன்ன்றும் கேவலமானதது அல்ல. பின்னாளில் கதியால் சொருகிகள்தான் கொகேன் க்டத்தும் தொழிலை முமபயையில் செய்தார்கள். வல்வெட்டித்துரையான் செய்தது வணிகம். இந்தியாவும் பர்மாவும் இலங்கயையும் வெள்ளைககாரரால் ஆளப்படும்போது வல்வெட்டித்துறையார் செய்த கடல்தாண்செய்தவனிகம்

    • thamilmaran says:
      16 years ago

      கதியால் கதையெல்லாம் முடிந்து இப்போது தமிழர் இன்னொரு தமிழருக்கு அதிகார எல்லையை வரையும் போடர் பிரச்சனை ஒருதரைப் பார்த்து மற்றவரை முறக்கிறது செருமிறது என்றூ தெருவில நிற்கிறது தமிழர் மரியாதை.

  56. சங்கரன் says:
    16 years ago

    வல்வெட்டித்துறையார் எந்த கப்பல் கம்பனியை வைத்து “கடல் வியாபாரம் ” செய்தார்கள் என்று விளக்கினால் உதவியாய் இருக்கும்.

  57. thamilan says:
    16 years ago

    அன்னபூரணிக்கப்பல் அமெரிகரினால் வாஙகப்பட்டு வல்வெட்டித்துரைக்கடலோடிகளால் நியூயொர்க் நகர் வரை கொண்டு செல்லபட்டு அமெரிகரிடம் ஒப்படைகப்ட்டது. வல்வெட்டித்துரையார் ஒன்றும் மீன்பிடிததோZஇல் செய்துகொன்டிந்தவர்கள் அல்ல. அவர்கள் வனிகர்கள். பர்மா தாய்லாந்து இந்தியா மலேசியா போன்றநாடுகளிற்கு கப்பல் மூலம் வனிகம் செயதவர்கள். நாட்டுகோட்டை செட்டியாரின் பர்மிய சொத்துக்கள் எல்லாம் வல்வெட்டித்துரையாரின் கப்பல்களில்தான் இந்தியா கொண்டு வரப்படடது. என் எம். பெரேரா நிதி அமைச்சரான பின்னர்தான் இந்த ககதியால் சொரிகிகள் முன்று வேளை சாப்பிட முடிந்தது. அதுவரை வல்வெட்டித்துறையான் கப்பல் மூலம பர்மாவிலிருந்து அரிசி கொண்டு வந்துதான் இலங்கயை மக்க்ள் ப்ட்டினிக்கொடுமையில் இருந்து மீன்ட்டார்கள்.

    • mamani says:
      16 years ago

      இது ரொம்ப ஓவரா தெரியல.

      • பாலாமணி says:
        16 years ago

        அண்ணை மாமணி “வல்வெட்டித்துறை கள்ளக் கடத்தல்” என்பதனை கூகிள்ளில் தேடினால் பதில் கிடைக்கும். பாய்மரம்,கப்பல் ஏரோபிளேன் ஓட்டியதிலிருந்த்து கள்ளத்தோணியில் ஏழைகளை ஏற்றி வந்து வித்தனவெல்லாம் கிடைக்கும்

        • சின்னமணி says:
          16 years ago

          சிறு திருத்தம்..பாய்மரம்,கப்பல்,ஏரோப்பிளேன் மட்டுமல்ல ரொக்கெட் ஓடியிருக்கிறார்கள்(மல வாயிலூடாக போதைமருந்து கடத்திச்செல்வதை “ரொக்கெற்” என்று சொல்லும் வழமை உண்டு)

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      நாய்வாலை நிமிர்த்த முடியாது என்பதைப் போல என்பது போல மாற்றான் உயிர் குடித்து உண்டி வளர்க்கும் உங்களைப் போன்றவர்களும் திருந்த மாட்டீர்கள். உங்களைப் போன்ற அறிவிலிகள் இருக்கும் வரை தமிழனுக்கேது சுதந்திரம்!

  58. சங்கரன் says:
    16 years ago

    ஏன் அந்த கப்பலை மியுசீயத்தில் வைக்கவோ அமெரிக்கர்கள் வாங்கினார்கள்.?அப்போ அதோடு கடல் வணிகம் முடிந்துவிட்டதோ? ….உழைத்து சாப்பிடாமல் குறுக்குவழியில் கடத்தலில் இறங்கி உண்மையாக உழைத்து வாழும் ஒரு பகுதி மீனவர்களையும் ” குற்ற பரம்பரையினராகி” விட்டார்கள் இந்த கடத்தல் மன்னர்கள்.எத்தனையோ செட்டிமர்களை எல்லாம் முறித்து தான் வல்வெட்டித்துறையில் திருவிழா செய்யபட்டது.

    • கிளியன் says:
      16 years ago

      பாக்குநீரணையில் எத்த்னை மார்வாடிகளினதும் செட்டிமார்களினதும் உடல்கள் உள்ளன என்பதனையும் டமிலன் விளங்கப்படுத்தி சொன்னால் ந்ல்லா இருக்கும். அப்படியே தமிழகத்திலிருந்து “கள்ளத்தோணியில்” ஏழைகளைக் கொண்டுவந்து கொத்த்டிமைகளாக விற்பனை செய்தது பற்றிய விபரத்தையும்,இடையில் போலிஸிடம் மாட்டும் சந்தர்ப்பம் ஏற்படும் போது மனித கடத்தல் குற்றத்திலிருந்து தப்புவதற்காக தமிழக ஏழைகள கடலுடன் சங்கமிக்க வைத்த (ஜல சமாதி) விடயங்களையும் எடுத்துவிட்டால் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கும் சார்

  59. Mahendra says:
    16 years ago

    ஓநாய்களின் கூட்டுக்குள் அகப்பட்ட ஆடுகள் ஒன்றை ஒன்று குத்தித் தாக்கி வீரம்காட்டும் விளையாட்டு படு ஜோர்……..

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      இது குத்தி விளையாடும் விளையாட்டல்ல. வேதனையின் வெளிப்பாடே! விளையாடித் தோற்றவனுக்குத்தான் தெரியும் அந்த ஏக்கம். மறுபடி வெல்வதாயின் முதலில் எஙகே நாம் பிழை விட்டோம் எனக் கண்டு பிடிக்க வேண்டும். குட்டையைக்கலக்கினால்தான் மீன்பிடிக்கமுடியுமாய் உள்ள தருனத்தில்க் கலக்கித்தானாக வேண்டும். இதுவும் அதேபாணிதான். அதனை அறிந்து கொள்ள பார்வையாளரால் முடியாது. பங்களிப்பில் ஈடு பட்டீர்களானால் அது தானே விளங்கும். முயற்சித்துப்பாருங்களேன். நாட்டை எப்படி முன்னேற்றி மக்களை எப்படி தன்னிறைவுடன் வாழவைக்க முடியுமென!!!!!

  60. tamilan says:
    16 years ago

    வல்வெட்ட்டித்துறையான் ஏழைகளை கடத்திவந்து விற்கும்போது ஏலம் எடுத்தவர்கள் க்தியால் சொரிகிகளா எந்த ஊரவனாவ்து எதையாவது சாதிட்த்கிருந்தால் அதை எழுதலாம்தாஃனே. ச்ட்டியில் இருந்தால்தானே அகபபையில் வரும். அவனவன் தங்கள் ஊர் பேரை செல்ல்வே வெக்கப்ப்டுறான். ஒருதடவை உரதது சொல்லிபாருங்கோ. மகிந்தவின் எடுபிடிகளாகத்திரியும் இந்த கதியால் சொரிகளை ஆள பத்தாவ்து ப்டித்த்வனே போதும். இல்லை சிங்களவன் ஆள்வான்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      நமது தம்பி 
       அன்பிற்கினிய அண்ணன்
         தலைவணங்காத் தலைவர்
         தமிழர்களின் தமிழீழத் தேசியத் தலைவர்
       தேசத்தின் தேசியத்தலைவர்
      மேதகு வேபி
      எத்தனையாவது அண்ணை படித்தவர்????????

  61. S.G.Raghavan says:
    16 years ago

    அடே …… தமிழா? உனக்கு வேற வேலை இல்லையா? கதியால் சொருகிகள், கடத்தல் காரர்கள் என்று கூறி ஒரு இனத்திற்குள் இரண்டக வேலை செய்யவா இனிஒரு இணையத்தளம் களம் அமைத்து கொடுத்திருக்கின்றது சபா நாவலன் அவர்களே இவ்வாறான பிளவுவாத கருத்துக்களை தூண்ட உங்களுக்கு இந்திய உளவுத்துறை தரும் சன்மானம் எவ்வளவு?
    இந்திய உளவுத்துறை ஒருமுறை சகல இயக்கத்தலைவர்களையும் சந்திக்க முனைந்ததாம் அப்போது புளட்டின் முறை உமாமகேசுவரனையும் சந்திப்புக்கு அழைத்திருந்தனர் உமா செல்லவில்லை. அப்போது புளட்டின் முக்கிய புள்ளியாக இருந்த டி.சிவராம் அவர்களை சந்திப்புக்காக அனுப்பினாராம், அதற்க்கு முன் உமா, சிவராம் நீ சந்திக்க போகும் ஆள் வில்லங்க மானவர் அவருடைய வேலை இனபிளவுகளை தூண்டி முரண்பாடுகளை தோற்றுவிப்பதே எனவே கவனமாக இருந்து கொள் சந்திப்பில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பிடிகொடாமல் பதில் சொல் என்பதே ஆகும். உண்மையில் டி. சிவராமிடம் அவன் கேட்ட கேள்வி பிரதேச ரீதியாகா தமிழர்களுக்கிடையில் என்ன வேறுபாடுகள் இருக்கின்றது என்பதே. யாழ்பாணத்தில் என்ன உட்பிளவுகள் இருக்கின்றது வன்னி யாழ் மட்டகளப்பு திருகோணமலை என்பவற்றில் வாழும் தமிழர்களுக்கிடையில் என்ன வேறு பாடு இருக்கின்றது போன்ற இன்ன பிற கேள்விகள் தான்.
    ஏன் தெரியுமா? உங்களை போன்றோர்கள் சொருகி கொண்டு திரிவதை தூண்டுவதன் மூலம் விடுதலை போராட்டத்தை சிதைக்கலாம் என்பதால் தான். இறுதியில் டி. சிவராமே புளட்டை சிதைத்து அழித்தார் என்பதுவும் உண்மையாகும். பார்த்திபராசன்
    உங்களின் பெயர் நல்லம் தங்களின் மூளையும் உண்மையை அறிந்து கதைக்கும் பண்பும் மந்தமாகி இத்து போயிருக்கும் என நினைக்கேறேன். சிவகுமார் காட்டி கொடுக்கப் பட்டது உண்மை அது இலங்கை போலீஸ் ஏஜெண்டுகள் முலமாக நடந்தது.
    தங்கத்துரை தபால் அதிபராக இருந்தார். குட்டிமணி கடத்தல் தொழில் செய்தார் என்பது உண்மை. தங்கத்துரை கடத்தலில் ஈடுபட்டாரா? என்பது தெரியாது. தங்கத்துரை தொண்டமனாற்றை சேர்ந்தவர். வல்வெட்டி துறை, பருத்தித்துறை என்பவற்றில் பல தண்டையல்மார் கப்பல் வைத்து வாணிபம் செய்தது உண்மை. கொழும்பில் மற்றும் தென்பகுதியில் எத்தனை கொலை நடக்கின்றது கடத்தல் தொழிலுக்காக, இதில் தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை. பெரும் பாலான கடத்தல்கள் அரசின் உயர் மட்டங்களின் ஆசியுடன் தான் தற்போதும் நடை பெறுகின்றது. பருத்தித்துறையில் வீரவாகு கிட்டங்கி உள்ளது அவர் கப்பல் கம்பனியை வைத்து “கடல் வியாபாரம் ” செய்தார். வல்வெட்டித்துறையிலும் இவ்வாறு கிட்டங்கிகள் இருந்தன அவற்றின் அழிவடைந்த கிட்டன்கிகளையும் தற்போதும் நீங்கள் பார்க்கலாம். இரகசிய கிட்டங்கிகளும் வல்வெட்டித்துறையில் பேணப்பட்டு வந்தது உண்மை ஆகும்.

    • siva saravanabhavan says:
      16 years ago

      நீங்கள் டான் பிறவுணால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் சீரீ……ரங்கன்.இன்னும் மக்கேல் டொனலி, லீ சைல்ட், இயன் ராங் கின் எனப் படியுங்கள். எப்போது பார்த்தாலும் ஏதோ புதுப் புதுப் பெயர்களூடன் வருவீர்கள் இப்போது என்ன தமிழ்ப் பெயர்களூடன் வருகிறீர்கள்?கடல் மாதிரி இருக்கும் புத்தகங்கள கரையிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ?

    • suganthan says:
      16 years ago

      போகிற போக்கில் நாவலன் மீது சேறுவாரிவிட்டு சோல்லப்பட்டிருக்கின்ற தகவல் பிழையை மட்டும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். உமாமகேஸ்வரன் சிறந்த தீர்க்கதரிசி போல கூறப்பட்ட அடிப்படை தவறானது. முகுந்தன் தான் ச்ந்திக்கின்ற நபர்களுக்கு ஏற்புடைய கருத்துக்களை பேசுகின்ற பச்சையான சந்தர்ப்பவாதி. இடதுசாரிநிலைப்பாடு, சமூகபிரகஞைகொண்டோருடன் பேசும்போது மாக்சிசமும், தேசியநிலைப்பாடுகொண்டோருடன் இனவாதமும், மாணிக்கதாசன்,சங்கிலி போன்ற லும்பன் க்ளுடன் தெருச்சண்டியன் போலவும் பேசிக்கொள்வார். முகுந்தனது அரசியல் தமிழ்தரகுமுதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியல். எஸ்.ஆர் என்று புளட் இயக்கத்தில் அறியப்பட்ட சிவராம்; புளட் இயக்கம் சிதறியதற்கு சிவராம் காரணமல்ல. முகுந்தனே காரணம். எண்பதுகளின் நடுப்பகுதியில் புளட்டிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின்போது அதிகாரமையத்தை சுற்றியே எப்போதும் அரசியல் செய்பவரான சிவராம் (முகுந்தனுடன் தனிப்பட்ட நெருக்கம் இல்லாதபோதும்) உமா கும்பலையே ஆதரித்தார். கூடவே உமாகும்பலுக்காக செல்வன்,அகிலன் என்ற இரு உறுப்பினர்களுடைய படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தார். உமாகும்பலுக்காக இந்த காலகட்டங்களில் சிவராம் காட்டிய அரசியல்பூச்சாண்டிகள் மிக பிரசித்தமானவை.

  62. பாலாமணி says:
    16 years ago

    என்ன டமிலன் சார் ரொம்ப டென்சன் ஆயிட்டீங்கபோலத்தெரிகிறது?பர்சலனா எடுத்துக்காதிங்க. டேக் இட் ஈசி.நீங்க V.V.T கப்பலோட்டிய கதையை வேறொரு இணையதளத்தில் படித்துவிட்டு இங்கு கொட்டியதணால்தான் உண்மையை தெரியப்படுத்தினேன். அது உங்களைக் காயப்படுத்தினால் மன்னிக்கவும். உங்கள் ஊரின் வீர சகாசங்கள் உலகறியும் வேணுமென்றால் ஒரு பேப்பரில் எழுதவும்

  63. சங்கரன் says:
    16 years ago

    ஏன் ஒரு பேப்பர் காரரும் கள்ள கடத்தல் செய்பவர்களா? அது ஒரு கோமாளி பத்திரிக்கை.

    • thamilmaran says:
      16 years ago

      அப்படியானால் புதினம் பத்திரிகை பற்றீ உங்கள் கருத்து என்ன சங்கரன் இன்னொரு கேள்வி கப்பலோட்டிய தமிழர் என பிரித்தானிய தமிழ்ப் பத்திரிகையாளர் சிறந்த நூல் எழுதி உள்ளார் படித்திருக்கிறார்.நல்ல எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆனால் அவரையும் லண்டன் வாழ்க்கை முடக்கி விட்டதோ?

    • xxx says:
      16 years ago

      புதினம் பத்திரிகை மிக மட்டரகமான ஒன்று.
      அதன் ஆசிரியர் முற்றிலும் வணிகநோக்கில் வெளியிட்ட அந்த நூலில் அப்பட்டமான தவறுகள் பல இருந்தன.

  64. யோகன் says:
    16 years ago

    தமிழ்மாறன் !
    அவர் பெயர் ராஜகோபால் .புலிகளை மகிழ்விக்க எழுதிய நூல் அது ( “வல்வேட்டிதுரையிலிருந்து அமெரிக்காவரை ..கப்பலோட்டிய தமிழர்கள்.” என்பது அந்த நூலின் பெயர்.).அவர் வல்வெட்டி என்ற ஊரை சேர்ந்தவர்.

    • THAMILMARAN says:
      16 years ago

      தங்கள் தக்வல் தவறானது.வல்வெட்டித்துறயில் இருந்து அமெரிக்கா போனவ்ர்களீன் கதை அது.விறூவிறூப்பாய் எழுதப்பட்ட ஒரு வரலாறூ அது.புலிகளீன் காலத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு வரலாற்றூப் பதிவு.

      • xxx says:
        16 years ago

        விறுவிறுப்பு வேறு வரலாறு வேறு.
        சாண்டில்யன் விறுவிறுப்பாக எழுதியதெல்லாம் வரலாறாகுமா?

        “புதினம்” ராஜகோபால் அதை எழுதிய போது புலிகள் லண்டனிலும் புலத்தில் பிற இடங்களிலும் கொடிகட்டிப் பறந்தனர்.
        நூலில் வெளிப்படையாகவே புலிகளை மகிழ்விக்கும் நோக்கம் இருந்தது.
        நூல் வெளியீட்டுக் காலத்தில் அங்கு இருந்தோரிடம் விசாரித்தால் தெரியும்.

        • sundar says:
          16 years ago

          தமிழ் மக்களின் ஏகபிரதீதிநிதியாக இருந்த புலிகளை ம்கிழ்விக்க வல்வெட்டித்துறையாஎகள் கப்பலோட்டிய கதை எழுதப்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.போராளிகளு நாட்டின் சகல பாகத்திலிருந்தும் பங்களிக்கவிலையா?

      • xxx says:
        16 years ago

        சுன்டர்,
        புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா? நூல் வெளியீட்டுக் போன யாரிடமும் பேசியிருக்கிறீர்களா?

  65. பாலாமணி says:
    16 years ago

    “வல்வெட்டித்துறையிலிருந்து—————–வாஸிங்டன்வரை” ? என நினைக்கிறேன்

  66. thamilan says:
    16 years ago

    விடுதலைப்போராட்டட்த்தைப்பற்றி விமர்சித்து கருத்து தெர்விக்கலாம். அது அவரவர் க்ருத்து. அதைவிட்டு எமது ஊரை விமர்சித்து எழுதுவது தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சி. பிரபாகரனின் தளபதிகள் எல்லாம் சேர்ந்து வெளினாடுகளில் வசூல்வேட்டை நடத்தி போரட்டத்தை மறந்து தங்கள் குடும்ப வருமானத்தை பெருக்குவதில் ஈடுபட்டார்கள்.. பிரபாகரனின் மனைவி வழி சொந்தஙள். எல்லாம் விடுதலைபோராட்டத்தை விலை பேசியதால்தான் 30 வருடபோராட்டம் தோல்வியில் முடிந்தது. பிரபாகரனும் போராட்டத்தையும் வன்னிமக்களின்நலனையும் மறந்தார். அதனால் அவரும் அழிந்து தான் தொடங்கிய இயக்கதையும் தானே அழித்தார்.நானும் அவரின் ஊரவன். நானும் பிரபாகரனின் தவறுகளையும் தப்புகளையும் எப்போதும் ஏறுக்கொள்கிறேன்.நாம் தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டுமே ஒழிய் ஒரு குறிப்பிட்ட ஊரைதாக்குவதற்கு இணையங்களை பாவிப்பதைநறுத்துங்கள்

    • mamani says:
      16 years ago

      ஆம் உங்கள் கருத்து வரவேற்க தக்கது ஆனால் நீங்களும் மறைமுகமாக நீங்களும் மதிவதனியின் ஊரவரை தாக்குகிறீர்களே

      • sundar says:
        16 years ago

        தலைவரின் மனைவி வெளியூர் காரரர்( உளூரவன்,வெளியூரவன் எண்ற பிரிவினை வார்த்தையை இலங்கையில் எந்த ஊரவன் உபயோகிக்கிறவன்?

  67. thamilan says:
    16 years ago

    இஙகு எனது ஊருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தங்களது ஊர் எது என்று சொல்லமுடியாது. ஏன் என்றால் இவ்ர்கள் சொன்னால் இவர்க்ளின் விமர்சனங்கள் எல்லாம் சாதி வெறி பிடித்தவனின் விமர்சனங்ககள் என்று எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். விடுதலைபோராடத்தையும் வலவெட்டித்துறையையும் விமர்சிப்பவர்கள் எல்லாம் சாதிய உணர்வுமட்டும் உள்ளவ்ர்கள். இவர்கள் எல்லாம் சிங்களவனை உயர்ந்த சாதி என்று சொல்பாவர்கள். தாஙகள் அவனைவிட மட்டம் என்பார்கள்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      திருவாளர் தமிழனே
                           தங்களிடம் மிகுந்த தாழ்வு மனப்பாண்மையை உணரமுடிகிறது. உங்கள் இனத்தை நீங்களே தாழ்வாக எண்ணுதல் ஆரோக்கியமாணதல்ல!. யாரும் இங்கே சாதியம் பேசியதாக நான் நினைக்கவில்லை.

  68. யோகன் says:
    16 years ago

    ” விடுதலைப்போராட்டட்த்தைப்பற்றி விமர்சித்து கருத்து தெர்விக்கலாம். அது அவரவர் க்ருத்து அதைவிட்டு எமது ஊரை விமர்சித்து எழுதுவது தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சி. ”

    சரியான கருத்து ! ஊருக்கு ஊர் சங்கங்கள் ,கோயில் திருவிழாக்கள் தமிழருக்கு தேவையற்ற ஒன்று.இவற்றைவிட முக்கியமாக செய்ய வேண்டிய ,கலந்துரையாட வேண்டிய விடயங்கள் எத்தனையோ உண்டு.

    இந்த ஊர் பெருமைகளால் ஒன்றும் நிகழ்ந்து விட போவதில்லை.இனி நாம் பேதமைகளை களைந்து முன்னே போகும் வழியை பற்றி சிந்திக்க வேண்டும்.பல நாடுகளில் வாழ்கிறோம் ,பல இன மக்களை காண்கிறோம் பழகுகிறோம் ,இனிமேலாவது மற்றவர்களிடம் இருக்கும் நல்ல அம்சங்களை உள்வாங்குவோம்.

  69. Shiva says:
    16 years ago

    யோகனுடன் மிகவும் உடன்படுகிறேன்.
    “தமிழன்” மட்டுமல்ல, தன் ஊரும் சாதியும் இழிவாகக் குறிப்பிடப் படும் போது எவரும் மனம் புண்படுவர்.
    அதனால் யாருக்கு என்ன நன்மை?
    பிறரை இவ்வாறு துன்புறுத்துவதில் யாருக்கும் மகிழ்வென்றால் அவர் உள்ளத்தால் மிகவும் கடைப்பட்ட ஒருவராகவே இருப்பார்.

    இனியொருவும் இவ்விடயத்தில் கவனங் காட்டுவது நன்று.

    • a voter says:
      16 years ago

      சாதி அடிப்படையிலோ அல்லது வேறெந்த அடிப்படையிலோ ஒட்டுமொத்தமாக மக்கள் மீது குற்றம் சாட்டுபவர்களும் ஒட்டுமொத்தமாக ஒரு தரப்பு மக்களை உயர்த்திப் பிடிப்பவர்களும் ஒடுக்குமுறையின் முதற் படியில் நிற்கிறார்கள். அதிகாரம் இவர்கள் கையில் வருமானால் இலங்கை அரசை விட மோசமான ஒடுக்குமுறையாளர்களாக இவர்கள் வெளிப்படுவார்கள்

      • sundar says:
        16 years ago

        அப்பாடா! அப்ப ஒருமாதிரி தப்பியிட்டோம் என்று சொல்ல வாறமாதிரித்தெரியுது

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          நிட்சயமாக

    • xxx says:
      16 years ago

      சுன்டர்
      யார் எதிலிருந்து தப்ப வேண்டும்?
      வாயில் வந்ததைச் சொன்னால் போதுமா?
      இவ்வளவு சனமும் அழிந்த்த் பிற்பாடு ஆடு திருடின கள்ளன் போல முழுசுவோர் யார் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும்.

  70. யோகன் says:
    16 years ago

    இனம் ,மதம்,மொழி என்ற எல்லைகளை கடந்து , ஐரோப்பியர் நம்மை எல்லாம் நன்றாக நாடாத்துகிரார்களே ,அதன் பலன்களை நம்மவரும் அனுபவிக்கிறோமே ( நமக்கு இருக்க அனுமதி தந்து, வீடு தந்து ,சாப்பிட பணம் தந்து ,எல்லாவற்றையும் விட குடியுரிமை தந்து ) இதில் இருந்து நாம் என்ன படிப்பினைகளை பெற்றோம் ?!!!

    நமக்கு இருக்கும் வாய்ப்பை பயன் படுத்தி நாம் புத்துனர்வுள்ள சமுதாயமாக அல்லவா இருக்க வேண்டும்.ஐரோப்பியர்களை கவனித்தால் உலகில் உள்ள எல்லா நல்ல விடயங்களையும் ஏற்று கொண்டு விடுகிறார்கள்.
    ஆனால் நமக்கு மனத்தால் விரும்பும் ஒரு பெண்ணையோ,ஆணையோ காதலிக்க முடியாது.சின்ன சின்ன விடயங்களுக்கே ( சாதி பெருமைக்கும் ,ஊர் பெருமைக்கும் ) போராடி நம் வாழ் நாளை வீணடிக்கும் நாம் எங்கேய் நமக்கான தேசத்தை உருவாக்க போகிறோம்.?? நமது சக்தி எல்லாம் அற்ப தனங்களுக்கே செலவாகிறது.!!
    “மந்திரத்தில் வந்த சுகம்
    தந்திரத்தில் போனதடா ….” (முனிவர் தவமிருந்து சக்தியை சேமித்து ,காக்கை எச்சமிட்டதால் அதை தனது சக்தியால் எரித்தாராம்.)

    இதுவா நமது பண்பாடு?.இதுவா நமது நாகரீகம்?.இதுவா நமது மதம் நமக்கு கற்று தந்தது ?உண்மையில் நாம் நமது சீரியசாக சிந்திக்க வேண்டிய நிலைமையிலே உள்ளோம் .
    சிந்திப்போமோ!!!! …?????

  71. selvan says:
    16 years ago

    யோகன் நீங்கள் வெளியூர் பெடியன் மாதிரித்தெரியுது? உண்மையைச் சொல்லுங்கோ நீங்கள் உள்ளூரோ? வெளியூரோ?? என்று

    • xxx says:
      16 years ago

      அவர் உங்கள் ஊர் என்றால் உள்ளூர், இல்லை என்றால் வெளியூர்.
      நீங்கள் எந்த ஊர் என்று சொன்னால் தானே, அவர் மறுமொழி சொல்ல இயலும்.

      உங்களுக்கு விஷயச் சார்பாக எதுவும் சொல்லத் தெரியாமலா ஊர், பேர், எந்தப் பகுதி என்று ஏன் விசாரணைகளில் இறங்குகிறீர்கள்?

  72. யோகன் says:
    16 years ago

    xxx

    முதலில் உள்ளூரா ? அப்படி என்றால் வடக்கா ? தெற்கா?…..பிறகு அந்த வைரவர் கோவிலடிதானே ..? மீதம் சொல்லவே வேண்டாம்….!!!!

    • THAMILMARAN says:
      16 years ago

      வைரவர் எல்லா இடத்திலேயும் இருக்கிறாரே நீங்கள் எந்த இடத்தைச் சொல்கிறீர்கள்?

  73. யோகன் says:
    16 years ago

    தமிழ்மாரனே.
    தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பின்னும் புரியாதவர் போல இந்த கேள்வி !!
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ….. மீண்டும் ஆரம்பிப்போமா ?

  74. Mahendra says:
    16 years ago

    விம்பங்களுக்கப்பால் பிரபாகரனை தேடி, அஜித்
    என்ற கட்டுரையாளர் எழுப்பியிருந்த கேள்வி, பிரபாகரனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை, தீமைபற்றி ஆராயமுற்படுவதாக தெரிகிறது. கருத்து எழுதுபவர்கள், அவரவர் உணர்ச்சிகளுக்கும் மனப்பண்புகளுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்கிறதே அன்றி, தமிழின விடுதலைக்கு வேண்டிய பாதையை சீர்படுத்துவதற்கோ. அன்றி புதிய பாதையை அமைப்பதற்கான யுக்திகளையோ வெளியிட்டு ஓர் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு ஒன்றிப்போகும் இணக்கத்தை ஏற்படுத்துவதையோ காணமுடியவில்லை. திட்டமிட்டு மக்களை குழப்புவதற்கான கருத்துகள் எழுதுபவர்களையும் இங்கு தாரளமாக காணமுடிகிறது.

    பிரபாகரனின் விடுதலைப்போராட்டம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் அழிக்கப்பட்டதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன, என்பது ஆராயப்பட வேண்டும். தீமைபற்றி தேவையில்லை பல ஊடகங்களும், இணையதளங்களும் அதுபற்றி நிறையவே எழுதிவருகின்றன. தமிழினத்திற்கு கிடைத்த நன்மையைப்பற்றி இதுவரை எந்த ஊடகமோ, அல்லது இணையதளமோ செய்தி வெளியிடவில்லை. நன்மை என்றால் அதன் தன்மையை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      இதில் என்ன தயக்கம் வேண்டும்!
      1) ஒரு சாவாதிகார அடக்கு முறை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
      2) ஒரு சாதிய முறையில்த் தாழ்வு மனப்பாண்மை கொண்ட ஒரு கும்பல் தமிழீழத்தை ஆளுமானால் தமிழீழத்துக்குள்ப் பல சாதிய ஈழங்கள் தோண்றுவதைத் தடுக்க முடியாமற் போயிருக்கும். இப்போ அந்தப் பயம் இல்லை!
      3) ஒரு அதி உச்ச மனநோயாளியிடமிருந்து தமிழினம் காப்பாற்றப்படடிருக்கிறது.
      4) யாரும் யாரையும் து}க்கட்டுப்போய்த் தாலி கட்டிப் பிள்ளை கொடுக்கலாம் என்ற தலைவரின் வழிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
      5) எவனும் எந்தப் பெண்ணையும் து}க்கிட்டுப் போய் விசாரணை எண்ற பெயரில் எப்படியும் கொடுமைப்படுத்திக் கற்பழித்துப் பின்னர் துரோகி எனக் கூறி கம்பத்தில்க் கட்டிச் சுட்டுக் கொல்லும் நிலைக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
      6) ஒரு கொடூர அரக்கக் கும்பலிடம் சிக்கித் திணறிய தமிழ் சமூகம் இப்போ நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது.
      இவை மடடுமல்ல இப்படி இன்னும் பல நன்மைகள் உள்ளன.

      • mamani says:
        16 years ago

        இரண்டாவது மற்றும் ஐந்தாவது சற்று மிகைப்படுத்தப்பட்டது.

        • Sri says:
          16 years ago

          மாமணி இரண்டாவ்து மிகைப்படுத்தப்படவில்லை.நேரடியாகவோ மறைமுகமாகவோ பல சம்பவங்கள் திட்டமிடப்பட்டுநடந்தேறின

          • ramu says:
            16 years ago

            மர்ம நாவல் போல பேசவேண்டியதில்லை. திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சாதியசெயல்பாடுகளை வெளிப்படையாக விவாதிக்கலாமே. எல்லோருடைய சாதியத்தையும் வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியாகவிருக்கும்.

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          ஐந்தாவது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்டதல்ல.  கண்ணால்க் கண்ட விடயத்துக்குச் சாட்சி தேவையில்லை. இதைப் பொறுக்க மனது கேளாது எழுத்து மூலம் புலிகளின் உயர்பணியாளர்களிடம் கொடுத்து கிட்டுவிடம் கொடுக்கச் சொல்லியிருந்தேன். 2 கிழமைகளால் ஒரு புலிமுகவர் என்னிடம் வந்து என்னுடைய கடிதம் சம்பந்தமாக கதைப்பதற்காக புக்கியஸ்தா;கள் வல்லிபுர ஆழ்வார் கோவிலில் காத்திருப்பதாகவும் என்னை உடனே அங்கே போகும்படியும் கூறினார். நானும் அங்கே போனேன். அங்கே ஒருவர் மட்டுமே நின்றிருந்தார். அதுவும் ஏற்கனவே நான்அறிந்திருந்த எம்மூர்ப் புலித் தலைவன். அவர் கதைத்துக் கதைத்து பனங்கூடலுக்குள்க் கூட்டிச்சென்று திடீரென்று பிஸ்டலை எடுத்து என்நெற்றியில் வைத்து உனக்கேன் இந்த வேலை? நீ மர்மநாவல் எழுதப் போனால் நன்றாகச் சம்பாதிக்கலாம் எனக்கூறி மிரட்டும் பாணியில் உறுமினார். பின்னர் ஏதேதோ சப்பைக்காரணங்கள் கூறி மறுநாள் மந்திகை முகாமில் வந்து சந்திக்கும்படி கூறி என்னைப் போகச் சொன்னார். இது வரை நான் அங்கு சென்றதில்லை பலமுறை அழைப்பு வந்தும்.

          • mamani says:
            16 years ago

            நீங்கள் நேரடியாகவே துன்பபட்டிருக்கும் போது அதைவிட நான் சொல்ல முடியும்.

      • ramu says:
        16 years ago

        “சாதிய முறையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட கும்பல் தமிழீழ்த்தை ஆளுமானால் தமிழீழத்திற்குள் பல சாதிய ஈழங்கள் தோன்றுவதை தடுக்கமுடியாமல் போயிருக்கும்” இதனை விரிவாக விளங்கப்படுத்த முடியுமா? ஏற்கனவே இருக்கின்ற சாதிய அமைப்பு சரியாகவே தொழில்படுகின்ற பொழுது இவ்வாறான தாழ்வுமனப்பான்மையுடையோரின் செயல்ப்டுவோரால் சாதியஒழுங்கு சீர்குலைவுக்குள்ளாகிவிடும் என க்ருதினீர்களா? புலிகளின் அழிவு பழைய கட்டமைப்புக்களை உள்ளததை உள்ளவாறே(அவரவருக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்பிரகாரம்) பாதுகாக்க உதவும் என எண்ணுகிறீர்களா? புலிகளின் மக்கள் விரோத அரசியலுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம். நேரடியாக பதில் கூறவும்.

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          அன்பரே> சாதியத்தைப் பற்றிச் சொல்லப் போனால் விடயம் திசைமாறி வேறு திசையில்ப் போக ஆரம்பித்து விடும். அது தேவைதானா?!! நான் ஒன்றும் ஒளிந்து கொள்ள வில்லை. பல எரிமலைகள் வெடித்துச் சிதறும். இவ்இணையத்தால்த் தாங்க முடியுமா?!! அல்லது இணையத்தைச் சிதறடிக்க செய்யும் சூழ்சிதானா இது? நன்றாக யோசித்துப் பதில் கூறவும். பதில் சொல்கிறேன். என்தேவன் என்னைக் காப்பாற்றுவாராக!

      • ramu says:
        16 years ago

        “யாரும் யாரையும் தூக்கிட்டுப்போய் தாலி கட்டி பிள்ளை கொடுக்கலாம் என்ற தலைவரின் வழிமுறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.” இந்த அபத்தனமான வரிகள் சொல்வது என்ன? புலிகள் பாலியல்வன்முறையில் ஈடுபட்டார்களா? அல்லது ஊக்குவித்தார்களா? யாரும் யாரையும் என்பது ஆண்/பெண் என்பது தவிர்ந்த சாதியத்தை குறிக்கின்றீர்களா? மொத்தத்தில் புலியை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் சொந்த சாதிய பாலியல் வக்கிரங்களை கொட்டுகிறீர்களா?

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          இது விளங்காவிட்டால் தங்களுக்கு எதுவுமே விளங்காது! நடந்து முடிந்த நடப்புகளில்த் தாங்கள் ஞானசூனியமாக இருப்பதாக உணர்கின்றேன். மதிவதனியை து|க்கிட்டுப் போய் குடும்பம் நடத்தியவர்களுக்கு திலீபன் இறுதிநாளில்த் தண்ணீர் கேட்டு முனகியபொழுது தண்ணீர் கொடுத்துக் காப்பாற்ற முடியாமற் போனது??? உமாமகேஷ்வரன் கொல்லப்படக் காரணம் யாது?? தமிழ்ச்செல்வனின் மனைவி யாருக்குச் சொந்தமானவள்? இது எதுவுமே தெரியாவிடின் உங்களுக்கு எதைச் சொல்லியும் புரியப் போவதில்லை.

  75. S.G.Raghavan says:
    16 years ago

    “புளட் இயக்கம் சிதறியதற்கு சிவராம் காரணமல்ல. முகுந்தனே காரணம்”
    suganthan
    புற காரணிகளும் உண்டு.
    S .G .Ragavan
    டி.சிவராம் நான் சொன்ன காலத்திலும் சரி பிற்பட்ட காலத்திலும் சரி முக்கியத்தராக இருக்கவில்லை.ஆனால்அவரால் பிளாட்மீது ஆதிக்கம் செலுத்த முடிந்தது மிகவும் உண்மை.பிரபாகரனுக்கு சாத்திரம் பாக்க போன சிவராம் பிரபாகரனையே கவிண்டு விழ செய்தவர். ஈஸ்வரனை நுவரெலியாவில் வைத்து கடத்தி காணாமல் போகச் செய்த கனவான் இவர் என்ற ஊகம் என்னிடம் உண்டு. இவர் ஒரு படித்த மனநோயாளி. இவர் தனது சிங்கள எஜமானர்களிடம் தனது மேதாவித்தனத்தை காட்டிய செல்லப் பிள்ளை. இடதுசாரிகள் முர்போக்காளர்கள்எனக் கூறப்படுவோரிடம் கூட்டு வைத்துக் கொண்டு அவர்களின் சிங்கள மேலாதிக்ககொள்கைவகுப்பின் நிகழ்ச்சிநிரலை அமுல் படுத்தும் ஒற்றனாக தெரிந்தோ தெரியாமலோ முன்னெடுத்தவர். எனது கணிப்பின் படி அவர் அதனை தெரிந்தே செய்திருக்கிறார்.
    ஏனெனில் இவரின் சிங்களநண்பர்கள் அனைவருமே தமிழர்களின் இருப்பை இலங்கையில் இல்லாமலே செய்யும் மறைமுக வேலைத்திட்டத்தின் பங்காளிகள். தனது நண்பர்கள் அப்படி பட்டவர்கள் தான் என்பதை கண்ட பின்பே முழு சிங்கள மக்களும் இப்படி பட்டவர்கள் என உணர்ந்த பின்பே தான் புலிகளை ஆதரித்ததாக பத்திரிகையில் கதை அளந்தவர். கருணாவின் பிளவில் பிரதேச வாதம் தலை தூக்கிய விடயத்தில் சிவராமின் பங்கே முக்கியமானது. இதனை நான் ஆதார பூர்வமாக சொல்லுவேன். சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர்களிர்க்கு ஆலோசனை வழங்கிய சிவராம் புலிகளை ராணுவ ரீதியாக அழிக்க வேண்டுமெனில் பிரதேச வாதம் முன்னெடுக்கப் படவேண்டும். என ஆலோசனை வழங்கியவர். பின்னர் பிரதேச வாதம் பேசியவர் அழிக்கப்பட வேண்டும் என பிரபாகரனிடம் சென்று அண்டியவரும் இவரே.
    நீங்கள் நீலன் திருச்செல்வத்தை புரிந்து கொள்வீர்கள் ஆனால், சக்தி டிவி மின்னல் ரங்காவை புரிந்து கொள்வீர்கள் ஆனால், சிவராமை இலகுவாக புரிய முடியும். தமிழ் தேசியம் பேசிய சிவராம் கிழக்கு பல்கலை கலக விரிவுரையாளர்கள் சிலரிடம் சேர்ந்து மட்டகளப்பு மாவட்ட புலிகளின் தலைவர்களுக்கு பிரதேச வாதம் தூண்டும் பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்.

  76. xxx says:
    16 years ago

    “தராகி” என அறியப்பட்டகாலத்திலிருந்து சிவராம் இடதுசாரிகட்கு விரோதமாகவே எழுதி வந்துள்ளார்.
    சீனாவின்நோக்கங்கள் என்று சிலர் தூக்கிப்பிடிக்கிற அரை உண்மைகைளை முன்னாள் றோ முகவர் ஒருவரது இணையத் தளத்திலிருந்து பரப்புவதில் அவரது பணி பெரிது.
    இலங்கை மீதான மெய்யான அந்நிய மேலாதிக்கங்களை அவர் அதிகம் விமர்சித்ததில்லை.

    நேர்மையான எந்த இடதுசாரியும் அவரை நம்ப நியாயமே இருந்ததில்லை.
    (நேர்மையற்ற எந்த இடதுசாரியும் அவரை நம்பவும் நியாயம் இருந்ததில்லை).

    என்றாலும் Tamil Net இணையத் தளத்தைத் தரமாக நடத்தியவர்.

    • thamilmaran says:
      16 years ago

      சிவராம் எளீய ஆங்கிலத்தில் எழுதியவர் பிலெய்ன் இங்லீஸ் அவரது நோக்கங்கள் என்ன என புரியாவிட்டாலும் நல்ல ஜேர்னலிஸ்ட் என்றால் அது மிகையில்லை இந்த இழப்புக்கள இப்போது உணர முடிகிறது.

  77. S.G.Raghavan says:
    16 years ago

    தங்களது வலுவை அல்லது திறனை பிரயோகித்து பார்த்தல் அதில் இன்பம் காணுதல் என்ற ஒரு உளவியல் அனர்த்தம் தராகீயிடம் இருந்ததாக நான் உணர்கிறேன். இவ்வாறான உளவியல் மனப் பக்குவம் நீலன் திருச் செல்வம், மற்றும் அவரது மாமனாரான வில்சன் போன்றோரிடம் இருந்திருக்கிறது. ஏனெனில் வில்சன் தமிழர் விரோத அரசியல் யாப்பை J .R இக்கு வரைந்து கொடுத்துவிட்டு ஐயோ நான் பெரிய பிழை விட்டு விட்டேன் எனப் பின்னாளில் புலம்பியிருந்தார். இவர்கள் எப்போதும் அதிகார மையங்களை அல்லது அறிவியல் குழாமை மையங்கொண்டு செயலாற்றுவார்கள் அங்கே தமது கருத்துக்களை மேலோங்க செய்வார்கள். ஆனால் பரபரப்புடன் கூடிய இரகசிய அல்லது தேவை கருதிய வெளிச் செயற்பாடுகளை கொண்டிருந்தாலும் இவர்களின் பணிகள் சமூகப் பெறுமானம் அற்றவை அல்லது விமோசனமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. சமாதான காலத்தில் மட்டக்களப்பில் இருந்து சிவராமின் பின் புலத்தில் இருந்து ஒரு பத்திரிக்கை வெளிவந்தது. அப் பத்திரிகையை புலிகள் அடித்து நொறுக்கி தடை செய்திருந்தார்கள். உண்மையில் புலிகள் அப்பத்திரிகையின் புலனாய்வு அரசியலை உணர்ந்துதான் தடை செய்யவில்லை அதனை உணர்வதற்கு புலிகளிடம் பகுப்பாய்வு திறன் இருந்தது இல்லை (குறைந்த பட்சம் புலிகள் ராணுவ புலனாய்வு விடயங்களில் பகுப்பாய்வு முறைமையை கையாண்டு இருந்தால் இவ்வாறான மோசமான தோல்வியை சந்தித்து இருக்க மாட்டார்கள்) ஆனால் அப்பத்திரிகை தடை செய்வதற்க்கு முன்னரே சிவராம் புலிகளை பலவீனப் படுத்தும் கருத்தியலை கிழக்கில் புலிகள் மத்தியிலும் கல்விமான்கள் மற்றும் மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று விட்டார். பின்னர் அதனை பூரணப் படுத்தும் முகமாக, வன்னிக்கு ஓடிச்சென்று பிரபாகரனிடம் சமரசம் செய்து கொண்டு பிரதேசவாதம் ஏற்று கொள்ள முடியாது போடு அம்மானை என்று கோரியதோடு ஊடகங்களிலும் ஒன்றுக்கு பத்தை எழுதி கருணா பிரபா முரண் பாடுகளை கொளுத்தி விட்டார் (ஏற்கனவே புகைச்சல் இருந்தது வேறு கதை). ஆனால் அவரின் கட்டுரைகளை பார்ப்போர் அவரேல்லோ வெளுத்த தமிழ் தேசியவாதி என்று தமது புழுத்த மூளைகளால் மக்கள் உட்பட நமது மேதகு பிரபாகரனும் அவரது தொண்டர்களும் நம்பினர், நம்பவைக்கப் பட்டனர். நவீன புலனாய்வு அரசியல் மூலம் எவ்வாறு ஒரு தரப்பை ஒருவர் பலவீனப் படுத்தலாம், கையாளலாம் என்பதை சிவராமின் கடந்த காலங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நாம் அறியலாம். அவரது இறுதி காலத்தில் அவர் பெரும் மாற்றத்தை கண்டு தமிழ் தேசியத்தை பாதுகாக்க புறப்பட்டதாக பலர் கூறுகின்றனர், தமிழ் நெட் போன்ற ஊடகங்களை அதற்க்கு உதாரணம் காட்டுகின்றனர். ஆனால் இது போன்ற பல பரிசோதனைகள் என்பவற்றின் சொந்த காரர் சிவராம் என்பதே உண்மை. பிளாட்டில் நடந்த உட்கொலைகளை நடாத்த சிவராம் உமாவை தூண்டினார், பின்னர் உமாவை தட்ட எல்லாம் சரிவரும் என்றார், பின்னர் மாணிக்க தாசனை எப்படி தட்டுவது என்பது குறித்து இரவும் பகலும் சிந்தித்தார். இது அவரின் சிறிய பணிகள் அவரின் பெரிய பணிகள் முடிவதற்கிடையில் அவரின் ஆடு புலியாட்டத்தை ஏதொ ஒரு சக்தி முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. உண்மையில் தெற்காசிய வட்டகையையும் தாண்டி இவரின் நவீன புலனாய்வு அரசியலின் திறமை வியாபித்து இருந்தது. உண்மையில் இவர் ஒரு திறமையாளர் என்பது மட்டும் உண்மை( சீன இந்திய அமெரிக்க இலங்கை இஸ்ரேலிய புலனாய்வாளர்களும் பகுப்பாய்வாளர்களும் சிவராமிடம் அறிவுரை கேட்குமளவிற்கு ) தமிழீழ விடுதலை போராட்டத்தில் இவரை போன்ற திறனாளிகள் தமிழருக்காக நிறையவே நன்மை செய்திருக்கலாம். ஆனால் எதிர் விளைவுகள் தான் அவரின் எமக்கான நற்பணிகள் என்பது எனது முடிவாகும். தமிழ் நெட் தமிழர்களின் அவலங்களை வெளி உலகிற்கு திறன்பட எடுத்துக்காடியது ஆனால் தமிழர்களை அரவணைத்து ஒருதளமாக்கியதா? இல்லையே! தமிழ் தேசிய போராட்டத்தில் ஸ்தாபன மயப்பட்ட ஒருங்கிசைவு சிதைக்கப் பட்டதாகவே உணர்கிறேன். அதில் புலிகள் உட்பட னைவருக்கும் பங்குண்டு.

    • THAMILMARAN says:
      16 years ago

      ராகவன் அவர்களது பதிவு ஒரு துப்பறீயும் நாவல் படிப்பது போன்றோர் உணர்வைத் தருகிறது.எம்மிடம் நிறய வரலாறூகள் இருக்கின்றன எழுத்த்தான் எழுத்தாளர் இல்லையோ?

    • suganthan says:
      16 years ago

      உஙளுடைய சிவராமை பற்றிய உஙகள் மதிப்பீட்டுடன் பெரும்பாலும் உடன்படுகின்றேன். சில தகவல் பிழைகள் இருக்கின்றன. பேராதனை பல்கலை கழகத்தின் ஆங்கில இலக்கியமாணவரான சிவராம் எண்பத்தி மூன்றின் பின் சமீர் அமீன், அந்த்ரெ குண்ட பிராங்க், அல்தூஸர், கிராம்ஸீ ஆகியோரின் எழுத்துக்களை சிலாகித்தபடியே புளட்டுக்குள் நுழைந்தார். அவரை புளட்டுக்குள் உள்வாங்கியவர் திரு.யோகன் கண்ணமுத்து ஐயா அவர்கள். அவருடைய ஆங்கிலவாசிப்புக்கு நிகராக பதில் பேசக்கூடியளவு ஆங்கிலவாசிப்பு இல்லாத அன்றைய தமிழ்சூழலில் பல இளையோரின் ந்ண்பரானார். பின்னர் யாழ் மையவாதம் பற்றிபேசினார். தனது தந்தைவழி கடல்வாணிபம் செய்த பருத்தித்துறை ஆதிக்க சாதி என்று பெருமையும் பேசினார். சிவராமை போராளி,எழுத்தாளர்,மா(மா)மனிதர் என்றவகையில் சரியான மதிப்பீடு அவசியம். உங்கள் தகவல் பிழைகளை திருத்திகொண்டு முழுமையான ஆய்வை முன்வையுங்கள். அவசியமானது.

    • Garammasala says:
      16 years ago

      “இவர் ஒரு திறமையாளர் என்பது மட்டும் உண்மை( சீன இந்திய அமெரிக்க இலங்கை இஸ்ரேலிய புலனாய்வாளர்களும் பகுப்பாய்வாளர்களும் சிவராமிடம் அறிவுரை கேட்குமளவிற்கு )” — ராகவன்

      மேற்படி கூற்றுக்கு ஆதாரங்கள் உள்ளனவா? அல்லது அவை வ.ஐ.ச. ஜெயபாலன் என்பவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளுகிற உயர்வு நவிற்சிகள் போன்றனவா?

      ஒருவர் வலிந்து பேசுபவராக இருந்தால் அவருக்கு யாரும் காது கொடுப்பது ஒரு விடயம். அறிவுரை/ஆலோசனை கேட்பது இன்னொரு விடயம்.

      அவர் வழங்கக் கூடிய ஆலோசனைகள் எத்தன்மையனவாக இருந்திருக்கக் கூடும்? (“முத்து மாலை” கோப்பது எப்படி என்று சீனர்கள் கேட்டிருப்பார்களா?)

      • mamani says:
        16 years ago

        திம்பு பேச்சுவார்த்தைக்கு ரெலோ சார்பான பிரதிநிதிகளில் ஒருவரான சார்ள்ஸ் அவர் ஒரு அரசியல் தரகர். அவரை இலங்கை சம்பந்தமான தகவல் தேவைபடும் எல்லா உளவு தாபனங்களும் அணுகும். அவர் சில இணைய தளங்கள் இயங்க அரச ஆதரவை வாங்கி கொடுப்பார், சிலரை நிறுத்த உதவுவதாக கூறுவார், கே.பியுடன் பேசவும் ஏற்பாடு செய்து தருவார். இப்படியான வேலைகளைதான் தராக்கியும் அதிவீச்சுடன் செய்து வந்தார். உமா இந்தியாவையும், றோவையும் கடுமையாக விமர்சித்ததுடன் அவர்களிடம் ஆயுதம் பெற ஆவலாயிருந்த மாணிகதாசனையும் கண்டித்து 48 மணிநேரத்திற்குள் படுகொலை செய்யப்பட்டார்.

  78. இராவணன்  says:
    16 years ago

    அஜித்தினால் முனையப்பட்ட விடையமானது பிரபாகரன் தியாகியா – துரோகியா என்பதாகும். அந்கக் கட்டுரையின் தேடுதலைத் தாண்டி, அனைவரும் தங்கள் கருத்துகளினால் (கத்தலினால்) சிறிரங்கனுக்கும் உளவாளி என்ற வாழ்நாள் பட்டங் கற்பித்து, துவம்சம் செய்யப்பட்ட மக்களை அவர்களின் அபிலாசைகளை…, ஒருகணமாவது எண்ணிப் பார்க்க மறந்து, தற்போது எஸ்.ஆர் என்ற தராக்கி பற்றியும், ஊர்மிழா – உமா பற்றியும், தனது கருத்தை துணிந்து முன்வைக்கும் றயாகரனையும் விட்டுவைக்காமல், இதில் கொஞ்சப்பேர் தெரு நாய்களாகக் குரைத்துக்கொண்டிருக்க, இந்தக் குளறுபடிகளுக்குள்ளும் ஒரு சிலர் மட்டும் தங்களின் நலமான கருத்துகளை முன்வைத்திருக்கின்ற இந்த வேளையில்..!பிரபாகரன் தியாகியா..? துரோகியா..? என்பதன் கேள்விக்கு அனைவரையும் மீண்டுவருமாறு கோருகிறேன்.எமது விடுதலை இயக்கங்கள் அனைத்துமே ஒருபோதும் நிறைவான, மக்கள் நலன்சார்ந்த, மக்களின் விடுதலைக்கான.., போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கவில்லை. தமிழரின் சிறப்பான விடுதலைக்கு தோதான அரசியல் போராட்ட வடிவங்களை முன்வைத்து கருத்துச் சொன்னவர்களை – விமர்சித்தவர்களில் பலரை, அந்தக் கருத்துகள் தமிழிலும் புரியாத காரணத்தினால்..! இந்த இசக்கங்கள் அவர்களில் பலரை குதர்க்கவாதியென ஊர்க் கள்ளருடன் சேர்த்து சுட்டுத் தின்றுவிட்டார்கள். அத்துடன் இந்த இசக்கங்களில் அனைவருமே தமக்குப் பக்கத்தில் நிற்பவரை உளவாளியாக, துரோகியாகப் பார்த்த வண்ணமும், நாய்க்கு அலுவலுமில்லை நடக்க நேரமுமில்லை என்பதாகவும் செயற்பட்டனர். இவை யாவும் உண்மையாகும். மக்களை சிந்திக்கவிடாது, கேள்வி கேட்டு சந்தேகம் தீர்க்கவிடாது, விரோதி – துரோகி – சிங்களவனுக்குப் பிறந்தது இப்படிப் பல முத்திரைகளைக் குத்தி, அவர்களை மட்டப்படுத்தி மந்தைகளாக, அடிமாடுகளாக.., இந்தக் கட்டுரையில் சிலர் மற்றவருக்கு திருநாமங்கள் சூட்டியதுபோல, ஈழவிடுதலை ஈஞ்சுபோச்சு. அது என்ன குஞ்சு குருமனெல்லாம் குண்டுகட்டி தற்கொடை செய்யும்போது..! தலைவர்களென்ற தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை, தீவிரவாத பௌத்த சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்து, தீவிர தமிழ்த் தேசியம் பேசியவாறு சொந்தத் தமழினத்தையே அழித்து, அந்த சிங்களத்துக்குத் தாரைவார்த்துக் கொடுத்தோரை தியாகி என்றால்..!? சரி காட்டிக்கொடுத்தவன் துரோகி. அப்படியானால் உண்மையாக ஒத்துழைத்தவரைப் போட்டுத் தள்ளியவன் தியாகியா..!? பிரபாகரன் அனைத்து தமிழ் மக்களுக்கும் செய்தவை வரலாற்றுத் துரோகம். அடுத்ததாகச் செய்த துரோகம் யாதெனில், உலகத்தில் இன்று மக்கள் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இயக்கங்களை நெருடவைத்தமை. ஆனாலும் இதிலுள்ள நன்மை யாதெனில் இந்தப் பிரபாகரனின் பேக்காட்டு வேலைகளை தாம் முயற்சிக்கக் கூடாதென்பது. 

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      இதில் என்ன சந்தேகம்?? பிரபாகரனும் தமிழ்த் துரோகியே!
      ஆயினும் அவனைவிட மிகப் பெரிய துரோகிகள் அவன் பெயர் சொல்லிச் சம்பாத்தியத்திற்காக தமிழீழம் நாடகம் நடத்தியவர்கள். இவர்களை வளரவிட்டு உண்மையான தேசியப் பற்றாளர்களைப் போட்டுத்தள்ளி வெளி உலகமே தெரியாது பங்கர் ராச்சியம் நடத்திய ஒருவனை தலைவன் எனக் கூறி தலையில் வைத்துக் கொண்டாடித் தமிழர் சந்ததியைப் பரதேசிகளாயும் பிணங்களும் ஆக்கினரே அந்தப் புலி மக்கள் அவர்களே பெருந் துரோகிகள். இவற்றைப் பற்றி ஏதும் அறியாமல் சர்வாதிகாரியாக அதிகாரம் மட்டுமே தன் கொள்கை என ராஜ்யம் நடத்திய பிரபாகரன் மகா துரோகி.

  79. S.G.Raghavan says:
    16 years ago

    இராவணன் நீங்கள் சொல்லும் சில விடயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தயவு செய்து இன்று மக்களுக்கு என்ன தீர்வு என்பதை முன்வையுங்கள். இன்றைய நெருக்கடி நிலை அடக்கு முறைகளில் இருந்து மீள என்ன வழிமுறை என்பதை முன்வையுங்கள். ஸ்ரீரங்கா என்ன செய்தார் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்களே கூர்ந்து கவனியுங்கள். ரங்கா புலிகள் அரசு பேச்சுவார்த்தையில் என்ன செய்தார் மின்னல் நிகழ்ச்சியில் யாரின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ் பேசும் அரசியல் தலைவர்களுக்கிடையில் சிண்டு முடிந்தார் என்பதை உங்களுக்கு தேவையானால் விலாவரியாக தர முடியும். பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதை வைத்து அவலத்தில் வாழும் எமது மக்களுக்கு சோறு போடமுடியுமா? அவரின் போராட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட பிழைகளை சுட்டிகாட்டுங்கள், நாங்கள் அடுத்த சரியான அடியை தூக்கிவைப்பதற்கு . பிரபாகரனின் தவறுகளை நான் ஒருபோதும் ஏற்று கொண்டதில்லை, தவிர்க்க முடியாமல் பிரபாகரனின் மேலேளுச்சியை ஆதரிக்க வேண்டியிருந்தது உண்மையே, ஏனெனில் தமிழ் மக்களுக்கான விடுதலை கிடைக்குமென்பதால். புலிகளால் நானும் பாதிக்க பட்டேன். அதற்க்காக பேக்கூதிகளின் பொறுப்பற்ற விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாது. தமிழ் தலைவர்களில் பிரபாகரன் துரோகியானால் உமா, ஸ்ரீ, நாபா, அமிர்தலிங்கம் என்போர் முழுத் துரோகிகளே. அப்போ யார் தான் தியாகிகள்? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் மதிக்கப் பட வேண்டியவர்களே.
    தங்கத்துரை உமாமகேசுவரன் போன்றோர் மட்டக்களப்பில் மக்கள் பணி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். குட்டிமணி தங்கத்துரை போன்றோர் கள்ள கடத்தல் செய்தததாக விடுதலை புலிகளின் பிரச்சார ஏடுகளில் பார்த்திருக்கிறேன். இறுதியில் அன்டன் பாலசிங்கம் போன்றோரின் வற்புறுத்தலின் பின்னரே அவருக்கு மாவீரர் பட்டியல் கொடுக்கப் பட்டு கவுரவித்தனர் புலிகள். நான் கேட்பது மக்களுக்கு சரியான தீர்வை முன்வயுங்கள் பிரபாகரனை ஆயிரம் தடவை துரோகி என்பேன். அதேபோல் அவரை ஆதரிப்போரை கேட்கிறேன் அனைத்தும் முடிந்து விட்டது அவலத்தில் வாழும் எம் மக்களுக்கு ஒரு வழி காட்டுங்கள் நான் அவரை ஆயிரம் தடவை தியாகி என்பேன். பார்திபராசாகளே தமிள்மாரன்களே இது உங்களுக்கும்!.

    • mamani says:
      16 years ago

      மிக மிக தேவையானதும் நியாமானதுமான வேண்டுகோள்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      வழி உண்டு. ஏற்றுக்கொள்ளும் மனோ பக்குவம் இன்னமும் தமிழர்களிடம் இல்லை. தமிழர்கள் எப்பொழுதும் சரியைப் பிழை எனவும் / நல்லவனைக் கெட்டவன்என்றும் / வில்லனைக் கதாநாயகன் என்றும் தலைகீழாகவே நடந்து பழக்கப் பட்டு விட்டார்கள். மாறுவதற்கு காலம் இன்னமும் வேண்டும்.

  80. யோகன் says:
    16 years ago

    இராவணன் , இராகவன்

    தமிழ் நெட் காரர்கள் புதுவிதமாக “நவரத்தினம் பாடசாலை ” என்று ஒரு கதையை கட்டி வருகிறார்கள். அது என்ன என்று விளக்கமுடியுமா ?

    • இராவணன்  says:
      16 years ago

      இருக்கலாம். காசு பணம் பவுணென்று வாங்கி பாக்கு நீரிணைக்குள் கொட்டியதுபோக மிகுதியை சிறிலங்கா இராணுவம் பிச்சுப் பிடுங்கி எடுக்கும்போது அடிபாட்டுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களை தெரு நாயிலும்விட மோசமாக புறந்தள்ளிவிட்டு தற்போது ஒன்பது வகையான இரத்தினங்களை புலம் பெயர் மக்களிடம் தேடுகிறார்கள் போலும்.    

  81. S.G.Raghavan says:
    16 years ago

    இங்கு சிவராமை நவீன புலனாய்வு அரசியலின் பரிணாமத்தை உணர்த்துவதற்கு கூறினேன் ஒழிய வேறு எதற்க்கும் அல்ல. அவரை தூற்றி நான் எந்த பயனும் அடைய போவதில்லை. நான் கூற வரும் விடயம் என்னவெனில் பகுப்பாய்வு இன்றி அரசியல் ராணுவ முடிவுகள் எமது ஈழப் போராட்டத்தில் நடந்தேறியுள்ளது என்பதுதான். நான் சொல்கிறேன் என்பதற்க்காக எனது கருத்தை விடயங்களை அப்படியே உள்வாங்குங்கள் எனக் கூறவில்லை எதனையும் பகுப்பு ஆய்ந்து பாருங்கள் சரி பிழைகளை நிதானமாக எடை போடுங்கள். ஸ்ரீரங்கா ஒரு கோமாளி ஒரு பபூன் அவர் பயன்படு பொருள் மாத்திரம் அவ்வளவே. பிரபாகரன் தியாகியா துரோகியா என்ற விவாதம் ஆரோக்கியமற்றதும், பெறுமதி அற்றதுமான விவாதம் என்பதே எனது கருத்து. இன்றைய தமிழ் நெட் குறித்து நானறியேன் பராபரமே. இன்றைய சூழலில் தமிழ் இணையத் தளங்களை ஒப்பிடும் போது, பக்கச் சார்பற்று அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கும் இனிஒரு என்னை கவர்ந்ததே.

  82. xxx says:
    16 years ago

    J. ஸ்ரீரங்கா வெறும் கோமாளி அல்ல. அவர் ஒரு பெரிய வணிக-ஊடக நிறுவந்த்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட ஒரு நடிகர்.
    தேவையான போது கட்சி தாவுவார் என்று தெரிந்துகொண்டே யூன்.என்.பி. அவருக்கு ஏன் நியமனம் வழங்கியது? அதற்கு எவ்வளவு காசு கைமாறியது?

    அவர் “பயன்படு பொருள்” ஆனால் யாருக்கு என்பது கவனத்துகுரியது.

  83. இராவணன்  says:
    16 years ago

    வணக்கம் ராகவன்.
    தங்களைப்போலவும் இன்னும் பலரைப்போலவும் இந்த இசக்கங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களில் நானுமொருவன். இந்தப் போராட்ட வடிவம் ஒரு பிழையான கருக்கட்டல் என்று ஆரம்பமுதலே விளாவாரியாக விளக்கினோம். எனது தோழமையான அதிகாரத்தையும் மீறிய ஆயுத மூளைசாலிகள் எடுத்த முடிவு யாதெனில்..! எனைப்போன்றோரை அப்போதே முன்னணியில் நிறுத்தி பின்னணி வெடியில் தீர்ப்பது என்பதாகும். ஒருவாறு தப்பி ஓடினோம். ஓடி ஒளிந்த இடங்களும் எம்மை காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற பயப் பீதியில் ஊர்விட்டு நகர்விட்டு நாடுவிட்டு அம்மா சகோதரத்தின் காதுவரை சிறுகக் கிடந்த ஊரி நகைகளை அடகுவைத்து கிடந்த சிறுதுண்டுக் காணியையும் ஈடுவைத்து யாழிலிருந்து கொழும்பு செல்லும் அந்த புகைத் தேவியில் மறைந்தொழிந்து விமான நிலையம் வந்தேன். அன்று கொழும்புக்கு போன தேவி; இன்றுவரை யாழ் வரவில்லை. விமான நிலையம் வந்த எனக்கு வைத்தாங்களையா அங்கேயும் ஆப்பு.
    இப்படித்தான் நான் – நாம் – எமது புலப் பெயர்வுகள் கதைகள் பல சொல்லும். அவை ஒருபுறமாக இருக்கட்டும்.
    எனைத்தையும் சிறப்பாகத் தேடி ஆய்வு செய்தபின்பு ஆதாரங்களுடன் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என மக்களுக்கு முன்வையுங்கள். அப்படியான அழகிய முறைமைகளை மக்களுக்கு இனியாவது அறிமுகப்படுத்துங்கள். முன்னைநாள் அறிவாளி இசக்கங்களைப்போல் துரோகிப் பட்டங்கள் கட்டாதீர். எதை நீங்கள் சமூகத்துக்கு முன்வைக்கிறீர்களோ… அதுவே உங்களை நாடி வரும். இயற்கை என்பது வட்ட வடிவம் கொண்டது என்பதை உருங்கள்.
    உண்மையான குற்றவாளிகள் தமக்குத் தாமே தண்டனை விதித்துக்கொள்ளட்டும். அவர்கள் சண்டித்தனம் செய்கிறார்களென்றால் அதனை அடக்க காவற்துறையை நாடுங்கள். அடித்தட்டு மக்களின் விடிவுக்காகவே நாம் போராளியாகவேண்டும். சண்டித்தனங்களின் காலம் மிகக் குறைந்ததே. மற்றவர்மீது குற்றப் பட்டம் கட்டுவதற்கான குறைந்த பட்சத் தகுதியான நேர்மை எம்மிடம் இருக்கிறதா என்பதை நாமே எம்மை மீட்டிப் பார்க்க வேண்டும். அதுதான் சுயவிமர்சனம் என்பது. எமது சொல்லுக்கான சிந்தனையை ஏற்று வாய் பொய் பேசலாம். ஆனால் ஆழ்மனம் தான் பதிந்து வைத்திருப்பவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டும். அதன்போது நீங்களே உங்களை ஓர் வக்கிரமற்ற நீதிபதியாக்கி உங்களுக்கான தீர்ப்பை வழங்குங்கள்.பிரபாகரன் தியாகியுமில்லை துரோகியுமில்லை. அவருமொரு சாதாரண மனிதன். ஆயுத மூளை முழைத்த மனிதன் அவ்வளவே. ஒரு சமூகத்தில் அறிவாளி, ஆசிரியர், ஆடு மேய்ப்பவர், பிச்சைக்காரர், திருடர், குடிகாரர், சாமியர், சமூகப் பற்றாளர், பாலியல் வக்கிரர், கெட்டிக்கார மாணவர், மக்குப்பத்திய மாணவர், குதிரையோடி இப்படிப் பலரும்போல அந்தப் பிரபாகரனுமொருவர். 
    மற்றும் நீங்கள் கூறிய பராபரத்தை கோயிலுக்குள் வைத்து எப்போதோ சுட்டுவிட்டனர். அதனால் இப்போதெல்லாம் பராபரிகள்தான் எங்குமே அதிகம். அதனால் பாலியல் தேட்டங்கள் அதிகரித்துவிட்டதாம் ஈழத்தில்.

  84. Mahendra says:
    16 years ago

    ஒரு கொடூர அரக்கக் கும்பலிடம் சிக்கித் திணறிய தமிழ் சமூகம் இப்போ நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. இவை மட்டுமல்ல இப்படி இன்னும் பல நன்மைகள் உள்ளன என்று கண்திறந்து கருத்தெழுதி உலகம் ஒளிமயமானது என காட்ட முற்பட்டமைக்கு முதலில் நன்றிகள்……….. இப்படியான பல நன்மைகளை பெற்றுவாழும் ஈழத்தமிழர்பற்றி இணையத்தளங்கள் சமீபகாலமாக எழுதி வெளியிட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக கீழே தருகிறேன். பிரபாகரன் என்ற தியாகியோ அல்லது துரோகியோ அழிக்கப்பட்டதால் இன்று சிறீலங்கா சொர்க்கபுரியாக மாறியுள்ளதையும், அங்கு தமிழர்களும் இன்பமாக வாழக்கூடிய நிலமையையும் படித்து மகிழுங்கள்.

    * மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றபோது அனைவரும் பேச்சு வார்த்தை மூலம் யுத்தத்தை நிறைவு செய்வோம் என்றனர். ஆனால் ஜனாதிபதி யுத்தத்தின் மூலம் நிறைவு செய்யலாம் என்று யுத்தத்திற்கு தயாரானார் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச நல்லவர், வல்லவர் அவர் சண்டைக்கு நிக்கவில்லை, சமாதானம் பேசத்தான் ஆசைப்பட்டவர் என்றும் ஏதோ புலியள்தான் சண்டைக்கு நிண்டவை எண்டமாதிரியும் சில மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பிதற்றி திரிஞ்சுதுகள். ஆனா கோத்தா போட்டுடைச்சிருக்கிறார்.

    * அனைத்துத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல. ஆனால் 99 வீதமான விடுதலைப்புலிகள் தமிழர்களாவர் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

    * சிங்களம் தமிழர்க்கு, எதையும் கொடுக்காது என்பது சர்வதேசத்திற்கு தெரியும். சிங்களம் தமிழர்க்கு எதையுமே தராது என, புதிய தமிழர் தலைமைகள்தான் உணரவேண்டும்

    * அம்பாறை ஊரணி பிரதேசத்தில் அதிரடிப்படையினரின் முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அகற்றப்பட்டதை தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற சென்ற போது, சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களவர்கள் தமது சொந்த இடங்களை கைப்பற்றி வருவதை எவ்வாறு, யார் தடுத்து நிறுத்த போகின்றனர் எனவும் தமிழ் குடும்பங்கள் கேட்டுள்ளனர்.

    * மட்டக்களப்பு ஆரயம்பதி காங்கேயனோடை தமிழ் கிராமத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.ஏம். ஹிஸ்புல்லா, முஸ்லீம் கிராமாக மாற்றியுள்ளதாக ஆரயம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு குற்றம்சுமததியுள்ளது. ஈரானின் நிதியுதவியுடன் காங்கேயனோடை கிராம் முஸ்லீம் கிராமாக மாற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெயரை சமாதான கிராமம் என பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் இந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்

    * அல்பிரட் துரையப்பாவை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை: 35 ஆண்டுகளின் பின் உண்மை அம்பலம்: திவயின

    * சிங்கள மயமாகும் யாழ்?

    * இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அறியப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூறியே இப்பகுதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாக 75 குடும்பங்களைச் சேர்ந்த 300இற்கும் அதிகமானோர் காடுகளில் தஞ்சமடைந்தனர். அவ்வேளை, அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு கால்நடைகள் பல கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    * யுத்தம் முடிவடைந்து தற்போது தமிழர் தாய பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள பேரினவாத அரசின் ஆட்சி கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கி இருக்கும் யாழ்பாணம் ஆரியகுள சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபச்சராம் நடைபெறுகின்றது. இந்த விடுதியில் வரும் வாடிக்கையாளர்களை குசிப்படுத்த பல பெண்கள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனராம். மேற்படி விடுதிக்கு பொறுப்பாக உள்ளவருக்கு யாழ் மாநகரசபை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பேராதரவினை வழங்கி வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இவரும் அந்த பெண்களிடம் சென்று தனது லீலைகளை நடத்தி முடித்து வருகின்றார் என குற்றம் கூறப்படுகிறது . இந்த செய்திகளை யாழில் உள்ள முன்னணி ஊடகங்கள் சில தெரிந்திருந்தும் வெளியிட முடியாத நிலையில் பாரா முகம் காட்டுகின்றனர் . பெரிய அரசியல் புள்ளிகள் முதல் கல்வி மான்கள் தாதாக்கள்வரை இந்த விபச்சார பிசினசுக்கு உடைந்தையாக செயல் படுவதாக யாழ் வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். வறுமையை பாவித்து ஆடம்பர மோகத்தில் சிக்கி தவிக்கும் சில யுவதிகள் இந்த விபச்சார பிசினசக்கு அளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆடம்பர வாழ்வு வாழ குறுநேர விபச்சாரத்தில் பணத்தை ஈட்ட ஆசைபட்டு எயிட்ஸ் என்ற கொடிய நோயை யாழ் சமுகம் தேடிவருவதானது வேதனைக்குரிய விடயம். இது கூட ஒரு திட்டமிடப்பட் இனஅழிப்பு என கருதப்படுகிறது. அங்கு நடை பெறும் இந்த விபச்சாரத்தை பொலிசாரும் கண்டுகொள்வதில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.

    * விடுதலைப் புலிகள் தான், தமிழ் மக்களின் பிரட்சனை! அவர்கள் அழிக்கப்பட வேண்டும்! அவர்கள் அழிந்தால், சிங்களம் தமிழர்களின் பிரட்சனைகளை உடனடியாக தீர்த்து வைத்து விடும்!!!!!! ….. என்றெல்லாம் மாற்றுக்கருத்தென்று, சிங்களத்துடன் காலா காலமாக ஒட்டியிருந்து, தமிழின அழிப்பிற்கு துணை போனவர்களின், அரசியலும் இன்று புலிகளின் பின் ஸ்தம்பித்து விட்டது!!!!!!!! இந்த மாற்றுக்கருத்து ஒட்டுக்குழுக்களை, இன்று கதைக்க, செயற்பட, தட்டிக்கேட்க, சரி/பிழைகளை சொல்லக்கூட முடியாத நிலைக்கு சிங்களம் கொண்டு வந்து விட்டிருக்கிறது!!!! … இந்த ஜனநாயக செயற்பட்டுக்கு தானா, இந்த ஒட்டுக்குழுக்கள் சிங்களத்துடன் இதுவரை கை கோர்த்தவர்கள்?????? …

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      யாரை யார் ஒட்டுக்குளு என்பது?? இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த சமயம்  திக்கம் சந்தியில் புலிகள் சென்றிநிற்பார்கள்! ஏன்? எதற்காக? இங்கே நிற்கிறீர்கள் என நான் அவர்களிடம் வினவியதற்கு அவர்கள் கூறிய பதில் ஆச்சரியப்பட வைத்தது!  ஈபிஆர்எல்எவ் காம்பை அற்றாக் பண்ண போறாங்கள். அதுதான் வரவிடால் சென்றி நிற்கிறோம் என்றனர். அவங்கள் அற்றாக் பண்ணிணால் என்ன? அதைத்தானே நீங்களும் செய்தனிங்கள் என்றேன். அதற்கு அவர்கள்  தலைவர் எங்கடை ஆமிக்கு எதுவும் ஆகிடாமல் கவணமாகப் பாதுகாக்கச் சொல்லியிருக்கிறார் என்றனர். எங்கடை ஆமிஎன்றால் யார்? என்றதற்கு./ என்ன இங்கை 2 ஆமியாஇருக்குது? எங்கடை சிறீலங்கா ஆமிதான்! சரி சரி இதிலை நின்டு எங்களுக்கு கரைச்சல் தராமல் அங்காலை போங்கோ என்றனர். இப்பொழுது நினைத்துப் பார்க்கவும் சிரிப்பாக உள்ளது. அப்படியாயின் யார் ஒட்டுக்குளு???? எனக்குப் புரியவில்லை!!

      • vanniyan says:
        16 years ago

        அன்று , அர்ச்சுனனுக்கு ” பார்த்தீபன் தேர் ஓட்டினான். பார்த்தீபன் நீங்கள் யாருக்கு இங்கு வண்டி ஓட்டப் பாக்குறீர்கள்: நீங்கள் கேட்டிங்களாம் , அவெர்கள் அப்படிச் சொன்னார்களாம் எண்ட, சைக்கிள் கேப்பில் லாறி ஓட்டுற எந்த ஆதாரமும் இல்லாத கதையைநம்ப நாங்கள் ஓண்டும் இளிச்ச வாயர் அல்ல.உப்பிடி எத்தின பேர் கிளம்பிட்டீங்க ஆள் ஆளுக்கு ஒரு கதையோட…….

        • பார்த்திபராசன் says:
          16 years ago

          வன்மம் கொண்ட வன்னியரே!        நீங்கள் இளிச்ச வாயர் என்பது நீநங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? அது உலகறிந்த உண்மை என்பது அனைத்துப் புத்தியீவிகட்கும் தெரிந்த விடயம். அதனை நீங்கள் வேறு உறுதி செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது??!! அமைதி! அமைதி !. கிணற்றுத் தவளைகளுக்கு உலகைக் காட்டும் அளவுக்கு நான் ஒன்றும் ஆசிரியன் அல்ல!. கிணற்றில் இருந்து வெளியில்த் தூக்கி விட மட்டும் தான் என்னால் முடியும். உலகைப் புரிந்து கொள்வதும் திரும்பவும் கிணற்றிப் பாய்ந்து கத்துவதும் உங்கள் பிறப்பின் தன்மையைப் பொறுத்தது

  85. S.G.Raghavan says:
    16 years ago

    Garamasala, முதலில் சிவராம் மீது நான் எந்த சேரடிப்புக்காகவும் இதனை சொல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். சிவராம் வெளிநாடுகளின் பாதுகாப்பு கல்லூரிகளில் பேச்சாளராக விரிவுரையாளராக பலதடவைகள் அழைக்கப் பட்டிருக்கிறார். இது ஒன்றும் இரகசியம் அல்ல பத்திரிகைகளில் இச் செய்தி வந்தவையே. மற்றும் மிக கூடுதலாக ராணுவ மற்றும் அரசியல் பகுபாய்வுக்காக சிவராம் பல நாட்டு ராஜதந்திரிகளாலும், புலநாய்வ்வாளர்களாலும் அணுகப் பட்டதும் இரகசியமானது ஒன்றல்ல.
    “முத்து மாலை” கோப்பது எப்படி என்று சீனர்கள் கேட்டிருப்பார்களா? …… நல்ல நகைச்சுவை, இருக்கக் கூடும்…… நான் சொல்ல வருவது ஒரு ராணுவ வெற்றியை பெருமளவு சேதங்கள் இன்றி இலகுவாக பெறவேண்டுமெனில் பகுப்பாய்வு இருத்தல் வேண்டும்.
    உதாரணம்: போராடும் இனம் ஒன்றின் ராணுவ வலிமையை சிதைக்கவேண்டுமெனில் தனித்து ராணுவ வளிமுறமையை மட்டும் பாவிக்காது போராடும் சமுகத்தில் இருக்கக் கூடிய பிளவுகளை இனங்கண்டு அதனை முனைப் படுத்தல், அல்லது புதிய பிளவுகளை உருவாக்குதல். குறிப்பாக எம்மத்தியில் சாதி, சமய, பிரதேச, வட்டார கலாச்சாரங்கள் என்ற பலவேறுபாடு உண்டு. மற்றும் கொள்கை அடிப்படையில் ஏற்படக்கூடிய பிளவுகளை ஆழமாக்குதல் எனப் பல உண்டு. பிற்காலங்களில் சிவராம் இவ்வகையான பகுப்பாய்வு கட்டுரை களை கொழும்பு ஆங்கில பத்திரிகளில் எழுதியிருந்தார். மிக கிட்டிய காலங்களில் சிவராமே தனது வாயால் தனது கட்டுரைகளை அடிப்படையாக்கொண்டு சிங்கள பேரினவாதிகளின் கொள்கை வகுப்பாளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை தூண்டுவதாக குறிப்பிட்டு, அதன் பின்னர் தான் அவ்வாறு எழுதுவதில்லை எனக்குறிப்பிட்டார். ஆக சிவராம் தான் ஆற்றிய விடயங்கள் எமது சமுகத்திற்கு எதிராக திரும்பும் என கண்டு பிடிக்க இந்த புத்தியீவிக்கு பல நாட்கள் எடுத்ததா? ………….
    இங்க்கு மகேந்திரா வின் கருத்தும் ஆதங்கமும் மிக கவனிப்புக்குரியது. எனவே புலிகளை எதிர்க்கிறோம் எனக் கூறி தமிழர்களையும் அவர்களின் இருப்புக்களையும் எதிர்க்கும் கனவான்கள் இதற்க்கு பதில் கூற வேண்டும் ஊர்மிளா பிரபா போன்றோர் இதற்க்கு பதில் சொன்ன பின்னர் புலிகளை விமர்சிக்கட்டும்.

  86. xxx says:
    16 years ago

    ராகவன்
    உங்கள் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள எனக்கு இதுவரை ஒரு இடரும் இருந்ததில்லை.
    நீங்கள் சிவராம் மீது சேறடிப்பதாக நான் எங்குமே சொல்லவில்லை. மாறக அவர் பற்றிய மிகையான மதிப்பீடொன்றைப் பற்றியே குறிப்பிட்டேன்.
    தனதும் தனது எழுத்தினதும் ‘முக்கியத்துவதை’ விளம்பரப் படுத்த அவர் தவறவில்லை.
    இவ்வாறு செய்கிற இன்னொவர் பற்றிக் குறிப்பிட்டேன். இப்படிப் பலர் உள்ளனர்.
    புலனாய்வாளர்களும் உளவாளிகளும் வாய்களைக் கிளறுவதில் வல்லவர்கள். அதில் அவர்கள் தராதரம் பிரிப்பதில்லை
    எத்தனை பேரிடம் உளறிக் கொட்டினோம் என்பதில் பெருமை இல்லை.

  87. S.G.Raghavan says:
    16 years ago

    XXX – மாறக அவர் பற்றிய “மிகையான மதிப்பீடொன்றைப்” பற்றியே குறிப்பிட்டேன். “எத்தனை பேரிடம் உளறிக் கொட்டினோம் என்பதில் பெருமை இல்லை”.
    ஆம் நான் சொல்லவந்த கருப்பொருளின் ஒரு உதாரணம் தான் சிவராம். சிவராம் பற்றிய புரிதல் எமக்கு ஏனைய விடயங்கள் பற்றிய நுண்ணறிவை பெற உதவும் என்பதாலே அவரை கையாண்டேன். “எத்தனை பேரிடம் உளறிக் கொட்டினோம் என்பதில் பெருமை இல்லை” என்ற தங்களின் சிவராம் பற்றிய புரிதல் ஒன்றே எனக்கு போதுமானது, சிவராம் “போன்றவர்களின்” இத் தற்பெருமை எங்களை வறுமை ஆக்கியதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். வெள்ளவத்தை பம்பலபிட்டி பார்களில் சிவராம் வெறும் பியருக்கே நிறைய கொட்டுவார் இதனை கேட்பதற்க்கு பல சிங்கள பேரினவாத எண்ணங்கொண்ட பகுப்பாய்வாளர்கள் சாராயத்தை கொடுத்து பூராயத்தை கேட்க குந்தி இருப்பதுண்டு.
    தமிழ் சமுகத்தின் சகல இயங்கியல் குறித்த அறிவும் சிவராமிடம் இருந்தது. அவரிடம் பாணமை தொடக்கம் பருத்தித்துறை வரையான மண்ணின் நிறமும், ………….., பெண்ணின் குணமும் தெரிந்தவர் அந்த அறிவை தமிழீழ விடுதலை போராட்டத்தை அனைவரும் பங்கு கொள்ளும் முழு வர்க்க போராட்டமாக மாற்றியமைக்கும் செயலுக்கு பயன் படுத்தியிருக்கலாம். இது எனது ஆதங்கம் அவ்வளவே.
    பிரபாகரன் தியாகியா? துரோகியா? என்ற விவாதத்தினூடு நாம் பலவற்றை கதைத்து விட்டோம். அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அல்லது சற்று தள்ளியேனும் அல்லது புதிய ஒரு இடத்தில் இருந்தேனும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அல்லது வரலாற்று காலத்தில் இருக்கின்றோம். இப்போது எங்களிடம் இருக்கும் தெரிவுகளில் சிலவாக நாடு கடந்த அரசு, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் அரங்கம், எஞ்சி சிதறி போயிருக்கும் விடுதலை புலிகள் அல்லது இவர்களையும் புறந்தள்ளிய புதிய கோட்பாடுடன் கூடிய ஒரு வெகுஜன அரங்கம். ஆனால் இதனையும் தாண்டி தற்போது வெளிவரும் கூச்சல் அல்லது கருத்து அல்லது ஒரு கருத்து உருவாக்கம் மகிந்தவுடன் சமரசம் அதனையும் தாண்டி சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழுதல்.
    இங்கு சேந்து வாழுதல் என்பதில் இரு விடயங்கள் உண்டு ஓன்று சுயத்தை இழந்து வாழுதல் இன்று இலங்கையில் தமிழர்களின் நிலை இது தான், இதனைத் தான் இன்று பலர் தமிழர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். இனிஒருவில் வரும் பின்னூட்டங்களிலும் இதனை அவதானிக்கலாம். சிங்கள பேரினவாதிகளும் இதனையே சூழ்ச்சியாகவும் அதட்டலாகவும் மிரட்டலாகவும் ஏன் அன்பாகவும் சொல்லிவருகிறார்கள், அதற்கேற்ற நிகழ்ச்சி நிரலை கனகச்சிதமாக முன்னெடுத்து வருகிறார்கள். இரண்டாவது விடயம் சிங்கள மனச் சாட்சியை தட்டிஎளுப்புதல், கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் சிங்கள மனச்சாட்சியை முறையாக தட்டி எழுப்பவில்லை என்ற மனக்குறை எனக்குண்டு. இதன் மூலம் எமது உரிமைகளை எமது பிரச்சனைகளை அவர்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் எமது சுயத்தை இழக்காத முறையில் உரிமைகளை பெற்று கொள்ளுதல், இதனை தமிழ் அரசியல் ஆயுத தலைவர்கள் சிங்களவர்களின் மகாவம்ச மனநிலையை காரணமாக கூறி நிராகரித்து விட்டார்கள். ஆக எங்களுடன் எஞ்சி போயிருக்கும் விடயம் தான் என்ன?
    என்னை பொறுத்த வரையில் எமது பிரச்சனைகளை உணர்ச்சி வசங்களுக்கு அப்பாற்பட்டு சிங்கள வேகுஜனங்களிற்கு கொண்டு செல்லுதல் அத்துடன் ஒடுக்கப் பட்ட அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் எமது உரிமைகளை காலதிற்கு ஏற்ற போராட்ட வழிமுறைகளின் மூலமாக பெற்றுக் கொள்ளுதல் என்பதே ஆகும்
    பிரபாகரன் தியாகியா? துரோகியா? என்ற விம்பங்களுக்கு அப்பால் ……… எம்மிடம் இருக்கும் விம்பங்கள் அனைத்தையும் விட்டொழித்து, தியாகிக்கு எதிர் கருத்து தேடுவதை விடுத்து நாம் அனைவரும் உடைந்து போன எமது மக்களின் உள்ளங்களில் தேசபிதாக்களாக மாறுவோம்.

  88. THAMILMARAN says:
    16 years ago

    உடைந்து போன எமது மக்களீன் உள்ளங்களீல் தேசபிதாக்களாக மாறூவோம்.பிராக்டிக்கலான வார்த்தைகள்.

  89. S.G.Raghavan says:
    16 years ago

    இந்தியன் ஆர்மி நிலை கொண்டிருந்த காலத்தில் புலிகளிற்கும் அவர்களிற்க்கும் மோதல் ஏற்பட முன்பு வடமராச்சியில் அதுவும் திக்கத்தில் இலங்கை ராணுவம் நிலை கொண்டிருக்கவில்லை. இந்திய ராணுவம் வடமராச்சியில் நுழைந்த சமயம் திக்கம் பொலிகண்டி நெல்லியாட்டி மந்திகை போன்ற இடங்களில் இலங்கை ராணுவம் சில நாட்களாக நிலை கொண்டிருந்தது அக்காலத்தில் எந்தவொரு EPRLF முகாம்களும் வடமராச்சி பகுதியில் இல்லை. பார்த்திபராசன் கால ஓட்டம்
    காரணமாக நீங்கள் தகவல் மாறுதலை கொண்டிருக்க கூடும். நான் நினைக்கிறேன் திக்கம் உட்பட பல இடங்களில் (இந்திய படை சமாதான காலத்தில்) வடமராச்சிக்குள் உள் நுழைந்து புலிகள் சென்றியிட்டு இருந்தனர். ஆனால் உத்தியோக பூர்வமாக புலிகள் அஆதன்களை வெளியில் கொண்டு செல்லவில்லை. எது என்னவோ? புலிகள் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து செட்டிகுளம், முள்ளிக்குளம் பிளாட் முகாம் மீதும், திருக்கோவில் தம்பிலுவில், பொத்துவில், போன்ற இடங்களில் TNA மீதும் தாக்குதல் மேற்கொண்டு நூற்று கணக்கான தமிழ் இளையர்களை கொன்றும் சரணடைந்த இளையர்களை சித்திரவதை செய்து சுட்டும் எரித்தும் கொன்றார்கள். மொத்தத்தில் நாம் எங்களை கொன்று எமது வீரத்தை காட்டினோம். இதற்கு இலங்கை ராணுவத்தின் கேலிகப்டர், கவசவாகனம், இன்னும் பிரேமதாசவின் ஆயுதங்கள், மற்றும் ஸ்ரீலங்கா ராணுவத்தின் சுற்று காவல், மற்றும் கடற்படை உதவி என்பன பெறப்பட்டன(அம்பாறையில் ரீகன் இலங்கை ராணுவத்தின் கேலியில் வந்து இறங்கி பொத்துவில் பகுதியில் அமைந்து இருந்த காலித் தலைமையிலான TNA யை தாக்கியிருந்தார்).மேலும் வல்வெட்டித்துறை கடற்கரையில் இலங்கை கடற்படையின் உதவியோடு புலிகள் தப்பியோடிய EPRLF யை சேர்ந்த குடும்பங்களை கூடுதலாக (மயிலிட்டியை சார்ந்தவர்கள்) கிட்டத்தட்ட 181 பேர் பொலிகண்டி மயானத்தில் திருவாளர் சூசை தலைமையில் சுட்டு கொன்று நல்லடக்கம் செய்தனர்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      ராணுவம் வெளியில்த் தலைகாட்டுவது இல்லை. ஆனாலும் மினி முகாமினுள் முடங்கிக் கிடந்தனா. அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகமிகக் குறைவான காரணத்தால் பலருக்கு அங்கே ஒரு முகாம் இருப்பதே பலருக்கத் தெரியாது. காரணம்  இந்திய ராணுவத்தின் காலத்தில் இலங்கை ராணுவம் எமது வட்டாரத்தில் துப்பாக்கிகளை மெளனித்திருந்தனர். 

  90. vinothan says:
    16 years ago

    இந்த தெருப்பொறுக்கி நாய்களை பூன்டொடு அழித்திருந்தால் , இன்று தமிழனுக்கு சிங்கள காடையன் தெருப்பொறுக்கி மகிந்தனால் இவ்வளவு கொலை செய்திருக்க முடியாது.

    • Sri says:
      16 years ago

      ஆயுதமேந்திய தமிழ்க்குழுகள் யாவற்றயும் சாதரண மக்களால் எப்படி பூண்டோடு அழித்திருக்கமுடியும்? சாத்தியப்படக்கூடிய விடயமா வினோதன்?

    • Garammasala says:
      16 years ago

      vinothan
      முன்னாள் புலிகள், இன்னமும் புலிகள் உட்பட, நீங்கள் குறிப்பிடும் அத்தனை கீழ்த்தரமானோரும் தமிழ்த் தேசியத்தின் உற்பத்திகளல்லவா.

    • a voter says:
      16 years ago

      இவ்வளவு திட்டும் நீங்கள் அன்று மக்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து அதன் மூலம் அதே தெருப்பொறுக்கியை அரசாள வைத்த சாணக்கிய மூளை பற்றிக்கிலாகித்ததை மறந்து விட்டீர்களா. (நான் உங்களைக்குறிப்பாகக் குற்றவாளியாக்கவில்லை. பொதுவாக நிலவும் சமூகப்போக்கையே குறிக்கிறேன்)

      • Sri says:
        16 years ago

        அட டட நான் அந்த விசயதை மறந்து விட்டேன்! மகிந்த எத்தனை கோடி ரூபா பிரபாவிற்கு கொடுத்து ஜனாதிபதியா வந்தவர்? என்று தெரியுமா???

        • Soorya says:
          16 years ago

          ரணில் என்ற முதுகெலும்பில்லா மோட்டு மனிதன் ஒரு பக்கம் ஒப்பந்தம் மறு பக்கம் களுத்தறுப்பு என்று அரசியல் செயிதுகொண்டு இருக்கும்போது சிங்கள மனிதருக்கு மனித உரிமைக்காக கடன் பட்டு ஜெனீவா சென்ற ஒருவன், இவன் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் சீர்த்தூக்கி ஆராந்த்துபார்த்து மாற்று வழியின்றி எடுத்த முடிவு இப்படியாக ஒட்டுமொத்தமாக தமிழ்ரின் இருப்பையே இலங்கையில் கேள்விக்குறியாக்குமென்று முன்பே அறிந்திருக்க புலிகள் ஒன்றும் தீர்கதரிசிகளல்லவே. சிங்களவனை ஒருபோதும் நம்பமுடியாது என்று பிரபாகரன் எப்போதும் சொல்வது திரும்பவும் உண்மையாகிவிட்டது. நம்புவது வேறு, அரசியல் வேறு. ஆனால் அரசியலில் சிலவேளைகளில் நம்பித்தான் நடபடிக்கைகள் எடுக்க வேண்டும். 

          • THAMILMARAN says:
            16 years ago

            பிரபாகரன் முட்டாள் என்பது முள்ளீவாய்க்கால் வரை தமிழனுக்குத் தெரியவில்லை.அண்ணன் முகுந்தன் அன்றே சொன்னார் இந்த முழிக்கள்ளன் தமிழனை நந்திக்கடலில் கொண்டுபோய் விடுவான் என்றூ யாராவது கேட்டோமா? தேசியத்தலைவர் எநத் தெரிவில் நிற்கும்போதுதான் அண்ணன் முகுந்தன் அருமை தெரிகிற்து,

          • ramu says:
            16 years ago

            நீங்கள் தலைவரை இவ்வாறு அவமதிக்கக்கூடாது. முக்காலும் உய்ந்துணர்ந்த சூரிய தேவன், ஆரேனையும் நம்பி கெடுவார் என்று நினைத்துப்பார்க்க முடியாதது. அதில் கையூட்டு விவகாரமும் சம்பந்தபட்டுள்ளதாமே உண்மையா? இறுதியாக சாம்பல் மேடாக முடிவுற்றதற்கும் இருக்கிறது தலைவரின் பொன்மொழி. “சிஙகளவனை ஒருபோதும் ந்ம்பக்கூடாது.” வாழ்க பிரபாகனிசம்

          • பார்த்திபராசன் says:
            16 years ago

            துரோகிகளே உண்மையைக் கூறினீர்களாயின் உங்கள் குடும்ப சந்தோசத்தை ஒவ்வொன்றாய்த் துலைத்து விடுவீர்கள். ராணுவம் ஊருக்குள் வந்துவிட்டு வெளிளியேறிய பின்னர் மக்கள் பேசிக் கொள்வர் ராணுவம் உங்களைச் சுட்டுக் கொண்றுவிட்டதாக. எச்சரக்கின்றேன்.                                             இப்படிக்கு                   மேதகு  தேசியத்தலைவன்                                             பிரபாகரன்.

          • mamani says:
            16 years ago

            முக்காலமும் உணரும் தீர்க்கதரிசிதானே மேதகு பிரபாகரன்.

      • Garammasala says:
        16 years ago

        சூர்யா
        புலிகளின் தலைமை அரசியல் காரணங்களுக்காக மகிந்தரை ஆதரித்திருந்தால் அது ஒரு கதை– அதைத் தவறான மதிப்பீடு என மரியாதையுடன் விமர்சிக்கலாம்.

        காசுக்காகச் செய்வது?
        (பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் தருமனை விமர்சிக்கும் வீமனுடைய சொற்கள் மனதுக்கு வருகின்றன).

        • ramu says:
          16 years ago

          மாறன் ! நீங்கள் முகுந்தனின் அருமைசகோதரரா? உங்களுக்கும் “டம்மிங்” ல் ச்ம்பந்தமுண்டா?

      • Thileep says:
        15 years ago

        ரணிலின் ஆரசில் எந்த ஒரு தீர்வும் கிடைக்ககாது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு காணப்பட்ட விடயங்களை அமுல் படுத்துவது இல்லை. அப்பிடி அமுல் படுத்தினாலும் நீதிமன்றங்களை வைத்து அதனை சட்டவிரோம் நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து என்று தடுத்தான். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையே விடவில்லை. அத்துடன் அவன் காலத்தை இழுத்து போராட்டத்தை உடைத்துஅழ திப்பதிலேயே குறியாக இருந்தான். மகிந்த ஜேவிபியோடு கூட்டனி வைக்கும் போதே புலிகளுக்கு தெரிந்து இருக்கும் மகிந்த வந்தாலும்  அழிவுதான் என்று. மகிந்த ரணில் இந்த இரண்டு ரபரையும் விட மக்கள் யாருக்கு வாக்கழித்தாலும் ஒரு பிரியோசனமும் இல்லை. புலிகளின் முழுக்கவனமும் சர்வதேசத்திலேயே இருந்தது. சிங்கள அரசுகளை மக்கள் நம்பவில்லை என்று உலகத்திற்கு காட்ட இந்த முடிவை எடுத்தார்கள்

  91. Mahendra says:
    16 years ago

    மகாபாரதத்தில் கர்னனை அம்பெய்து வீழ்த்திவிட்டு வள்ளலைக் கொன்றுவிட்டேன் என்று பார்த்திபன் புலம்புவான், அப்போது கிருஷ்ணபரமாத்மா கர்னனை ஏற்கெனவே பலர் உறவாடி வஞ்சித்து கொன்றுவிட்டனர். இப்போது செத்தபாம்பை அடித்துவிட்டு வீணே புலம்பாதே என்று கூறுவான். பல ஆயிரம் வருடங்களுக்குப் பின் தோன்றிய ஒரு மாபெரும் தமிழ்த் தலைவனை உறவாடிக் கொன்றவர்களும், செத்தபாம்பை அடிப்பவர்களும் இனியொருவில் நுளைந்து, அறிந்தோ அறியாமலே தங்களையும் வெளிப்படுத்தி புலம்பியும், நிந்தித்தும் வருகின்றனர்.

    • Garammasala says:
      16 years ago

      உங்கள் “மாபெரும் தமிழ்த் தலைவனும்” அன்றைய “வள்ளல்” போலக் கெட்டவர்கள் தரப்பில் தான் நின்றாரா?
      அவர் எந்த இடத்தும் அமெரிக்காவை விமர்சிக்க மறுத்தார் என்பது தெரியும்.

      • பார்த்திபராசன் says:
        15 years ago

        சூப்பர். நல்ல ஒரு குட்டு!

        • Soorya says:
          15 years ago

          உயிரை மாத்திரம் கையில் பிடித்தபடி ஒரு நாதியுமற்ற தமிழ்ப் பெண்களை இராணுவத்திற்கு விட்டு மாமா வேலைசெய்த கருணாவின் கால்நக்கி ஏன் இங்கெல்லாம் தடுக்கிவிழுகிறது?

      • Thileep says:
        15 years ago

        நிச்சயமாக அவர் கெட்டவர் பக்கம் தான் போராடினார். (உங்களுக்காக)

  92. Mahendra says:
    16 years ago

    வள்ளல் என்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. கெட்டவர்கள் யார்? தமிழர்களா? தமிழ்பேசுபவர்களா? தமிழ்எழுதுபவர்களா? நீங்களா? நாங்களா? யாரது?…….

  93. Garammasala says:
    16 years ago

    நன்றிக்கு நன்றி.
    வள்ளல் என நான் சொன்னது தமிழ்க் குழந்தைகளினதும் அப்பாவி மக்களதும் உயிரை வாரி வாரிக் களப்பலியாகக் கொடுத்த வள்ளலை அல்ல கர்ணனை என்று விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.

    கெட்டவர்கள் அந்நிய வல்லரசுகள்.
    சகோதரப் போராளிகளைக் கூசாமல் அழித்தவர்கட்கு உலக மக்களையும் உள்நாட்டு மக்களையும் அழிக்கும் வல்லரசுகள் பற்றி வாய் திறக்க இயலாமல் போனது எப்படி?

  94. Mahendra says:
    16 years ago

    உங்கள் “மாபெரும் தமிழ்த் தலைவனும்” அன்றைய “வள்ளல்” போலக் கெட்டவர்கள் தரப்பில் தான் நின்றாரா? அன்றைய வள்ளல் போல என்று அதன் பொருள் விளங்காமலே உண்மை எழுதப்பட்டுவிட்டது.

    1956ல் தொடங்கி 1983ம் ஆண்டுவரை தமிழ்க் குழந்தைகளினதும், அப்பாவி மக்களதும் உயிரையும், மானத்தையும், பொருளையும் வகை தொகையின்றி சிங்களவன் பலிகொண்டபோது ஏதும் செய்ய வழியின்றி பாராளுமன்றக் கதிரைதேய்த்த தமிழ் தலைவர்களை, மீண்டும் மீண்டும் தலைவர்களாக தெரிவுசெய்து அனுப்பியபோது உறங்கிக்கிடந்த உணர்ச்சி இப்போது உருக்கொள்ளக் காரணம் என்ன? இதன் பின்னால் இருப்பது யார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    தமிழன் தொடர்ந்தும் அடிமையாக வாழமுடியாது. தனக்கென்று ஓர் அரசமைத்து உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு போராடவேண்டும். நடந்தவையிட்டு நிந்தனை ஒப்பாரி பாடுவதால் பலனேதும் ஏற்படப்போவதில்லை. மனவலு இழந்தவர்களையும் ஊக்குவித்து போராட்டப்பாதையை மாற்றியமைக்க முயலவேண்டும்.

    நாடுகடந்த தமிழீழ அரசு இன்று நம்பிக்கை தருகிறது. அதற்குள்ளும் நிறையவே காக்கைவன்னிய தமிழர்கள் நுளைந்துள்ளனர். அவர்களை இனம்கண்டு ஒதுக்கி, அந்த அரசு செயல்பட அனைவரும் கைகொடுப்போம். வெற்றிகிடைத்தால் உலகில் நாம் தமிழர்கள்.. தோற்றால் தொடர்ந்தும் அடிமைகளே…..

    • Sri says:
      16 years ago

      நாடு கடந்த தமிழ் ஈழம் யாருக்கு?நாட்டைக்கடந்த தமிழருக்கா அல்லதுநாட்டில் இருக்கும் தமிழருக்கா??

    • Garammasala says:
      16 years ago

      நீங்கள் புகழ் பெற்ற பின்நவீனத்துவவாதியாயிருப்பினொழியத், தயவு செய்து தமிழ் இலக்கணம் தெரிந்த எவரிடமாவது வாக்கியங்கட்குப் பொருள் கொள்வது எவ்வாறென்று விசாரிப்பின் நன்று.

      “நிறையவே காக்கைவன்னிய தமிழர்கள் நுழைந்துள்ள” “நாடுகடந்த தமிழீழ அரசு நம்பிக்கை தருகிறது” என்கிறீர்கள்.
      எனின், உங்கள் நம்பிக்கை எருதின் விரைகள் கீழே விழும் என்ற அசையாத நம்பிக்கையுடன் எருதை எங்கும் தொடர்ந்து சென்று களைத்து விழுந்த நரியின் நம்பிக்கையை விட வலியதாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    • பார்த்திபராசன் says:
      16 years ago

      வெற்றி யாருக்குக் கிடைத்தால்?????    !!!!!!   மக்களுக்கா? அல்லது புலிவால் பிடித்த புலையர்க்கா??  புலையர்களுக்காகின் மக்கள் அப்போதும் அடிமைகள்தானே!! மேலும் காக்கை வன்னியர்களையே நீங்கள் தொடர்ந்தும் தலைவர்களாக்கும் போது உள்ளே நுளைபவர்கள்மட்டும் எப்படி மாற்று வழிப் புத்தியீவிகளாக இருக்க முடியும்.! இனம்தானே இனத்தைச் சாரும்.

  95. Mahendra says:
    16 years ago

    நாடு கடந்த தமிழ் ஈழம் நிச்சயமாக எனக்கல்ல. இன்னும் சொற்ப ஆண்டுகள் கடந்து நூறு வயதுவரை வாழ நீங்கள் அருள்புரிந்தால் நான் எனக்காகவும் போராடுவேன்.

  96. Mahendra says:
    16 years ago

    பொருளற்ற தமிழ்ப் பாடலை இயற்றிவந்த புலவனை, கம்பன் இகழ்ந்துவிட்டான் என்பதற்காக அதனைப் பழுதற்ற பாடலாக பொருள்நிறைத்து அவையை அதிரவைத்தான் ஒட்டக்கூத்தன். தமிழுக்கு அத்தனை வலுவுண்டு. தமிழ்திறன் இருந்தால் பேச்சிலோ எழுத்திலோ நீங்களும் வெல்லலாம் நானும் வெல்லலாம். ஆனால் அது எங்களுக்கு வாழ்வைத்தராது. தமிழால் வளர்ந்தவன் கருணாநிதி தமிழ் அவனை தலைவனுமாக்கியது. ஆனால் அவனால் அழிந்தது தமிழர்களே. பத்துப்பேர் பத்துவிதமான சிந்தனைகளை இங்கு வெளிப்படுத்துவார்கள். அதில் ஒன்றாவது நல்லவழிகளை பின்பற்ற உதவலாம். அதைத் தேடுங்கள். எருதுக்கதைகளைப்போல் எத்தனையோ கதைகள் எழுதலாம். குதர்க்கமின்றி ஆக்கங்களுக்குரிய வழிமுறைகளை நாடுவதே நலன்தரும். நாடுகடந்த தமிழீழ அரசு நம்பிக்கை தராவிட்டால் அதைவிட சிறந்த ஒரு தலைமையை வெளிப்படுத்துங்கள். யார் தியாகி, யார் துரோகி என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். காலம் அதனை வெளிப்படுத்தும்.

    • THAMILMARAN says:
      16 years ago

      ஒட்டக் கூத்தன் தன் பொறாமையால் வெந்து செத்தவன்,கம்பனின் காற்தூசிக்கும்பெறாதவன்.கருணாநிதி என ஒற்றவார்த்தையால் தமிழக முதல்வரை,தமிழின் முதல்வனை உச்சரிப்பது என்னைக் கொதிப்படுத்துகிறது.தமிழை அறீந்தால் நீர் தமிழனாய் இருந்தால் இப்படிக் கதைக்க மாட்டீர்.நீரே தமிழுக்குத் துரோகி இதில் தியாகம் பேச வந்து விட்டீர்.

      • vanniyan says:
        16 years ago

        ஊரை அடிச்சு , உலையிலே போட்டவன் தானே உந்தக் கருணாநிதி.மனைவி ,துணைவி , ஆசைநாயகி எண்டு வைச்சிருப்பவர் எல்லாம், உம்மைப் போல ஆட் களுக்குத்தன் தலைவனாய் இருக்காலம். அது தமிழருக்கு ஒரு போதும் பொருந்த்தாது. ஜெனாதிபதி ஆக இருந்த மூப்பனாரை , குறுக்கு வழியில் தவண்டு போய் , டில்லியில் இருந்து கெடுத்த்வன் தானே உந்தக் கருனா நிதி. மாறன் குழுக்களின் ஆட்டம் ஒரு பக்கம், அழகிரி கும்பலின் கொட்டம் ஒரு பக்கம், இன்னும் கொஞசக் காலம் உந்தக் கூட்டம் தமிழ் நாட்டை ஆண்டால், தமிழ் நாடு அதொகதிதான். கருனா நிதி உயிரோட இருந்ததே தமிழர் அழியத் தானே. அமரர். எம்.ஜி.ஆர் இருந்தல் இந்தநிலைமை வந்து இருக்குமா எங்களுக்கு. தூ…இவெர் ஒரு ஆள் எண்டு , அவெனைப்பற்றி சொல்ல வாறார்.

        • THAMILMARAN says:
          16 years ago

          உலையிலே அரிசி போடக் கொடுத்தவர்,எந்திரன் பார்க்க தொலைக்காட்சியை இலவசமாகவே தந்தவர்,குடிசைவாசிகளூக்கு வீடு தந்தவர்.இன்னும் …இன்னும்.எம்.ஜி.ஆர் பெண்ணாசை கொண்டோர்க்கு நல்ல உள்ளம் இல்லை எனப் பாடிக் கொண்டே பிறரது மனைவிமாரைத் தேடித் திரிந்தவர்.மலையாளீகள வாழ்வித்துக் கொண்டு தமிழனை,தமிழை அழித்தவர் எம்.ஜி.ஆர்.

    • THAMILMARAN says:
      16 years ago

      தமிழால் வாழ்பவர் தமிழறீயா நடிகர்கள்,தமிழ் படித்து வாழும் தமிழரல்லா எழுத்தாளர்,ஈழத்தமிழர் என அசைலம் அடிக்கும் கேரளத்தவர்,என தமிழ் வாழ்விக்கவில்லையா?

  97. Garammasala says:
    16 years ago

    எனது சொற்களை திரிக்க உங்களுக்கு இருக்கும் உரிமை திரித்ததைத் திருத்த எனக்கிருக்கக் கூடாதா?

    “பொருளற்ற தமிழ்ப் பாடலை இயற்றிவந்த புலவனை, கம்பன் இகழ்ந்துவிட்டான் என்பதற்காக அதனைப் பழுதற்ற பாடலாக பொருள்நிறைத்து அவையை அதிரவைத்தான் ஒட்டக்கூத்தன்”.
    கதையையே தலைகீழாக்கி விட்டீர்களே.
    ஒட்டக்கூத்தர் தான் திமிர் பிடித்தவர் என்று கருதப் படுகிறது. கம்பரை மட்டந் தட்டிய பாவலர் என அறியப்பட்டவர் அவ்வையார் மட்டுமே என நினைக்கிறேன்.

    • THAMILMARAN says:
      16 years ago

      சொற்களத் திரித்து விளயாடவில்லை ஆனால் கம்பனுக்கு வில்லனாய் இருந்தவர் ஓட்டக் கூத்தர்,அவ்வையார் அல்ல.

    • Garammasala says:
      16 years ago

      TM
      எனது குறிப்பு உங்களுக்கு உரியதல்ல என்பது சொற்களை கவனித்து வாசித்திருந்தால் விளங்கியிருக்கும்.

      எவ்வாறாயினும் ஒட்டக்கூத்தரை கெட்டவராகக் காட்டும் முயற்சியில் எனக்கு விருப்பில்லை.

  98. Mahendra says:
    16 years ago

    தமிழை அறீந்தால் நீர் தமிழனாய் இருந்தால் இப்படிக் கதைக்க மாட்டீர். என என்னைப்பற்றி விழித்ததில் உண்மை இல்லாமல் இல்லை.

    நான் படித்ததில், பேசுவதில், எழுதுவதில் தமிழ்சொல் எது, வடமொழிச்சொல் எது, மேலத்தேசத்துமொழிச்சொல் எது என பிரித்தறிய முடியாது மயங்கி நிற்பது உண்மைதான். தற்போது தமிங்கிலம் என ஒரு புதுமொழி தோன்றியிருப்பதாக அறிந்தேன். அதனூடாக சிலவேளை தூய தமிழ்சொல்லை அறிந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை. தூய தமிழ்சொல்லை அறிந்துகொண்டவர்களின் அறிமுகம் கிடைக்காதது எனது துர்ப்பாக்கியம்.

    நான் தமிழனாகவும் இல்லை தமிழனாக இருந்தால் நான் இயற்கையையே கடவுளாக வழிபட்டுக் கொண்டிருப்பேன். நான் வழிபட பழக்கப்படுத்திய கடவுள்களாக சிவன் குடும்பம், யேசுபிரான், புத்தன்… மன்னிக்கவேண்டும் கடவுள்களை, தலைவர்களை அவன் இவன் என்று அழைக்கக்கூடாது. சிவர் குடும்பம், யேசுபிரார், புத்தர் இவர்களையே கடவுள்களாக வழிபட்டுவருகிறேன்.

  99. Soorya says:
    16 years ago

    மகேந்திரா,
    அறிய, படிக்க, திருந்தத் துடிக்கும் ஒருவனுக்கு விளக்கம் கொடுக்கலாம், ஆனால் “சகலகலா வல்லபனுக்கு” எந்த செய்தியாக இருந்தாலும் என்ன விடயமாக இருப்பினும் முந்தியடித்துக்கொண்டு அர்த்தமில்லாமல் பின்னூட்டம் விடும் அபத்தங்களுக்கு நீங்கள் தலைகீழாக நின்று கத்தினாலும் கோவில் மணிதான் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் தான் தேர்ந்தெடுத்த சமயம் சரியென்று விளம்பரம் செயயும் துஷ்பிரயோகம் இனி ஒரு போதும் இங்கு இடம்பெறக்கூடாது.

    • THAMILMARAN says:
      16 years ago

      சூர்யா மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய், எந்த நிலையிலும் உண்மையாய் இரு.

  100. மாயா says:
    16 years ago

    //பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்ப்பட வேண்டும். அதன் வெளிச்சத்திலிருந்தே புதிய போராட்டம் சரியான நெறியைக் கண்டறிய முடியும்.//
    இன்னொரு போராட்டமா? அதுவும் புதிய போராட்டமா? அதாவது சங்கரின் ரோபோ மாதிரியா? மீதமுள்ள ஒட்டு மொத்த தமிழரையும் மீண்டும் முள்ளிக்கால்வாய் வரை மந்தைகள் போல ஓட்டிச் சென்று அழிப்பதற்கா. போதுமடா சாமி. முடியுமானால் ஒரு கரும்புலியாக நீங்கள் கட்டுநாயக்காவில் இறங்க முயற்சி செய்யுங்க. ஏனையவர்களை விட்டுடுங்க. உங்களால் கரும்புலியாக கட்டுநாயக்காவில் இறங்க முடியும் என்பதை விட கருங் குரங்காகத்தான் இறங்க முடியும் என அடித்து சத்தியம் செய்கிறேன். 
    தமிழனுக்காக போராடியவர்கள் எல்லாம் பிரபாகரனால் துரோகியாக்கப்பட்டனர். எனவே அந்த வரிசையில் பிரபாகரனும் துரோகிதான். (அதை நீங்களே சந்தேகமாக எழுதி கட்டுரையும் வடித்துள்ளீர்கள்.) சந்தேகமே வேண்டாம் துரோகிதான்.

    • Soorya says:
      16 years ago

      இப்போதைக்கு எலும்புத்துண்டுகள் போதும்.

      • மாயா says:
        16 years ago

        எலும்பில்லாத நாவுகள் எப்படியும் மாறும். எலும்பில்லாத மனிதனால் எழுந்து நிற்க முடியாது. பலமான எலும்பிருந்தால்தான் நிமிர்ந்து நிற்க முடியும். 

        புலிகளின் தாகம் தமிழீழம் என்றார்கள். உள்ள வர விட்டு அடிப்போம் என்றார்கள். உள்ள வந்த பின்னர் தற்கொலை செய்து கொள்வோம் என்றார்கள். வெள்ளைக் கொடியோடு வர இருக்கிறோம் என்றார்கள். ஆயுதங்களை மெளனிக்க வைத்து விட்டோம் என்றார்கள். சரணடைகிறோம் என்றார்கள். 

        இதெல்லாம் எலும்பில்லாத நிலையால்தான்.

        • Soorya says:
          16 years ago

          இவ்வளவையும் அவசர அவசரமாக எழுதிவிட்டு இப்போது சுய விமர்சனம் செய்வது ஒருவகையில் உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நாக்கில் எலும்பில்லை என்பதை நான் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டேன். எனது கவலையெல்லாம் சிலரின் நாக்கில் நரம்புகூட இல்லையே என்பதுதான்.
          எந்த விடயத்தை எடுத்தாலும் அதற்குள் வந்து புலிபுலி என்று பயப்படுத்துகிறவர்களைப்பற்றி எனக்கு எந்த விதமான நல்ல அபிப்பிராயமும் இல்லை. இவர்கள் எழுதும் குப்பையும் கிளறலுக்கும்
          ஒரு எதிர்க்கருத்து எழுதுவதால் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று அடம்பிடிக்கும் விண்ணர்கள் ஒருபோதும் முயல்களுக்கு நாலு காலும் இருக்கும் என்று ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    • Garammasala says:
      16 years ago

      போராட்டம் என்றால் ஒரு வகையானதை மட்டுமே ஏன் மனதில் கொள்ளூகிறிர்கள் மாயா?
      ஒடுக்குமுறை தொடர மட்டும் இல்லை, வலுத்தும் வருகிறது.
      என்ன செய்யச் சொல்லுகிறிர்கள்?
      (சூர்யா சொல்லும் எலும்புத் துண்டுகளும் ஒரு சிலருக்குத்தான். அதற்கும் அடிபிடி நடக்கிறது).

      • மாயா says:
        16 years ago

        இணையத்தில் மட்டும் வலுத்து வருகிறது. இலங்கைக்கு போய் பாருங்கள் ; புலத்தில் காசு சேர்த்த புலிகள் தன் காணியையும் ; வீட்டையும் மீட்க வருகிறார்கள். கொழும்பில் முதலீடு செய்தவற்றை பரிசீலிக்க வருகிறார்கள். இவை என் கண்ணால் கண்டது. நானும் புலத்தில்தான் வாழ்கிறேன். புலிக்கு பணம் சேர்த்த ஒருவர் ; கொழும்பு வெள்ளவத்தையில் வீடு வாங்க வந்திருந்தார். அவர் வாங்கிய வீடு என் நண்பனுடையது. நான் அவருக்கு கெடுதல் செய்யவில்லை. எனக்கு அவர் புலத்தில் கெடுதல் செய்திருந்தார். புலிகளின் ஒரு விழாவுக்கு நான் சென்ற போது  இவரை விடாதீர்கள் என துரத்தினார். அதை நான் மீண்டும் செய்யவில்லை. நான் இலங்கைக்கு போனது வன்னி மக்களுக்கு உதவும் நோக்கில். ஈனச் செயல்கள்  செய்வதை விட பாவப்பட்ட மக்களுக்கு உதவுவதே சரியானது. அவர் தனக்கு வீடு வாங்க வந்தாரே ஒழிய ; வாழ்விழந்த எவருக்காவது உதவ வரவில்லை. இரண்டு நாள் கொழும்பில் இருந்து விட்டு கோயில்களுக்கு போகவென இந்தியா புறப்பட்டார். நான் இலங்கையிலேயே இருந்தேன்.

        எனவே சில விடயங்கள் வேதனையாக இருக்கிறது. 

        • பார்த்திபராசன் says:
          15 years ago

          நீர் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன். இங்கே யேர்மனியில் ஒரு அன்பர் புலிகளுக்காகப் பணம் சேர்த்தவர். சண்டை முடிந்தபின் நாடு கடந்த தேர்தல் வோட்டுச் சேகரிக்கும் மையத்தில் பணிபுரிந்தவர். இப்பொழுது அவசரமாக இலங்கை சென்று சண்டைக்காலத்தில் கொழும்பில்க் கட்டிய வீட்டை ஒரு கோடி ரூபாவிற்கு விற்றுவிட்டு யாழ்ப்பாணம் நல்லுரடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அதுமடடுமல்ல மிகுதிப்பணத்தை இங்கே கொண்டு வந்திருக்கிறார். இப்போ இங்கே வீடுவாங்கத் தேடுகிறார். இப்படித்தான் புலிகளின் தமிழீழம் மலர்ந்து கொண்டு இருக்கிறது.

      • Garammasala says:
        16 years ago

        நானும் இலங்கையில் தான் இருக்கிறேன்.
        சில உதிரிகளை வைத்து முழுச் சமூகத்தையும் மதிப்பிடாதீர்கள்.
        தமிழ் மக்கள் — குறிப்பாகப் போராற் பாதிக்கப் பட்டோர் — இந்த அரசிடம் எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்பதே என் கணிப்பு.

      • mamani says:
        16 years ago

        மகிந்தவிடம் எலும்பு பொறுக்கும் போட்டியில் தற்போது முன்னணி வகிப்பது முன்னாள் புலித்தளபதிகளே!

  101. S.G.Raghavan says:
    16 years ago

    மாயா – “பிரபாகரன் என்ற தனிமனிதன் துரோகியா தியாகியா என்பதல்ல இன்றைய பிரதான கேள்வி. பிரபாகரனின் அரசியல் மக்களுக்கும் போராட்டத்திற்கும் இழைத்த துரோகம் பேசப்பட வேண்டும். அதன் வெளிச்சத்திலிருந்தே புதிய போராட்டம் சரியான நெறியைக் கண்டறிய முடியும்.” மாயாவின் இக்கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன் ஆனால் அதன் பின்னர் குறிப்பிட்ட விடயங்கள் இன்றைய காலத்திற்கு பொருத்தமற்றவை அல்லது தேவையற்ற ஆரோக்கியமில்லாத விவாதத்தை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் அவலத்தை தொடரவே வழிவகுக்கும். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இதனையே நாம் செய்து வந்தோம். அவலத்தில் வாழும் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை கதைக்காது, பொன்னம்பலம், செல்வநாயகம் உமா,பிரபா போன்று தூற்றும் அரசியல் கலாச்சாரத்தை மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பாதீர்கள். இது ஒருவரை ஒருவர் தூற்றும் கைங்கரியத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் ஒருதரப்பாக நின்று ஒரு சமுக மாற்றத்தை ஏற்படுத்த வாருங்கள் என்பதற்க்கான வேண்டுகோள்.
    நான் அறிந்த வரையிலும் எனது கணிப்பீடுகளின் அடிப்படையிலும் மீளவும் வன்முறை சார்ந்த போராட்டம் வெடிக்கக் கூடிய நிலமை தென்படுகின்றது. அதற்குரிய தொடக்கப் புள்ளியை அல்லது பொறியை சிங்கள இனவாத அரசு மிக விரைவில் தொடக்கி வைக்கும் என்பதே எனது கணிப்பு. இது நாடு கடந்த அரசு, அல்லது மகிந்த பொன்சேகா பிணக்கு அல்லது போர்குற்றம் குறித்த நெருக்குவாரம் அல்லது சீன இந்திய முரண்பாடுகளின் பின்விளைவுகளின் ஊடாக இவை தோற்றம் பெறக்கூடும். எனவே போராடவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்ற காரணத்தால் மீளவும் ஒரு போராட்டம் வெடிக்கும் சாத்தியத்தை யார்தானும் வீண்புக்கும் நிராகரிக்க முடியாது. ஆனால் எனது கவலையெல்லாம் அதிகமாக பிளவுற்றிருக்கும் எமது மக்களை ஓன்று படுத்தி எவ்வாறு ஒரு போராட்டத்தை முன்னிறுத்தலாம் என்பதுவும். மீளவும் ஒரு முள்ளிவாய்க்கால் அவலத்தில் எமது மக்கள் சிக்காது போராடுவது என்பதுவுமே ஆகும். விடுதலை புலிகள் ஏன் தோற்றார்கள் என்பதற்கு என்னால் சொல்லக்கூடிய எனது நண்பர் நகைச்சுவையாக கூறிய காரணம் ஒன்றை கூறுகிறேன், ஒருமுறை தலைவர் பிரபாகரன் வெளியில் வந்து தமிழ்செல்வனிடம் கேட்டாரம் என்ன தகட்டு தினேஷ் இண்டைக்கு மழை பெய்யும் போல கிடக்கு என்டு அதற்கு தகட்டு தினெஷான தமிழ்செல்வன் சொன்னாராம் ஓமோம் மழை வரும் எண்டு. தலைவன் சொல்லுக்கு மறு பேய்ச்சு இல்லாத தளபதிகளை தலைவர் எவ்வித கொள்கையுமற்று வளர்த்தததன் விளைவை நாம் முள்ளி வாய்க்காலிலும் அதற்க்கு பின்னரும் காண்கிறோம்.
    கொண்டோடிகளை புலம் பெயர்நாடுகளில் பிரபாகனும் அவரது தொண்டரடி பொடிகளும் அனுமதித்தார்கள் அவர்கள் இன்று மகிந்தவின் யன்கிக்குள் மனிசிமாரோடு குந்தி விட்டார்கள். அவர்கள் கொழும்பில் வீடுவாங்கலம் கொங்கோக்கிலும் வீடு வாங்கலாம் விபச்சாரத்திற்கு!, அவனில் என்ன குற்றம் ? பணத்தை கொடுக்கும் போது அந்த பணம் முறையாக ஈழப் போராட்டத்திர்த்க்கு போகின்றத என்பதை பலமுறை பார்த்தோமா? என்றுமே பினாமிகளாகத்தான் செயற்படுவோம் புலிகளாக அல்ல என புலிகள் செயற்பட்ட போதே நீங்கள் விழித்திருக்க வேண்டும் அல்லவா? தற்போது பார்த்தீர்களா நாடு கடந்த அரசு வெளிப்படையாக தொழிற்பட ( நாடு கடந்த அரசின் பின் புலம் குறித்து நானறியேன். எனினும் மிகச் சரியான ஒரு அரசியல் நகர்வு, அதன் செல்நெறி என்பது ஒவ்வொரு தமிழ் மக்களின் பங்களிப்புடன் செயற்படவேண்டும்), இல்லை நாம் பினாமிகளாகவே தொளிற்படுவோம் என போட்டி புலிகள் தொடங்கி விட்டார்கள். ஆக மொத்தத்தில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை இன்னும் நாம் பூரணமாக உணராதவரை எமக்கு விமோசனம் இல்லை. அதனை உணரவைக்க இந்த இணையம் உதவி புரியும் என்ற நம்பிக்கையோடு சாதீய, சமுக, பண்பாட்டு, அரசியல், பொருளாதார முறைமகளில் கருவறுக்கப் பட்டிருக்கும் எமது இனத்திற்காக ஒன்றுபட்டு போராடுவோம்.

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      தம்பி ராகவா! இன்னமுமொரு போராட்டமா? வேண்டாமே!! நானும் 25 வருடங்களாகச் சொல்லுறன் ஒருத்தரும் கேக்கிறியல் இல்லையே?! கத்தியைத் தீட்டாதையுங்கோ. புத்தியைத் தீட்டுங்கோ. போராடி வெல்ல யாழ்ப்பாணத்துத் தமிழனுக்கு ஏலாது. யாழ்ப்பாணத் தமிழன்ரை வாழ்க்கை முறை வேறை. அதுக்கு கிழக்குத் தமிழன்தான் சரி. யாழ்ப்பாணத்தமிழனாலை முடியும் ஒன்று. கிழக்குத்தமிழன் சத்திரியன் என்றால் வடக்குத் தமிழன் சாணக்யன். போராட்டம் கொடி பிடிக்கிறது எல்லாம் வெத்து வேட்டுகள் செய்யிறது. சாணக்யனும் சத்திரியனும் சேர்ந்து தமிழர் பிரதேசத்தைப் புணரமைப்ச்செய்யுங்கள்.. போராடி வெல்ல முடியாதனைச் சதிராடிச் சாய்க்கனும் என்று பழசுகள் சொல்லக் கேட்டிருக்கிறன். தமிழர்களின் கல்வியையும் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்புங்கள் அப்பொழுது அந்த இளைய தலைமுறை ரத்தம் சிந்தாது அறிவால் பொருளாதாரத்தை மேம்படுத்தி அன்பால் ஒருங்கினைந்து அழகாய் வாழ்வார்கள்.

      • THAMILMARAN says:
        15 years ago

        கேணல் ரமேஸ் விசாரண செய்யப்படுகையில் பொய் சொல்லாதே என்றூ சொல்லப்படுவது கேட்டதும் கோபப்படுவது தெரிகிறது அதே நேரம் அவர் மிரட்டப்படுவதையும் உணர முடிகிறது.எச்சரிக்கையுடன் காட்சி தருகிறார்.வசமாக மாட்டப்பட்ட நிலையை காட்சி வெளீப்படுத்துகிறது.இதே பதட்டம் சூசையின் மனைவி பிடிபட்டதும் கூடக் காணப்பட்டது.இப்போது சூசையின் மனைவி எங் கே?

        • பார்த்திபராசன் says:
          15 years ago

          அது தெரியல்லை. ஆனாலும் பாப்பா என்ற புலி வீரன் இரானுவ சீருடையில் இரானுவத்தினருடன்  வவுனியா நகரப்பகுதியில் உலாவி வருவதாக செய்தி ஒன்று எனக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று வந்த ஒருவர் (மாத்தயாவின் பால்ய நன்பர்) தான் நேரில்க் கண்டதாகக் கூறினார்.

          • Ananth says:
            15 years ago

            நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம்.பாப்பா யாழில் நின்றதையும் பலரும் கண்டுள்ளனர்.பாப்பா பலருக்கு துரோகிப்பட்டம் கொடுத்ததை பலரும் அறிவர்

          • mamani says:
            15 years ago

            பாப்பா கொழும்பில் மட்டுமல்ல அண்மையில் திருச்சி சென்று அங்கும் 11 பேரை கைது செய்ய உதவியிருக்கிறார். அதில் ஒருவர் எனது பள்ளி தோழனின் தம்பி.

  102. Mahendra says:
    16 years ago

    இது பிரபாகரன் தியாகியா, துரோகியா என ஆராயப்படும் இடுகையைக் கொண்டது. தூற்றுபவர்கள் பிரபாகரனை மட்டுமே தூற்றவேண்டும். ஈனச் செயல்கள் பாவச்செயல்கள் யார்செய்தாலும் அது பிரபாகரனை மட்டுமே சேரவேண்டும். கிடைத்த பூமாலையை பிய்த்தெறிந்த கூட்டமல்லவா. எவ்வளவு அந்த தலைவனை தூற்றிக் கருத்தை பதிக்கிறீர்களோ அவ்வளவு நிம்மதியுடன் நிதியும் உங்களுக்கு கிடைக்கிறதோ யார்கண்டது. பிரபாகரனை அழித்தாகிவிட்டது அத்துடன் புலியும் அழிந்தது. இப்போது இருப்பவர்கள் எல்லோருமே தமிழர்கள், தமிழர்கள், தமிழர்கள், நாங்கள் ஒன்றுபட்டு தலை இல்லாமலே போராடுவோம் வாருங்கள்.

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      மற்றவர்களை ஒன்றுபடுங்கள் என்று சொல்லும் யாருமே நீங்கள் அவர்களுடன் ஒன்றுபடுகிறீர்கள் இல்லையே!

      • Soorya says:
        15 years ago

        எவர்களுடன் ஒன்றுபடுவது? கருணா, டக்லசு கூட்டத்தோடா? மீசையில் மண், தட்டு!

  103. S.G.Raghavan says:
    16 years ago

    Mahendra – “நாடுகடந்த தமிழீழ அரசு இன்று நம்பிக்கை தருகிறது. அதற்குள்ளும் நிறையவே காக்கைவன்னிய தமிழர்கள் நுளைந்துள்ளனர். அவர்களை இனம்கண்டு ஒதுக்கி, அந்த அரசு செயல்பட அனைவரும் கைகொடுப்போம். வெற்றிகிடைத்தால் உலகில் நாம் தமிழர்கள்.. தோற்றால் தொடர்ந்தும் அடிமைகளே…..”

    Garammasala – “நாடுகடந்த தமிழீழ அரசு நம்பிக்கை தருகிறது” என்கிறீர்கள்.எனின், உங்கள் நம்பிக்கை எருதின் விரைகள் கீழே விழும் என்ற அசையாத நம்பிக்கையுடன் எருதை எங்கும் தொடர்ந்து சென்று களைத்து விழுந்த நரியின் நம்பிக்கையை விட வலியதாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.”

    போங்கள் …………………. நல்ல நகைச்சுவைதான் ……. அப்போ தமிழர்களின் நிலைமை!? நரியின் விரை எப்போ விழும் என அலையும் புலுட்டை புலியின் நிலைமையா ? …….. புடுங்கி எடுத்திடலாமே!
    குரங்கிட்ட ஆத்திரத்திற்கு மூத்திரம் கேட்டால் கொட்டையை கொப்பிலை கொப்பிலை தேய்க்குமாம். அப்ப நாம அவசரத்திற்கும் உதவ மாட்டம் (நாடு கடந்த அரசு) மூத்திரத்தையும் கொடுக்க மாட்டம் (எதிர்ப்பாளர்கள்) கொட்டையை கொப்பிலை கொப்பிலை தேய்ப்பம் (வீண் விவாதம்/உருப்படியான வேறு தீர்வு இல்லை)

  104. rajamano says:
    16 years ago

    கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களைக் கொலைசெய்யக் காரணமாக இருந்த பிரபாகரனை இன்னும் துரோகி என்று சொல்லத் துணியாத நீங்கள் எல்லாம் பச்சோந்திகள் !

    • Soorya says:
      16 years ago

      பிரபாகரன் காரணம் சரி, அப்படியென்றால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களைக் கொலைசெய்தது யாருங்க?

      • THAMILMARAN says:
        16 years ago

        வீடுகள் தோறூம் ஆயுதம் தாங்கியோர் வந்தனர், எல்லோரும் இப்ப இயக்கத்தில் சேரவோணூம் எண்டனர் அவர்கள் போனதும் மக்கள் வேடுவர் என்றனர்.

  105. Mahendra says:
    16 years ago

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்……..

  106. mamani says:
    15 years ago

    பிரபாகரன்  இலங்கை  அரசிடம் சரணடைந்திருந்தால்   அவர்   தியாகியா?

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      இது என்ன கேள்வி? சரணடைந்த பின்னர் தானே அனைத்தும் நடந்தேறியுள்ளது. சரத்திற்கும் மகிந்தாவுக்கும் இடையில் உள்ள பிணக்கிற்கு முக்கிய காரணமே அதுதானே!!

      • annian says:
        15 years ago

        what a great thinking

  107. Habeeb says:
    15 years ago

    Can anyone tell me who is this hero birabakaran and why did he killed rajiv gandhi.

    • sishu says:
      15 years ago

      can anyone tell me who is this Rajiv Gandhi and why did he killed loads and loads of innocent people in Bhopal, Sri Lankan etc….

  108. Kalki says:
    15 years ago

    அதி மேதாவிகளே!
    இன்னும் இப்படி கட்டுரைகள் வரும்…. கருத்துக்கள் எல்லாவற்றையும கக்கி விடாதீர்கள்… மட்டுப்படுத்தப்பட்ட புத்திசாலித்தனம்… இருப்பதால் கவனம்…

  109. karnan says:
    15 years ago

    ஒரு சில யாழ்ப்பாண கிறுக்கர்களின் பிரதேசவாத சிந்தனைகளிற்க்கு ஒட்டு மொத்த யாழ் மக்களையும் குறை சொல்வது பொருத்தமாகாது . பிரபாகரன் ஒரு சுயனலவாதி , பணத்தாசை பிடிதவர் என்றால் விடுதலை புலிகள் இயக்கம் பெரு வளற்சி கண்டிருக்காது , ஈழப்போராட்டதின் தற்போதய பாரிய பின்னடைவிற்க்கு பிரபாகரனின் அரசியலும் , அவரின் ஆயுத போராட்டதின் மேல் உள்ளநம்பிக்கையும் மட்டுமே காரணம் அல்ல என்ப்தே என் கருத்து . தமிழ் மக்களின் சுயனலம் , பணம் / பதவி ஆகியவற்றிற்க்கு இலகுவில் விலை போகும் தன்மை இவைகளையும் காரணமாக சொல்லலாம் . தோல்விக்கு காரணம் பிரபாகரன் தான் என்றால் , அவர் இன்று “இல்லை” என்ற ஒரு சூழலில் எவராவது தமிழர்களின் உரிமை போராட்டதை தலைமை தாங்கிநாடாத்த தயாரா? முடியாது என்பதே யதார்த்தமான உண்மை . இணயத்தில் விமர்சிப்பார்கள் ,வீர வசனங்கள் பேசுவார்கள் , ராஜதந்திர ரீதியாக ஜனனாயக முறையில் போராட்டத்தை தொடருவோம் என்பார்கள் ,இவர்கள் உருப்படியாக சாதிக்க போவது எதுவும் இல்லை, இவர்கள் சொல்லும் இந்த சாக்குபோக்குகள் எல்லாவற்றிற்க்கும் காரண்ம் ஆயுதம் தாங்கி போராட இவர்கல் தயாரில்லை கார்ணம் உயிர்ப்பயம் ,சுயனலம்.முள்ளிவாய்க்கால் அழிவை திரும்பி பார்க்காத உலகம் இவர்களின் உப்பு சப்பற்ற ராஜதந்திரத்தை எங்கே திரும்பிபார்க்க போகிறது?விரும்பியோ விரும்பாமலோ ஈழ விடுதலை வன்முறையால் தான் கிடைக்கும் , அது கிடைப்பதும் , கிடைக்காமல் போவதும் ஈழம் வாழ் தமிழர்களின் விடுதலை விருப்பில் தான் தங்கி உள்ளது

    • chandran.raja says:
      15 years ago

      இங்கு என்னத்தை சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை. தமிழ்மக்களின் வாழ்வை சிதறித்தவர்கள் தமிழ்மக்களின் அரசியல் தலைமைகள் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்திட முடியுமா?

      தயவு

      செய்து அதற்கு விளக்கம் அளியுங்கள். அது தமிழ்மக்களின் தொண்டாகட்டும்.

  110. Thamilmaran says:
    15 years ago

    Only person think clearly is Chanthiran rajah rest of us rubbishing our comment  this how he thinks because as you know he clever than he think he is. 

  111. M.Sivananthan says:
    15 years ago

    பிரபாகரன் ஒரு தேசத்துரோகி மாத்திரமல்ல பல தமிழரின் உயிர்களையும் உறின்சிய அட்டை. பெரும்பான்மை மத்தியதர மக்களைக் கொண்டநாட்டில் ஆயுதம் வாங்க எவன் பணம் கொடுப்பான்?
    அல்ல்து இயக்கத்துகுப் போனவன் எவனாவது பணத்துடன் சென்று “தலைவா” சிங்களவனைக் கொல்லு என்று கேட்டானா? பணத்தின் மூலத்தைப் பார்க்கும் பொழுது அமெரிக்காவில் அல்லது இங்கிலாந்தில்தான் கதை முடிகிறது. கத்தோலிக்க பாதிரிகளின் “கட்டிபிடித்த” உறவு அதனையே நிரூபிக்கிறது. பாதிரிகளுக்கு ஏன் ஈழம்? அப்படியாயின் சிங்களப் பாதிரிகளும் ஈழத்துக்கு ஆதரவா? வத்திக்கானிலுள்ளநாசி போப் எந்த தமிழ் பாதிரியயும் விலக்காதது ஏன்? பாதிரிகள்தான் அந்த “வெளினாட்டு” கூலிப்படை. பிரபாகரன் போன்ற பக்கா கிறிமினலை காசுக்காக விலைக்கு வாங்கியவர்களும் அதே பாதிரிகளென்பதனை உணர்வதுநல்லது..

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      எந்த நாட்டில் இருந்து இதை எழுதினீர்களோ தெரியவில்லை. யேர்மனியில் இந்த விடயத்தைதமிழர்கள் மத்தியில் சொன்ன ஒருவர் படுறபாட்டைச் சொல்ல முடியாது. நன்றாகவே பழிவாங்கப்படுகிறார்.

  112. Soorya says:
    15 years ago

    சபாஷ்! இனியொரு இணையத்தில் தடக்கி விழுந்த பின்னுட்ட மன்னன் சாதனை படைக்கிறார், கண்டதையும் திண்டு கக்குவது எப்படி என்று.

  113. Pingback: Indli.com
  114. அரிச்சந்திரன் says:
    13 years ago

    இங்கு காணப்படும் அநேக பின்னூட்டங்களையும் காட்டு உரைகளையும் பார்க்கின்ற போது காட்டு உரையாளர் உட்பட எங்கள் அனைவருக்கும் இன்று மிக மிக முக்கியமாக தேவைப்படுவது என்னவென்றால் பல மனநோய் வைத்தியசாலைகளும் பல மனநோய் வைத்தியர்களுமே.

  115. ஓணான் says:
    13 years ago

    இங்கே பேசப்படும் கடவுள் எதையும் படைக்கவும்மில்லை எவரையும் காக்கவும்மில்லை இடையில் செத்த கடவுள்களும் இதைப்போல்தான்… நாம் கச்சை கட்டுவதற்கு முன்பே கடவுள்களைச் செய்வதற்கான அச்சை கண்டுபிடித்தவர்கள். ஆனால் இன்று கடவுள்கள் இல்லை அந்த பழைய அச்சு மட்டும் இன்னும் எம் கைகளில் இருக்கிறது

  116. nanthan says:
    13 years ago

    நீங்கள் எல்லோரும் வெளியில் இருந்து கதைக்கிறீர்கள் என்பது உள்கள் கதைகளில் தெரிகிறது
    எரிகிற வீட்டில் விறகு பிடுங்க பார்க்கிறீர்கள் கதை செல்வதை விட்டுவிட்டு பாதிக்கபட்டு (உளääஉடல் நீதியாக) பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உருப்படிய செய்யப்பாருங்கள் உங்கள் பழைய கதை பேசி அதில் ஆனந்தம் காணபதை விட முப்பதுவருடம் செய்த பிளையை திருத்தப் பருங்கள் ஒரு பிழையில் இருந்து என்னும் ஒரு பிழையை செய்யாதீர்கள் பிழை எங்கு எப்படி நடந்தது என்று அதில் இருந்து அதை திருத்தி அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லுங்கள் ஏ.கோ 47 கையில் இருந்தால் எல்லேரையும் மேய்கலாம் என்னும் தமிழ்த் தேசியக் கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு எதாவது மக்கள் வெகுஜன போரட்ட வழிமுறையை கைக்கொள்ளுங்கள் வீண் கதை தேவையில்லை.

    • சின்ராசு says:
      13 years ago

      வேகுஜனப்போராட்டம் எண்டுதொடங்ககித்தானே கோல்பேசுல ஓதவாங்கி மறியல்ல இருந்தவ மறந்திரிசிபோல

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...