அரசியல் - சமுகம்
சிங்கள பௌத்த “குற்றவுணர்வுடன்” வாழ்வதை வரையறுக்கும் தருணங்கள் : குசால் பெரேரா»6 வாசகர் கருத்துக்கள் »
‘’இந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிர்மூலம் செய்யப்படக் கூடாது என்று தெற்கு, குறிப்பாக இந்த சிங்கள பௌத்தம் நினைத்திருந்தால், இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு அது நடந்திருக்காது…அவர்களால், இவையெல்லாம் முடியுமாக இருந்தால், அந்த முட்கம்பிகளுக்கு அப்பால் இருக்கின்ற கனத்த இதயங்களின் வேதனையின் மானுட தர்க்கம் இவர்களுக்கு புரியும்…மனிக் பார்மில் பார்க்கின்ற அரைகுறை நிரந்தர தங்குமிடங்களெல்லாம், இந்த இடம்பெயர்ந்தவர்கள் விரைவில் மீள்குடியேற்றப் படமாட்டார்கள் என்ற அர்த்தத்தையே தரலாம்.
சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.
என்னை ஒரு மார்க்சியவாதியாக கட்சி ஒருபோதும் நம்பியதில்லை. நான் ஒரு கம்யூனிடும் அல்ல மார்க்சியவாதியும் அல்ல என்றுதான் அவர்கள் எப்போதுமே சொல்லி வந்தார்கள்.பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன், அவர்கள் சரியாகத்தான் சொன்னார்கள்;. நான்தான் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். பாரம்பரியமான அர்த்தத்தின்படி ஒரு மார்க்சியவாதியாக நான் எப்போதும் இருந்ததில்லை
இலங்கைப் பிரச்சினை பற்றி அமெரிக்க மனித உரிமைவாதியும் மொழியியலாளருமான நோம் சாம்ஸ்க்கி ஒரு நேர்முகம் கொடுத்திருந்தார். முன்னாள் ‘லங்கா கார்டியன்’ பத்திரிக்கை ஆசிரியரும், இன்னாள் மகிந்த ராஜபக்சே அரசினது சித்தாந்தியும் ஆன தாயன் ஜயதிலகே அந்த நேர்முகத்தின் பின்னிருந்தார். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயல்பாட்டுக்கு ..
“இந்தியாவின் இனவெறிக்கு நானே சாட்சி, வடகிழக்கில் இருந்து ஒருவர் தென் இந்தியாவுக்குச் சென்றால் அவரை நேபாளியா என்று கேட்கிறார்கள். டில்லியிலோ வடகிழக்கு என்றொரு பகுதி இந்தியாவில் இருப்பதாகவே அவர்கள் நினைக்கவில்லை. இந்தியாவின் அதிகார பீடங்களில் இருந்து நாங்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்,” …
மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள்…
இலக்கியம்/சினிமா
ஐயே மச் பலுவத – நீங்க எப்ப யாழ்ப்பாணம் போறீங்க?: மருதமூரான்»3 வாசகர் கருத்துக்கள் »
‘ஐயே மச் பலுவத (அண்ணா match பாத்தீங்களா)’ கல்கிசையில் என் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் கடையில் என் தலைக்கு வேலை பார்த்துக் கொண்டு இரோஸ் கேட்டான். நான், ‘ஒவ் பலுவா(ஓம் பார்த்தேன்)’ என்றேன். சகோதர இனத்தைச் சேர்ந்த அவன் இரத்தினபுரியில் வசிப்பதால் அழகாக தமிழும் பேசுவான். இரத்தினபுரியில் வசிக்கும் தமிழர்களுடன் அவனுக்கு அதிக பழக்கமுள்ளதாக கூறுவான். ஆனாலும், முதலில் தனது தாய்மொழியிலேயே ஆரம்பிப்பான். நானும் சிங்களம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவனுடன் தெரிஞ்ச சிங்களத்திலேயே அதிகம் பேச முயல்வேன்.
நேற்று கேரளத்தின் மலையாள மனோரமா குழுமத்தின் வனித இதழில் மூத்த உதவி ஆசிரியர் ரஞ்சித் அழைத்து லோகிததாஸ் மாரடைப்பால் இறந்து போனதைச் சொன்னார்
. அப்படியா? என்று கேட்டு விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன். ரஞ்சித் என்ன நினைத்தார் என்று தெரிய்வில்லை. நான் எனது பத்திரிகை பணி தொடர்பாக அடூர், எம்.டி.வி, சிபி மலையில், சீனிவாசன் என என்மனதுக்குப் பிடித்தவர்களை பேட்டி எடுக்க அலைந்த காலங்கள் ரஞ்சித்துக்குத் தெரியும்.






குறிப்பாக எமது நண்பர்கள் குழாம் எனப்பட்டடோர் எழுதுகின்ற பேசுகின்ற ஜனநாயகம் மனித உரிமைகள் மாற்றுக்கருத்துக்கள் புதுப்புது வியாக்கியானங்களோடு எம்மை புல்லரிக்க வைத்துவிடுகின்றது. இன்று எங்களால் பேசப்பட்ட, எழுதப்பட்ட ,நடாத்தப்பட்ட இவை அனைத்தும் கேலிக்குரியதாக்கப்பட்டு அதிகார மோகத்திற்காக அனைத்து ஒடுக்குமறையாளர்களினதும் தொங்கு தசைகளாக மாறிவிட்டது.
புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான்.