Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விக்னேஸ்வரனும் சுமந்திரனும் : ஒரு தியாகியும் துரோகியும்

இனியொரு... by இனியொரு...
08/16/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

2013 ஆம் ஆண்டு வெலிவேரிய என்ற கிராமத்தில் சிங்கள மக்கள் தமது பிரதேச நீரை அசுத்தப்படுத்திய இரப்பர் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை இராணுவம் 5 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றது. வெலிவேரியாவில் ஆரம்பித்து அரசிற்கு எதிரான போராட்டம் நாடு முழுவது பரவும் அரசியல் சூழல் தோன்றியது.

இலங்கை பேரினவாத அரசு பலமிழந்துவிடும் என்ற நம்பிக்கை ஜனநாயக முற்போக்கு இயங்களுக்கு அரும்புவிட ஆரம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள் முள்ளிவாய்க்காலிலும் தமிழர்களை இப்படித்தான் கொன்றிருப்பார்கள் என்று வெளிப்படையாக ஊடகங்களில் பேசினர். ஆனால் எந்த தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள மக்களின் போராட்டத்திற்கு ஊக்கமளித்து இலங்கை அரசை பலவீனப்படுத்தும் நோக்கில் ஒரு துண்டறிக்கை கூட வெளியிடவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள மக்களை அமைதி காக்குமாறு அழைத்தது. ஐ.நா நவனீதம் பிள்ளை கண்டனம் தெரிவித்தார். மேற்கு நாடுகளின் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கினார் சுமந்திரன். ஐ.நா வில் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளிக்க போராட்டம் நின்று போனது. சுமந்திரன் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மேற்கு ஏகபோக அரசுகளின் உள்ளூர் அடியாளாகவே செயற்படார். சுமந்திரனின் அடியாள் அரசியல் தமிழரசுக் கட்சியின் நீண்டகால அரசியல் என்பதையும் சுமந்திரனின் அரசியல் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரான அரசியல் என்பதையும் இனியொரு பல தடவை கோடிட்டுக் காட்டியுள்ளது.

இதற்காகவெல்லாம் சுமந்திரன் இன்று தாக்கப்படவில்லை. புலம்பெயர் மற்றும் உள்ளூர் லும்பன் அரசியல் கும்பல்களால் சுமந்திரன் மீதான தாக்குதல் அவரின் அரசியல் மீதானதல்ல. அவர்களின் நோக்கம் வேறானது. விக்னேஸ்வரன் போன்ற அடிமை ஒன்றை, தமது வியாபாரத்திற்கு வசதியாக இலங்கையில் தேடிக்கொண்டிருந்த புலம்பெயர் லும்பன் உதிரிக் குழுக்களின் வலைக்குள் சுமந்திரன் சிக்கவில்லை என்பதே சுமந்திரன் துரோகியானதற்கும் விக்கி தியாகியானதற்குமான சுருக்கமான கதை.

சுமந்திரன் மீது இந்த மக்கள் விரோதிகளால் முன்வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் இது வரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. வெறும் அவதூறுகள் மட்டும் தான். புலம்பெயர் மற்றும் உள்ளூர் சந்தர்ப்பவாதக் குழுக்களுக்கு எபோதுமே ஒரு தியாகியும் ஒரு துரோகியும் தேவைப்படுவதுண்டு. இங்கு துரோகி ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்காடி வென்றிருக்கிறார், தியாகி விக்கி போராளிகளுக்கு எதிராக கடுமையான தீர்புக்கள் வழங்கி அரசின் அடியாள் போல செயற்பட்ட காலங்கள் பலரால் சாட்சியாக்கப்பட்டிருக்கின்றன.

சமூகத்தின் எதிரிகளான இக் கும்பல்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்கள், குறுக்கு வழிகளிலான நடவடிக்கைகள், கட்சிக்கு உள்ளேயே சுமந்திரனுக்கு எதிராகத் தூண்டப்படும் அணிகள், புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் பங்காற்றும் கூட்டங்களில் நடத்தப்படும் கோழைத்தனமான வன்முறைகள், அவதூறுகள் என்ற அனைத்தையும் மீறி தேர்தலில் சுமந்திரன் வென்றிருக்கிறார்.

இதனைச் சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் மற்றும் உள்ளூர் எதிரிகள் சசிகலா ரவிராஜ் உடன் இணைந்து திருட்டு வாக்குகளால் தான் சுமந்திரன் வெற்றிபெற்றார் என்ற புதிய புரளியைக் கிளப்பினர். சுமந்திரனின் எதிரிகள் கூட இறுதிவரை காத்திருந்த வாக்கு எண்ணும் மையத்தில் சுமந்திரன் கடைசி நேரத்தில் நுளைந்து வாக்குகளை மாற்றினார் என அவர்கள் மற்றொரு குற்றத்தை முன்வைத்தனர்.
இதன் மறுபக்கத்தில் தியாகியாக உருவமைக்கப்படும் விக்னேஸ்வரன், தமிழ் பாராளுமன்ற அரசியலில் கடைந்தெடுத்த குற்றவாளி.

புலிகளின் பிடிக்குள் இருந்த காரணத்தால் சுந்திரமாக அரசியல் செய்ய முடியவில்லை என 2013 ஆம் ஆண்டு வட மாகண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தனது அரசியலை ஆரம்பித்த விக்கி, முதலமைச்சராகப் பதவேயேற்ற பின்னரும் தனது கருத்தைப் புலம்பெயர் நாடுகளுக்கு பயணம் செய்தபோது உறுதிப்படுத்தினார்.

விக்னேஸ்வரன் புலிகளுக்கு மட்டும் எதிரானவர் அல்ல, முழுப் போராட்டத்தையுமே வன்முறையாகப் பல தடவை உருவகப்படுத்தியிருக்கிறார்.

விக்னேஸ்வரனின் வடமாகண ஆட்சிக்காலத்தில் வடக்கில் நடைபெற்ற சுன்னாகம் மின் நிலையம் தொடர்பான ஊழலும் பேரழிவும் வெளிவந்தது. மலேசிய நிறுவனமான எம்.டி.ரி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் உள்ளூர் கிளையான நொதேர்ண் பவர், இலங்கை அரசின் துணையோடு வடக்கின் மின் வினியோக்கத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்டது. அந்த நிறுவனம் உற்பத்தியின் போது வெளியேறிய தடை செய்யப்பட்ட நச்சு எண்ணை நிலத்தின் கீழே வெட்டப்பட்ட கிணறுகள் ஊடக வெளியேற்றப்பட்டது. அக் கழிவுகள் அண்ணளவாக 5 மைல் சுற்றுவட்டத்தின் நிலக் கீழ் நீரையும் நில வளத்தையும் நாசப்படுத்தியது.

இந்த நிறுவனம் மீதான குற்றங்களை மூடி மறைத்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரனேசனும், போலி நிபுணர் குழுவை நியமித்து நீர் மாசடைந்தமைக்குக் காரணம் மலக் கழிவுகள் என நிறுவ முற்பட்டது.
நிலக் கீழ் சுண்ணாபுப் படுகைகளில் சிக்கிய நச்சு அப்பகுதி மக்களின் உடல் நலத்தை பாதித்ததை முரளி வல்லிபுரனாதன் போன்ற மருத்துவ நிபுணர்கள் நிறுவினர். இது தொடர்பாக பேசுவதற்கு விக்கிக்கு எழுதப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்கள் கிடப்பில் போடப்பட்டன. இது தொடர்பாகப் பேச மறுத்த விக்கியும் ஐங்கரநேசனும் அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

மல்லாகம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைசெய்து நிறுவனத்தின் செயற்பாடுகளால் நீர் மாசடைந்தது எனத் தீர்ப்பு வழங்கிய போதும், விக்கி அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஐங்கரநேசன் முழு மாகணசபையும் இணைந்தே இக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறி இறுதியில் மாகாண சபை கலைக்கப்படும் காலத்தில் ஊழல் குற்றங்களுக்காக இடை நிறுத்தப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான மின் நிலையங்களை சிறிய அளவில் உருவாக்கி நீரை மாசுபடுத்திய பலர் கைது செய்யப்பட்டு பல வருடச் சிறைத்தண்டனை அனுபவித்தனர். யாழ்ப்பாணக் குடா நாட்டின் மூன்றில் ஒரு பகுதிய நாசப்படுத்தத் துணை சென்ற விக்னேஸ்வரன் இன்று புலம்பெயர் நாடுகளிலிருந்தும் அவர்களின் உள்ளூர் அடியாள் கும்பல்களாலும் உருவாக்கப்பட்ட புதிய தேசியவாதி.
இன்று வரை தனது துணையோடு அழிந்து போன பிரதேசத்தை சுத்திகரிக்கவோ அது தொடர்பாகப் பேசவோ மறுக்கும் ஒரு மனிதன் இன்றைய புதிய தியாகி.

துரோகி தியாகி என்ற விம்பத்தை கட்டமைத்து அதனைத் தனி நபர்கள் மீதான தாக்குதலாகவும் வெறுப்பாகவும் உமிழும் கும்பல்கள் விமர்சனம் சுய விமர்சனம் என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில்லை. சுமந்திரனின் வலதுசாரி அரசியல் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதும், விக்னேஸ்வரன் போன்ற விசவேர்கள் மக்கள் முன்னால் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் அவசரத் தேவை.

சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? : அருணன் நிமலேந்திரா, அம்ரித் பெர்னான்டோ

சுன்னாகம் போலி நிபுணர் குழுவைத் தொடர்ந்து இனப் பிரச்சனைக்கும் நிபுணர்குழு :புலம்பெயர் ஏற்றுமதி அமைப்பு அறிவிப்பு

சுன்னாகம் நீர் நஞ்சாக்கப்பட்டது தொடர்பான விவாதத்திலிருந்து 2016 ஆரம்பமானது

சுன்னாகம் தொடர்பான வட மாகாண சபையின் பொய்கள்

சுன்னாகம் அழிவின் சூத்திரதாரிகள் யார்?

சுன்னாகம் அழிவிற்கான ஆதாரங்கள்

சுன்னாகம் குடி நீர் : வட மாகாண முதலமைச்சருக்கும் அழைப்பாணை

சுன்னாகம் : தகிக்கும் தண்ணீர்

சுன்னாகம் நீர் தொடர்பாக விக்னேஸ்வரனைச் சந்திக்க முற்பட்டு தோல்விகண்ட மருத்துவர்கள்

சுன்னாகம் நிலக்கீழ் நீர்: விக்னேஸ்வரன் யாரைப் பாதுகாக்க முயல்கிறார்?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்ட பிரித்தானிய ஏழை மாணவர்கள்: தனியார் கல்லூரிகளுக்கு முன்னுரிமை

திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்ட பிரித்தானிய ஏழை மாணவர்கள்: தனியார் கல்லூரிகளுக்கு முன்னுரிமை

Comments 1

  1. கிறுக்கன் says:
    6 years ago

    கள்ளன்ல எந்த கள்ளன் பெரிய கள்ளன் எண்டு நிறுவுதா இனியொரு?? விக்கியர் தனது தனிப்பட்ட லாபங்களுக்காக சுண்ணாக பிரச்சினையை திசை திருப்பினாரா அல்லது நீர்த்து போக செய்தாரா என்பது தெரியாது ஆனால் அவர் ஒரு செயல் வீரன் இல்லை என்பது உண்மை, நிற்க தமிழர்களுக்கு இப்போ செயல் வீரர்கள் தான் தேவை அந்த ஒளிவட்டம் இன்றைய தேதியில் எந்த தமிழ் அரசியல் வாதிகளின் தலைகளுக்கு பின்னாலும் தெரியவில்லை.

    குறைந்த பட்ச்சம் இந்த அரசியல் தலைமைகள் வடகிழக்கில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் சிறு சிறு பண்ணைகளை உருவாக்கி அந்த மக்களின் அன்றாட வயிற்று பசியை யாவது போக்கலாம் இதற்க்கு எந்த விதமான பெரிய மூலதனங்களும் தேவை இல்லை, தாயகத்தில் பல விளையாட்டு கழகங்கள், சனசமூக நிலையங்கள் இன்னும் அரசுசாரா தொண்டு அமைப்புகள் அச்சல் அச்சல் பல உதவிகளை செய்கிறார்கள் இதை இந்த அரசியல் தலைமைகள் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்க முடியும், இதை கூட செய்ய லாயக்கற்ற சுமந்திரனையும் விக்கியரையும் பற்றி கதைத்து என்னதான் பிரயோசனம்??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...