பிரதான பதிவுகள் | Principle posts

ஜக்கிவாசுதேவின் ஈஷாவை அரசுடமை ஆக்க வேண்டும்- பெ.மணியரசன் கோரிக்கை!

கர்நாடக மாநிலத்தின் ஜக்கி வாசுதேவ் தமிழகத்தில் குடியேறி ஆஸ்ரமம் ஒன்றை கோவை அருகில் அமைத்துக் கொண்டார்.துவக்கத்தில் மரம் நடுதல், இயற்கை வேளாண்மை செய்தல், கிராமிய விளையாட்டுகளை மீட்டெடுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜக்கி வாசுதேவ் திடீரென சிவ வழிபாட்டை...

Read more
பெரியார்  சாலை பெயரைமாற்றிய தமிழக அரசு கருப்பை மை பூசிய பெரியார் தொண்டர்கள்!

தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுக்க பணி செய்த அலுவலகம் அமைந்திருக்கும் சாலையை 1970-பதுகளில் எம்.ஜி.ஆர் அரசு ஈ.வே.ரா பெரியார் சாலை என்று பெயர் மாற்றியது. அந்த சாலையில்தான் தினத் தந்தி அலுவலகமும் உள்ளது. அந்த இடமும் குறைந்த...

Read more
கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்

வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம் பெற வாக்கு கேட்கமுடியாத ஊரும்தான் தமிழகத்தின் யதார்த்தமாக இருக்கிறது.கொடியங்குளத்தில் நடந்த...

Read more
சோனியாகாந்தி மு.க.ஸ்டாலினுக்கு மம்தாபானர்ஜி கடிதம்!

294 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதே பாஜக வெற்றி பெறுவதற்காகத்தான் என்ற விமர்சனம் கடுமையாக முன் வைக்கப்பட்ட நிலையில் 4-ஆம்...

Read more
தமிழக தேர்தல் களத்தில் கேலிப்பொருளாகியுள்ள சீமான்!

எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை...

Read more
குறைவான வாக்குச் சதவிகிதத்துடன் முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல்!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79% சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலில் பதிவானதை விட 2.47% குறைவாக பதிவாகியிருக்கிறது. வாக்குப்பதிவு சதவிகிதம் நள்ளிரவுதான் இறுதியாகும்...

Read more
பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து மரணம்!

பெரியாரின் தொண்டரும் திராவிட இயக்க சிந்தனையாளரும், இடதுசாரி செயற்பாட்டளாரகவும் தன் வாழ்வை கழித்து வந்த வே.ஆனைமுத்து முதுமை காரணமான மறைந்தார். (பிறப்பு: ஜூன் 21, 1925) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர். பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள் மலர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை தொடங்கியவர், இன்றுவரை ‘சிந்தனையாளன்’ இதழை நடத்தி வருகிறார். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள்வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.பெரியாருக்கு நெருக்கமாக இருந்த வே.ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளை தொகுத்துநூலாக்கும் பணியைத் தொடங்கினார். ‘சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து’, ‘தீண்டாமை நால்வருஎம்.ணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை விரிவாக்கம் செய்து சமீபத்தில் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பெரியார் மறைவுக்குப் பிறகு 1976-ல் ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1988-ல் இந்த அமைப்பை ‘மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று மாற்றி இன்றுவரை அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தோடு நிற்காமல் பெரியாரிய கருத்துகளைப் பரப்ப நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்துவந்தார். தமிழகத்தைப் போல வடமாநிலங்களிலும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங்,கன்சிராம் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தினார். பிஹாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது, மண்டல் கமிஷன் உருவாக்கம், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது, வட மாநிலங்களில் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தியது என்று வே.ஆனைமுத்துவின் சாதனைகளை பெரியாரிய சிந்தனையாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

Read more
சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் அதிமுக பிரமுகருமான சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்து விடுதலையான சசிகலா கடந்த 30 ஆண்டுகளாக போய்ஸ் இல்லத்தில்தான் வசித்து...

Read more
Page 65 of 305 1 64 65 66 305