2 நாள் அரசுமுறை பயணமாக மணிப்பூர் சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தங்கியிருந்த ஆளுநர் மாளிகை அருகே நடந்த குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிபா பாட்டீன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணியினர் 40 மணி நேர பந்த் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் நேற்றிரவு தங்கியுள்ளார். நள்ளிரவில் ஆளுநர் மாளிகை அருகே தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தங்கியிருந்த ஆளுநர் மாளிகை அருகே நடந்த குண்டு வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







