இனப்படுகொலை நிகழ்த்துவதில் அமரிக்கா, ஐரோப்பா,சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ராஜபக்சவிற்கு ஆயுதங்கள், ஆலோசனை, மக்கள் கருத்தைத் திசை திருப்புதல் போன்ற அனைத்து விடயங்களிலும் ஆதரவளித்தன. இனப்படுகொலைக்குப் பின்னர் உலக முகாம்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்ச தனது குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டார்.
இனப்படுகொலைக்கு ஆதரவளித்த ஏகபோக அரசுகளுக்கு நாட்டின் இறையாண்மையைப் பகிர்ந்தளித்த ராஜபக்ச இன்று ஆதிக்கப்ப் போட்டியில் சிக்குண்டுள்ளார். ஒரு புறத்தில் சீனாவும் மறுபுறத்தில் அமரிக்க-இந்தியக் கூட்டும் ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்குகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஊடாக ராஜபக்சவை அகற்றி இன்னொரு பேரினவாதியை அதிகாரத்தில் அமர்த்த அமரிக்க சார்பு அணி முயல்வதாக ராஜபக்ச அச்சமடைந்துள்ளார்.
சில நாட்களின் முன்னர் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றத்திலேயே நடத்த வாய்ப்புகள் காணப்படுவதாக ராஜபக்சவின் சட்ட ஆலோசகர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். ஐ.நா இன் மேற்பார்வையில் இவ்வாறான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறியுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து ஷிராணி பண்டாரநாயக்க போன்ற நேர்மையான நீதிபதிகளை அதிகாரத்தில் வைத்திருந்தால் ஆபத்து ஏற்படும் என ராஜபக்ச குடும்பம் முடிவிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை 05.11.2012 ராஜபக்ச தனது ஆதரவாளர் குழாமுடன் ஷிராணிக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர். வறிய குடும்பம் ஒன்றிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியான ஷிராணி, ராஜபக்சவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடந்து போராடுவேன் என்று அறிவித்துள்ளார்.








சிறீலங்கா நாட்டின் நீதிமன்றங்களில் நேர்மையான நீதிபதிகள் அதிகாரத்தில் இருந்தாலும், தமிழர்தரப்பு நியாயங்களை அவர்கள் ஓய்வு பெற்றபின்னரே கூறுவார்கள். கூறவும்முடியும். அதுதான் மரபு.
That is a good one, Mahendra. Very true too. Many have committed suicide because of Sarath N Silva. In 1958 it was just a personal quarrel at Kalkudah that triggered the riots. Now the whole country is very desensitized. Great name too – Shrani Bandaranaike,
Have you read emergency 58 by Tazri Vittachi ?
Yes, Mustang. I got trapped in Vavuniya for 3 moths. I saw his Padaviya Panzers go along the Horowapotana Road. i am born in December 2950 like Sarath Fonseka. My brother Kumar is born in 1954 like that guy.
Is it 77 or 58 you are talking about ? You were a small kid if it was 58. What were you doing there at that age ?
சிராணி நேர்மையானவராகவும் வறிய குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது உண்மையாக இருப்பினும் அவரது நேர்மை மகிந்தரின் செல்வாக்கினால் இப்பதவிக்கு வந்தார் என்பதே உண்மை. போர்க் குற்ற விசாரணை பற்றி இவர் விசாரணை நடத்தினாலும் இவர் ஒன்றும் மனுநீதிச் சோழனை ஒத்த நீதியாளரும் அல்ல> இலங்கையில் மாசு மறுவற்ற நீதி பரிபாலனம் நடக்கும் தேசமும் அல்ல. இவர் எந்த வழியால் இந்தப் பதவிக்கு வந்தாரோ அதே வழி0யால் வெளியேறுவதுதானே முறை? எனவே எது நடக்கிறதோ அதுவமுஇ நன்றாகவே நடக்கிறது என ஆறுதல் அடைவோம்.
Mano, thank you for the information. Patronage and allegiance are there anywhere. President David Eisenhower said Chief Justice Earl Warren was his biggest mistake.
“இதனைத் தொடர்ந்து ஷிராணி பண்டாரநாயக்க போன்ற நேர்மையான நீதிபதிகளை அதிகாரத்தில் வைத்திருந்தால் ஆபத்து ஏற்படும் என ராஜபக்ச குடும்பம் முடிவிற்கு வந்தது.”
பச்சைப்பொய். ஷிராணி நீதிமன்றத்திற்குள் நீதியரசராக வந்தது அவரது கணவர் தே.சே.வங்கியின் தலைவரானது ஷிராணி பிரதம நீதியரசரானது என எல்லாமே சேர்மையான வழிகளால் அல்ல.
இப்போது நடப்பது இதுதான். கணவரை தே.சே. வங்கியின் தலைவர் பதவியிலிருந்து தள்ளிய பின்பு அவருக்கு அரசுடன் முரண்பாடு உண்டாகிவிட்டது. எனவே ஆளாளுக்குப் பழிவாங்கல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மகிந்த ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள பலரை பதவிகளில் நியமித்தார். இது அவர்களைக் கட்டுப்படுத்த உதவும் என்பது அவரது கணிப்பு. மீறுபவர்களை சட்டப்படி மாட்டிவிடுவது அவரது நடைமுறை.
Is she the one vote against the other two in war crimes?