Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
11/05/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
72
Home பிரதான பதிவுகள் | Principle posts

நோம் சொம்ஸ்கியின்(Noam Chomsky) நூலான Manufactured Consent இல் ஊடகம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஊடகங்களில் கருத்துக்களாகவும் செய்திகளாகவும் வெளிவருகின்றன என்று கூறுகிறார். உலகத்தின் எந்த பிரபல ஊடகதை எடுத்துக்கொண்டாலும் ஏகபோக ஆளும் வர்க்கங்களின் மேலிருந்த கட்டுபாட்டின் உள்ளேயே இயங்கும் நிலை காணபடுகின்றது.

இணையச் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள், விளம்பரங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் என்ற அனைத்தும் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வியாபித்திருக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை முதலில் திட்டமிடும் நுளைவாசலாக ஊடகங்களாகவே அமைகின்றன. குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்தும் விஜை டிவி ஆகட்டும், ரிபெக் விளம்பரம் செய்யும் எக்ஸ் பக்டர் ஆகட்டும் உலகத்தை கேவலமான நுகர்வுக் கலாச்சாரத்தின் இருளுக்குள் அழைத்துச் செல்கிறது.

உப்பின் விலை அதிகரிக்கும் போது மக்கள் வாழ்க்கைச் செலவு குறித்துச் சிந்திக்கிறார்கள் . கோபமடைகிறார்கள் அரசுக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். ஆக, உப்பிலும் அரசியலும் போராட்டமும் உள்ளடங்கியிருக்கிறது. அதன் மதிப்பு, உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், இலாபமடையும் பல்தேசிய முதலாளிகள் என்று இன்னும் ஆயிரம் கோட்பாட்டு விடயங்கள் உப்பின் உள்ளே கூடப் பொதிந்திருக்கின்றது.
இன்று ஊடகங்களில் மக்கள் அரசியல் என்பது வெறுமனே பிரேகிங் நியூஸ் கலாச்சாரமாக மாறிப் போய்விட்டது.

முகநூல் என்று தமிழ் விற்பன்னர்கள் பெருமையாக மொழிபெயர்த்துள்ள பேஸ்புக் இந்த பிரேக்கிங் நியூசின் புதிய வடிவம். மக்களின் சிந்தனையை எப்படி மாற்றியமைப்பது என்ற அரசியலை ஊடகங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளின் முன்னர் சர்வதேசியம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மறைந்திருந்தது உழைக்கும் மக்களின் சர்வதேசியம். இது உலகத் தொழிலாளர் குறித்து கார்ல் மார்க்சின் சிந்தனையிலிருந்து உருவாகி சர்வதேசியம் என்று வளர்ந்து உலக மக்களின் சிந்தனையில் வேரூன்றியிருந்தது. இன்று சர்வதேச சமூகம் என்றால் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசுகளின் கூட்டு என்று எந்தத் தயகமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு ஊடகங்கள் மாற்றியமைத்துவிட்டன.

”ஜனநாயகம்’ என்றால் மேற்கு நாடுகள் சொல்லித் தருகின்ற ஒருவீதமானவர்கள் சுந்ததிரமாக வாழ்வதற்கான அரசியல் முறைமை. ஜனநாயகம் என்ற சொல்லை ஊடகங்கள் கடத்தி வைத்து அது உலகமக்களுக்கான அரசியல் ஆட்சி என்ற சிந்தனையை உருவாக்கிவிட்டது.

சமூக வன்முறை, பாலியல் வக்கிரத்தனம், சமூகங்களிடையேயான வெறுப்புணர்வு போன்றவற்றுடன் பொழுதுபோக்கு வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டால் இன்றைய பல்தேசிய வியாபார ஊடகத்தத்தை வரையறுக்கலாம். இந்த ஊடகங்களின் சிந்தனையை அடுத்த மட்டத்தில் விரிவாக்குவதையே பெருபாலான இணைய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்து முடிக்கின்றன.

இஸ்லாமிய மதம் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் இன்று மறுபடி சுந்ததிரமான விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. எல்லா விவாதங்களும் எப்படி அந்த மதத்தை நவீனமயப்படுத்துவது என்பதிலிருந்தே ஆரம்பித்தன. சில காலங்களின் பின்னர் ஐரோப்பிய இஸ்லாம் ‘புத்திசீவிகளும்’ தாம் இப்போதெல்லாம் நவீனமயமாகிக்கொண்டிருப்பதாகச் சாட்சிகூறினார்கள். இனிமேல் தங்களைத் தவறாகப் பார்க்கக் கூடாது என்றார்கள். இதன் பின்னர் இன்னும் ‘நவீனமயமாகாத’ மத்திய கிழக்கு நாடுகள் மீது கொலைவெறித் தாக்குதல்களை அமரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் கட்டவிழ்த்துவிட்டன.

பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடுவதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்காவின் சுந்திர வியாபார(Free market) ஜனநாயகத்தை உமிழும் ஊடகங்கள், லத்தீன் அமரிக்க அழகி தன்னுடைய காதலனுடன் உறவுகொண்ட காட்சியை காணொளியாக வெளியிட்டு அதுகுறித்த விவாதங்களை முடுக்கிவிட்டன.. அருவருப்பான அந்தப் பாலியல் வக்கிரம் சாதாரண குடும்பங்களில் நாளந்த விவாதமாகியது . அது சமூகத்தின் பொதுப் புத்தியானது. எக்ஸ் பக்டரில் முக்கால் நிர்வாணமாகப் பாடிய பதினைந்து வயதுப் பெண்ணைப் பார்த்து இன்னும் உடைக்குறைப்புச் செய்யவேண்டும் என்று நடுவர் கூறியபோது பத்துவயதுக் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக பார்வையாளர் கூட்டம் கைதட்டியது. திட்டமிட்டு விதைக்கப்படும் இந்த வன்முறைகளுக்குள்ளும், வக்கிரங்களுக்குள்ளும் சமூகம் புதைந்து போயிருக்கிறது.

இதையே இந்தியா போன்ற நாடுகளில் இந்துவாவின் துணையோடு மிகக்கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். . நித்தியானந்தா என்ற பாலியல் சாமியாரின் பாலுறவுக் காட்சிகளை நக்கீரன் இதழ் தனி இறுவெட்டுக்களாக விற்பனை செய்தது.

இவ்வாறான ஒரு அரசியல் கலாச்சாரம் மேற்கில் மட்டும் முற்றுகையிட்டு நிலைகொண்டதல்ல;, வெறும் காட்சி ஊடகங்களோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வறுமையில் மனித சமூகம் மடிந்துகொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க நாடுகளையும் இது மின்னல் வேகத்தில் பற்றிக்கொண்டது. பல்தேசிய நிறுவனங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் செய்தி முகவர் நிறுவனங்கள் வறிய நாடுகளின் உள்ளூர் செய்திகளின் பண்பையும் தீர்மானித்தன. ஏகாதிபத்திய ஊடகப் பொறிமுறையைப் பற்றிக்கொண்டன.

இந்தக் கலாச்சாரம் உருவாக்கப்பட்ட பின்னர் மக்கள் ரசனையை இணையங்கள் உள்வாங்க வேண்டிய தேவை உருவானது . பார்வையாளர்களின் எண்ணிக்கை விளம்பரங்களை ஈர்க்கும் நிலையில் வன்முறைக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் பழகிப்போன வாசகர்களுக்கு ஏற்ப இணையங்களும் தம்மைத் தயார்படுத்தின.
இதையே உலகில் புரட்சிகரமான போராட்ட சூழலில் வாழும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட ஊடகங்களும் உள்வாங்கிக்கொண்டன கிசுகிசுக்கள், சமூக வன்முறை, பாலிய வக்கிரம் ஆகியவற்றின் கலவையாக ஊடகங்கள் மாற்றமடைந்தன.

சமூகத்தின் பொதுவான பிற்போக்குத்தனத்திற்கு தீனி போடுகின்ற-அதனை எதிர்த்துக் குரல்கொடுக்காத சமூக வன்முறை என்பது அவர்களின் விளம்பர வியாபார நலனுக்குத் தேவையானதாகியது. மறுபுறத்தில் பல்தேசிய நிறுவனங்கள் உருவாக்கிய ஊடகக் கலாச்சாரம் இதனோடு இணைந்து கொண்டது. இதுவே ஊடகங்களின் மாதிரி வடிவமானது.

இவற்றை நிராகரித்து புதிய புரட்சிகர ஊடகக் கலாச்சரத்தை நிறுவப் போராடுகின்ற , சமூகத்தின் பொதுப்புத்தியை அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மாற்ற எண்ணுகின்ற ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஏனைய ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அதிகாரவர்க்கம் சார்ந்தவர்களுக்கு எதிரான போராட்டத்தை பல்வேறு தளத்திலும் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் புரட்சிகர அரசியல் தலைமையற்ற சூழலில் அது சாத்தியமானதா என்ற கேள்விகளும் கூடவே எழுந்தன.

இன்று

1. விளம்பரங்களை நம்பி வியாபாரிகளினதும் பல்தேசிய நிறுவனங்களதும் நலன்களின் அடிப்படையில் இயங்கும் ஊடகங்கள்.
2. தன்னார்வ நிறுவவங்களின் பணமுதலீட்டில் இயங்கும் ஊடகங்கள்.
3. பணம்படைத்த மாபியா அரசியல் வலைப்பின்னலுக்குள் இயங்கும் ஊடகங்கள்.

என்பவையே சமூகத்தின்ன் பொதுப் புத்தியைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.

எது எவ்வாறாயினும், செய்திகளையும் அவலங்களையும் முன்வைத்து வியாபாரம் செய்கின்ற ஊடகங்கள் ஈழப் போராட்டத்திலும் புகுந்துகொண்டன. நீண்டகாலமாக புலம் பெயர் இணையங்கள் பின்பற்றிய இந்த மாதிரி ஆனந்தவிகடனுக்கு ஒன்ன்றும் புதியதல்ல. அதன் ஒரு வெளிப்பாடாகவே ஆனந்தவிகடன் என்ற இந்துத்துவ பத்திரிகை முன்னைநாள் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் குறித்து எழுதிய புனைவு.

சோதிடத்தில் ஆரம்பித்து மரணச் சடங்கு வரைக்கும் அகோரமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் புலம் பெயர் ‘புரட்சிகர’ ஊடகங்கள் பாலியல் கலவையாக இன்று வரை கொடுத்த மாதிரியை ஆனந்தவிகடன் ஒருபடி மேலே நகர்த்தியுள்ளது.
சமூகத்தால் நிராகரிக்கப்படும் முன்னைநாள் போராளிகளின் அவலங்களுக்கும் மரணங்களுக்கும் மத்தியில் சாதித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர் கனவான்களே அவலங்களில் பணம் தேடும் ஆனந்தவிகடன்களையும் வளர்த்து அழகுபார்த்தவர்கள். அதன் சிந்தனை வழிமுறையை உள்வாங்கிக் கொண்டவர்கள்.

போராளிகளை முன்வைத்து பாலியல் வக்கிர வியாபாரத்தை நடத்தும் ஆனந்தவிகடன் போன்ற அப்பட்டமான வியாபார ஊடகங்கள் மாற்று அரசியல் ஊடகங்களால் பிரதியிடப்பட வேண்டும். எண்பதுகளில் ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்கங்களும், மக்களும் கண்டது பேரினவாத அரசின் இராணுவ ஒடுக்குமுறையை மட்டும்தான். இன்று இனச்சுத்திகரிப்பாக அது பலமடங்கு வளர்ச்சியடைந்து நாளந்தம் மக்களைச் சூறையாடுகின்றது. ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு அமரிக்க கைப்பொமை ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரத்தான் போகின்றது.

இதற்கு எதிராக மக்கள் தவிர்க்கமுடியாமல் போராட உந்தப்படுகிறார்கள். மக்களின் போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக முன்னேறுவது தவிர்க்கமுடியாத நிகழ்வாக இலங்கை அரச பாசிசம் மாற்றிக்கொண்டிருக்கிறது. போராட முன்னேறும் மக்களை ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று கூறும் புலம்பெயர் தலைமைகள் போராட்டத்தை அழித்தவர்களோடு கூட்டம்போட்டுக் கூத்தாடுகிறது. மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்குகிறது.
ஆந்தவிகடன் போன்ற வியாபாரி ஊடகங்களுக்கு எதிரான மாற்றை இவர்களால் எப்படி முன்வைக்க முடியும்?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐ.நா இல் இலங்கைக்கு இறுதிநேர ஆதரவு வழங்கிய இந்தியா

ஐ.நா இல் இலங்கைக்கு இறுதிநேர ஆதரவு வழங்கிய இந்தியா

Comments 72

  1. ஓணான் says:
    13 years ago

    ஆனந்தமான மலத்தை இனியாவது நாம் நுகராமலும் முகராமலும் இருப்போமாக 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      What are you trying to say?

      • ஓணான் says:
        13 years ago

        அதாவது ஆனந்தவிகடன் என்னும் அறிதலியால் பணத்துக்காக பாய்விரிக்கிறாள் என்கிறேன் 

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          Ananada Vikaten is an established publication.

          • ஓணான் says:
            13 years ago

            பெயருடன் அடைமொழி சேர்ப்பதுபோல் ஆனந்தவிகடனை கையில் வைத்து ஆட்டுவது என்பதும் அலப்பத்தனமான அந்தஸ்த்துமோகம்தான்

  2. thevan says:
    13 years ago

    I wish Kosalan is not only concerning about promoting inioru.and wish KOSALAN would talk about pre conditions of our struggle at this very criticle moment.

    • thevan says:
      13 years ago

      amen

    • thevan says:
      13 years ago

      it is very good effort rom KOSALN, i like this effort, which will lead us to talk about rubbish. well done KOSALAN.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        I write for Inioru.com. Dr. Satchi Srikantha writes for Sagaram.com. Identical qualifications. Colombo and Peradeniya Campuses. Now there 17 university campuses in Sri Lanka – Shri Lanka. Who is this Kosalan?

        • MustangGT says:
          13 years ago

          It is sangam.org . 

  3. நெருஞ்சி says:
    13 years ago

    ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்;இறந்தாலும் ஆயிரம் பொன்.
    அமெரிக்காவும்,ஆனந்த விகடனும் மடடுமல்ல;அகிலமே அப்படித்தான்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Manufactured Consent – Another great from Dr. Noam Chomsky a Professor of Linguistics at the great MIT – Massachussettes Institute of Technology – in USA. I also heard that he Jewish.

  4. Selladurai says:
    13 years ago

    Elam

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Now only I know from TVS Hari in Chennai that the word means Land Under. So, we are close to Australia.

  5. Peri says:
    13 years ago

    really a grt article, & worth reading,,, best wishes…

    rgs

  6. Pingback: Indli.com
  7. veeran says:
    13 years ago

    ஆனந்த விகடனில் வரும் இலங்கை செய்திகள் அதித கற்பனையும் பொய்யும் புனைந்து வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களை திருப்தி செய்வதற்காக வரும் செய்திகளே, ஏனெனில் அவ்ர்களில் பலர் விகடனின்நெட் சந்தாதாரர்கள், எனவே பணத்துக்காக விகடன் ஆடும் விபச்சாரம்,

  8. mahen masil says:
    13 years ago

    சோதியா படையணியில் எந்த தளபதி தரத்திலுள்ள துப்பாக்கி தூக்கியவர்களும் இதுவரை விடுதலை செய்யபடவில்லை.

  9. manithan says:
    13 years ago

    ஆனந்த விகடன் மட்டுமா கமலகாசன் மணிரத்தினம் போன்றவர்களும் ஈழத்தமிழரை வைத்து காசு பார்த்தவர்களே. ஏதோ ஒரு படத்தில் போராடவென ஈழத்தில் இருந்து வந்தவர் டிஸ்கோ பழகுவதாக பாத்திரத்தை அமைத்திருந்தார். அதை நாங்களும் ரசித்தோமே!

  10. manithan says:
    13 years ago

    இதோ புலம்பெயர் “புரட்சி”ஊடகங்களின் செய்திகள்
    1)இந்தி நடிகை பூனம் பாண்டேவின் நிலைகுலைய வைக்கும் கவர்ச்சிப் படங்கள்
    2)மேற்கு வங்கத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெயிட்டான நடிகை
    3)வெள்ளை உடையில் கவர்ச்சியாக தோன்றும் நடிகைகளின் படங்கள் அதிகம் படிக்கப்பட்டவை என்று வேறு போடப்பட்டுள்ளது. அதுவெல்லாம் யாருக்காக?

  11. pidungi says:
    13 years ago

    கோசலனின் இப்பதிவு ஊடகச் சதிராடிகளின் பல பின்னணித் தரவுகளை எதிர்வு கூற முற்படவில்லையாயினும் ஆனந்தவிகடனின் அண்மித்த கால வக்கிரத்தை ஓரளவு காண்பிக்க முயல்கிறது. பெண்போராளிகளைப் பாலியல் தொழிலாளிகளாக்கிவிட வேண்டுமென்பதில் ஊடகவியலாளர்களும் அதிக சிரத்தையோடு இருக்கின்றார்கள் என்பதற்கு ஆனந்தவிகடனின் அண்மித்த இந்நேர்காணல் ஒரு கண்ணாடி. ஒரு தகுதியான வாசிப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மத்தியில் கோபுரமாய் உயர்ந்திருந்த விகடன் தங்களுக்கு ஒவ்வாத ஒரு கருத்தை தருமாயின் போட்டுக் கொழுத்துவோம் என்றெழுகின்றார்கள்.பல பூமி புத்திரர்கள். விகடனின் ஈழத்து மாணவநிருபர்கள் ஒருவருக்கொருவர் சிண்டு முடிந்து பலான செயலகளில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையல்ல.எந்தச் சகதியிலும் எதற்காவும் விழுவோம் என்கின்ற நிருபர்களை எழுத்தாளர்களை, வாசகர்களைத்தானே இங்கு விரிந்து பரந்து கிடக்கின்றார்கள்.இத்தகு வியாபாரிகள் யாரை வேண்டுமானாலும் விற்பார்கள்.

  12. mano says:
    13 years ago

    உண்மைகள் ஆபத்தானவை உயிரையும் பறிக்க வல்லவை. பொய்யில் வாழும் பேர்வழிகளுக்கு தாம் விரும்◌பாத எதுவுமே பொள்கள் அப்பட்டம◌ான  ஆதாரமற்ற அபாண்டங்கள் என மறுக்கும் மனபாவம் இருந்தெ தீரும். ஆனந்த விகடன் பதிவு பொய்யாகவே இருந்தாலும் கூட  இலங்கையில் உள்ள நிலையில் உண்மையான இருக்கும் சாத்தியமே உள்ளது. எத்தனைதான் எவர் துள்ளிக் குதித்தாலும் உண்மை பொய்யாகிவிடாது. கேவலமான பிரச்சார அரசியலை நடத்தி அப்பாவி மக்கள் படும் துயரை அதிகப்படுத்தாதீர்கள். முடிந்தால் அவர்களுக்கான நீதியும் நிவாரணமும் கிடைக்கப் பாதடுபடுங்கள். அதிலாவது உங்கள் மனித நேயம் உயிர் பெறட்டும்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mano, go back to manufactured consent by Noam Chomsky. He is trying to say something about the greatest democracy on the earth ever.

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      Journalistic Prostitution —-இவர்கள் “ஊடாக” விபச்சாரிகள் …..ஊடக விபச்சாரிகள்
      “இனத்தை அழிக்கும் எழுத்து விபச்சாரம்
      செய்வதை விட இவரும் இவர் பெண்டிரும் பாலியல் விபச்சாரம் செய்வது மேல் ”

      இவர்கள் “ஊடாக” விபச்சாரிகள் supply !!!!!!
      ஊடக விபச்சாரிகள் supply !!!!
      பணம் தந்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பம் விளைவிக்க தயார் என
      தலைமை விபச்சாரி டக்லஸ் யாழ்பாணத்தில் தெரிவித்ததாக
      ஊர்ஜிதமற்ற செய்திகள் வெளியாகின்றன

      ஊடக சிப்பாய் எழுத்திலே , இலக்கியம் இருக்கும் ,
      கலை நயம் இருக்கும் , தேசியம் தோன்றி மறையும் ,
      தோல்வி இருக்கும் , சோகம் இருக்கும், வெற்றிகள் எதுவும் இருக்காது ,தீர்வு சொல்லப்படாது .
      வெற்றி கிடைக்கும் என்ற தைரியம் ஊட்டப்படாது.
      இந்த வடிவத்தில் எவன் எழுதுகின்றானோ ,பேசுகின்றானோ
      அவன் தான் நான் சொல்லப் போகும் விபச்சாரி

      முள்ளி வாய்க்கால் அழிவின் பின் ,
      புலம் பெயர் சமூகம் தான் அடுத்த இலக்கு என ,
      வெளிப்படையாக அறிவித்தான் தமிழின எதிரி ,

      அவன் நிச்சயம் அதை செய்கின்றான் என்பது தெரிகின்றது .

      தகவல் போர் நடத்த ஆட்கள் தேவை என அண்மையில் அறிவித்தான் எதிரி .

      அவன் அதை செய்கின்றான் என்பது தெரிகின்றது .

      எமக்குள் நாம் மிக முக்கியமாக கேட்கவேண்டியது ,
      எதிரியின் அந்த ஊடக விபச்சாரிகள் யார் என்பது ?

      அவர்கள் தான் பிரச்சார போரில் எதிரியின் ஏவுகணைகள் .
      முதலில் இலக்கு வைத்து தகர்க்க வேண்டியது அவர்களைத் தான்

      எமக்குள் நாம் தேட வேண்டியது எதிரியின் அந்த ஊடக போர் விபச்சார “தளம்/தளங்கள் ” எது என்பது ?

      இதுவரை அவர்கள் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை .
      ஒரு கணம் மூச்சை நிறுத்தி சித்தித்து பாருங்கள்

      எந்த ஊடகமாவது ஒரு ஊடக விபச்சாரியை அம்பலப்படுத்தி உள்ளதா ?
      ஏன்? ஏன்? ஏன்?, ஏன் அது நடக்கவில்லை. ?

      சும்மா வியாபார போட்டிக்காக ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தல் அர்த்தமற்றது .
      அது நடப்பது தெரியும் அது வியாபார போட்டி .

      தேசிய பாதுகாப்புக்காக அல்ல .

      தேசிய பாதுகாப்புக்காக எவரையும் எவரும் ஊடக சிப்பாயாக அடையாளம் காணவில்லை .

      ஊடக சிப்பாயை அனுப்புகின்றேன் அனுப்புவேன் என எதிரி சொல்லிவிட்டான் .

      பின்னடைவுகளை சந்தித்தித்து , நொந்து போய் பலமற்று இருக்கும் எம்மை எதிரியின் சிப்பாய் எவ்வாறு அணுகுவான் .? சிந்திப்போம்

      * எமக்கு இரங்குவது போல் வருவான் . எதிரி மீது குறை சொல்வதை கச்சிதமாக தவிர்த்து கொள்வான் .

      *எம்மிடையே மீண்டும் ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வான் .
      *வதந்திகளை பரப்பி விடுவான் .

      *மறைந்திருந்து தாக்குவது போல் “ஜனநாயக” கருத்துக்களை மறைந்திருந்தே வெளியிடுவான் .

      *நாங்கள் நடந்து வந்த பாதை பிழை என்று மட்டும் சொல்லி எம்மை மயங்க வைப்பான் .

      *அவனிடம் எமது உரிமை பற்றி கருத்து இருக்காது .

      * நாடு , தேசம் தொடர்பாக உனக்கென எதுவும் இல்லை என பேசுவான் .

      * ஊடக சிப்பாய் எழுத்திலே , இலக்கியம் இருக்கும் , கலை நயம் இருக்கும் , தேசியம் தோன்றி மறையும் , தோல்வி இருக்கும் , சோகம் இருக்கும், வெற்றிகள் எதுவும் இருக்காது , வெற்றி கிடைக்கும் என்ற தைரியம் ஊட்டப்படாது. தீர்வு சொல்லப்படாது .

      சமூகத்தின் பாதையை நிர்ணயிப்பது ஊடகம் தான் .

      வேறு எந்த இலாப நோக்கமும் அற்ற சமூக நோக்கமுள்ள ஊடகங்கள் தேவை
      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் எவன் நிதி வழங்குகின்றனோ அவனுடன் பகைக்காது இருப்பது மட்டும் தான், தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் எவன் நிதி வழங்குகின்றனோ அவனை திருப்தி மட்டும் தான், தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் வாசகர் தொகையை அதிகரிப்பது மட்டும் தான் தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் செய்திகளை முந்திக் கொண்டு பிரசுரிப்பது தான், தேச விடுதலை அல்ல.

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவது தான், தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை பிரசுரிப்பது தான் , தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் பல ஊடகங்களின் முதல் நோக்கம் கவர்ச்சியான செய்திகளை வெளியிடுவதுதான் , தேச விடுதலை அல்ல .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் பணம் ஈட்டுவதுதான் .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் விளம்பரம் தருபவர்களை திருப்பதி படுத்துவது தான் .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் தேசிய செய்திகளை வெளியிடுவது வாசகர்களை அதிகரிக்க மட்டும் தான் .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் நடு நிலை வாதிகள் என கூறி வாசகர் தொகையை அதிகரிப்பது மட்டும் தான் .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் கருத்து சுதந்திரம் எனக் கூறி குழப்பத்தை விளைவிப்பது தான் .

      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் சில செய்திகளை திரித்து வெளியிடுவது தான் .
      நான் குற்றம் சாட்டுகின்றேன், இன்று தேச விடுதலை பேசும் சில ஊடகங்களின் முதல் நோக்கம் நழுவல் போக்கை கடைப்பிடித்து விலாங்கு மீனாக வாழ்வது தான் .

      சமூகத்தின் பாதையை நிர்ணயிப்பது ஊடகம் தான் .

      வேறு எந்த இலாப நோக்கமும் அற்ற சமூக நோக்கமுள்ள ஊடகங்கள் தேவை .

      இந்த எல்லா செயல்பாடுகளும் சிறிலங்கா அரசின் ஊடக சிப்பாய்கள் உட்புக இலகுவான ஓட்டைகள் .

      சில சிப்பாய்கள் ஊடகங்களுக்குள்ளேயே நிலை கொண்டு விட்டார்கள் போலவும் தெரிகின்றது .

      சில ஊடகங்கள் அந்த சிப்பாய்களாலேயே நடத்தப்படுவது போலவும் உள்ளது .

      இவர்கள் இனம் காணப்பட வேண்டியது இன்றைய அவசியத் தேவை .
      அந்தவகையில் பஸ்தியாம் பிள்ளை முதல் ….வேறு பலர் வருவார்கள் .

      இவர்களை ஊடகங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான விடயத்தை நாம் ஆராயமுன் .
      முதலில் “ஊடக சுதந்திரம்” என்பதன் எல்லைகள் பற்றி பார்ப்போம் .
      உலகில் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த படாத ஒன்று என்றால் அது உயிர் வாழும் உரிமை மட்டும் தான் .
      அது தவிர எழுத்து , பேச்சு , கருத்து , நடமாடும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்பதில் கட்டுப்பாடுகள் உண்டு என்பது தான் உண்மை , அது தான் யதார்த்தம் .
      மனித குல பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்காக ,

      உலகில் எல்லா நாடுகளும் சில புத்தகங்களை தடை செய்திருக்கின்றன. ( banning books )
      உலகில் எல்லா நாடுகளும் சில வெளியீடுகளை தடை செய்திருக்கின்றன .( banning publications)
      உலகில் எல்லா நாடுகளும் சில கருத்துக்களை தடை செய்திருக்கின்றன . ( banning certain opinion )
      உலகில் எல்லா நாடுகளும் சில நடமாடும் உரிமைகளை தடை செய்திருக்கின்றன .( banning from certain areas )
      உலகில் எல்லா நாடுகளும் சில கலை நிகழ்ச்சிகளை தடை செய்திருக்கின்றன .( banning certain cultural activities )
      உலகில் எல்லா நாடுகளும் உயிர் வாழ்வதைத் தவிர வேறெதுவும் அனுமதிக்காத சிறைகளை வைத்திருக்கின்றார்கள் .( prisons )
      உலகில் எல்லா நாடுகளும் இணைந்து சில நாடுகளை தடை செய்திருக்கின்றன.( boycotting countries )
      உலகில் எல்லா நாடுகளும் இணைந்து சில தலைவர்களை தடை செய்திருக்கின்றன( banning leaders )
      இப்படியே அடுக்கிச் செல்லலாம் ….

      இவற்றில் பிழைகளும் நடந்திருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை ,
      ஆனால் தடைகள் இருக்கின்றன , நடந்திருக்கின்றது , அந்த தடை நடவடிக்கைகளால் மனித குல மேம்பாடு ஏற்பட்டிருக்கின்றது என்பது தான் இங்கு முக்கியம். குற்றமிழைப்பவர் தாம் செய்வது சரியா என எண்ண வைக்கும் முக்கியமான விடயம் அது . இன்னொருவர் அந்த குற்றத்தை செய்யாதிருக்க வழி செய்யும் விடயம் அது .
      இந்த தடை உத்தரவுகள் ஐரோப்பா , அமெரிக்கா உட்பட ஏராளமான நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன .
      மனித உரிமை அமைப்புக்களில் கோரிக்கையால் தடை செய்யப்பட்ட விடயங்கள் ஏராளம் .
      பல மனித உரிமை அமைப்புக்கள் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் .
      இதற்குரிய முக்கிய காரணங்களில் தேசிய பாதுகாப்பு , சமூக அமைதி , சமூக ஒருமைப்பாடு , மனித உரிமை .
      ஒட்டு மொத்த மனிதகுல மேம்பாட்டுக்காக தனிமனித சுதந்திரங்கள் மட்டுப்படுதப்படுவதில் மனித உரிமை வாதிகள் கூட உடன்படுகின்றார்கள் என்பது மட்டுமல்ல , அதற்காக மிகத் தீவிரமாக செயல்பட்டும் இருக்கின்றார்கள் .
      உதராணமாக ,
      பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரசுரங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன
      பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பிரச்சாரம் தடை செய்யப்பட்டிருக்கின்றது
      பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்
      பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்
      பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அலுவலகங்கள் மூடித் தாளிடப்பட்டிருக்கின்றன .

      இவையெல்லாம் நடந்தது மனித உரிமையின் பேரால் தான் .

      “எனவே மனித உரிமை அல்லது சுதந்திரம்
      என்பது எல்லாவற்றையும் அனுமதிப்பது அல்ல.
      மனித உரிமை அல்லது சுதந்திரம் என்பதன் பேரால்
      தடை செய்யப்படவேண்டிய விடயங்களும் உண்டு” .

      வால்ராயர் கூறிய ” உனது கருத்துடன் நான் உடன்படாவிடாலும் , உன் கருத்து சொல்லும் உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன் ”
      என்ற விடயம் மிக கவனமாக சமூக பொறுப்புடன் அணுக வேண்டிய கருத்து.
      கீழே உள்ள இரு கருத்துக்களையும் பார்ப்போம் ,
      “தமிழர்கள் மனிதரே இல்லை , அவர்களை கொல்வதில் பாவமில்லை “–மகாவம்சம் அத்தியாயம் 25
      ” ஆரியர்கள் மற்ற எல்லா மனிதர்களையும் விட மேலானவர்கள் ” –நாசிகள் , புதிய நாசிகள்

      மேலே உள்ள இரு கருத்துக்களையும் பாதுகாப்பதற்காக வால்டயர் தன் உயிரையும் கொடுக்க முன்வந்திருப்பாரா ?
      என்பதில் இருந்து தான் நாம் , மனித குல பாதுகாப்பும் , கருத்து எழுத்து சுதந்திரமும் என்ற விடயத்தை ஆரம்பிக்க வேண்டும் .

      இஸ்டப்படி கொலைகளை ஒருவன் செய்தால் ,
      அதை ஒருவன் நியாயப்படுத்தி பரப்புரை செய்தால் ,
      அதனை கருத்து எழுத்து சுதந்திரம் என அனுமதிக்கலாம் என நினைப்பவர்கள்
      தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை நான் மனித குல எதிரிகள் என்றுதான் அழைப்பேன் .

      வெறும் ஓடுகாலித்தனமாக “சுதந்திரம் ” என்ற பதம் உள்வாங்கப்படக் கூடாது .

      “ஒருவனது சுதந்திரம் இன்னொருவனை அது பாதிக்காத எல்லைவரை தான்”
      “தனிமனித சுதந்திரம் அவன் சமூகத்தை பாதிக்காத எல்லைவரை தான்”
      “ஒரு தேசத்தின் சுதந்திரம் அடுத்த தேசத்தை பாதிக்காத எல்லைவரை தான்”
      என்பதே மனித குல மேம்பாட்டுக்கு உகந்தது .
      “எல்லைகள அற்ற சுதந்திரம் அடித்து தின்னும் காட்டு மிருக வாழ்வுக்கே வழி செய்யும் .”

      சி.சந்திரமௌலீசன்

      • thevan says:
        13 years ago

        சி.சந்திரமௌலீசன் அண்ணா உங்கள் புலிக்கொண்டையை கழட்டி வைக்க மறந்திட்டீங்கள். இதை கழட்டிய பின் வாங்கோ நல்லாய் முத்திரை குத்துவோம்.

        இப்ப சரி ,அண்ணா கழட்டீட்டார். எல்லோரும் வரிசையாக வந்து உங்கள் நெற்றியை காட்டவும், மௌலி அண்ணா நல்லாய் முத்திரை குத்துவார். next . ok, who is next… அண்ணா happy now?

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          read my comments as a new posting below

      • chandran.raja says:
        13 years ago

        பாலா அண்ணர் வடமராட்சியில் கல்விகற்று இறுதிக்காலத்தில் லண்டனில் தொழில் செய்தவர். அவருடைய கல்வியும் ( புலிகளின் தத்துவார்த்த ஆசியர்: எம்மைப் பொறுத்தவரை அவர் அதை தொழிலாகத்தான் செய்தார். தமிழ்மக்களுக்குரிய சேவையாக அவர் கருதவில்லை.)

        அவரைவிட கொஞ்சம் கூடப் படித்தவர்கள் போல் தெரிகிறது.
        அலுப்பு சலிப்பில்லாமல் நீட்டியே எழுதுகிறீர்கள். எதிலும் ஒரு பொருளைத்தன்னும் காணமுடியவில்லை. இல்லை எனக்கு புரியமறுக்கிறதோ! தெரியவில்லை.

        நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.

        மதிப்புமிக்க தோழர் “பத்மநாபா மக்கள்இல்லாத நிலத்தை நாம் நேசிக்கவில்லை என்றார்”. டக்கிளஸ தேவானந்தா இலங்கையரசுடன் எதையும் நாம் “பேசித்தான் தீர்த்துக் கொள்ளவேண்டும்” என்றார். இவை இரண்டு வார்த்தைகளும் பலபுத்தங்களை படித்து அறிவதிலும் பார்த்து கூடுதல் விளக்கத்தை கொடுத்தது மல்லாமல் பொண்மொழியாகவே இன்றுவரை இருக்கிறது. இவர்கள் தவறுவிடவில்லை என சொல்லமாட்டேன். நிறையவே விட்டிருக்கிறார்கள். முப்பது வருடபுலிகளோடு ஒப்பிடும் போது ஒரு வீதத்தை தன்னும் தாண்டாது இவர்கள் தவறுகள்.

        நுளம்புகள் கொல்லப்படவேண்டியவையே! அண்ணன் நுளம்பு தம்பிநுளம்பு மகன்நுளம்பு என்று அதற்கு உறவு பார்க்க முடியாது. மகன்நுளம்பை தப்பவிட்டால்… மகன்நுளம்பை வைத்தே தொழில் பார்ப்பதற்கு லண்டனிலும் அமெரிக்காவிலும் நிறைத் தமிழர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு உங்களைச் சொல்லலாம் அல்லது சமரவீராவைச் செல்லலாம்.

        திரு.சந்திரமெளலீசன்! எனது கேள்வி இது தான். இனவிடுதலைக்கும் தேவிடுதலைக்கும் என்ன வேறுபாடுகளை காண்கிறீர்கள். தயவு செய்து விளக்குவீர்களா? ஆங்கில எழுத்து தரவு போட்டு புரியவைக்க முற்படாதீர்கள். அது எனக்கு சிரமமானது. நன்றி.

        • விடுதலை விரும்பி says:
          13 years ago

          சந்த்திரன் ராசா என்ற உளவாளிக்கு பதில் சொல்லத் தேவை இல்லை. உரையாடலுக்கு அடிப்படை முன் நிபந்தனை இலங்கை அரசுக்கு எதிராக வேண்டும்.

          • chandran.raja says:
            13 years ago

            யாரோ போட்ட மீயூசிக்கு நீங்கள் ஏன் நடனமாடுகிறீர்கள்?
            உரியவரே வந்து நடனமாடிக் காட்டுவார் நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.

          • chandran.raja says:
            13 years ago

            திரு. விடுதலைவிரும்பி அவர்களே! நானும் விடுதலை விரும்பி. நான் நினைக்கிறேன் நீங்கள் மிகுதி அழிந்தது போக தப்பிப் பிழைத்த இறுதி ஈழத்துதமிழ் மக்களையும் சிறையில் இடவிரும்புகிறீர்கள்.

            2009 மேமாதம் 19-ம் திகதி முன் துரோகிப் பட்டம் அதன் பின் உளவாளிப் பட்டம். வே.பிரபாகரனின் கிறிஸ்துக்கு முன்-பின் காலங்களுக்கு தமிழ்மக்கள் அனுமதி கொடுப்பார்கள் என்று நினைக்கவல்லை.
            லண்டன்தமிழர்கள் என்றால் ஓ.கே. அதுவும் முழுமையாக அல்ல.நல்ல மனிதர் உயிரின் மதிப்பு வாழ்வின் மகத்துவம் தெரிந்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          சந்திரன் ராஜா , உங்கள் கேள்விக்கு பதில் தருவதில் மிகுந்த சிரமம் இருக்கின்றது .

          உங்களை கொஞ்சம் பேசவைத்தால் உங்கள் லெவல் என்ன என்று அறிந்து கொள்ளல்லாம்

          அப்பொழுது பாடத்திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ள நான் தயார் ?

          பொதுவாக கற்பித்தல் முறை அதுதான் . மானவைன் தரம் அறிந்து . அதற்கேற்ப பக்குவமாக சொல்லவேண்டும் .
          வாத்தியாருக்கு பார்க்க தெரியிற ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கூட தெரியாத மாணவனுக்கு கொஞ்சம் கவனமாக சொல்லவேண்டும் இல்லையோ !!!!

          . உங்களை அப்படி சொல்லவில்லை . ஒரு உதரணத்துக்கு சொன்னேன் .  

          சரி, வழுநிலை விவாதம் என்றால் என்ன உங்கள் மொழியில் பத்து வரிகள் சொல்லுங்கள் . 
          நீங்கள் டக்ளசை இப்பொழுது ஆதரிபதாக சொல்லி உள்ளீர்கள் . வழு நிலை விவாதம் இன்றி தர்க்க ரீதியாக பத்து வரிகள் எழுதுங்கள் .

          இந்த கேள்விகளை  ஏன் முன் வைக்கின்றேன் என்றால் , எமது விவாதத்தில் வழுநிலை விவாதம் தவிர்க்க வேண்டும் என்பது முன் நிபந்தனை . நீங்கள் சம்ம்மதமா ??? எழுதுவீர்களா ? என்ன ஓடுறமாதிரி  என்ரை ஞான திருடி திருடி திருடி சொல்லுது .

        • Dr.Kumarakuru Vasanthi says:
          13 years ago

          Mr there is a question pending for you .   They. are accusing you of doing prostitution .which country you are in..?  How much is average income?   How do you mange with Gota   when giving him pleasure?   Please post your answers with pictures LOl

          • Dr.Kumarakuru Vasanthi says:
            13 years ago

            The above mentioned  Mr is Chandran Raja

  13. Aruvan says:
    13 years ago

    அதை விடுங்கள் ஒரு செய்தி வெப்சைட்டை திறந்தால் முதல் செய்தி பிரான்சில் விடுதி ஒன்றில் ஒரு பெண் உடை மாற்றும் காட்சி, அதற்கு தேசிய விளக்கம் வேற. கன்னித் தன்னையை விற்ற பெண்பற்றிய பிரேக்கின் நியூஸ். மேலே, இலை உடுப்பில் அனுஷ்காவை நடிக்கவைக்க இயக்குனர் செல்வராகவன் முயற்சியாம் ! இடையே தேசியத் தலைவர் வந்து போகிறார். இது தான் தமிழ் தேசிய குசும்பு இணையங்கள். புலன் பெயர் அரசியல்.. இதிலே வேற ஆந்தத விகடன் எண்டா என்ன ஆட்டுக்குட்டி விகடன் என்டா என்ன… எல்லாம் ஒன்னு தான்.

  14. Mahendra says:
    13 years ago

    ஆனந்த விகடன் தற்போது ஆனந்தமாக நித்திரை கொள்கிறது. அது பரப்ப நினைத்ததை இப்போது உலகத் தமிழ் மீடியாக்கள் அனைத்தும் விவாதம் என்ற பெயரில், போட்டிபோட்டுப் பரப்பி வருகின்றன. போராளிகளைக் கைதுசெய்தபோது இதனைவிடவும் கேவலமாக, கோத்தபாயன் ஒரு செய்தியை வெளியிட்டான், அதனை எந்த மீடியாக்களும் இதுபோல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. அதனால் அந்தச் செய்தியானது தமிழ்மக்களை உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்க முடியாமல் தோற்றுப்போனது.

  15. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ////////சி.சந்திரமௌலீசன் அண்ணா உங்கள் புலிக்கொண்டையை கழட்டி வைக்க மறந்திட்டீங்கள். இதை கழட்டிய பின் வாங்கோ நல்லாய் முத்திரை குத்துவோம்.
    இப்ப சரி ,அண்ணா கழட்டீட்டார். எல்லோரும் வரிசையாக வந்து உங்கள் நெற்றியை காட்டவும், மௌலி அண்ணா நல்லாய் முத்திரை குத்துவார். next . ok, who is next… அண்ணா happy now?////////

    என் கருத்தில் என்ன பிழை கண்டீர்  ? அதைப் பேசும் . கருத்தை படியும் . யார் எழுதினர் என்று பார்ப்பதை விடுத்தது என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்க முடியாதவர்களுக்கு , பொது அறிவு , நுண் அறிவு , குறைவாகவும் , உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தன்மை அதிகமாகவும் இருக்கும் . அப்படியானவர்களுடன் நான் பொதுவாக விவாதத்துக்கு செல்வதில்லை .  

    எமக்கிடையே ஆன முரண்பாடுகளின் மூல வேரே அது தான் , உமக்காக கீழ உள்ள கட்டுரை சமர்ப்பணம் .
    டிக்சனரியை எடுத்து வைச்சு வாசியும் , களைச்சு நித்திரையாகி விடுவீர் .
    நான் தப்பியிடுவன்  ஹி ஹி 

    be a man with intelligent talk the subject . do not bark . 

    எமக்கிடையே இத்தனை பிளவுகள் ஏன் ?????

    போதுமான IQ -GQ -EQ இன்மையால் பல நல்ல உள்ளங்கள் முரண்பாடுகளின் மூலக் கருவாக மாறி விடுகின்றார்கள் . 

      இந்த தவறுகள் குற்றமனம் (Intention of  Guilt )  உடையதா ? அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் ? என அமைப்புக்கள் சிந்தித்து போதுமான பயிற்சிகள் , விதிகளை மீளாய்வு செய்தல் போன்றவற்றின் ஊடாக நாம் முன்னேற வழி செய்தல் அவசியம் .  

    தவறுகளின் ஊடாக கற்றுக் கொண்டு முன்னே செல்ல முயல வேண்டும் . தவறுகள் தடுக்கு தடங்களா க மாறக் கூடாது .

    எமக்கிடையே இத்தனை பிளவுகள் ஏன் ?????
    I strongly believe that having logical thinking, general knowledge and emotional quotients are key elements in decision making process. 

    As a first step towards the success of our freedom struggle we must endeavor to improve these skills among our front-line actors.  I can confidently say that we have never paid attention to this to date.

    We assume our front line actors are capable and possess these skills embedded in them at birth  and when they fail to achieve desirable results we blame them. 

    I believe this is the main reason why there are many divisions among our organizations and members. I have witnessed these lacunae among the Tamil interest groups, even at the very beginning of our struggle.

     I believe this is what is happening within TGTE now and what happened previously.  Within TGTE, except for a few like Ram and Mr PonBalarajan others seem to be very keen in achieving freedom for the Tamils.

     If you see the video in the link http://www.youtube.com/watch?v=if4h2I5QNSw , in  a TGTE meeting in May 2011 one of the leading member was boasting about having a TGTE office in London with 5000 employees.  

    It is obvious that there is no need for such an office and it is not even practical.  This boasting is the result of the aforementioned short comings in IQ, GQ and EQ.

    I believe that logical thinking (IQ) , general knowledge (GQ) , emotional intelligence (EQ) are  key lacunae among many Tamil activists, particularly the current “leading actors” of our struggle. This includes journalists as well as organizations.

    Improving these skills, at least among our leading actors, is essential for the success of our freedom struggle. If  they/we  remain at the same level of thinking we cannot expect to change the end results.

    We cannot presume our leaders have sufficient capability in the above attributes. Do we have any mechanism to measure these capabilities in our leaders?  I can confidently say “No, we don’t.” 

    It is my belief that we need to have some mechanism to ensure our front line actors are empowered in these areas. To the best of my knowledge none of our organizations took any effort to improve or address these lacunae among our members and supporters. 

    Currently I see difference of opinion within members of TNA/TGTE/GTF etc.

    I believe the main cause of these disagreements is the lack of these three qualities.  Although all activists have the same information (EgMullivaikal events) and have the same goal (Freedom of Tamil Nation) they come to different conclusions and decide on different paths of action because of these lacunae.

    Almost all of our organizations ignore this fact and take it for granted that its members have sufficient standards in the level of logical thinking, general knowledge, and controlling emotions embedded in them at birth .

    I have seen most of our meetings end up in heated arguments more akin to dog fight rather than discussions in the process of decision making. 

    Those who act without sufficient knowledge are accused as saboteurs, spies or other. 

    I believe many of these members are honest and sincere to the freedom struggle. Because of one or more of these lacunas they have disagreements and are subsequently alienated.

    This is causing tremendous negative impact on our freedom struggle.  I believe our organizations and their leaderships should address this issue seriously and immediately. 

    I suggest the following key elements to be a must for someone who wishes to be in the decision making body.
    1. Having confirmed minimum level of logical thinking , general knowledge and emotional quotients . Modern organizations are using these techniques in selecting their front-line actors.
    2. All members should demonstrate they are actively pursuing to improve these skills.
    3. All members must be annually provide evidence to show their standards have not fallen (if not improved) .

    I will give you a good example for my argument. In late 70’s and early 80’s there was an organization (I omit the name). Its leaders read Marxists theoretical books and learned that weakening the state machinery as one of the main tactic of a revolution.

    In Tamil it was written as ” arasuiyanthiraththaithakarththal” . One of the leaders of that organization misconstrued the meaning of it and went on setting fire to buses and trains and smashing post office,telephones etc. 

    He was finally shot by another organisation. I was in the area when he was shot. I actually spoke to the guys who shot him. They explained to me that he was an anti-social element going around setting fire to buses, trains etc .

    They recovered some papers next to the body. All the writings he had in his bag demonstrated that he  genuinely believed in what he was doing and thought it was for the betterment of the people , but had very low level of logical thinking and general knowledge went on committing anti-social actions.

    It is now time to take this matter seriously and devise a plan to address these THREE lacunas among our members.  It is not a political activity,

     BUT it is essential for the success of our political goals. It should initially take the form of internal training programs.  Success of any roadmap for our freedom struggle depends on these capacities of our leading actors.

    Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் 

    நீங்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவராயினும்
     இந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள் 

  16. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    To  The Van , LOL read this too . if you don’t feel sleepy please do come back . I can feed you more LOL.   குழுநிலைவாத முரண் போக்கின் மூலவேர்: ஓர் அடிப்படைத் தேடல் சி.சந்திரமௌலீசன்

    குழுநிலைவாத முரண் 
    போக்கின் மூலவேர்: 
    ஓர் 
    அடிப்படைத் தேடல்-
    சி.சந்திரமௌலீசன்

    போன்குதமிழுக்காக எழுதியது  

    Critical thinking 

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை (Critical Thinking) என்பது அரசியல், சமூக, அறிவியல் விடயங்களில் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? போன்ற கேள்விகளுக்கு விடைதேடி முடிவுகளை எடுக்க உதவும் ஒரு விஞ்ஞான பூர்வமான முறை.
    இந்த சிந்தனை முறை ஒரு கற்கைநெறியாக பிரித்தானிய கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்படுகின்றது. தொழில் நிறுவனங்களிலும் இந்த அணுகுமுறை எதிர்பார்க்கப்படுகின்றது
    இத்துறை எமது மக்கள் மத்தியில் மிக குறைந்த அளவிலேயே அறிமுகமாகியுள்ளது. இதற்கு காரணம் நாம் கற்ற கற்கைகள் “கங்காணிகளை” உருவாக்கும் நோக்கம் கொண்டது. எமது குடும்ப கட்டமைப்பும் இதுவே. அது சிந்தனையை தூண்டும் நோக்கம் கொண்டது அல்ல. நாமும் எவ்வாறு ஒரு கங்காணியாவது என்ற நோக்குடன் தான் வளர்க்கப்பட்டோம், வளர்ந்தோம். தலைமைக் கங்காணி, இடைநிலைக் கங்காணி என்பது தான் பொதுவான மனப் போக்காக உள்ளது. இது இருக்கின்ற சமூக கட்டமைப்புள் வட்டமடிக்கும் போக்கை கொண்டது. சமூக மாற்றத்தை தரவல்ல சமூக அமைப்பு அல்ல.
    ஒழுக்கம் என்ற வடிவில் பெற்றோர் சொல்லை, ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் மூத்த சகோதரம் சொல்வதை, ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் பண்பாடு என்ற வடிவில் ஆசிரியர் சொல்லை – ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் சொந்தம், சாதி, ஊர், நிலைப்பாடுகளை – ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் தலைமை அதிகாரி சொல்வதற்கு கட்டுப்பாடு என்ற வடிவில் – ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் தான் சார்ந்த கட்சியில் தலைமை சொல்வதை கொள்கை என்ற அடிப்படையில் – ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்,
    அதன் பின் மந்திரி, பிரதமர், பாராளுமன்றம் என்ற அடிப்படையில் – ஏன் எதற்கு என சிந்திக்காமலும் ஏற்றும்,
    விடுதலை அணி என்றால் தலைமை என்ற அடிப்படையில்- ஏன் எதற்கு என சிந்திக்காமலும் – ஏற்றும்
    பழக்கப்பட்டு, புடமிடப்பட்டு “பயிற்றப்பட்ட கடிநாய்” போல் செயல்படுகின்றோம்.
    தனக்கு கட்டளை இடுபவன் “பச்சை நிற பொருளை காட்டி சிவப்பு நிறமென சொன்னால், ஓமோம் அது கடும் சிவப்பு போலையும் கிடக்கு” என்று சொல்லி இருப்பை உறுதி செய்து பயிற்றப்பட்ட மூளைகள், “ஏன், எதற்கு, எப்படி என கேட்பவனை தலைமை கங்காணி கண்டிக்க முன் அடியாட்கள் விட்டுவைப்பதில்லை “
    புகழ் பாடும் “அவைப் புலவர்கள்” எம்மை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்ற பின்பும் எம்மிடையே ஏன், எதற்கு, எப்படி என்று கேட்டுக் கொள்ளாத பண்பு தொடர்கின்றது.
    இதனால் கருத்து ரீதியாக ஒத்து வராதவர்களை தனி மனித எதிரிகளாக்குவதே குழு நிலை வாதத்தின் அடிப்படை. ”கருத்து ரீதியாக உடன்படாதவர் மீதான தனி மனித தாக்குதல்கள், தனிமனித விரோத போக்கை – நாம் நிறுத்த வேண்டும்” இது எமது இனம் ஒற்றுமைப்பட்டு, கருத்து ரீதியாக பலம் பெற அவசியம்.
    “கருத்து, பரப்புரை கூட்டங்களுக்கு போயிருக்கின்றோம். இரு வேறு கருத்துக்களுடன் சந்தித்து, மனம் திறந்து பேசி ஒரு உடன்பாட்டுடன் ஒரே கருத்துடன் உண்மையாகவே செயல்பட்ட வடிவத்தை” அண்மைக் காலத்தில் நான் காணவில்லை.
    கடைசியாக அப்படி ஒரு நிலையை நான் பார்த்தது “திருவாளர்கள் ஜி.ஜி, செல்வா, திருச்செல்வம், தொண்டமான்” இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கம் தான்.
    அதன் பின்பும், முன்பும் நடந்த அத்தனையும் பிளவும் -பிரிவும் -பின்னடைவும்தான்.
    பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆக்கிரமிப்புக்குள் வாழும் இனமாக ஈழத் தமிழினம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் ஈழத்தமிழர்களை எவ்வாறு கங்காணிகளாக வைத்திருப்பது என்பதைத் திட்டமிட்டு செய்து வருகின்றார்கள். அனைத்துப் பயிற்சிகளும் அதற்கேற்ப தான் நடத்தப்படுகின்றது. புலம் பெயர் தேச வாழ்க்கை அதில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. ஆனால் புலம் பெயர் தேசத்தில் காணப்படும் ஜனநாயக வெளி எம்மை நாம் மீளாய்வு செய்து சுதந்திர மனிதர்களாக மாற்ற இடம் தரவல்லது. அதற்கு எம்மிடையே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை அவசியம்.
    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை என்பது ஒரு தீர்மானத்தை எவ்வாறு எடுப்பது என்பதை புகட்டும் ஒரு விஞ்ஞரனபூர்வமான முறை. சமூக மாற்றத்தை ஏற்படுத்த புதிய தீர்மானங்களை எடுக்கும் வலிமை தேவை. இருப்பதற்குள் வட்டமடிக்கும் தன்மை அல்ல. அந்த வலிமையை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிந்தனை தரும்.
    பின் வரும் வாக்கியங்களை பாருங்கள், இவற்றை எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனையூடாகப் பார்ப்பது?
    ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் மனித நேயமற்ற கொலைகளை செய்துள்ளன, எனவே எதிர்காலத்தில் எந்த ஆயுதப் போராட்ட அமைப்பு தோன்றினாலும் அதையே செய்யும்.
    ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டுள்ளது எனவே இனி ஒரு போதும் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை.
    ஜனநாயக போராட்டம் தோல்வி கண்டதால் ஆயுதப் போராட்டத்துக்கு சென்றோம், ஆயுதப் போராட்டம் தோல்வி கண்டதால் மீண்டும் ஜனநாயகப் போராட்டத்துக்கு செல்லவேண்டும்.
    சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் எதிர்ப்பு உணர்வு உண்டு ஆனால் மகிந்தா நல்லவர் அவருடன் இணைந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
    தமிழீழ போராட்டம் தோல்வி கண்டுள்ளது எனவே இனி தமிழீழ போராட்டம் சாத்தியமற்றது.
    போராட்ட தலைவர்கள் சர்வதேச சூழ்நிலைகளை புரியாதவர்களாக உள்ளார்கள் எனவே இனி வரும் எல்லா தலைமைகளும் அப்படித்தான் இருக்கும்.
    சர்வதேச நியமம் என்று எதுவும் இல்லை ஆனால் பொது விதிகள் சில உண்டு.
    மேலே உள்ள எல்லாவற்றிலுமே Fallacy என்ற நியாயமற்ற விவாத குறைபாடு (மயக்க வழு அல்லது குதர்க்கம்) உண்டு. அதனால் அந்த தீர்மானங்கள் பிழையானவை. Fallacy இல் 100 மேற்பட்ட வகைகள் உண்டு.
    நியாயமற்ற விவாத குறைபாடுடைய (குதர்க்கமான) கருத்துக்கள் “தெளிவில்லாத” மனிதர்களுக்கு உண்மை போல தோன்ற வல்லவை. இவை உளவியல், நுண் அறிவியல், மன எழுச்சி போன்ற விடயங்களில் பலவீனமுள்ள மக்களை இலகுவில் மயக்க வல்லவை. இதனால் இந்த நியாயமற்ற கருத்தை அடையாளம் காண்பது தொடர்பாக ஒருவன் அறிந்திருப்பது அவசியம். ஒரு கருத்து வலுப்பெற காரணங்கள் ஆதாரமாக சொல்லப்படுகின்றன. உண்மை வெளிக்கொணரப்பட வேண்டுமாயின் கருத்தாடலில் நியாமற்ற விவாத குறைபாடு (மயக்க வழு அல்லது குதர்க்கம்) இடம்பெறுவது தவிர்க்கப்படவேண்டும்.
    ஈழத் தமிழ் அரசியல் வெளியில் உள்ள ஊடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், தீர்மானங்கள், வாசகர் கருத்துக்கள், விவாதங்கள் என எல்லாவற்றிலுமே இந்த ஆதாரமற்ற விவாதம் (Fallacy) தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன. இவை பலவீனமான வாசகனை தம் இஸ்டப்படி “திருநடனம்” ஆடவைக்கும் நோக்கமும் வலுவும் கொண்டவை.
    ஆதாரமற்ற விவாத கருத்தூடாக ஒரு விடயத்தை தமிழ் மக்கள் மத்தியில் புகுத்த முனைவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே விரோதமானது. இப்படி ஆதாரமற்ற விவாதங்களூடாக ஒரு கருத்தை இலாவகமாக செலுத்தும் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் மிக ஆபத்தானவர்கள். அவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப “கரணம்” அடித்து தீங்கிழைக்க வல்லவர்களாக பயிற்றப்பட்டு விடுகின்றார்கள். முன்னர் தமிழீழம் எனப் பேசி தற்போது அது சாத்தியம் இல்லை என பேசுவோரும் எழுதுவோரும் இந்த வகைப்பட்டவர்கள் தான். நல்ல இலக்கிய வசனங்களும், சுவாரசியமாக எழுதும் ஆற்றலும் உண்டு. இதனால் “அரசியல் மாயமான்” விடுவதில் வல்லவர்களாக இவர்கள் உள்ளனர். இந்த அபாயங்களில் இருந்து தமிழினம் மீள வேண்டுமாயின் “ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை” முறை எம்மிடையே பரவ வேண்டும்.
    இவை பற்றி மேலும் செல்ல முன், எல்லோருக்கும் தெரிந்த சில விடயங்கள்.
    தமிழீழ விடுதலை நோக்கிய அமைப்புகளிடையே மோதல்கள் (இயக்க மோதல்), முன்னாள் போராளிகளிடையே விரிசல்கள், அரசியல் கட்சிகளிடையே இழுபறிகள், புலம்பெயர் தேசத்தில் செயற்பாட்டாளர்களிடையே முரண்பாடுகள், குடும்பங்களுக்குள்ளும், நண்பர்களுடனும், சிறு கோவில் நிர்வாகத்துள்ளும், பாடசாலையிலும், அயலவர்களுடனும், ஊடகங்களுக்குள்ளும், அரசியல் கட்சிகளுக்குள்ளும்… என எல்லா இடங்களிலும் எமதினம் தொடர்ந்து முரண்பட்டு பிளவுபட்டுக் கொண்டு போவதற்கு முக்கிய காரணம் என்ன? என்ற வேதனை பலகாலமாக என்னிடம் உண்டு.
    எல்லா மோதல்களும், முரண்பாடுகளும் எதிரியின் வேலையாக இருக்காது. எம்மிடையேயும் ஏதோ குறைபாடு உண்டு. இதனை ஆய்வு செய்து எழுதுமாறு அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் சிலரிடம் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக கேட்டு வந்தேன். பிரபல வரலாற்றுத்துறை நிபுணர் ஒருவரிடமும் கேட்டேன். ஒத்துக் கொண்டவர்கள் எவரும் மீண்டும் அது பற்றி பேசுவாராயில்லை, எழுதுவாராயில்லை. பலரை சந்தித்தேன் எவரும் ஒத்துக்கொண்டு எழுதுவாருமாயில்லை.
    “வந்தோரைக் கண்டிலன் கண்டோர் வந்திலர்” என்ற நிலை தான் தொடர்கின்றது. எனவே புலமைசார் அறிவு எதுவும் இன்றி என் சிறு அறிவுக்கு எட்டிய விடயங்களின் மூலம் இதனை ஆரம்பித்து வைப்பதுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தின் விளைவுதான் இந்த கட்டுரை.
    இனி விடயத்துக்கு வருகின்றேன்.
    ஒரு மனிதன் தீர்மானங்களை எடுக்கும் போது அவனின் பொது அறிவு GQ – நுணறிவு IQ – மன எழுச்சிகள் தொடர்பான (EQ) Emotional Quotient இற்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்கின்றான். உடல் உழைப்புக்கு உடல் ஆரோக்கியம் போன்று கருத்துவாக்கம் – தீர்மானம் போன்ற விடயங்களுக்கு IQ -GQ -EQ என்பன அவசியமாகின்றது. இது பட்டப்படிப்பு தொடர்பான விடயம் அல்ல.
    EQ என்றால் என்ன என்றே ஏராளமானவர்களுக்குத் தெரியாது. எல்லாச் சந்திப்புக்களிலும் emotional quotient எனப்படும் EQ குறைபாடுவெளிப்படுவதை பார்த்திருக்கின்றேன். பலகுழுக்களாக (BTF -GTF -DTF -XYZ-abc என) நாம் பிரிந்து நிற்கEQ-IQ-GQ குறைபாடுகளும்காரணம் என நான் உறுதியாகநம்புகின்றேன். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இனம் நாம், தீர்மானங்களை மேற்கொள்ளும் போதும், அலுவலர்களை நியமிக்கும் விடயத்திலும் EQ-IQ-GQ பற்றியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனையையும் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
    இந்த IQ-GQ-EQ என்ற விடயம் தொடர்பாகவும், இவற்றை இணைந்த “critical thinking” ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை தொடர்பாகவும் அறிமுகம் செய்ய முனைவதே இந்த கட்டுரை. இது எனக்கு அறியாத துறை. இந்த தமிழ் பதம் பொருத்தமானதா என்பது கூட எனக்குத் தெரியவில்லை ஆனால் ஆரம்பித்து வைத்தால் நிபுணர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை.
    தமிழீழ மக்கள் குறிப்பாகவும், தமிழ் மக்கள் பொதுவாகவும் தொடர்ந்து “உள் மோதல்”, “கருத்து மோதல்” என “கூறப்படும்” காரணிகளால் பலவீனம் அடைந்து செல்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான சக்திகள் “திட்டமிட்டோ” “திட்டமிடாமலோ” இந்த நிகழ்வுகளால் பலமடைந்து செல்கின்றார்கள்.
    இதில் எது உண்மையாக இருந்தாலும், தேவையற்ற விவாதம், கருத்து, சர்ச்சைகளை கிளப்பி குழப்பம் விளைவிக்க எதிரி தீவிரமாக உழைக்கின்றான் என்பது மட்டும்தான் மேற்படி ஒலிப்பதிவில் இருந்து வெளிப்படையாகின்றது. அந்த மின் அஞ்சல் உண்மையா பொய்யா என்பதில் நாம் நேரம் கழிக்க கூடாது.
    உதாரணமாக, “கொலைகளை செய்து கிடங்கு வெட்டி புதைத்தார்கள்” என்ற விடயத்தை பேசும்போது “இல்லை இல்லை முன்பே இருந்த கிடங்கில் தான் புதைத்தார்கள்” என விவாதிக்க முனைவது தேவையற்ற விடயம். ஏனெனில் கொலை நிகழ்ந்தது என்பது தான் இங்கு முக்கியம்.
    இதே போல் “புலம் பெயர் தமிழர்களின் செயல்பாடுகள் கூர்மையடையும் நேரத்தில்”, புலம் பெயர் என்ற தமிழ் சொல் சரியானதா, வேறு சொல் தேவையா என ஆராய முனைவது தேவையற்ற விடயம்.
    இப்படியாக,
    மோதல், வாக்குவாதம், சர்ச்சை கிளப்பும் சூழ்நிலைகள் எம்மை பலவீனமாக்க வல்லவை. எனவே முரண்பாடுகளை தவிர்க்கவும், நல்ல முடிவுகளை எடுக்கவும் எமக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிந்தனை அவசியம். இல்லையேல் அர்த்தமற்ற, தேவையற்ற சர்ச்சைகள், மோதல்கள் எம்மை பிரிக்கும் அபாயம் கண்கூடாகவே தெரிகின்றது. இதில் சிலர் தெரிந்து செய்கின்றார்கள். சிலர் தெரியாமல் செய்கின்றார்கள். எனவே நாம் அர்த்தமற்ற, தேவையற்ற, அவசியமற்ற சர்ச்சைகளில் இறங்கவும் கூடாது. அதில் இறங்குவோர் பற்றி அவதானமாகவும் இருக்க வேண்டும்.
    சர்ச்சை கிளப்புவோர் அறிந்து செய்கின்றார்களா? ஆர்வக் கோளாறால் அவசரப்படுகின்றார்களா? என அறிந்து அதற்கேற்ப அவர்களை கையாள வேண்டும்.
    காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என இந்த “துரோகங்களின் ” வரலாற்றை அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதிய கட்டுரைத்தொடரை 90 களின் இறுதியில் படித்த போது, இது ஏன் நடகின்றது என்பதற்கான கேள்வி என்னில் பலதடவை எழுந்தது?
    முள்ளிவாய்க்காலின் பின் அந்த தொடர் கதிர்காமரில் இருந்து மேலும் நீளமாகிக் கொண்டு போகின்றது.
    இந்த பட்டியலை எழுதுவோர் அத்தனை பேரும் இணைந்தாலே ஒரு படை அமைத்து தமிழீழம் அடைந்துவிடலாம் என எண்ணுமளவுக்கு இணையங்களும், விமர்சகர்களும், கலைஞர்களும் என எண்ணுக் கணக்கற்றோர் உள்ளனர். அந்த நீளமாகும் காக்கை வன்னியன் முதல்… பட்டியலை ஆராய்வதோ மேலும் அதிகரிப்பதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் அது பற்றிய இந்த கட்டுரை, இந்த பிளவுகளிற்கு, முரண்பாடுகளுக்கு பொதுக் காரணிகள் (common denominator) என்ன என்பதை தேடும் ஆர்வத்தின் வெளிப்பாடே
    இவற்றில் தற்காலத்துக்கு தேவையான இந்த “கருத்து” “கொள்கை” மோதலின் பொதுக் காரணியை நாம் தேடியே ஆகவேண்டும். அது மட்டும் தான் மீண்டும் தமிழினம் தலை நிமிர உதவும்
    விமர்சனத்துக்கு அப்பாலானது என்று எதுவும் இல்லை, நூற்றுக்கு நூறு சரியானது என்று எதுவும் இல்லை, தவறாத மனிதர்கள் என்று எவரும் இல்லை. மனிதன் தவறுவதுண்டு அல்லது அவன் மகான் ஆகிவிடுகின்றான். மகான்கள் என்படுவோர் கூட தவறியதாக கூறுகின்றார்கள். எந்த விலங்கினமும் ஒருவிடயத்தை அறியும் போது அது தொடர்பாக ஒரு கருத்தை அல்லது விமர்சனத்தை தனக்குள்ளே வகுத்துக் கொள்கின்றது. மனிதனும் ஒரு விலங்குதான். விடயங்களை பார்க்கும் விதம் / மனோ நிலை என்ற அளவுகோல் தான் அதன் மீது ஈடுபாட்டையோ அல்லது வெறுப்பையோ ஏற்படுத்துகின்றது.
    உறவும் பகையும்,
    கவலையும் மகிழ்ச்சியும்,
    ஆதரவும் எதிர்ப்பும்,
    கண்டனமும் பாராட்டும்,
    சிரிப்பும் அழுகையும்,
    இவையெல்லாம் “பார்வை என்ற அளவுகோலில்” இருந்து தான் உயிர் பெறுகின்றது. இந்த முடிவுகளுக்கு ஒரு மனிதனின் IQ-GQ-EQ என்பன பெரும் பங்கு வகிக்கின்றன.
    “புறக் காரணிகளின்” தாக்கமின்றி அல்லது பரபட்சமின்றி(without being prejudice) ஒரு விடயத்தை பார்க்க தவறின் அதுநிறக்கண்ணாடிஊடாக பார்ப்பதற்குச் சமன். அது நடுநிலையான பார்வையாக இராது.
    தமிழினம் மாபெரும் அழிவைச் சந்தித்து நிமிர முடியாமல் திணறுகின்றது. நோயாளிகள், குழந்தைகள், வயோதிபர்கள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த வேறுபாடின்றி பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த சிறீலங்கா அரசுதான் மனித பேரவலத்துக்கு காரணம் என பிரித்தானிய பிரதமர் முதல் அமெரிக்க தூதர் வரை குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழ் மக்களில் இன்ன

    • thevan says:
      13 years ago

      ANNA I’m very Happy to talk about your “Critical Thinking”(CT).the skills of “Decision making”(DM), and how to argue.. or ..whatever you wish to hight light. before we start to talk about CT,DM….. PLEASE PLEASE tell me what is your and our problem.WHY is the problem still exist? ie We SHOULD talk about PROBLEM SOLVING skills(PS)FIRST. HOPE YOU WILL use your CT and your IQ PQ ZQ or whatever then use your DM to find the PROBLEM:GOOD LUCK ANNA!!!

  17. thevan says:
    13 years ago

    ////இஸ்டப்படி கொலைகளை ஒருவன் செய்தால் ,
    அதை ஒருவன் நியாயப்படுத்தி பரப்புரை செய்தால் ,
    அதனை கருத்து எழுத்து சுதந்திரம் என அனுமதிக்கலாம் என நினைப்பவர்கள்
    தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை நான் மனித குல எதிரிகள் என்றுதான் அழைப்பேன் ///// Very sorry ANNA, I didn’t know that you have included LTTE/VP in this “இஸ்டப்படி கொலைகளை ஒருவன்”list. again very sorry ANNA.

    சி.சந்திரமௌலீசன் அண்ணா உங்கள் anti TGTEகொண்டையை கழட்டி வைக்க மறந்திட்டீங்கள். இதை கழட்டிய பின் வாங்கோ நல்லாய் முத்திரை குத்துவோம்.

    இப்ப சரி ,அண்ணா கழட்டீட்டார். எல்லோரும் வரிசையாக வந்து உங்கள் நெற்றியை காட்டவும், மௌலி அண்ணா நல்லாய் முத்திரை குத்துவார். next . ok, who is next… அண்ணா happy now? also please read my comments on problem solving skills for your decision making bluff.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      என்னைப் பொறுத்தவரை  அவன் தேவனாய் இருந்தாலும் , தேவதூதனாய் இருந்தாலும்  பிழை என்று படுபவற்றை பிழை என்று சொல்வேன் . தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தது எல்லாம் சரி என்று நான் சொன்னதாகவோ , எழுதியதாகவோ ஆதாரம் காட்டுவீர்களா ?

      நான் என்னை தேவன் என்று நினைப்பதுமில்லை !!!
      நான் தேவனும் அல்ல தேவ தூதனும் அல்ல !!! நான் சாதாரண மனிதன் !!!

      தவறு இருந்தால் கருத்து ரீதியாக நீர் எழுதும் . 
      நான் யாருக்கும் எதிரியும் அல்ல . (அன்ரி ) யாருக்கும் மாமாவும் அல்ல (அங்கிள் )  ஹி ஹி ஹி .

      உமக்கு இதுவும் விளங்குமோ தெரியாது அன்ரியின் எதிர்ப்பால் அங்கிள் 
      நிற்க , நான் TGTE இற்கோ வேறு எவருக்கும் அன்றரியும் இல்லை அதோடை வேறை ஒருத்தருக்கும் மாமாவும் இல்லை . 

      தென் சூடானுடன் இராஜ தந்திர உறவு , அலுவலகம் திறக்கிரம் எண்டு TGTE சொன்னதா இல்லையா ?  
      சரி , இந்த வாரம் மனித உரிமைச் சபையில் , தமிழர் கள் பிரச்சனை தொடர்பாக பேசியது என்று தேவனே !!! தேவ தூதனே தெரியுமா உங்களுக்கு??? 

      ஆகக் குறைந்து   தென் சூடான் என்ன பேசியது என்று தெரியுமா தேவ தூதனே ?

      சும்மா வெறும் வாய் சப்பாமல் ஆர்வ முள்ள நீங்கள் கொஞ்சம் அரசியலில் ஈடுபடுங்கள் . விடயங்களை அறியுங்கள் .

       
      ஓஒம் ………… “போன் பாவதாசன் தென் சூடான் மந்திரியாகிறார் ???? ”  என்டொரு கதை வெள்ளையனை எழுதி கொன்னைத் தமிழில் எடிட்டிங் நடாகுது விரைவில் எதிர்பாரும் .  
      — 

      • thevan says:
        13 years ago

        . தவறு இருந்தால் கருத்து ரீதியாக நீர் எழுதும் /// தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தது எல்லாம் சரி என்று நான் சொன்னதாகவோ , எழுதியதாகவோ ஆதாரம் காட்டுவீர்களா ? பிழை என்று படுபவற்றை பிழை என்று சொல்வேன் /// நல்லது அண்ணா.

        நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறுகளில், பிழை என்று சொன்ன ஒரு சிலவற்றை ஆதாரம் காட்டுவீர்களா ? அதாவது நீங்கள் கண்டித்த புலிகளின் கொலைகளிற்கு ஒரு உதாரணம் தருக

        NOTE: இஸ்டப்படி கொலைகளை ஒருவன் செய்தால் ,
        அதை ஒருவன் நியாயப்படுத்தி பரப்புரை செய்தால் ,
        அதனை கருத்து எழுத்து சுதந்திரம் என அனுமதிக்கலாம் என நினைப்பவர்கள்
        தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை நான் மனித குல எதிரிகள் என்றுதான் அழைப்பேன்

  18. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    as explained in my comment above Anatha Vikadan was coming out with a fallacious argument .  
    it may be true that Diaspora is not helping enough and Tamils leadership is also not good enough .

    that does not justify Sinhala Racist actions as confirmed by the imaginary “Girl” in the story 
    she confirmed she was gang raped by gang including by a minister just because she was a Tamils .
    it justifies Tamils inspiration for Tamil Eelam 

    • thevan says:
      13 years ago

      https://inioru.com/?p=31228 also please read my comments on problem solving skills for your decision making bluff.

  19. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    Mr thevan r you there could you please read  following news following news item in Inioru and show your intellectual talent please .

    ////கே.பி குற்றமற்றவரெனில் பிரபாகரனின் இளைய மகனை கொலை செய்தமை பாரிய குற்றம் : மங்கள/////https://inioru.com/?p=31397

    • thevan says:
      13 years ago

      very sorry ANNA, GOSL is the problem,we all know that, what else you have done there.

      “////கே.பி குற்றமற்றவரெனில் பிரபாகரனின் இளைய மகனை கொலை செய்தமை பாரிய குற்றம் : மங்கள/////https://inioru.com/?p=31397” ANNA, THIS IS the PROBLEM. fix this., you bark at the problem. it won’t solve the problem.

      • chandran.raja says:
        13 years ago

        தவறு செய்தவன் திருந்துவதற்கு மனிதநேயத்தில் இடமுண்டு. திருந்துவதாக அவன் நிரூபித்து காட்ட வேண்டும்.

        கே.பியை பொறுத்தவரை அப்படித்தான் தெரிகிறது. மலேசியாவில் இருந்து கடத்தி வரபட்டாரா? விருப்பத்துடன் வந்தாரா?? என்பது புரியச் சிரமாக இருக்கிறது. சிலவேளைகளில் இதை அலசுவதும் தேவையில்லாதது போல் தெரிகிறது.

        கே.பியால் தமிழ்மக்கள் நன்மையடைவார்களே தவிர தீமை அடையமாட்டார்கள்.கே.பியின் மனமாற்றம் இலங்கை அரசாங்கத்தின் அதட்டலால் வந்ததாக நாம் கருதவில்லை.ஒரு வயதுக்கு பிறகு சிலமனிதர்கள் உயர்ந்த மனநிலையை அடைவதுண்டு.அது கடந்த கால தவறுகளை எண்ணி அதற்கான பிராயச்சித்தமாகவும் இருக்கலாம்.

        • thevan says:
          13 years ago

          கே பி தவறு ஆகவே வே பி சரி, அல்லது வே பி தவறு ஆகவே கே பி சரி என்று கூறுவது தவறு.சரியா ?தவறா?

          கே பியும் தவறு வே பியும் தவறு , ஆகவே மகிந்த,மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?

          கே பி தவறு ஆனால் வே பி சரி, ஆகவே மகிந்த, மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?

          கே பி சரி ஆனால் வே பி தவறு , ஆகவே மகிந்த, மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?

          குறிப்பு:

          கே பி க்கு, வே பிக்கு பதில் யாரையும் எந்த அமைப்பையும் பிரதியீடு செய்தும் வாசிக்கலாம்.

          • சி.சந்திரமௌலீசன் says:
            13 years ago

            சந்திரன் ராஜா ,

            நீங்கள் தர்கவியல் படித்திருக்கின்றீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
            நீங்கள் மார்க்ஸ் சொன்ன இயங்கியலையும் . நாம் மனிதர்களைப் பற்றி பேசுகின்றோம் என்பதை மறந்து விட்டீர்கள் .

            இதே பிரச்சனை தர்க்கம் படித்த அத்துடன் படிப்பித்த  பொங்குதமிழ் இணைய ஆசிரியர் சிவரஞ்ச்சித்துக்கும் உண்டு .

            a சரியாயின் b சரி . b  சரியாயின் c சரி என எடுத்துக் கொண்டால் , 
            இது சடப் பொருள்களுக்கு உதாரணமாக கணிதத்தில் கால கட்டுப் பாடின்றி எப்பொழுதும் சரியாகும் .
            ஆனால் , மனித மனங்கள் மார்க்ஸ் (ஓமோம் ..) சொன்ன . இயங்கியல் தந்துவதுக்கு உட்பட கூடியவை .
            மனித மனங்கள் மனித செயல்பாடுகள் பற்றி பார்க்கும் பொழுது சற்று  வித்தியாசமாக பார்க்க பட வேண்டு
            so , 

            உங்கள் கேள்விக்கு பதில் தருவதில் மிகுந்த சிரமம் இருக்கின்றது .
            உங்களை கொஞ்சம் பேசவைத்தால் உங்கள் லெவல் என்ன என்று அறிந்து கொள்ளல்லாம்
            அப்பொழுது பாடத்திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ள நான் தயார் ?
            பொதுவாக கற்பித்தல் முறை அதுதான் . மானவைன் தரம் அறிந்து . அதற்கேற்ப பக்குவமாக சொல்லவேண்டும் .
            வாத்தியாருக்கு பார்க்க தெரியிற ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கூட தெரியாத மாணவனுக்கு கொஞ்சம் கவனமாக சொல்லவேண்டும் இல்லையோ !!!!
            . உங்களை அப்படி சொல்லவில்லை . ஒரு உதரணத்துக்கு சொன்னேன் .  
            சரி, வழுநிலை விவாதம் என்றால் என்ன உங்கள் மொழியில் பத்து வரிகள் சொல்லுங்கள் . 
            நீங்கள் டக்ளசை இப்பொழுது ஆதரிபதாக சொல்லி உள்ளீர்கள் . வழு நிலை விவாதம் இன்றி தர்க்க ரீதியாக பத்து வரிகள் எழுதுங்கள் .
            இந்த கேள்விகளை  ஏன் முன் வைக்கின்றேன் என்றால் , எமது விவாதத்தில் வழுநிலை விவாதம் தவிர்க்க வேண்டும் என்பது முன் நிபந்தனை . நீங்கள் சம்ம்மதமா ??? எழுதுவீர்களா ? என்ன ஓடுறமாதிரி  என்ரை ஞான திருடி திருடி திருடி சொல்லுது .

  20. thevan says:
    13 years ago

    REMOVE THE கொண்டைs,
    none of us can’t see the problem while carrying the கொண்டைs is the messgae.good LUCK. கொண்டைs are the big problem.should be removed.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      I thing you are suffering from PTSD .  This is a common disease in most refugees from war torn countries. 

      the degree and impact varies from person to person depending on events .

      I think , you have some sort of PTSD linked to LTTE and events .

      if you don’t come out of it. At times you will see everything according to your state of mind .

      the moment you see a LTTE man or LTTE article . PTSD state of mind will get triggered . you will act  irrationally .

      I feel sorry for you . 
      read about PTSD  @ http://en.wikipedia.org/wiki/Posttraumatic_stress_disorder

      feel free to come back don’t be shy 

      • thevan says:
        13 years ago

        the moment you see a LTTE man or LTTE article . PTSD state of mind will get triggered . you will act irrationally ./// when I see the man like you I get PTSD.

        • சி.சந்திரமௌலீசன் says:
          13 years ago

          Thank you for your confession . a man should be brave to say this . WELL DONE .
          I CAN SEE YOU HAVE A GOOD INNER MIND WHICH SEES YOUR WEAKNESS.
          so the prognosis sounds very much promising . 
           

           did you ever try to take counselling .
           tell them you problem . 

          try to see the facts not the person. imagine , If I used a different name which is not familiar to you you would not have used all these KONDAI etc. 

          I can understand your own and many other’s situation.   think what British did in our country before 1948 in India and in Srilanka . 

          we are here now as asylum seekers isn’t it .   we are not treated in the as same way as before.  same applies to Africans in USA.

          believe in social change .  people do change and their views do change . it is true for you me and everyone .  

          PTSD is a very dangerous disease . learn to come out of it yourself or seek advice .

          I was assistant in a refugee FOYER at Osny , France  .
          good luck .

           I feel very very sorry for you.
          talented people like you  should come out it . 

           you seems to know me .
           call me we can talk .

          I am prepared to support you to come out of PTSD .

          we all are suffering from PTSD some are harmful others are dangerous . 

      • thevan says:
        13 years ago

        ANNA!!! I agree
        , as soon as you see the man is ANTI VP/LTTE, regardless of HE IS ANTI GOSL,or ANTI DOUGH or,ANTI KP or ANTI KARUNA…or any) . PTSD state of mind will get triggered . you will act irrationally . because your KONDAI is asking you to act.REMOVE YOUR KONDAI. you will be fine ANNA.

  21. நெருஞ்சி says:
    13 years ago

    தேவனுக்கு!
    குறியீடாக K.P,V.P என்று எழுதலாம்;அல்லது குப,வேபி என்று எழுதலாம்.

    தாங்கள் தங்கிலிஷீல் குறிப்பிட்ட படி,அந்த இருவரும் வேறா?(சட்டியில் இருப்பது அகப்பையில் வராதா?)

    ஒரு அமைப்பின் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளரும் வேறா?

    இதில் சரி,தவறு என இரண்டு விடையம் இருந்ததா?

    அந்த சரி,தவறு எனப்படும் நிலை என்ன?

    அவிழ்க்க சொல்லும் கொண்டையில் இருப்பது கோமேதகமா,ஈரும் பேனா?

  22. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    நான் தமிழீழம் தன தீர்வு என்கின்றேன் . நீங்கள் ஐக்கிய இலங்கை வாதியா ? ஆம் அல்லது இல்லை . இரண்டில் ஒரு பதில் சொல்லுங்கோ அண்ணே . அதன் பின் பேசுவோம் .

  23. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    சந்திரன் ராஜா ,chandran.raja–/////////கே பி தவறு ஆகவே வே பி சரி, அல்லது வே பி தவறு ஆகவே கே பி சரி என்று கூறுவது தவறு.சரியா ?தவறா?
    கே பியும் தவறு வே பியும் தவறு , ஆகவே மகிந்த,மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?
    கே பி தவறு ஆனால் வே பி சரி, ஆகவே மகிந்த, மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?
    கே பி சரி ஆனால் வே பி தவறு , ஆகவே மகிந்த, மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு.சரியா ?தவறா?
    குறிப்பு:
    கே பி க்கு, வே பிக்கு பதில் யாரையும் எந்த அமைப்பையும் பிரதியீடு செய்தும் வாசிக்கலாம்./////////

    நீங்கள் தர்கவியல் படித்திருக்கின்றீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.
    நீங்கள் மார்க்ஸ் சொன்ன இயங்கியலையும் . நாம் மனிதர்களைப் பற்றி பேசுகின்றோம் என்பதை மறந்து விட்டீர்கள் .
    இதே பிரச்சனை தர்க்கம் படித்த அத்துடன் படிப்பித்த  பொங்குதமிழ் இணைய ஆசிரியர் சிவரஞ்ச்சித்துக்கும் உண்டு .
    a சரியாயின் b சரி . b  சரியாயின் c சரி என எடுத்துக் கொண்டால் , 
    இது சடப் பொருள்களுக்கு உதாரணமாக கணிதத்தில் கால கட்டுப் பாடின்றி எப்பொழுதும் சரியாகும் .
    ஆனால் , மனித மனங்கள் மார்க்ஸ் (ஓமோம் ..) சொன்ன . இயங்கியல் தந்துவதுக்கு உட்பட கூடியவை .
    மனித மனங்கள் மனித செயல்பாடுகள் பற்றி பார்க்கும் பொழுது சற்று  வித்தியாசமாக பார்க்க பட வேண்டு
    so , 
    உங்கள் கேள்விக்கு பதில் தருவதில் மிகுந்த சிரமம் இருக்கின்றது .
    உங்களை கொஞ்சம் பேசவைத்தால் உங்கள் லெவல் என்ன என்று அறிந்து கொள்ளல்லாம்
    அப்பொழுது பாடத்திட்டத்தை சரியாக வைத்துக் கொள்ள நான் தயார் ?
    பொதுவாக கற்பித்தல் முறை அதுதான் . மானவைன் தரம் அறிந்து . அதற்கேற்ப பக்குவமாக சொல்லவேண்டும் .
    வாத்தியாருக்கு பார்க்க தெரியிற ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கூட தெரியாத மாணவனுக்கு கொஞ்சம் கவனமாக சொல்லவேண்டும் இல்லையோ !!!!
    . உங்களை அப்படி சொல்லவில்லை . ஒரு உதரணத்துக்கு சொன்னேன் .  
    சரி, வழுநிலை விவாதம் என்றால் என்ன உங்கள் மொழியில் பத்து வரிகள் சொல்லுங்கள் . 
    நீங்கள் டக்ளசை இப்பொழுது ஆதரிபதாக சொல்லி உள்ளீர்கள் . வழு நிலை விவாதம் இன்றி தர்க்க ரீதியாக பத்து வரிகள் எழுதுங்கள் .
    இந்த கேள்விகளை  ஏன் முன் வைக்கின்றேன் என்றால் , எமது விவாதத்தில் வழுநிலை விவாதம் தவிர்க்க வேண்டும் என்பது முன் நிபந்தனை . நீங்கள் சம்ம்மதமா ??? எழுதுவீர்களா ? என்ன ஓடுறமாதிரி  என்ரை ஞான திருடி திருடி திருடி சொல்லுது .
    thevan

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      why you are supporting Douglas?  why ? reason it out please 

  24. manithan says:
    13 years ago

    சில பின்னூட்டங்களைப் பார்த்தால் சிலருக்கு தலை சுகமில்லைப் போல இருக்கிறது.

  25. thevan says:
    13 years ago

    கே பியும் தவறு வே பியும் தவறு , ஆகவே மகிந்த,மேற்கு,இந்தியா சரி என்று கூறுவதும் தவறு. இதுவே என் கருத்து, குறிப்பு:

    கே பி க்கு, வே பிக்கு பதில் யாரையும் எந்த அமைப்பையும் பிரதியீடு செய்தும் வாசிக்கலாம்.

    முக்கிய கருத்து: REMOVE THE கொண்டைs,
    none of us can’t see the problem while carrying the கொண்டைs is the messgae.good LUCK. கொண்டைs are the big problem.should be removed.

  26. thevan says:
    13 years ago

    வழு நிலை விவாதம்//// அண்ணா வணக்கங்கண்ணா!!!! . வழுநிலை விவாதம் தவிர்க்க வேண்டுங்கண்ணா. ………………………………………………………………………………….
    // தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தது எல்லாம் சரி என்று நான் சொன்னதாகவோ , எழுதியதாகவோ ஆதாரம் காட்டுவீர்களா ? பிழை என்று படுபவற்றை பிழை என்று சொல்வேன் /// நீங்க சொன்னது, நல்லது அண்ணா.

    நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறுகளில், பிழை என்று சொன்ன ஒரு சிலவற்றை ஆதாரம் காட்டுவீர்களா ? …………வழுநிலை வேண்டுங்கண்ணா. அதாவது நீங்கள் கண்டித்த புலிகளின் கொலைகளிற்கு ஒரு உதாரணம் தருக. வழுநிலை விவாதம் தவிர்க்க வேண்டுங்கண்ணா.

    NOTE: இஸ்டப்படி கொலைகளை ஒருவன் செய்தால் ,
    அதை ஒருவன் நியாயப்படுத்தி பரப்புரை செய்தால் ,
    அதனை கருத்து எழுத்து சுதந்திரம் என அனுமதிக்கலாம் என நினைப்பவர்கள்
    தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்களை நான் மனித குல எதிரிகள் என்றுதான் அழைப்பேன்; என்ன பிரித்தானிய மாநாட்டிற்கு ஓடுறமாதிரி என்ரை ஞான திருடி திருடி திருடி சொல்லுது . நில்லுங்கண்ணா ,வழுவாமல் பதில் சொல்லுங்கண்ணா

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      Dear Thevan,  you confessed that  you are suffering from  PTSD when you see my name. ( see your post above)   . I don’t want to be rude please take my best advice given above .  I feel very sorry about your state of mind .  

      I don’t know who you are ,
      but 
       I can see the   you are possibly  suffering from visual hallucination , possible auditory  hallucination . as per your symptoms you confessed . 
      YOU ARE BEHAVING LIKE A INJURED ANIMAL 

       This is the problem with PTSD type illness .

      You want to do maximum damage to any target which seems to be representing the source which caused the trauma.  (  the the target is chosen by your hallucinative mind) it is unfortunate that I put my real name and caused you PTSD) 

      God bless you.

      Political words and explanations will not  calm you down. you will go from one topic to other . you will talk irrelevant topics .   we started talking about Vikadan article . now we are talking about LTTE , then you are targeting me .

      I objected certain things about LTTE . I thought about it rationally and I dealt with it in a professional way . it will remain professional .

      only relevant parties need to know about it . I do not thing you are in a state of mind to know that . because your PTSD condition will make you to carry it around or post it around .

      I will tell you a good story .  A man was quarrelling  with his wife everyday . The neighbour came and knocked on  the door and asked what was the problem. The replied,”It is a family matter”.

      Some time later , the lady and the man went to courts for divorce .

      The neighbour waited  at the door step of the courts until the man come out and asked the same question .  

      You know what was the reply , ” She is no longer my wife,  I do not need to talk about her.”  

      my advice to you relax man , talk things which is necessary . if you want do politics you need to first come out of PTSD .

      Otherwise it is NOT AT ALL POSSIBLE to have a rational discussion .

      A discussion is possible only with a SANE  person 

      Talk to you soon …

      Remember my previous advice 

      Thank you for your confession . a man should be brave to say this . WELL DONE .
      I CAN SEE YOU HAVE A GOOD INNER MIND WHICH SEES YOUR WEAKNESS.
      so the prognosis sounds very much promising . 
       
       did you ever try to take counselling .
       tell them you problem . 
      try to see the facts not the person. imagine , If I used a different name which is not familiar to you you would not have used all these KONDAI etc. 
      I can understand your own and many other’s situation.   think what British did in our country before 1948 in India and in Srilanka . 
      we are here now as asylum seekers isn’t it .   we are not treated in the as same way as before.  same applies to Africans in USA.
      believe in social change .  people do change and their views do change . it is true for you me and everyone .  
      PTSD is a very dangerous disease . learn to come out of it yourself or seek advice .
      I was assistant in a refugee FOYER at Osny , France  .
      good luck .
       I feel very very sorry for you.
      talented people like you  should come out it . 
       you seems to know me .
       call me we can talk .
      I am prepared to support you to come out of PTSD .
      we all are suffering from PTSD some are harmful others are dangerous . 

      • thevan says:
        13 years ago

        அண்ணா வணக்கங்கண்ணா!!
        Don’t worry அண்ணா, I’ve asked all the webs and papers and whichever the medias you have accused, to publish your articles.Please call them. It will help you to come out from PTSD and will stop you writing load of rubbish here to say nothing. READ ,think,DIGEST will develop your Knowledge, But you are VOMITING ANNA.,VOMITING LOAD OF RUBBISH, You have read something but wasn’t fully digested. anyhow,I like your BLUFFS ANNA. you are too good in BLUFF. bye.

  27. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ////////chandran.raja—-/நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.——– chandran.raja   /////

    please explain what situation is making you to support Douglas. are they holding your wife ? are they threatening to rape your family member ?
    in that case I can help you to get out the hell . I know they are doing that . the article itself says a minister raped the girl . 

    other wise , if it is 

    just to fill up you stomach ?  

    don’t you think that supporting a politician with whom you don’t agree is political prostitution .

    how would you feel if call you a prostitute ? 

    how would you feel , when I get a chance to meet you child or wife and tell them that “your husband /father is a prostitute and he is keeping you by prostitution .

    no hard feelings my dear , these questions arose from your statement above.  my apologies if I had  heart you . that was not the intention . no hard feelings once again my dear . 

    • chandran.raja says:
      13 years ago

      திரு சந்திரமெளலீசன் அவர்களே! சந்தரன்.ராஜா தொடங்கி தேவனில் முடித்திருக்கிறீர்கள் நேற்றய பின்னோட்டம் ஒன்று. நேரம்:3:58. தேவனின் கருத்து ஒரு பார்வையில் சரியாக இருந்தாலும் அவர்கருத்துக்கு நான் பொறுப்பேற்க முடியாது. இருவரையும் ஒன்றாக இணைத்து தாங்கள் குழப்பிப் போய்யுள்ளீர்கள் என்பதாகவே! நான் கருதுகிறேன்.

      இது இப்படியே!இருக்க…. வழுவல் தளுவல் நளுவல் போன்ற பண்டிதத் தமிழில் மோசமான புள்ளிகளை பள்ளிப்பாடத்தில் எடுத்தனான். ஆகவே அந்த பண்டிதர் போட்டியில் நீங்களே! வெற்றியாளன்.

      நான் நினைக்கிறேன் தமிழீழத்தை ஏற்காதவன் தழுவல் வழுவல் கூட்டுக்குள் அடைத்துவிடலாம் என “குருவி” கனவில் மிதக்கிறீர்கள். ஒரு முறை உடம்பை உலுப்பிப் போட்டு பாருங்கள். தாங்கள் இன்னும் தூக்கத்தில் தான் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

      அடுத்து தமிழ் சீரியல்நாடகங்களைபார்த்து கண்ணீர் விடுபவன் நான் அல்ல.ஆனந்தவிகடனும் இதே ரேன்ஞ்தான். இதில் எந்தவித
      அணுவளவு மாற்றமும் அல்ல. கொலை கற்புயழிப்பு விபச்சாரம் இல்லாத ஏதாவது ஒருநாட்டை உதாரணம் காட்ட முடியுமா மெளலீசன் அவர்களே! உங்களால் அது முடியாது.

      டக்கிளஸ்தேவானந்தாவுக்கு ஆதரவு ஏன் வழங்குகிறீர்கள் என்று கேட்டீர்கள். ஐரோப்பிய நாட்டிற்கு நான் வாழ்வு தேடிவந்து 33 வருடங்கள் ஆகின்றன.பிறந்தது வளர்ந்தது கல்விகற்றது சுவாசித்தது தண்ணீரைக் குடித்தது இப்படியாக எனது வாழ்நாளை அரைவாசிபாகத்தை யாழ்மண்ணில் செலவழித்திருக்கிறேன். இந்த நன்றிக்கடன் தான் என்மனத்தில் இன்றும் உறைந்திருக்கிறது.

      அதற்கு பிறகு நாட்டில்நடந்த கொடுரங்கள் நான் வாழ்ந்த திருநெல்வேலி சந்தியிலேயே தமிழனை தமிழன் போட்டெரித்து நாடகம் ஆடியிருக்கிறான். இது எனக்கு தினங்கள் வாரங்கள் மாதங்கள் அல்ல வருடக்கணக்காகக் கூட நித்திரை இல்லாது அலைந்திருக்கிறேன். இன்றும் கூட.

      கிறீஸ்தவ வேதயாகமத்தில் ஒரு வாக்கியம் யோசுவே சொல்வதாக இருக்கிறது. அதுவே எனக்கு பிடித்த வாக்கியம் கூட. அது இதுதான்.

      “நிர்வாணமாகவே இந்த உலகத்திற்கு வந்தோம். நிர்வாணமாகவே திரும்ப போகப் போகிறோம்.” என்பது.

      யாழ்பாணத்திற்கு போன அரிசி பருப்பு லொறிகளை கிளிநொச்சில் ஆயுதமுனையில் பறித்தெடுத்து பங்கரில் மண்மூட்டைக்கு பதிலாக அடுக்கியதாக செய்தி கிடைத்தது.

      இன்றைக்கிருக்கிற நவீனஉலகத்தில் யாரும் கருத்துச் சொல்லாம்.அது முஸ்தப்பாவாக தேவனாக சந்திரன்.ராஜாவாக மெளலீசனாக இருக்கலாம். இதுவே ஜனநாயக உரிமை. இதை அங்கீகரித்தே ஆகவேண்டும். மறுதலிக்க முடியாது. மறுத்தால் தவறு செய்கிறீர்கள் என்று தான் அர்த்தப்படும்.

      பொதுநலனுக்கான போராட்டம் மாமேதை கால்மாக்ஸால் தொடக்கி வைக்கப்பட்து அல்ல. இந்த போராட்டத்தின் வயது 3000 ஆண்டு பழமையானது. சோக்கிரடீஸ் தான் தொடக்கி வைத்தார் என்பதாகத்தான் நாம் அறிகிறோம். மாக்ஸ் செய்தது எல்லாம் இந்த ஜனநாயக்தை எம்மால் எப்படி அடைய முடியும் என்பதற்கான வழிமுறை மட்டும் தான்.

      சிலவரிகள் தாண்டிப்போனாலும் பிரச்சனை இதுதான். தனது விருப்பதிற்கு தெரிவாக வாக்கு போட்டவனை விரலை வெட்டியது கிளிநொச்சியில் தான். இது எனது கற்பனை கதை என்று நினைக்காதீர்கள். பி.பி.சீ செய்தி.

      30 வருடப்போராட்டம் ஈழத்துதமிழ்மக்களால் நடத்தப்பட்டது என்று நீங்கள் கருதுவீர்களேயானால் அது முற்றுமுழுதான தவறு. இது புலம்பெயர் தமிழர்கால் மட்டுமே நடத்தி முடிக்கப் பட்டது.

      இங்கு தான் டக்கிளஸ்தேவானந்தா தரிசனமாகிறார். ஏழைப்பிள்ளைகளை சயினட்கட்டி ஆயுதம் தூக்கி ஒரு சகோதரயுத்ததை நடத்துவதில் எந்த உடன்பாடும் இல்லாதவர். பேசித்தான் வழிகண்டறிய முடியும்

      என்பது. இனி என்ன வேண்டும் திரு மெளலீசன் அவர்களே!

  28. MustangGT says:
    13 years ago

    Well said, he deserves to be called a prostitute. You don’t have to appologize for that, for he calls everyone else all kinds of name. 

  29. chandran.raja says:
    13 years ago

    என்னப்பா! பிள்ளையாருக்கு கிடைத்த எலிவாகனம்மாதிரி முஸ்தப்பா கிடைத்திருக்கிறார். மெளலீசன் அவர்களே! நீங்கள் ஊர்போய் சேர்வதாக இருந்தால் இந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம்.

    இந்த மாயக்குதிரை கனைக்கிறமாதிரி குரல் எழுப்பத்தான் தெரியும். உண்மையில் இதற்கு குரலும் இல்லை. பலமான காலும் இல்லை உதைப்பதற்கு. மிகுதி நாளை… குட்நையிட்!.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      I will sort it out . You do not worry . about that ,  ANSWER MY question darling , no more fallacious diversion . here is the question again  . Beware ,  this question will be posted at all locations you make comments .   

      ////////chandran.raja—-/நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.——– chandran.raja   /////
      please explain what situation is making you to support Douglas. are they holding your wife ? are they threatening to rape your family member ?
      in that case I can help you to get out the hell . I know they are doing that . the article itself says a minister raped the girl . 
      other wise , if it is 
      just to fill up you stomach ?  
      don’t you think that supporting a politician with whom you don’t agree is political prostitution .
      how would you feel if call you a prostitute ? 
      how would you feel , when I get a chance to meet you child or wife and tell them that “your husband /father is a prostitute and he is keeping you by prostitution .
      no hard feelings my dear , these questions arose from your statement above.  my apologies if I had  heart you . that was not the intention . no hard feelings once again my dear . 

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        /////என்னப்பா! பிள்ளையாருக்கு கிடைத்த எலிவாகனம்மாதிரி முஸ்தப்பா //// this shows you are starting to worry . 

        come on answer my question  ,  

        ////////chandran.raja—-/நான் ஈ.பி.ஆர்.எல்.எவ்யையோ. டக்கிளஸ் தேவானந்தா கட்சியையோ சேர்ந்தவன் அல்ல. நிலமை கருதி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்றால் அது உண்மை.——– chandran.raja   /////
        please explain what situation is making you to support Douglas. are they holding your wife ? are they threatening to rape your family member ?
        in that case I can help you to get out the hell . I know they are doing that . the article itself says a minister raped the girl . 
        other wise , if it is 
        just to fill up you stomach ?  
        don’t you think that supporting a politician with whom you don’t agree is political prostitution .
        how would you feel if call you a prostitute ? 
        how would you feel , when I get a chance to meet you child or wife and tell them that “your husband /father is a prostitute and he is keeping you by prostitution .
        no hard feelings my dear , these questions arose from your statement above.  my apologies if I had  heart you . that was not the intention . no hard feelings once again my dear . 

    • MustangGT says:
      13 years ago

      Yes Chandrababu I am shitting in my pants, keep daydreaming. You are someone who has let down even your own family and you are trying to preach the world?

  30. ஓணான் says:
    13 years ago

    எழவெடுத்ததுகள் தங்கட தோம்பு துரவு சொம்பு சுண்ணாம்புகளை எழுதுதுகள்…. 

    • MustangGT says:
      13 years ago

      Talking about yourself ?

  31. செந்தோழன் says:
    13 years ago

    மனித நேயம் உயிர் பெறட்டும்.!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...