பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் தர்மசதி கந்தவான் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. சாதம், பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 9 பேர் உயிரிழந்தனர். மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 60 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உலகின் வல்லரசு எனக் கூறிக்கொண்டு ஏனைய நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுளைக்கும் வறுமை நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மட்டும்தான் இவ்வாறான கொலைகள் இந்த நூற்றாண்டிலும் நடைபெறும். பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு முழுமையாக அடகுவைக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரமும் அரசியலும் ஏழைகளின் அழிவில் வாழ்கை நடத்துகின்றன.








Teacher in kill you