உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைபலனாகத் துருகியில் ஏற்பட்ட மக்கள் போராட்டம் எனைய அரபு நாடுளுக்கு முன்னுதாரணமாக அமையும் வாய்ப்புண்டு என ஊடகங்கள் குறிப்பிடும் அதே வேளை ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்களுக்கான சூழல் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியாவில் பல்கலைக் கழக மாணவர் போராட்டங்கள் இன்னும் ஒய்ந்துவிடவில்லை. அதே வேளை இன்று பிரித்தானிய அரச அறிக்கை ஒன்றின் அடிப்படையில் வேலையற்றோரின் தொகை முன்னெப்போது இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வேலையற்றோரின் தொகை 2.5 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.







