தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி நடத்திய மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர் திடீரென தீ வைத்துக்கொண்டு உடல் கருகினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தி.மு.க., இளைஞரணியினர் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். சென்னை கிண்டியில் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட இளைஞரணி தொண்டர் ஒருவர், திடீரென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து, உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் பலனின்றி உயிரிழந்தார்.
சிவப்பிரகாசம் (55) என்ற அவர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
திமுக பொருளாளர் மு க ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இறந்த அந்த தமிழரின் துன்ப மனநிலையை மதிக்கிறேன். ஆனாலும் இந்த தீக்குளிப்புக்கள் தேவையற்றது என்னும் நிலையை தமிழகத்தில் தொடர்ந்தும் நிறுவ முடியாத நிலையில் கருணாநிதியும் அவரது தனயனும் சகபாடிகளும்.
நிற்க.. பிறருக்க தமிழ் படிப்பிக்கும் நக்கல் கருணாநிதிக்கு தெரியாதா இளைஞர் என்ற சொல் என்னவென்பது. இளைஞர் அணித் தொண்டர் ஆனால் வயது 55… என்னடா இது இநியாயம்…
இந்த லட்சணத்தில் தான் திமுக இருக்கிறது. அந்தக்காலத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள் யாரையும் தவிர இவர்கள் பின்னால் யாரும் இல்லை. இந்நத இளைஞர் அணியை நடத்தும் ஸ்டாலினுக்கு பேரப்பிள்ளைகள் பிறந்து அவை திருமண வயதையும் எட்விட்டன.
அதனால் தான் இந்த திருத்த முடியாத கழிசடை க்கு இன்னம தமிழகத்தின் மன நிலை இன்றைய சமுதாயத்தின் மனநிலை புரியவில்லை.
குழடுதட்டீவிட்ட சிந்தனையில் மரத்துப்போய்விட்ட திருத்தமுடியாத கழிவுக் கழிசடைதான் தி.மு.க.
இதன் பின்னும் கருணாநிதிக்கு கருணை வரப்போவதில்லை என்பதும் நிதிதான் கனவிலும் முன்னுக்கு நிற்கும் என்பதும் தி.மு.கவின் தொண்டர்களுக்கு புரிந்தால் சரி.