Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அமரிக்க இராணுவம் இலங்கையில் மீட்ப்புப்பணி?

இனியொரு... by இனியொரு...
02/22/2009
in அரசியல்
0 0
1
Home அரசியல்

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான சர்வதேசிய நாடுகளின் அரசியலில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அகோர யுத்தத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வல்லன. இந்தியாவின் முரண்படும் அறிக்கைகள், பிரித்தானியாவினதும் அமரிக்க சார் நாடுகளதும் புதிய நகர்வுகள், இலங்கை அரசின் மாற்றமடையும் சார்பு நிலை என்பன ஏற்படுத்த்விருக்கும் இம் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகள் அவசியமானதாகும். இந்த சூழ் நிலையில் இலங்கை அரச சார்புப் பத்திரிகையான சண்டே ரைம்சில் வெள்யாகியிருக்கும் பின் வரும் செய்தி ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 

வன்னியில் போருள் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக, உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் அமரிக்கா தலைமையிலான மனிதாபிமான நடவடிக்கை இப்போது ஒரு வடிவத்திற்கு வந்துள்ளது.
ஹவாயில் த்லைமையகத்தைக் கொண்டுள்ள United States Pacific Command (US PACOM) என்ற அமைப்பின் உயர்மட்டக்குழு இந்ந்டவடிக்கை தொடர்பாக கொழும்பில் நிலைகொண்டுள்ளது. அமரிக்க ராணுவத் தளபாடங்களையும் இந்த நடவடிக்கை உள்ளடிக்கியதாக அமையும் எனத் தெரியவருகிறது.
வட்-கிழக்கு கடலை அண்மித்த பிரதேசங்களிலிருந்து ஆழ்கடலில் நிறுத்தப்படும் கப்பல்களை நோக்கி மக்களின் நகர்வை நோக்கமாகக் கொண்டு இதனை இலகுபடுத்தும் நோக்கில் மட்டுமே இந்ந்தடவடிக்கை அமையும் எனத்தெரிய வருகிறது.
ஐ.டி.பி நிலையங்களையும் மருத்துவ மனைகளையும் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியில் இடமாற்றம் செய்வதே இதன் நோக்கமாகும்.”இணை மனிதாபிமான நடவடிக்கைப் படை”(“coalition humanitarian task force”) தொடர்பாக கருத்தளித்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, இது எப்போது அமைக்கப்படும் என்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் தனித்தனியான அடிப்படையில் பேசிக்கொண்டிருப்பதாகத் என மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களை மீட்பது தொடர்பாக ஏனைய நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகக் கூறினார். நட்பு நாடுகளின் கூற்றுப்படி, அவர்கள் எப்போதுமே இலங்கை அரசின் மேற்பார்வையுடன் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் நேரடியக தமது கொடிகளுடன், செயர்படுவதையே விரும்புவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான முன்மொழிவொன்றை இந்தியா முன்வைத்துள்ளது. இது தொடர்பாக லோக் சபாவில், கடந்த புதன்ன்று கருத்து வெளியிட்ட இந்திய பிரதிப் பிரதமரான பிரணாப் முகர்ஜி, தமது அரசானது, படையணி உதவி உட்பட சிவிலியன்களை வெளியேற்றுவதற்கான உதவிகள் அனைத்தையும் ஏற்கனவே முன்மொழிந்திருப்பதாகக் குறிப்பிட்டார். சிறி லங்கா அரசாங்கம் நட்பு நாடொன்றின் பக்கத்திலிருந்து வழங்கப்படும் உதவி என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசானது மனிதாபிமான நடவடிக்கைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், பொதுமக்களை வெளியேற்றும் இந்த நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என உடனடியாகத் தெளிவின்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏஞ்சிய பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதற்கான இராணுவ நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அனைத்தும் இதனைச் சார்ந்ததாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படை நடவடிக்கைகளை இறுதியாக்குவதும், ஒருங்கிணைப்பதும் இன்னொரு விடயமாகும்.

அமரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் ஆரம்ப தடங்கல்களைச் சந்திதுள்ளதாக சன்டே டைம்ஸ் இற்குத் தெரிய வருகிறது. தாம் கட்டுப்பாட்டுள் வைத்துள்ள மிகச்சிறிய பகுதிக்குளிருந்து பொதுமக்களின் நகர்வை அனுமதிப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். எனினும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிவிலியன்களின் பாதுகாப்பு மீதான உதவி வழங்கும் நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் அக்கறை, புலிகளின் நிராகரிப்பு என்பன புலிகளின் தடையை எதிர் கொள்ளாமல் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நிலைக்குத் அரசாங்கம் தள்ளப்படும் என சண்டே ரைம்சிற்கு தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்களின் கருத்துப்படி இவ்வாறான நடவடிக்கை களநிலைமைகளை நெருக்கமாக அவதானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களில் படைகள் மேலதிகமான எல்லைகளைக் கைப்பற்றியுள்ளன. கெரிலாத் தாக்குதல்களின் மையமாகத் தொழிற்படும் புதுக்குடியிருப்பைச் சில தினங்களில் கைப்பற்றிவிடலாம் என பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் இலங்கைக்கு எதிரான நகர்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நேரத்தின் போது மெக்சிக்கோவின் முன்னய பிரேரணைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்கியது. ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சோவர்ஸ், நியூ யோர்க் இன்னர் சிட்டி பிரஸ் இற்குக் கருத்துத் தெரிவித்த போது, பிரித்தானிய அரசு, இலங்கை தொடர்பான விவாதம் ஒன்றைக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பாக்தாத் - காஸா - புதுக்குடியிருப்பு : யமுனா ராஜேந்திரன்

Comments 1

  1. proffessor says:
    17 years ago

    இந்த சமாதான காலத்தில் புலிகளை பலவழிகளிலும் சமாதானம் பேசச்சென்ற அமெரிகாவின் ஏவல்கள் புலிகளை இன்ரேனலாக மிரட்டியதாகவும், ஆனால் புலிகள் அதற்கு இடம் கொடுக்கவில்லையெனவும், அப்போதே பிரபாகரன் தனது முக்கிய சகாக்களுக்கு சொல்லிவிட்டாராம். இம்முறை சண்டை பிடிக்கப்போவது இலங்கையோடு அல்ல, உலகத்தின் வல்லரசுகளுடன் ஆக, இப்போது அந்த வல்லரசு சிறிலங்காவை வைத்து சண்டை பிடித்து விட்டு ஆக்கிரமிக்க இறங்க தயாராகிவிட்டது. காதோடு காதாக, கொஞ்சம் முன்னமே வந்திருந்தால் ஈராக்கில் வாங்கினமாதிரி வாங்கியிருப்பினம் எனச்சிலர்நினைக்ககூடும். அதுதான் அமெரிக்கா சிறிலங்காவை வைத்து எல்லாம் முடித்துவிட்டு இப்ப ஈராக்கில் அணுஆயுதமீட்டவை, இப்ப தமிழரை மீட் க வருகினம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In