இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளும் குண்டர்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கடத்தல், கொலை போன்ற மக்களை அச்சுறுத்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் பல செய்து மூலங்களிலிருந்து வெளியாகியிருந்தன. இப்போது அதே வகையான குற்றச் செயல்கள் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் தீவிரப்படுத்தப்படுள்ளதாகத் தெரியவருகிறது. மன்னாரில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அரசியல் நோக்கம் கொண்ட இவ்வாறான குற்றச் செயல்களின் பின்னணியில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் விசேட பிரிவொன்று செயற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.