சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள பூடான் சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை அயலுறவு அமைச்சர் பீரிஸ்சை திம்புவில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அயலுறவு அமைச்சர் பீரிஸ், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதாக கூறுவதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றார்.
இந்திய அரசு ஆதாரம் தந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பீரிஸ் கூறினார்.