கடந்த வாரம் சிங்கப்பூரில் நிறைவடைந்த சர்வதேச ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு, முதலிடத்தை வென்று, இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீராங்கனையான E.W. உபமாலி ரத்னகுமாரி, மீண்டும் இலங்கை திரும்பியபோது அவரை வரவேற்க, விளையாட்டு அமைச்சைச் சேர்ந்த எந்த அதிகாரியும் விமானநிலையத்துக்கு அனுப்பப்படவில்லை.
தங்கத்தை வென்று வந்த இந்த வீராங்கனை கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சாதாரண பேரூந்தில் புறக்கோட்டை பஸ்நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து அவரது சொந்த ஊரான தம்புள்ளைக்கு இன்னுமொரு பஸ்ஸில் செல்ல நேர்ந்துள்ளது.
இவர் பெண்களுக்கான 400M ஓட்டப்போட்டியில் சர்வதேச வீராங்கனைகளை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே நாள் அதிகாலை மகிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் விமானநிலையத்திற்குப் பயணம்செய்வதற்காக போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







