முன்னை நாள் புலிகளின் பிரதானியும் இன்றைய இலங்கை அரச உளவாளியுமான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் மாநாடு ஒன்று ஏற்பாடுசெய்யப்படுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, சுவிச்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தமிழ் அரச ஆதரவாளர்களைத் திரட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டின் நோக்கம் இலங்கை அரச சார்புப் பிரச்சாரங்களைப் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்வதற்கான தயார்படுத்தலாகும் என அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. நல்லிணக்கப் பேச்சுக்களுக்கான மாநாடு என்ற தலையங்கத்தில் நடத்தபடவுள்ள இந்த மாநாட்டிற்கான அழைப்பு கே.பியின் சிபார்சில் தயாராகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.