தமிழகத்தின் இரு பெரும் மக்கள் விரோத தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரைத் தாக்கி இன்னொருவர் அறிக்கை விடுவதோடு ஈழ மக்களுக்கோ அல்லது போராடிய போராளிக்குழுக்களுக்கோ எதுவும் செய்ததில்லை. மாறாக சமைய சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியே வந்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தின் கீழ் ஈழ விடுதலை ஆதர்வாளர்கள் அனைவருமே சிறைப்படுத்தப்பட்டன. கருணாநிதி ஆட்சியிலோ அடித்து துவம்சம் செய்யப்பட்டனர். “போரில் மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்றார் ஜெயலலிதா, “போரே நடைபெற வில்லை, மழை விட்டபின்னரான தூவானம்தான் அங்கே” என்றூ பல்லாயிரம் மக்கள் படுகொலைகளை மறைத்தார். கருணாநிதி. இதுதான் இந்த இரண்டு தலைவர்களின் யோக்கியமும் இந்நிலையில் கருணாநிதி ஒரு போர்க்குற்றவாளி அதற்கான ஆதாரங்களை ஐநாவிடம் கொடுப்போம் என்று ஜெயலலிதா அறிக்கை விட இப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக பதில் அறீக்கை விட்டிருக்கிறார் கருணாநிதி.ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா? இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, “”ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அறிக்கை மன்னன் கருணா………
ஓரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று
தத்துவம் உதிர்த்த வித்தகர் கருணாநிதி ஆட்சியை இழப்பதா ‘வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும்’ என்று வாழும் கருணாநிதி,ஸ்டாலினுக்கே ஆட்சியை விட்டுத்தராதபோது ஈழத்திற்காகவா ஆட்சியை துறப்பார்..?
தன் ஆச்சியைத் துறந்ததை கலைஜர் நினைவூட்டுகிறாரோ?ஆட்சியைத் துறப்பது எனில் அது ஆண்டவனாலும் முடியாதே.