சி.பிஎம். கட்சியினர் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்குமே எதிரானவர்கள். டில்லியில் இருந்து கொண்டு சிலர் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதுதான் தமிழக மார்க்ஸ்சிஸ்டுகளின் வேலை. இடது சாரிகள் அங்கீகரிக்கும் சுயநிர்ணய உரிமை குறித்து கூட பேச மறுக்கிறவர்கள்.என்கிற நிலையில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீரியசாகப் பேசியிருக்கிறார் சென்னையில்
செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழர்களை மறுகுடியமர்த்த இலங்கை அரசை, இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வலியுறுத்தி, மத்திய அரசின் சார்பில் அனைத்துக் கட்சியைச் சேர்நத் நாடாளுமன்றக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். என்றார் ராமகிருஷ்ணன்.
சி.பி.எம். இவ்வளவு தூரம் வந்ததே ஒரு “சாதனை”.
இந்தியா இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் எவ் வகையிற் குறுக்கிடுவதும் நல்லதல்ல.
ஒவ்வொரு அயற் குறுக்கீடும் இலங்கைக்கு, முக்கியமாகப் பாதிக்கப்பட்ட தேசிய இனத்துக்குக், கேடு தான் செய்துள்ளது.
சி.பி.ஐ.யும் சி.பி.எம்.மும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கத் திராணியற்றுப் போய் இன்று அதன் அடியாட்கள் போல நடந்து கொள்ளுகின்றன.
இது தான் திரிபுவாதம் நம்மைக் கொண்டு செல்லும் இடம்.