நீதித்துறைக்கெதிரான குற்றப்பிரேரணை உழைக்கும் மக்களுக்கும் எதிரான சவாலுமாகும்.- இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்-
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறைக்கு எதிராக சட்டத்துறை எனப்படும் பாராளுமன்றமும் நிறைவேற்றுத்துறை எனப்படும் ஜனாதிபதியும் புரியும் எதேச்சதிகாரமான நடவடிக்கைகள் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு தான் என்பதை எமது இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் எடுத்து கூற கடமைபட்டுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், இலங்கையின் நீதித்துறை மீது புரியபடுகின்ற பாராளுமன்ற, ஜனாதிபதி நிறைவேற்றுத்துறை புரிகின்ற சண்டித்தனம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு ஆளும் வர்க்கங்களின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியினருடன் இணங்கியோ அடிபணிந்தோ போவதென்பது, முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான வர்க்க நலன் பேணுவதற்கான பொறுப்பும் கடமைகளுமாகும். இதில் உழைக்கும் பாட்டாளிகள் விவசாயிகள் மற்றும் சுரண்டப்படுகின்ற வர்க்கங்களினதும், அடக்கப்படுகின்ற தேசங்கள் தேசிய இனங்கள் உட்பட்ட அனைத்து மக்களுக்கும் இருக்கின்ற பொறுப்பு யாதெனில் ஜனநாயக அபிலாஷைகளை நிலை நிறுத்துவதாக ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான இம்முரண்பாட்டில் முற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன்றி இவற்றையே புரட்சி என நம்பி ஏமாற கூடாது.
நாளாந்த வாழ்க்கையின் உரிமைகளுக்காகவும் ஜனநாயக மாற்றத்துக்காகவும் போராடுவது ஒத்துழைப்பு வழங்குவதென்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான அடிப்படையான தொழிலாளர் வர்க்க சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்கான முந்நிபந்தனையாகிறது என்பதில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இதன் அர்த்தம் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுயினரிடம் இருந்து இன்னொரு பகுதியனருக்கு அதிகாரம் சென்றடைவதற்கு உறுதுணையாக போராட்டங்களை தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்க வேண்டுமென்பதல்ல மாறாக ஒவ்வொரு சிறு சிறு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரட்டங்கலிலும் பாட்டளி வர்க்க புரட்சியை நோக்கிய பயணத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.
ஆகவே முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் இலங்கை கம்யூனிஸ்டுகளின் பாத்திரம் பிரதானமாக இருந்தது என்றாலும் அப்போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான அழுத்தங்களே அன்றி ஆட்சி மாற்றத்துக்கான அதாவது முதாலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தீர்மானத்துக்குரியனவாக கொள்ளப்பட்க்கூடாது.
இவ்வாறான போராட்டங்கள் தொடரும் தொடர வேண்டும் அதனூடே அனைத்து மக்களினதும் விடுதலைக்கான அடிப்படையை தேடும் பயணம் உறுதியானதாக இருக்க வேண்டும்.
அழைப்பாளர்கள்,
இ.தம்பையா
டபிள்யூ.சோமரத்ன








Dr. Shrani Bnadarnaike is indeed a Bandaranaike. This is 1952 and D. A. Rajapakse. Political Pluralism. That is all to it there. You must listen to Dr. Bandarnaike pronounce “fuel” in the Chemistry Lectures at Peradeniya Campus. 1973.