அல்ஜீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சிறைவைக்கப்பட்டுள்ள பல நாடுகளைச் சார்ந்த பணயக் கைதிகளை விடுக்கிறோம் என்று தாக்குதல் நடத்திய அல்ஜீரிய அரசாங்கம் பல பணயக் கைதிகளைக் கொன்றிருக்கிறது. குறைந்தது 30 பணயக் கைதிகளும் 11 தீவிர்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாளன் 17.01.2012 அன்று லிபியாவின் எல்லைப் பகுதியிலுள்ள இயற்கை வாயுத் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்திய அல்ஜீரிய அரச படைகள் பல பணயக்கைதிகளை விடுவித்துவிட்டதாகக் கூறுகிறது.
அல்ஜீரிய வனொலியோ பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக தொழிற்சாலையை இராணுவம் சுற்றிவளைத்திருப்பதாகக் கூறுகிறது.
மாலி நாட்டை ஆக்கிரமிப்பதற்காக பிரஞ்சுப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே பணயக் கைதிகள் பிடிக்கப்பட்டிருப்பதாக பிரித்தானிய பிரஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
மாலியை ஆக்கிரமித்திருக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அங்குள்ள தனது தரைப்படைத் துருப்புக்களை 1400 ஆக அதிகரித்திருக்கிறது. மாலியின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்த நாட்டின் தெற்குப் பகுதி எல்லைகளை நோக்கி நகர்ந்த போது பிரஞ்சு வான்படை மக்கள் குடியிருப்புக்கள்: மீதும் தாக்குதல் நடத்தியது. கடந்த ஒருவார காலமாக நடத்திய குண்டுத்தாக்குதல்களுக்குப் பலர் பலியானார்கள்.
லிபியா, சிரியாவிற்கு அடுத்ததாக பிரஞ்சு நாட்டின் எரிவாயுத் தேவையைப் பூர்த்திசெய்யும் அல்ஜீரியாவே குறிவைக்கப்படுகிறது என்று அரசியல் ஆய்வாளர்களால் முன்னதாகவே கூறப்பட்டது.
அல்ஜீரியாவில் பணயக்கைதிகள் பிடிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, மாலிக்கு துருப்புக்களை அனுப்பிவைக்க தான் முன்வந்த முடிவு சரியானதே என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதை முக்கியமான ஒன்றாகக் கருதுவதாகவும் பிரஞ்சு அதிபர் பிரன்சுவா ஒல்லோந் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக நடத்தப்படும் இனப்படுகொலைகள் இன்னும் தொடரும்.








