பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு தனது ஒன்று கூடலைப் பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் நடத்தியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதாவது ஒரு வகையில் பங்களித்த இக்கட்சிகள் புலம் பெயர் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் தலைமகள் இக்கட்சிகளுக்குப் பயன் பட்டுப் போவதைப் பெருமையாக எண்ணுகின்றன.
இந்த நிலையில் கொலைகளம் என அழைக்கப்பட்ட இலங்கையிலிருந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியோரை பிரித்தானிய அரசு இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஒரு தொகுதியினரே. ஏனையோர் விரைவில் அனுப்பிவைக்கப்படுவார்கள். மிகவும் கோரமான முறையில் விமாத்தில் திணிக்கப்பட்ட இவர்களின் உயிருக்கு இலங்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை.
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களுக்கான, உலக அங்கீகாரம் கொண்ட ஒரு தலைமையை புலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளாதவரை, இப்படியான சிங்களப் பேரினவாதிகளுக்கு உவப்பூட்டும் செய்திகள் ஊடகங்களில் நிறையவே வெளிவரும். அவர்களின் சகோதரியான இந்தியாவும் களிப்படையும். நாங்களும் கருத்துப் போர்புரிந்து செருக்கடைவோம். நமோ நமோ மாதா!, ஜெய்கிந்!!.
மீண்டுமொரு வரலாற்றுத் தவறு!முன்னது 1948- களில்.பின்னது,2011-ல்!
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களுக்கான உலக அங்கீகாரம் கொண்ட நாடுகடந்த அரசதலைமையை புலத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படடியான மாற்றம் நேர்மையாக வந்தால் மட்டுமே அடுத்த நகர்வு சர்வதேச அரசியல் மாற்றம்பெறவாய்புக்களதிகம்
அடிபணிவு அரசியல் பற்றி வெளி நாடுகளில் இருந்து கதைப்பவர்களும் எழுதுபவர்களும் நாட்டில் இன்னும் அச்சுறுத்தலுடனும் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது நாடு கடத்தப்பட்டவர்களில் மூவினத்தை சேர்ந்த அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட அப்படியொரு சூழ் நிலையும் இல்லாத வெறும் உழைக்கவென மாணவர் விசாவில் வந்தவர்களையே பிரித்தானியா அனுப்பியுள்ளது.
புதிதாக பிரி. உள் துறை அமைச்சு கொண்டு வந்த குடியேற்றவாதிகளின் சட்டத்தின் பிரகாரமே அனுப்பப்பட்டுள்ளனர்.
இங்கு மனித உரிமை என்ற பேச்சுக்கு இடமில்லை.
நீதி, நேர்மை, நியாயம், சட்டங்களை கடைப்பிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான். உலக யதார்த்தம் எப்படியெல்லாம் மாற்றமடைந்தாலும் கொண்ட கொள்கை மாறாதவன். வளைந்து கொடுக்காதவன். முறிந்து அவலம் வந்தாலும் பதறாமல் வாழக்கூடியவன். இப்போது வாழ்ந்தும் காட்டுகிறான். சத்தியம் தவறாத உத்தமன்போலவே………..