ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லை.
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு ஸ்வீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்’ என்று கூறினர். இதையடுத்து, இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் அசாஞ்சேவை ஸ்வீடன் நாட்டுக்கு கடத்த
பிரித்தானியாவில் புகலிடம் தேடிய பல தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இன்று இலங்கைக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளனர். தமிழ் அகதிகளை ஏற்றிய – PTV030 என்ற இலக்கமுடைய, வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் லண்டன விமான நிலையத்தின், வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்படவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் இலங்கையில் கைது செய்யப்படவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதற்கான நம்பகமான சான்றுகள் உள்ள போதும் இந்த
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், இன்று (2012-05-30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாடு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது. 2011 ஆம் ஆண்டின் இரு தரப்பு வர்த்தக வேகம் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.3 மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரக்கான விஜயம் ஒன்றினை
இந்திய எரிபொருள் நிறுவனமான ஐ.ஓ.சி. மீண்டும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான கோரிக்கைளை இலங்கை அதிகாரிகளிடம் விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தாம் இந்த விலையுயர்வு குறித்த கோரிக்கையை விடுத்துவருவதாக ஐஓசி தெரிவித்துள்ளது. இறக்குமதி வரிகளின் அதிகரிப்புக் காரணமாக பாரிய நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதனை ஈடுசெய்யும் முகமாகவே விலையுயர்வை கோருவதாக ஐஓசி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பெற்றோலின் விலையை 10 ரூபாவாலும்> டீசலின் விலையை 13 ரூபாவாலும் அதிகரிக்க ஐஓசி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் 2003
2009 இல் - இன அழிப்பைத் துரிதப்படுத்துவதற்காக £700000 பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய அரசு இலங்கைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கியிருந்தது. 2009 மே மாதம் யுத்தம் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த சில மாதங்களுக்கு உள்ளாகவே 1 மில்லியன் பவுண்ஸ் பெறுமானமுள்ள ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியது.
உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு
ஜூன் 1ம் தேதி முதல் நான்காம் நாள் முடிய இலங்கையின் தலைநகர் கொழும்பில் பாரதியார் விழாவும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடும் நடத்துவதாக கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன. இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது, இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜபட்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற
நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸ் உட்பட்ட பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாண குடாநாட்டின் தற்போதைய நிலைமையை ஆராயும் முகமாகவே இந்த விஜயம் அமையவுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிக இராணுவ பிரசன்னம் குறித்து இந்தக்குழு ஆராயவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தாம் அண்மையில் லண்டனுக்கு சென்றிருந்த வேளையில் விடுத்த அழைப்பை ஏற்றே இந்தக்குழு இலங்கை வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக்குழுவில் 10 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசியதன் விவரம்: முல்லைப் பெரியாறு பிரச்னையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆய்வின் முடிவில் அந்தக் குழு தந்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல கருத்துகள் ஒருதலைப்பட்சமானவை. கேரளம் அவற்றை ஏற்றுக் கொள்ளாது. இப்போதுள்ள அணையின்