May, 2010

Page 1 of 1712345...10...Last »

உருத்திரகுமாரிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..

உருத்திரகுமாரிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..

தமிழின ஒற்றுமையின் பொற்காலமது... புலம் பெயர் மக்கள் நான்காவது ஈழப் போருக்கு தாமகவே முன்வந்து, பணம் பொருள் தங்களின் உணர்வு என்ற அனைத்தையுமே அர்ப்பணித்திருந்தார்கள்.

ராஜபக்ச குடும்பத்தில் பூசல் உருவாகிறது…

ராஜபக்ச குடும்பத்தில்  பூசல்  உருவாகிறது…

திருடும் பணத்தை அமைச்சர்களும் கட்சி உறுப்பினர்களும் பங்கு போட்டுக்கொள்வது பாராளுமன்ற வழமை. ராஜபக்ச குடும்பத்தினர் தமது உறவிர் வட்டத்தினுள்ளேயே இந்தப் பங்கீட்டை நிகழ்த்துவதால் கட்சியிலும் அமச்சர்கள் தரப்பிலும் பெரும் அதிர்ப்த்தி நிலவுகிறது. இதே வேளை ராஜபக்ச குடும்பத்தின் உள்ளேயும் பூசல்கள் உருவாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ பொறுப்பின் கீழ் இயங்கும் நீலப்படையணியின் செயற்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விசேடப் பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் பிரதானிகளாக அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர்

திட்டமிட்டே இலங்கை அரசு மருத்துவ மனைகள்,நிறுவனங்கள் மீது தாக்குதல் : லூயிஸ் ஆர்பர்

திட்டமிட்டே இலங்கை அரசு மருத்துவ மனைகள்,நிறுவனங்கள் மீது தாக்குதல் :  லூயிஸ் ஆர்பர்

The International Crisis Group இன் தலைவர் லுயீஸ் ஆர்பரின் சாட்சியம் சரவதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. புலிகள் தமது சொந்த மக்களைத் தாக்கியுள்ளனர் என்பதைத் தமிழர்களும், இலங்கை அரசின் ஆதர்வாளர்கள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைப் புரிந்துகொளவேண்டும். எமது அறிக்கை வெளியிடப்பட்ட போதுநாம் சர்வதேச விசரணைகளைக் கோரியிருந்தோம். இலங்கை அரசாங்கம் ஆச்சரியப்படத் தக்கவகையில் அதனை நிராகரிக்கிறது என்று மேலும் குறிப்பிடுகிறார். இவர் கருத்தின் உள்நோக்கம் என்வென்பதற்கு அப்பால் இதுவரை வெளியான அறிக்கைகளுள் லூயிஸ் ஆர்பரின் கருத்து

கொழும்பு திரை விழா மோகன்லால், மம்முட்டியும் புறக்கணிப்பு- ஜெகத் கஸ்பார்?

வருகிற மூன்றாம் தியதி கொழும்பில் நடைபெறும் iifa அமைப்பின் இந்தியத் திரைப்பட விழா இந்திய திரையுலகினருக்கு தொழில் ரீதியான பல தர்மசங்கடங்களை எதிர் நோக்கியுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் இந்த விழாவுக்குச் செல்பவர்களின் படங்களை புறக்கணிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகைச் சார்ந்தவர்கல் இவ்விழாவை புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது. மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, புனித் ராஜ்குமார் ஆகியோரும் இலங்கை விழாவை புறக்கணித்து

மேற்கு வங்க ரயில் கவிழ்ப்பு மாக்ஸ்சிஸ்டுகளின் சதியே காரணம்- மாவோயிஸ்டுகள்.

மேற்கு வங்க ரயில் கவிழ்ப்பு மாக்ஸ்சிஸ்டுகளின் சதியே காரணம்- மாவோயிஸ்டுகள்.

மேற்கு வங்கம் மிதினாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் சதி வேலை காரணமாக தண்வாளம் தகர்க்கபப்ட்டத்தில் சிக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயிலுடன் மோதியதில் 120-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ரயில் கவிழ்ப்புச் சதிக்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்று மத்திய அரசும் ரயில்வேதுறையும், மேற்குவங்கத்தை ஆளும் சி.பி.எம் கட்சியினரும் கூறிவந்தனர். மாவோயிஸ்டுகளோ இத்தாக்குதலுக்கு நாங்கள் கரணமல்லா இத்தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கவும் இல்லை என்றும் மறுத்தனர். இந்நிலையில் மாவோயிஸ்டு ஆதரவு அமைப்பான போலீஸ் அராஜகத்துக்கு எதிரான

இனம் திராவிடன் என்றும் மதம் நாத்திகன் என்றும் போட வேண்டுமாம்- சொல்கிறார் தி.க கம்பெனி ஓனர்.

இனம் திராவிடன் என்றும் மதம் நாத்திகன் என்றும் போட வேண்டுமாம்-  சொல்கிறார் தி.க கம்பெனி ஓனர்.

பெரியார் துவங்கப்பட்டு இன்று வீரமணியின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டு விட்ட பிரமாண்ட தன்னார்வ நிறுவனமான திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியோடும் ஒட்டிக் கொள்ளும் வீரமணி நாளை சாய்பாபா ஆட்சி தமிழகத்தில் வந்தால் அவரோடு ஒட்டுக் கொள்ளத் தயங்காத இந்த சமூக நீதி வீரர். பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு அபூர்வாமான கருத்தொன்றை சொல்லியிருக்கிறார். ” 2011ம் ஆண்டு மக்கள் தொகை

தமிழுக்கு ஆபத்து ஹிந்தி மொழியல்ல;​ ஆங்கில மொழியால்தான் நிகழும் – ச.தமிழ் செல்வன்

உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடும்,​​ தமிழாசிரியர் நிலையும் என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ​நடைபெற்றது.​ ​ இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: காங்கிரஸ் கட்சிக்கும் சுதந்திரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அதே உறவு போன்றதுதான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் தமிழுக்கும் உள்ளது.​ ஆனால் 43 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்,​​ வட்டார வழக்குகள் அகராதிகள் வெளிக்கொணரப்படவில்லை.​ வெளிக்கொண்டுவரப்பட்ட ஒன்றிரண்டு வட்டார வழக்கு அகராதிகளும் தனிப்பட்ட நபர்களின் முயற்சியாலேயே வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியா ஆயுதங்களை வழங்கியது : மகிந்தவின் வாக்குமூலம்

இந்தியா ஆயுதங்களை வழங்கியது :  மகிந்தவின்  வாக்குமூலம்

புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிவடையவில்லை அவர்களின் அனுதாபிகளுன் தலைமறைவு உறுப்பினர்களும் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் பல நாடுகளில் அந்தந்த நாடுகளின் ஆதரவுடன் வாழ்கிறார்கள். புலிகளின் அத்தியாயம் இன்னும் முடிந்துவிடவில்லை. இவ்வாறு மகிந்த ராஜபக்ச இந்தியா ரைம்ஸ் ஒப் இந்தியா என்னும் இதழிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தவிர, இந்தியா இராணுவரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் போரிற்கு ஆதரவு வழங்கியது என்று மேலும் இந்தச் செவ்வியின் போது தெரிவித்த மகிந்த ராஜபக்ச, எல்லா சாத்தியாமான ஆயுதங்களையும் இந்தியா வழங்கியிருந்தது என்றும்

புலிகள் மீதன இந்தியத் தடை – முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே : ஊடக அமைச்சர்

புலிகள் மீதன இந்தியத் தடை – முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே : ஊடக அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை ஓர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நோக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தலை தூக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், புலிகளை அரச படையினர் முற்றாக இல்லதொழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில புலி ஆதரவு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளது. எனினும், விடுதலைப் புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வாய்ப்பு

இலங்கை யுத்தக்குற்றம் : ஐக்கிய நாடுகளை நம்பமுடியாது

இலங்கை யுத்தக்குற்றம் : ஐக்கிய நாடுகளை நம்பமுடியாது

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில வேளைகளில் இந்த விசாரணை முடிவுகள் நீதியின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில ஊடகமான பொஸ்டன் க்ளோப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, ஐக்கிய

Page 1 of 1712345...10...Last »