ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த மிகப்பெரிய கடைசி விசாரணையாகக் கருதப்படும், மியூனிச்சில் நடக்கின்ற விசாரணை ஒன்றில், ஜோண் டெம் ஞான் ஜுக் என்னும் உக்கிரேனிய- அமெரிக்க வயோதிபர் ஒருவர் விசாரிக்கப்படுகிறார். ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்கான நாஜிகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக சொபிபர் மரண முகாமில் சுமார் முப்பதினாயிரம் பேரை கொலை செய்வதற்கு உதவும் நடவடிக்கையில் ஒரு காவலராக இவர் பணியாற்றினார் என்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருந்த,
இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மற்றுமொரு பிரதான காரணி பௌத்தமதமும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களுமாகும். இப்பௌத்த பீடங்கள் பின் காலனிய அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. சோவனிச, பேரினவாத அரசியல் இங்கு தான் உற்றெடுக்கின்றது. முன்னை நாள் இராணுவத் தளபதியும் மகிந்த அரசுடன் இணைந்து இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்தவரும் எனக் கருதப்படும் சரத் பொன்சேகா இன்று பௌத்த பீடாதிபதிகளிடம் ஆசிபெற்றுள்ளார். இப்பீடங்கள், யுத்தம் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சவிற்கு இலங்கையின் அதியுயர் விருதை வழங்கிக் கௌரவித்ததன
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயமாகும். அன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல் வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியுமென நான்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய தகுதியான வேட்பாளர் இரா. சம்பந்தன் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் சார்பில்
விலைவாசி உயர்வை கண்டித்து மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே ஹவுரா நகரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிங்கள் பௌத்தர்களின் நாடு; வேண்டுமானால் சிறுபான்மையினர் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று நாஷனல் போஸ்ட் என்ற கனடாவைச் சார்ந்த பத்திரிகை உட்படப் பல சந்தர்ப்பங்களில் நேர்காணல் வழங்கியவர் சரத் பொன்சேகா. இவரது இச் செவ்விகளின் பின்னர் பாக்கியசோதி சரவணமுத்துவின் தலைமையிலான சிபிஏ அமைப்பும் நீண்ட கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.இதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாத சரத் பொன்சேகா இப்போது ஊடகவியலாளர்களைக் குற்றம் கூறுகிறார்.இது தொடர்பான கேள்விக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறார்: நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து ஈரோட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக நடத்திய காலித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இளங்கோவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்திருப்பது காலித்தனத்தை
தங்களைப் பிறர் ஒத்த ஒரு மனிதனாகக்கூட உணர அனுமதியாத சமூகத்தினருக்கு மத்தியில் மாவோயிஸ்டுகள் தாம் பழங்குடியினருக்கு அவர்களின் யானை பலத்தை உணர்த்தியுள்ளனர்.
20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. உலகளவிலான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பை குறிக்கும் ‘சிகப்பு நாடா சின்னம்” அல்லது ‘உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்” ஆண்டுதோறும்
கனடாவில் பௌத்த விகாரை ஒன்று எரிக்கப்பட்டதை புளட் இயக்கத்தின் கனடா பிரிவு கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. கனடாவின் ரொறன்ரோ கிங்ஸ்ரன் வீதியில் அமைந்திருந்த பௌத்த விகாரை எரிக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்விதமான நடவடிக்கைகள் தமிழ்மக்களின் விடியலுக்கு எந்தவித விமோசனத்தையும் தரமாட்டாது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இப்படியான தாக்குதல்களே, அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பாக சர்வதேச நாடுகள் பலவும் முத்திரை குத்துவதற்கு வழிகோலியது. ஆகவே ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை தாக்குவதன் மூலம் எதிர்கால