விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கெரில்லாக்களின் உடையணிந்த சடலம் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பகுதி ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்தப் பகுதியில் காயத்தை மறைப்பதற்காக அது இருக்கலாம். அந்த சடலத்தின் மரபணுச் சோதனைகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது. அவர் நேற்று கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசாங்க ஊடகங்கள் கூறியதற்கு மாறாக,
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,