31.08.2008. தமிழ் நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு தமிழ் நாட்டு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தூதரகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.
31.08.2008. வெனீஸ் நகரில் நடந்து வரும் திரைப்பட விழாவில் இவ்வாரக் கடைசியில் காண்பிக்கப்படுகின்ற ஒரு திரைப்படமான மச்சான், வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பில் உருவான மிகச் சில இலங்கைத் திரைப்படங்களுள் ஒன்று. ஜெர்மனியில் குடியேறவேண்டும் என்பகிற உண்மை உள்நோக்கத்துடன் இருக்க, ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவது என்ற போர்வையில் அந்நாட்டுக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் பற்றிய உண்மைச் சம்பவம்தான் இந்த படத்தின் கதை. திரைப்படத் தயாரிப்பாளர் உபெர்டோ பசோலினியின் பார்வையில் பட்ட ஒரு செய்திக் குறிப்பு கொழும்பை மையமாகக்
31.08.2008 சென்னை: பெரியாரின் கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர்
31.08.2008 தில்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், ஐரோப்பாவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளார். இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்த தஸ்லிமாவுக்குக் கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் தில்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் இந்தியாவிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் தஞ்சமடைய தஸ்லிமா முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாகச் செய்திகள்
31.08.2008 பருவகால மழை ஆரம்பித்திருப்பதும் எதிர்வரும் 4 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதும் வன்னியில் இடம்பெயர்ந்த அகதிகளை தங்கவைப்பதில் பாரிய நெருக்கடி நிலையை தோற்றுவித்திருப்பதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் கவலை தெரிவித்ததுடன் அகதிகளை தங்கவைக்க தற்காலிக கூடாரங்களை வழங்குமாறு ஐ.நா. முகவரமைப்புகளிடமும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருப்போரின் அவலநிலை குறித்து மேலதிக அரச அதிபர் கந்தசாமி பார்த்திபன் தெரிவித்திருப்பதாவது; முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலர்

மதுக்கடையின் வாசலில் காத்திருக்கிறாள் உஷா. மது போதையில் கடந்து போகும் சிலர் அவளை கவனிப்பதில்லை. குழம்பிய சித்தத்தோடு யாருடனாவது உரையாட ப்ரியப்படும் போதை மனிதர்கள் சிலர் உஷாவிடம் தலையைச் சொறிந்தபடி தங்களின் சோகங்களைச் சொல்கிறார்கள்.சில நேரங்களில் தலைக் குழைத்தபடியும் நாக்கைத் துருத்தியும் கதைகளை கேட்கும் உஷாவுக்கு ரத்தமும் சதையும் சுண்டிப் போய் விட்டது. காலம் கிழித்தும் கழித்தும் போடும் கோடுகளில் உஷா இன்று கிழவி. பல ஆண்டுகளாய் போலிஸ் மோப்ப நாயாக...
30.08.2008. சீனாவும் இராக்கும் சுமார் 300 கோடி டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன் றில் கையொப்பமிட் டுள்ளன. 2003-க்குப் பின் அதா வது இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பின், இராக் அன்னிய நாடு ஒன்றுடன் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம் பெய்ஜிங்கில் வியாழனன்று கையொப்ப மானது. இந்த ஒப்பந்தத்தை இராக் அமைச்சரவை ஏற்க வேண்டும். சீன தேசிய பெட்ரோலியக் கழகத் துடன் இராக் அரசு ஒப் பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தப்படி பாக் தாத்துக்கு தென்கிழக்கே உள்ள அடாப்
30.8.2008. தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாம் நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த எட்டு மாதங்களில் 249 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 15ம் திகதி வரையில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு அமைச்சர்களும், ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர்.சுமார் எட்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் முதன் முதலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நாடாக
சனி, 30 ஆகஸ்ட் 2008( 13:43 IST ) அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு நாடுகளுடன் (Nuclear Suppliers Group – NSG) அணு சக்தி வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கேட்டு நமது நாட்டின் சார்பாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவில் ஒப்புக்கொள்ளபட்ட அடிப்படைகளில் எந்த திருத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது. சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரண் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அணு

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பனியில் கலந்து கரைந்து போன இரவு…