Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன்

இனியொரு... by இனியொரு...
07/27/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts
சுனாமி நிதியுதவி என்ற பெயரில் இலங்கை சென்ற ஜோர்ஜ் பூஷ் மற்றும் பில் கிளின்டன் - 2004
சுனாமி நிதியுதவி என்ற பெயரில் இலங்கை சென்ற ஜோர்ஜ் பூஷ் மற்றும் பில் கிளின்டன் – 2004

அமெரிக்க அரசு போராட்டங்களை அழிப்பதற்கும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளில் (counterinsurgency) ஈடுபடுவதற்கும் பணம் வழங்குவதற்கான அரச அமைப்பின் பெயர் யூஸ்எயிட்(USAID). இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய அழிவுகள் புதியவை அல்ல. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 1972 ஆம் ஆண்டிலேயே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது.

இலங்கையின் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மார்கா என்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கியது. இந்த நிறுவனத்தின் ஊடாக பல்வேறு உள்ளகத் தகவல்களி அமெரிக்க அரசு ஆவணப்படுத்திக்கொண்டது.

2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி USAID ஐ பொலீவிய அரசாங்கம் வெளியேற்றியது.

USAID இன் ஆகிரமிப்பு
USAID இன் ஆகிரமிப்பு

பொலீவியாவில் மட்டுமல்ல வெனிசூலா உட்பட ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இன் அழிவு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டன. வெனிசூலாவில் அமெரிக்க சார்பு அரசைத் தோற்றுவித்து அங்குள்ள எண்ணைவளத்தை அபகரிப்பதற்காக இந்த அமைப்பு மேற்கொண்ட சதி நடவடிக்கைகள் விக்கிலிக்ஸ் கேபிள்களில் வெளியாகின.

வியட்னாமியப் போராட்டம், நேபாளப் புரட்சி, சண்டினிஸ்டா போராட்டம் உட்பட உலகின் அனைத்து எழுச்சிகளையும் போராட்டங்களையும் அழிப்பதில் USADI இன் பங்கு பிரதானமானது. போராட்டங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் போர் முடிந்த பின்னரும் உளவு வேலைகளில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பைத் இலகுபடுத்துவதற்கு USADI பயன்படுகிறது.

USAID இன் அண்மைக் கால நடவடிக்கைகள் சில:

– 2009 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 16ஆம் திகதி, தலிபான்கள் USAID இன் அலுவலகம் ஒன்றைக் குண்டுவைத்துத் தகர்த்தனர். அதன் பின்னர் உயர் மட்ட USAID அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள் கவனத்திற்குரியவை. அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ, USAID இன் பெயரைப் பயன்படுத்தியே ஆப்கானிஸ்தானில் தலைமறைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

– 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி USAD இன் நிதியில் இயங்கும் Development Alternatives Inc என்ற அமைப்பு மோபைல் தொலைத்தொடர்பு வலையமைப்பை ஊடுருவியதாகவும், கொம்யூட்டர் வலையமைப்பை ஊடறுத்ததாகவும் கியூபாவில் ஆதாரபூர்வமாகக் குற்றம் சுமத்தப்பட்டது. Development Alternatives Inc இன் ஊழியர் ஒருவரே இவ்வாறான குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டு அமெரிக்க அரச காங்கிரஸ் 40 மில்லியன் டொலர்களை கியூபாவில் செயலாற்றும் USAID இற்கு ஒதுக்கீடு செய்தது.

– மனிதப் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, போரின் பின்னர் USAID ஐ அங்கு களமிறக்கியது. ஆய்வு வேலைகள் என்ற கோதாவில் USAID உளவு வேலைகளில் ஈடுபட்டது.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்காகவும் சுதந்திரமான சந்தை எனப்படும் பல்தேசிய நிறுவனங்களின் ஊடுருவலுக்காகவுமே USAID செயற்படுவதாக தனது நோக்கங்களைக் வெளிப்படுத்தும் USAID இன் அழிவு வேலைகள் அண்மையில் ஹெயிட்டி உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வெளிவந்துள்ளது.

usaid_cartoonUSAID இன் முதலாவது நடவடிக்கை வியட்னாமியப் போராட்டத்தை அழிப்பதற்கே பயன்பட்டது. 1962 ஆம் ஆண்டு வியற்னாமிய கம்யூனிஸ்டுக்கள் தலைமை தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்காக USAID இன் திட்டம் கிராம மட்டத்திலான உள்ளூர் அரசியல்வாதிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. இற்காக 10 மில்லியன் டொலர்களை அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கியது.

இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய (2004) காலப்பகுதியில் நேரடியான அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த நிறுவனம் பல்வேறு உளவு வேலைகளில் ஈடுபட்டது. புலிகளுடன் இறுதிக் காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பலர் USAID இன் ஊடாகவும் நேரடியாகவும் அமெரிக்க அரசினால் உள்வாங்கப்பட்டவர்களே.

இவர்கள் பொதுவாக அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகவே செயற்பட்டு புலிகளை மிகத் தந்திரமாக அழித்தனர். அதன் பின்னரான ஆறு வருடங்களில் மீண்டும் எழுச்சி ஒன்று ஏற்படாதவாறு திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

தமிழ்ப் பேசும் மக்களைப் பிரித்து மேய்ந்து, சிதைத்துச் சீரழித்து அமெரிக்க அரசின் தீயில் சாம்பல் மேடுகளை மட்டுமே எச்சமாக விட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
நோர்வேயின் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சூல்கையிம் Development Co-operation Directorate (DCD-DAC) என்ற அமைப்பின் தலைவராகச் செயற்படுகிறார். இந்த நிறுவனத்திற்குப் பிரதானமாக நிதியுதவி வழங்கிவருவது USAID ஆகும். அண்மையில் உலகத் தமிழர் பேரவை மற்றும் இலங்கை அரசிற்கும் இடையேயான பேச்சுவாத்தையின் போது எரிக் சொல்கையிமும் கலந்துகொண்டார்.

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்ட போராளிகளின் புனர்வாழ்வு மையத்தின் பிரதான நிதி வழங்குனர் USAID நிறுவனமே.

சந்திர நேரு
சந்திர நேரு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான சந்திர நேரு, 2009 ஆம் ஆண்டு இனியொருவிற்கு வழங்கிய பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் அமெரிக்க அரசின் பாதுகாப்பிலேயே புலிகளுடனான பேச்சுக்களுக்கு இடைத் தரகர்களாகச் செயற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேச்சுவார்த்தைக்கு இடைத் தரகராகச் செயற்பட்டவர்களில் ஒருவர்.

2004 ஆம் ஆண்டு சுனாமி காலத்தில் பில் கிளிங்டன், ஜோர்ஜ் புஷ் உட்பட்ட குழுவொன்று இலங்கைக்குப் பயணம் செய்தது. அக்காலப்பகுதியிலேயே USAID இன் நடவடிக்கைகள் அதிகரித்தன. 2004 ஆம் ஆண்டு இன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதும் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஊடுருவி மாற்றத்தை ஏற்படுத்த முனைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனாமிக் காலத்தில் தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த பன் கீ மூன் ஊடாக ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கப்பட்டது. ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் வட-கிழக்கில் தேர்தலைப் பகிஷ்கரிகுமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதில் USAID முகவர்களின் பங்கு இருந்திருக்கலாம். மகிந்த ஆட்சிக்கு வந்ததும், இனவழிப்பிற்கான திட்டங்கள் அமெரிக்க இந்திய அரசுகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் அனைத்தும் தயாரான நிலையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டில் இனவழிப்பு நிறைவிற்கு வந்தது.

இனப்படுகொலையின் பின்னர், அதற்கு எதிராக உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் ராஜபக்ச அரசால் அழிக்கப்பட அமெரிக்க அரசுடன் இணைந்து அழிவிற்குத் துணை சென்றவர்கள் எஞ்சியிருந்தனர். அவர்கள் அமெரிக்கவின் பங்கை மூடி மறைத்து உலக மக்கள் மத்தியில் தமிழர்கள் அமெரிக்காவின் அடியாட்கள் என்ற பொது அபிபிராயத்கை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இறங்கினர். அமெரிக்கா போர்க்குற்ற விசாரணை செய்து இனக்கொலையாளிகளைத் தண்டிக்கும் என மக்களைச் சமாதானப்படுத்தி தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனfர். அழித்தவர்கள் தலைமையை கையகப்படுத்தினர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்கா விரும்பிய சுரண்டலுக்கான சூழல் தோன்றியது. அதற்கு எதிராகவும் ஆட்சி மாற்றத்திற்கு எதிராகவும் குரல்கள் எழும் என்பது வெளிப்படையானதே, இந்த நிலையில் எதிர்த்தரப்பினரையும் அமெரிக்க அடியாள் படைகளாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள்

முன்னணியும் அமெரிக்க ஏகாதிபத்திய அணியைப் பிடித்தே மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம் எனக் கூறுவது இதனால்தான். போராட்டத்தை அழிக்கத் துணை சென்ற முகவர்கள் மட்டுமே இன்றைய தமிழ் அரசியலைத் தலைமை தாங்குகின்றனர்.
இனப்படுகொலையின் போது, புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடும் நபர்கள், தொடர்பாளர்கள், இடைத்தரகர்கள் போன்ற அனைவருமே அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டவர்களும் அமெரிக்க அரசுடன் தொடர்பிலிருந்தவர்களுமே.

பொதுவாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு மேலும் அழிவுகளை ஏற்படுத்த முயல்பவர்களை இலகுவாக அடையாளம் காணலாம். அமெரிக்க அரசிற்கு எதிராகவும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர்கள் செயற்பட மாட்டார்கள். சுன்னாகத்தில் நடைபெற்ற அழிப்பின் பின்னணியில் செயற்பட்ட எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தை இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் காரணத்தின் பின்புலம் இதுவே. அமெரிக்க அரசின் தலைமையிலான சர்வதேசம் தொடர்ந்தும் அழிவுகளை ஏற்படுத்த முனைந்தாலும் அதன் பிரச்சார முகவர்கள் போன்றே செயற்படுவார்கள்.

தமிழர்களின் பிரதேசத்திற்கு உதவி வழங்குமாறு போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்காவில் ஒன்றுகூடிய கஜேந்திரகுமார்: 2005
தமிழர்களின் பிரதேசத்திற்கு உதவி வழங்குமாறு USAID போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்காவில் ஒன்றுகூடிய கஜேந்திரகுமார்: 2005

வன்னியில் புலிகள் அழிக்கப்பட்ட போது USAID இன் பங்கை பலர் அறிந்திருக்கவில்லை. இன்று தகவல்கள் வெளிப்படையான பின்னரும் அதே நடவடிக்கைகள் தொடர்கின்றன. அமெரிக்காவின் சர்வதேச விசாரணை என்ற நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து வடக்குக் கிழக்கில் தனக்கு வாக்களிக்கக் கோரும் கஜேந்திரகுமார், 2005 ஆம் ஆண்டு துரிதமான உதவி வினியோகத்தைச் செயற்படுத்துமாறு USAID இன் கரங்களைப் பிடித்து அழைத்துவந்தார்.

வாஷிங்டனில் கஜேந்திரகுமார் USAID உட்பட்ட நிறுவனங்களை அழைத்துவருவதற்கு நடத்திய கூட்டத்தில் IOM . போன்ற அமைப்புக்கள் கலந்துகொண்டன.

2009 ஆம் ஆண்டில் வன்னிப் படுகொலைகளுக்கும் அதன் பின்னரான சீர்குலைவுகளுக்கும் USAID, IOM போன்ற நிறுவனங்கள் காரணமாகின.

1951 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்பட்ட IOM அமெரிக்க அரசின் தேவைகளுக்கு ஏற்ப அகதிகளைக் கையாளும் நிறுவனமாகும். 91 உறுப்பு நாடுகளைக் கொண்ட IOM அகதிகளைத் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்ற பலர் போர்க்குற்றம் சுமத்தப்படுகின்றனர். இவர்களை இலங்கை அரசிடம் திருப்பி ஒப்படைக்க IOM பயன்படுத்தப்படலாம். அரசியல் அறீவீனம் காரணமாகவே கஜேந்திரகுமார் அமெரிக்க அரசிடம் சரணாகதி அடைந்தார் என அவர்களின் தரப்பில் சிலரால் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மையானால் கஜேந்திரகுமாரும் குழுவினரும் சுய விமர்சனம் செய்துகொண்டு மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கலாம்.

அமெரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளைச் சர்வதேசம் என அழைத்து அவைகளை நம்புமாறு மக்களைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்று கஜேந்திரகுமாரின் அரசியல் சுலோகங்கள் அமெரிக்க அரசின் நலன்களுக்கானவையே தவிர தமிழ்ப் பேசும் மக்களுக்கானவை அல்ல.

இவை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டும் கஜேந்திரகுமார் குழுவை முன்னிறுத்தி அரசியல் நடத்தும் முகநூல் விசிறிகள் தமிழ் மக்களின் அழிவை விரும்புகின்றனரா? அவர்களில் எத்தனைபேர் அமெரிக்க உளவாளிகள்??

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கஜேந்திரகுமாரின் அழிவு அரசியலுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு இணையான அமெரிக்க்அரசின் அடியாள் எம்.ஏ.சுமந்திரன் என்பதில் யாருக்கும் சந்தேகங்கள் இல்லை.

இலங்கைப் பாசிச பாராளுமன்ற அரசியல் ஊடாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை மக்கள் மிக நீண்ட காலத்தின் முன் உணர்ந்துள்ளனர். மக்கள் பாராளுமன்ற ஆட்சியில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்த வேண்டுமாயின் வாக்களிப்பு நிலையங்க்ளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பதே இன்று அவர்கள் முன்னால் உள்ள தெரிவு.

இல்லையெனில் தமிழ்ப் பேசும் மக்களை அழித்த உளவு நிறுவனங்களின் முகவர் கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களிக்கவேண்டிய அவல நிலைக்கு உள்ளாகிவிடுவார்கள். பாராளுமன்றத் தேர்தல் ஊடாக பிச்சையெடுக்கும் அவலமான சமூகம் ஒன்றை உருவாக்கத் துணை செல்வதற்குப் பதிலாக உரிமைக்காகப் போராடுவதற்காக மக்களை அணிதிரட்டுவதே இன்று ஒவ்வொருவர் முன்னாலும் உள்ள கடமை.

தகவல் ஆதாரங்கள் :

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=15479

ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த பான் கீ மூன் நிதி வழங்கினார்
நடேசன், புலித் தேவன் உட்பட அனைவரையும் கொலைசெய்ய உத்தரவு பிறப்பித்தது கோதாபாய ராஜபக்க்ஷவே!

L.A. Times’ Distorted Report on USAID

http://www.afsa.org/counterinsurgency-vietnam-lessons-today

Click to access a140114p.pdf

http://www.oecd.org/dac/dacchaireriksolheim.htm

http://www.noborder.org/iom/index.php.html

Click to access PDACA068.pdf

CIA Front, USAID, “Spreading Democracy”, Gearing Up in Ukraine – Suharto II?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
எப்பிடி எடுப்பியள் தீர்வு? : ஈழமாறன்

எப்பிடி எடுப்பியள் தீர்வு? : ஈழமாறன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...