Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கொடை மடம் :: வி.இ.குகநாதன்

இனியொரு... by இனியொரு...
11/08/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழில் `கொடை மடம்` என்றொரு சொல்லணி உண்டு.  கொடை என்பது எல்லோரும் அறிந்ததே {கொடுத்தல்/ ஈகை}.  மடம் என்றால் `அறியாமை` என்ற ஒரு பொருளுமுண்டு.

சான்று:

https://agarathi.com/word/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

எனவே கொடை மடம் என்பது `அறிவற்ற ஈகை` எனக் கொள்ளலாம் (அதனால் பெறுபவர்களுக்கு என்ன பயன் என்ற அறிவற்ற கொடை).  இன்றைய எடுத்துக்காட்டில் சொன்னால், வேறு புலத்திலிருந்து தாயகத்துக்கு ஆடைகளாக உதவி செய்யும் போது இங்குள்ள குளிர்தேயத்துக்கேயுரிய ஆடையினை(Warm winter jacket) வாங்கி அனுப்புவதனைக் கூறலாம்.

     இந்த கொடை மடம் என்ற சொல்லுக்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் “வெளிப்படையாகத் தோன்றும் கண்டனச் சொற்களில் புகழ்ச்சி உட்பொதியக் கூறுவது” எனக் குறிப்பதாக உ.வே.சா பதிவு செய்கின்றார். {இதை விளங்குவதாயின் `வஞ்சப் புகழ்ச்சிக்கு எதிரான` ஒரு ஆக்கமாக அறிவற்ற ஈகையுடன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளலாம் என நான் கருதுகிறேன்}. இதற்கான காட்டாக, பின்வரும் பாடலையும் உ.வே.சா காட்டுகின்றார்.

 “பாரி பாரி என்று பல ஏத்தி,

 ஒருவற் புகழ்வர்,

செந் நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்,

மாரியும் உண்டு”

 : புறம் 107

      மேலுள்ள பாடலில், கபிலர் பாரியை இகழ்வது போலப் புகழ்கிறார்.  இதனையே `கொடை மடம்` எனலாம்.  பொது வழக்கில் தேவையற்றோருக்கான பொருத்தமற்ற கொடைச் செயலே `கொடை மடம்` எனப்படும்.

          கொடை மடம் தொடர்பான சில சங்ககால நிகழ்வுகளாகப் பாடப்படுபவை.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி>> புறம் 201.

மயிலுக்குப் போர்வை கொடுத்த  பேகன் >>சிறுபாண 84.

காரி  வரையாது வழங்கிய தேர்கள் மழைத்துளிகளிலும் பல>> சிறுபாண91.

  ஆய்  நீலமணியினையினையும்  நாகம் கொடுத்த கலிங்கத்தினையும் ஆல அமர்ச் செல்வனுக்கு கொடுத்தமை >> சிறுபாண45.

நள்ளி  பின்னர் வறுமையே வராதளவுக்கு நிறையக் கொடுப்பவர்>>சிறுபாண 103.

வல்லில் ஓரி தனது நாட்டையே இரவலர்க்குக் கொடுத்தல்>>சிறுபா 107.

   பாடல்களை விரிவாகப் பார்க்க, கீழுள்ள இணைப்பில் முனைவர் காயத்திரியின் கட்டுரையினைக் காண்க.

http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N2/ts_v3_n2_i1_018.pdf

    மேற் கூறிய பாடல்கள் சொல்பவை எல்லாம் கொடை மடமே. மயிலுக்குப் போர்வையோ, முல்லைக்குத் தேரோ அல்லது ஆல அமர் செல்வருக்கு நீல மணியோ தேவையற்றவை.  இவை எல்லாம் புலவர்கள் உவமையாகவோ அல்லது உயர்வு நவிற்சி அணியாகவோ கூறியவையாகவே இருக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, காரி {மலையமான்} மழைத் துளிகளிலும் அதிகமான தேர்கள் வழங்கியதனைப் பார்ப்போம்; மழைத் துளிகளை எண்ண முடியுமா?, அவற்றிலும் அதிகமான தேர்கள் எங்காவது இருக்குமா?

  எனவே `ஒரு முல்லைக்கொடிக்குக் கொடுத்த தேருக்கு எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டிருக்கும், பாரி ஒரு மடையன்` எனப் பழிக்கவும் வேண்டாம்; உண்மையிலேயே தேரினைக் கொடுத்தான் என நம்பவும் வேண்டாம். அதனை வெறும் உவமையாகவோ/ உயர்வு நவிற்சியாகவோ கொள்வோம் .

“பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை

நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,

‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!` “

                               : {புறநானூறு 200}.

   முல்லைச் செடியானது  தான் படரக் கொம்பில்லை என்று நாவால் கேட்கவில்லை என்றாலும், குறிப்பால் அறிந்து தனது தேரினைக் கொடுத்தான் எனப் பாடப்படுகின்றது.  இதனை ஒரு உவமையாகவே கொள்ள வேண்டும். முல்லை என்பது இயற்கையின் ஒரு குறியீடாகவும், தேர் என்பது அரச அதிகாரத்தின் ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். அதாவது அதிக வளர்ச்சியினூடாக தனது அரச அதிகாரத்தை இறுக்கி, அதற்காக இயற்கையினைக் காவு கொடுக்காமல்; இயற்கையுடன் இயல்பாக வாழ்ந்தவனே பாரி. இயற்கையினைப் பேணுவதற்காக, தனது ‘கறங்கு மணி நெடுந் தேர்’ {ஒலிக்கும் மணி- அக்கால சைரன் Siren – பூட்டப்பட்ட நெடுந்தேர்} என்ற பெரிய அரச அதிகாரத்தினைக் கைவிட்டவன் என்பதனையே புலவர் உவமையாக ‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ எனக் குறிப்பிடுகின்றார் எனக் கொள்ளலாம்.

  இறுதியாக வள்ளுவனின் குறள் ஒன்று இது தொடர்பாகச் சிறந்த புரிதலினைத் தரும்.

“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து”.

: குறள் எண்:221

{ இல்லாதவருக்கு (தேவையான )  ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது}.

குறிப்பு – கொடைக்கடம் {giving charity as a duty }, படை மடம் {அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுகை} என்பவை வேறு.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
The Whistleblower

The Whistleblower

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...