Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மதிப்புக்குரிய நித்தியானந்தன் அவர்களுக்கு : அசோக் யோகன்

இனியொரு... by இனியொரு...
05/28/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

nithiலண்டனில் நடந்த புத்தக நிகழ்வில் , ‘பொதுவெளியில்’ அரசியல் அற்ற, மலினத்தனமான வார்த்தைப் பிரயோகங்களினால் என்னை நீங்கள் இகழ்ந்துரைத்துள்ளீர்கள்.

இச் செயல், எனக்கு வேதனை அளிப்பதன் நிமித்தம், இந்த பகிரங்க கடிதத்தை உங்களுக்கு எழுதவேண்டி ஏற்பட்டது. மன்னிக்கவும்.

நாங்கள் ; நாம் வாழும், இந்த ஐரோப்பிய சூழலில் உள்ள சில முதலாளித்துவ ஜனநாயகப் பண்புகளைக்கூட,
இன்றுவரை ,நாம் கற்றுக்கொள்ள மறந்துவிடுகின்றோம். இன்னும் எமது நிலமானிய சிந்தனைகளோடே இங்கும் வாழ முயல்கின்றோம்.

எவ்வாறு எதிர் நபர் மீது எதிர்வினை ஆற்றுவது, உரையாடல்களைத் தொடர்வது, எத்தகை வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது, கருத்துரிமைச் சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றெல்லாம் நாம் அக்கறை கொள்வதே இல்லை.

இன்னும் நாம் மற்றவர்களை புண்படச் செய்யும், அவமானமுறச் செய்யும் ,அவதூறு செய்யும் கொடுந்தமிழ் நிந்தனைச் சொற்களையே, குடும்பத்திலும், பொதுவெளியிலும் உபயோகப்படுத்துகின்றோம்.

எமது கல்வி இவற்றை வெற்றிகொள்ள முடியவில்லை. எமது ஆங்கிலப் புலமை, ‘பாலியல் நிந்தனைச் சொற்களை ‘ஆங்கிலத்தில் திறம்பட உரைத்து ,மற்றவர் மனதை புண்படுத்த மாத்திரமே எமக்கு உபயோகமாகி நிற்கின்றது.

யோசித்துப்பாருங்கள் :

கைலாசபதி
கைலாசபதி

உங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரை நீங்கள் இழிவுபடுத்தியுள்ளீர்கள்- அவமானப்படுத்தியுள்ளீர்கள்.
பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம் ,சேரன், யமுனா ராஜேந்திரன், ஓவியர் கிருஸ்ணராஜா, லண்டன் அவைக்காற்றுக்கழகம் பலேந்திரா, சரிநிகர் பத்திரிகை நண்பர்கள், கி.பி.அரவிந்தன், (அவர் காலமான பிற்பாடு சமீபத்தில் அவரைப் பற்றி) இப்போது இவ் வரிசையில் நாங்கள்…. (இப் பட்டியல் முழுமை அல்ல)

அவதூறு செய்யும், அவமானப்படுத்தும் விடயங்களில் நீங்கள் புத்திசாலியாகவும், சாதுரியமாகவும் நடந்துகொள்வீர்கள். இவைகள் எதனையும் எழுத்தில் வைக்க மாட்டீர்கள். கூட்டங்கள், சந்திப்புக்கள் உரையாடல், நிகழ்வுகள் போன்ற பொது வெளிகளை “அழகாக ” பயன்படுத்திக் கொள்வீர்கள். இதற்காக உங்கள் திறமையை பாராட்டியே தீரவேண்டும்.

எமது விடுதலை அமைப்புக்களிடையில் ஒற்றுமை – ஒருமைப்பாடு நிலவிய ஆரம்ப காலங்களில் ,இயக்க முரண்பாடுகளை கூர்மைப்படுத்தியதில், உங்களின் பங்களிப்பு மிகையானது என்றால், அக் கூற்றில் பிழையில்லை என்பதை, நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகின்றேன் !

சுந்தரம் படுகொலையில் இருந்து நாம் இதனை தொடங்கலாம்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க தோழிகளை “செந்தோழிகள்” என இச் சொல்லை நக்கல் தனமானதாக, இழிவுச் சொல்லாக ஆக்கிய பெருமை உங்களையே சாரும் என்பதில் பொய் இருக்க முடியுமா?

நீங்கள் எப்பொழுதும், எக்காலத்திலும் அரசியல் கோட்பாடு சார்ந்த விமர்சனங்களை வைத்த வரலாறு எம் மத்தியில் இல்லை.

நீங்கள் விரைவில் புத்தக நிகழ்வுக்கு ஒன்றுக்கு பாரீஸ் வருவதாக அறிந்தேன். லண்டன் புத்தக நிகழ்வில் நீங்கள் என்மீது வைத்த கருத்துக்களை இங்கும் வைப்பீர்கள் என எதிர்பார்கின்றேன். நானும் இப் புத்தக நிகழ்வில் சமூகம் அளிக்கின்றேன்.

இதில் சம்பந்தப்பட்ட நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதன் நிமித்தம் இச் சந்திப்பை ஆரோக்கியமான உரையாடலாக மாற்ற முடியுமென நினைக்கிறேன்.

என் மீது எதன் அடிப்படையில் ,இவ்வாறான இழிவான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்தீர்கள் என்பதை நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

என் பக்கத்தில் இருந்து முரண்பாடுகளை கூர்மைப்படுத்தக்கூடிய எத்தகைய சொற் பிரயோகங்களும் உபயோகிக்கப்பட மாட்டாதென்பதையும், தனிநபர் தாக்குதல் எதுவும் நடைபெறாது என்பதையும், என் உரையாடல், அரசியல் கோட்பாட்டு தளம் ஒன்றை நோக்கியே நகரும் என்ற உத்தரவாதத்தையும் நான் உங்களுக்கு வழங்குகின்றேன்.
உங்களைப் பொறுத்தவரை “அனைத்துச் சுதந்திரங்களும் உங்களுக்கே.”

உங்களின் புத்தக நிகழ்வு என்பதால், தீர்மானிக்கும் உரிமை உங்களானது. உங்களிடமிருந்து சாதமான
பதிலை எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன் அசோக்.
28.05.2015.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...