முகாம்களில் வாழும் 30 ஆயிரம் வரையான தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலால் அங்கவீனமடைந்துள்ளனர். 280000 பொதுமக்களை, “பணயக் கைதிகளை” எந்தப் பாதிப்புமின்றி காப்பாற்றியுள்ளதாகக் கூறும் மகிந்த ராஜபக்ஷவின்ன் கூற்று இந்தப் புள்ளிவிபரங்களுடன் முரண்படுவதாக உள்ளது என ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அங்கவீனர்களுக்கு உதவி உபகரணங்களின்றி நடமாட முடியாத நிலை உள்ளதாகவும், அவசர உதவிகள் தேவைப்படுவதாகவும், உதவி அமைப்புக்கள் தெரிவித்ததாக இப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.







