06.12.2008.
இந்திய மண்ணில் இந் திய இராணுவத்துடன் கூட் டுப் பயிற்சியில் ஈடுபடுவ தற்காக 137 பேர் கொண்ட சீன ராணுவக் குழு வியா ழனன்று பெல்காம் வந்து சேர்ந்தது. பயிற்சியில் பங் கேற்கும் படைப்பிரிவின் தளபதி இவர்களை வர வேற்றார்.
‘கையோடு கைகோர்த்து 2008’ என்று பெயரிடப்பட் டுள்ள கூட்டுப்பயிற்சி இரு ராணுவங்களும் இணைந்து நடத்தும் இரண்டாவது பயிற்சியாகும். முதல் பயிற்சி 2007ம் ஆண்டில் சீனாவின் குன்மிங் நகரில் நடைபெற் றது. சீன ராணுவ வீரர் களும், அவர்களின் சாதனங் களும் இந்திய விமானப் படையின் ஆறு விமானங் களில் பெல்காம் வந்தன.
இரு ராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும், வலுப் படுத்தவும் இப்பயிற்சிகள் உதவும் என்று கருதப்படு கிறது. சீனாவின் செங்டு பகுதியில் உள்ள காலாட் படையின் முதல் பிரிவும், இந்தியாவின் 8வது மராத்தா லைட் இன்பான்ட்ரி படைப் பிரிவும் இப்பயிற்சியில் பங் கேற்கின்றன. கூட்டு தந்திர உபாயங்கள் மற்றும் பயிற்சி, இணைந்து செயல்படும் பயிற்சி, கூட்டுத் தலைமை செயல்பாடுகளும் இறுதி யில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை இப்பயிற்சியில் இடம் பெறும்.
2003ம் ஆண்டில் ஷாங் காய் துறைமுகம் அருகே இரு கடற்படைகளும் கூட் டுப் பயிற்சியில் ஈடுபட்டன. அதையடுத்து இந்தியக் கப் பல்கள் குங்டாவ் துறைமு கம் சென்று வந்தன. அதன் பின் 2007ல் தரைப்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட் டன. தற்போது நடைபெற வுள்ள பயிற்சியில் இந்திய படை விமானங்களும் ஹெலி காப்டர்களும் கலந்து கொள்கின்றன.
பெங்களூரில் இந்திய – சீன நட்புறவுக் கழகத்தின் தலைவர் ஜியாங், ஜென் குவா, கர் நாடகா மேலவைத் தலைவர் வீரண்ணா மத்தி கட்டியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு பெங்களூர் சட்டமன்றக் கட்டிடத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் மேலவை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.