Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஹோ-சி-மின்னின் உயில்

இனியொரு... by இனியொரு...
08/10/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

gochiminhஅமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, தேசிய விடுதலைக்காக நமது மக்கள் நடத்தும் போராட்டம், நம் மக்கள் அனைவரும் படும் கஷ்டங்கள், அவர்களின் தியாகங்களைத் தாண்டி முற்றிலுமாக வெற்றியடையும். இந்த வெற்றி நிச்சயம்.

வெற்றி கிட்டிய பின்னர், தெற்கு வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, நமது மக்களை, தோழர்களை, ஊழியர்களை, போராளிகளை, முதியோர், இளைஞர்கள், குழந்தைகளை நேரில் சந்தித்து வீரத்துடன் போராடியதற்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

பின்னர், நம் மக்களின் சார்பில் சோஷலிச முகாமிலுள்ள சகோதர நாடுகளுக்கும், நேச நாடுகளுக்கும் சென்று, அமெரிக்க ஆக்கிர மிப்பை எதிர்த்த நமது இயக்கத்திற்கு முழு மனதுடன் ஆதரவளித்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.

சீனாவின் “டாங்” கால கவிஞர் து பூ எழுதினார் : “எல்லாக் காலங்களிலும் எழுபது வயதை எட்டியவர்கள் சிலரே” இந்த ஆண்டு 79 வயதை தொடும் நான் அந்த சிலரில் ஒருவன் என நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் எனது உடல்நலம் சற்று மோசமாகியுள்ள போதிலும், என்னால் தெளிவாக சிந்திக்க முடிகிறது. எழுது வசந்தங்களைக் கண்ட ஒருவரின் உடல்நலம் வயதாகும்போது குறைவது இயல்பு. அது ஒன்றும் அதிசயமல்ல.

ஆனால், என் தாய் நாட்டிற்கு எனது மக்களுக்கு, புரட்சிக்கு நான் இன்றும் எவ்வளவு நாட்கள் பணியாற்ற முடியுமென யாரால் கூற இயலும்? எனவே, கார்ல் மார்க்ஸ், வி.ஐ.லெனின் மற்றும் இதர புரட்சியாளர்களை நான் சென்றடையும் முன்பு சில வரிகள் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் மூலம் நமது மக்கள், கட்சித் தோழர்கள், உலகெங்கிலுமுள்ள நமது நண்பர்கள் ஆச்சரியமடையத் தேவை இருக்காது.

முதலில் கட்சி பற்றி

நமது கட்சி துவக்கப்பட்டது முதல் ஒற்றுமையுடன், அனை வரையும் திரட்டி, தீர்மானகர மான போராட்டத்திற்கு தலைமை ஏற்று வெற்றி மேல் வெற்றி பெற்றுள்ளோம். உழைக்கும் வர்க்கம், மக்கள், தாய்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடனும், நெருக்கமான ஒற்றுமையை கட்டி காத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றுமை என்பது நமது கட்சியின் மக்களின் விலை மதிப்பில்லாத பாரம்பரியமாகும். மத்திய கமிட்டி தோழர்கள் முதல் கிளை வரை ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக கட்சி இருப்பது கண்ணின் மணி போன்றது.

கட்சிக்குள் பரந்த ஜனநாயகம் வேண்டும். அதேசமயம் விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் முறையாக, கவனத்துடன் நடைபெறுவது கட்சியின் ஒற்றுமையை வளர்க்க, கட்டிக்காக்க உதவும், தோழமை உணர்வு நிலவுவது அவசியம். நம் கட்சி தற்போது அதிகாரத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஊழியரும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக தமக்குள் கொண்டிருக்க வேண்டும். திறமை, கடும் உழைப்பு, சேமிப்பு, உண்மை, மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.

உழைக்கும் இளம் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர இளைஞர்கள் பொதுவாக நல்லவர்கள், கஷ்டங்களை கண்டு அஞ்சாது, முன்னேற்றத்தை விரும்பி, எப்பொழுதும் செயல்படத் தயாராக உள்ளனர். அவர்களுடைய புரட்சிகர நல்லெண்ணங்களை வளர்த்து, சோஷலிசத்தை கட்டுவதற்கு தகுந்த வண்ணம், ‘சிவப்பான’ தியமையான அடுத்த தலைவர்களாக வளர்வதற்கு கட்சி பயிற்சி அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை பயிற்றுவிப்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியமானது. மிகவும் அவசியமானது. மலைகளிலும், சமவெளிகளிலும் உள்ள நமது தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்கள். நிலப்பிரபுத்துவ காலனிய ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆட்பட்டவர்கள் அத்துடன் பல ஆண்டுகளாக போரையும் எதிர் கொண்டவர்கள்.

இருப்பினும், நமது மக்கள், வீரம், தைரியம், ஊக்கத்துடன் கடும் பணியாற்றுகின்றனர். நமது கட்சி துவக்கப்பட்டதிலிருந்து அதை பின்பற்றுபவர்களாக, விசுவாசிகளாக இருந்து வருகின்றனர்.

பொருளாதார, கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களைத் தீட்டி, நமது மக்களின் வாழ்க்கை முன்னேற தொடர்ந்து கட்சி பாடுபட வேண்டும்.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் தொடரலாம். நமது மக்கள் புதிய தியாகங்களை செய்ய வேண்டி வரலாம். உடைமைகளை இழக்கலாம். ஆனால் எது நடந்தாலும், இறுதி வெற்றி கிட்டும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து போரிடும் உணர்வை தளரவிடக் கூடாது.

‘நமது மலைகள் எப்பொழுதும் இருக்கும்

நமது ஆறுகள் எப்பொழுதும் இருக்கும்

நமது மக்கள் எப்பொழுதும் இருப்பார்கள்:

அமெரிக்க படையெடுப்பாளர்கள் தோற்பார்கள்,

நாம் நமது பூமியை மேலும்

பத்து மடங்கு அழகாக நிர்மாணிப்போம்’

எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ தெரியாது. ஆனால் நம் மக்கள் முழு வெற்றி கிட்டுமென உறுதி பூண்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கண்டிப்பாக நம் நாட்டிலிருந்து வெளியேறுவர். நம் தாய்நாடு மீண்டும் ஒன்றிணையும். தெற்கிலுள்ள நமது சகோதரர்களும், வடக்கிலுள்ள நம்மக்களும், மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைவார்கள். நாம் சிறிய நாடுதான். ஆனால் வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம், உலகின் இரண்டு, மாபெரும் ஏகாதிபத்திய சக்திகளான அமெரிக்காவையும் பிரான்சையும், போராடி தோற்கடித்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. உலக தேசிய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி இருக்கிறோம் என்ற பெருமை உண்டு.

உலக கம்யூனிச இயக்கம் பற்றி..

எனது வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தவன் என்ற முறையில், சர்வதேச கம்யூனிச இயக்கமும், தொழிலாளர் இயக்கமும் வளர்ச்சி அடைவதைக் கண்டு கூடுதல் பெருமை அடைகிறேன். சகோதர கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவு என்னை வருத்தமடையச் செய்கிறது.

மார்க்சிய – லெனினியம் மற்றும் தொழிலாளி வர்க்க சர்வதேசியம் என்ற அடிப்படையில் உணர்வு மற்றும் காரண காரியங்களைக் கொண்டு சகோதர கட்சிகளிடையே ஒற்றுமையை மீட்டெடுக்க நமது கட்சி சிறந்ததொரு பங்களிப்பை செலுத்துமென நம்புகிறேன். சகோதர கட்சிகள், நாடுகள் மீண்டும் இணையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி

எனது வாழ்க்கை முழுவதையும் முழு மனதுடன், பலத்துடன், தாய்நாட்டிற்காக, புரட்சிக்காக, மக்களுக்காக பணியாற்றுவதில் அர்ப்பணித்துவிடும். இவ்வுலகிலிருந்து, நான் மறையும் பொழுது, இன்னும் நீண்டகாலம் என் பணி தொடர இயலாதே என்பதைத் தவிர, வருத்தப்பட எனக்கு எதுவுமில்லை.

நான் இறந்த பின்பு ஆடம்பரமான இறுதி நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் மக்களின் நேரமும், பணமும் விரயமாகும்.

இறுதியாக, அனைத்து மக்களுக்கும், கட்சி முழுமைக்கும், ராணுவம் முழுமைக்கும், எனது மருமகன்கள், மருமகள்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற, அளவில்லா என் அன்பை விட்டுச் செல்கிறேன். உலகிலுள்ள நமது தோழர்கள், நண்பர்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியான, மீண்டும் ஒன்றிணைந்த, சுதந்திரமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் செழிப்பான வியத்நாமை கட்டுவதற்கு கட்சி முழுவதும், மக்கள் அனைவரும், நெருக்கமாக இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டு மென்பதும், உலக புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்த வேண்டுமென்பதே எனது இறுதி ஆசை.

– ஹனோய் 10, மே 1969
ஹோ-சி-மின்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்தினால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும்:புதிய ஆய்வறைக்கை

வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்தினால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும்:புதிய ஆய்வறைக்கை

Comments 1

  1. j.satguru says:
    12 years ago

    மாமேதை கட்சி மீதும் மக்கள் மீதும் புரட்சிகரமான   நடைமுறைகளை விதைத்துள்ளார்  

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...