தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வவுனியா நகரசபை நிர்வாகச் சீர்கேடு ஊழல் மோசடி போன்ற விடயங்களினால் அவப்பெயரைச் சம்பாதித்து உள்ளது. இதன் காரணமாக இந்நகரசபையின் தலைமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் உட்பட 8 நகரசபை உறுப்பினர்கள் நகரசபைத் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இதற்கு முன்னதாக நகரசபையின் நகர சுத்தித் தொழிலாளர்கள்,
நகரசபைத் தலைவரும் (எஸ் என் ஜி நாதன்) நகரசபையின் சிற்றூழியரும் (ரி மரியதாஸ்) தங்களை சாதியின் அடிப்படையில் அவமானப்படுத்தி முறைகேடாக நடந்து கொண்டாதாக ஒரு கடிதத்தை தங்கள் கையொப்பங்களுடன் வவுனியா நகரின் உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டு இருந்தனர்.
கடந்த 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டம் இன விடுதலையை முதலில் வென்றெடுப்போம் சாதிய பிரதேச பெண் ஒடுக்குமுறையை அதன் பின்னர் பார்க்கலாம் என்ற மனப்பான்மையுடன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு அதிகாரத்திற்கான போராட்டமாகி ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளும் விடுதலையின் பெயரில் அமுக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அமுக்கப்பட்டு இருந்த பிரதேச சாதிய பெண் ஒடுக்குமுறைகள் காலத்திற்குக் காலம் தலைகாட்டவே செய்கின்றன.
தமிழ் மக்களைப் பன்மைத்துவ சமூகமாக ஏற்றுக்கொள்ளாமல் அதனை ஒற்றைப்பரிமான சமூகமாகக் கொண்டு தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் தேசியம் அதன் மோசமான சாதியம் பிரதேசவாதம் பெண் ஒடுக்குமுறை என்பனவற்றை எப்போதும் தன்னுள்ளே அடைகாத்து வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையில் உள்ள நகரசுத்தித் தொழிலாளர்களை அன்றைய தமிழ் அரசர்கள் போல் இன்றும் அடிமைக் குடிகளாகவே நடாத்தும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். வரலாற்றை புரட்டி தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகக் கற்பிக்க முற்படுகின்றனர் சிலர். அன்று இந்த நகர சுத்தி தொழிலாளர்கள் இரவிலேயே சுத்திகரிக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பகலில் நகரத்தில் நடமாடவே தடைவிதிக்கப்பட்டனர். அவர்கள் நகரின் ஒதுக்குப் புறத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இன்று பல நூற்றாண்டுகள் உருண்டோடிய பின்னரும் நகரசபை ஊழியர்களை ”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” என்று பேசுகின்ற உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைபின் நகரசபைத் தலைவருக்கு யார் வழங்கியது. இதுவரை இத்தலைவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ன நடவடிக்கையை எடுத்தது?
நன்றி : தேசம்னெட் (http://thesamnet.co.uk/?p=21565)
இந்த தொழிலாளிகள் பௌத்த மதத்தை ஏற்று பௌத்தர்களாக மாற முற்பட்டால் நிலமை என்னவாகும்..?
பெளத்தர்களகிவிட்டால் போதுமா? எப்படிச் சிங்கள பெளத்தர்களாவது?
அப்படி மாறினாலும், சாதி அடையாளம் தொலைந்து விடுமா?
1957ஆம் ஆண்டு பெளத்தத்தைத் தழுவினோர் கொடி கட்டி ஆளுகிறார்களா?
சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் மதத்தை நிராகரித்து உன்மையிலேயே சாதி பேதம் பராட்டாத ஒரு மதத்துக்கு மாறினாலும் சமூக அமைப்பிற்குள் சாதியத்தை ஒழிக்கும் வரை பிரச்சனை தீராது.
நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் இதைப் பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் முன்வரவேண்டும்.
தேசம்நெற் தகவல் மெச்ச வேண்டியது.
வாழ்க!
இந்தத் தகவல்கள் அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் 2 சூ வருடங்களில் இப்படியான தகவல்களை எதிர்பார்த்தேன் முன் கூட்டியே இந்த 14ம் நூற்றாண்டுக்கு மிண்டும் சென்றதற்கு எமது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இவ்வாறான நல்ல செய்திகளை எதிர்பார்திர்கிறோம். த.தே.கூ தமிழா;களுக்கு நல்ல எதிர்காலத்தை கொண்டு தரும் என்ற நம்பிக்கை எமக்கு வலுவாக இருக்கிறது
பெளத்தமத்த்தை ஏற்று பெளத்தர்களாக மாறமுற்பட்டால் நிலைமை என்னவாகும்? ஒன்றும் நடைபெறாது மணி, அங்கு சிங்கள்வன் பீத்தமிழா என்று கூப்பிடுவான், ஆகவே முதலில் அந்ததொளிலாளிகள் எல்லோரும் ஒற்றுமையாக அந்த நகரசபை தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தவேன்டும், அதேநேரத்தில் தமிழ் தேசிய் கூட்டமைப்பினர் இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேன்டும், எடுப்ப்பார்களா??.
உலகம் முழுவதும் பீத்தமிழன் எங்கு உள்ளான் என்று தேடித் திரிவது ,இந்தத் சாதித்திமிர்
பிடித தமிழர்களேயாகும். சிங்களவர்களிலும் பார்க்க தமிழனின்
அழிவிற்கு முதற்காரண்ம் இந்த சாதி வெறியேயாகும்.
துரை
தமிழனை நாய்த்தமிழன் என்றால் பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் தமிழனின் விசுவாசம் அத்தகையது,பீத்தமிழன்?சாதி இருக்கலாம் ஆனால் வெறீ கூடாது என்பது உண்மையே.பேச்சு வாக்கில் சக்கிலியன் என்றால் அது சாதியைக் குறீப்பிடுவது என்பது டூ மச்.பக்கத்தில் இருந்து பார்த்தது போல நல்ல பிள்ள வேசம் போடுவது அழகாகவா இருக்கிறது.
த.தே.கூவுக்குள் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனை எவ் விடயத்தில் முற்போக்கானதாகவும் சமூக ஒடுக்குமுறைகட்கு விரோதமானதாகவும் இருந்துள்ளது?
நீங்கள் எதிர்பார்ப்பது நடக்க, த.தே.கூவுக்குள் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனை எவ் விடயத்தில் முற்போக்கானதாகவும் சமூக ஒடுக்குமுறைகட்கு விரோதமானதாகவும் இருந்துள்ளது?
கடவுள்வெறி சமயவெறி கன்னல்நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே!
இடைவந்த சாதியெனும் இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம் தாய் தாய் தாயே! – பாரதிதாசன்
தாய் ஆளுவாளா ? சாதி ஆளுமா ?