புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள் உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இதே வேளை படகுகளில் நந்திக்கடல் ஊடாக புலிகள் வெளியேற முயன்ற போது பல படகுகள் தாக்கியழிக்கப் பட்டதாகவும் தெரிவித்தனர்.
வெளியேற்றப்பட்ட மக்களுள் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.