இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் வடக்கில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் வட இலங்கைப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளது. இதனால், இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கைத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெர்வித்தார்.