சரத் பொன்சேகாவை மையப்படுத்தி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளன. இலங்கை அரசு பதற்றம்டைந்த நிலையில் காணப்படுகின்றது, நேற்று பௌத்த துறவி ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பேரினவாதக் கட்சிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான முதலாவது நாடுதழுவிய போராட்டம் இது.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை பிழையான வகையில் அர்த்தப்படுத்தி நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்ப சில சக்திகள் முயன்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகா விவகாரத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் லாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆக உழைக்கும் மக்கள் மகிந்தவா சரத்தா என்ற பட்டிமன்றத்தில் இன்னும் கொஞ்சம் காலம் தள்ளலாம். அதுவரை புரட்சிகர சிந்தனைகள் ஒத்திப்போடப்படும்.
ஆளப்படப்போவது நானாயின் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன
இன்றைய போக்கு மிக ஆபத்தானது.
இப் போட்டி எங்கே போய் முடிந்தாலும், நாடு பாசிச சர்வாதிகாரத்தைநோக்கிப் போவது தான் அதன் விளைவாகும்.
அதற்கு அனைத்துப் பெரும் ஊடகங்களும் தொண்டு செய்கின்றன.
இது இப்போது கொஞ்ச சிங்களவர்களையும் சாக செய்யும் ஒரு முயற்சி .தமிழர்களை அழித்த பொது கை தட்டி ரசித்தவர்கள் தாங்கள் அழிய வினை தேடுகிறார்கள் .இதை நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.நாடு பாசிசத்தை நோக்கி போகிறது என்று இடது சாரிகள் எத்தனை முறை கத்தி சொன்னாலும் கேட்காத மக்கள் பட்டு தெளியட்டும்.அப்போதாவது சிங்கள மக்கள் உணரட்டும் இது தமிழர்களுக்கு மட்டும் எதிரான அரசு அல்ல தமக்கும் எதிரானது என்பதை.
இதைவிட இப்போதைக்கு வேறொன்றும் சொல்ல முடியாது.
பாசிசத்தை வரவேற்பது என்பது எதிரிக்குச் சகுனப் பிழைக்காகத் தனது மூக்கை அரியும் செயல்.
பாசிசம் முதலில் பலி கொள்ளப் போவது சிறுபான்மையினரையே. வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன
எனவே மகிழ நமக்கு எதுவுமில்லை.
பிறருடன் சேர்ந்து அதைத் தடுக்கும் முயற்சியின் போக்கில் தமிழர் தமது உரிமைகளை வெல்ல வாய்ப்புக்கள் அதிகம்.
சிங்களவரை புலிகள் கொன்றபோதும் மகிழ்ந்தோரும்,புலிகள் சிங்களவரைக் கொல்கிறார்களீல்லை எனக் கவலப்பட்டோரும் வாயை மூடி வைத்திருங்கள்.