தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்ததாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புலிகளை தோற்கடிப்பதற்கும், ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல பில்லியன் ரூபா செலவில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.







