Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மேற்குலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி மிகவும் படிப்பினைக்குரிய ஒன்றாகும்.

இனியொரு... by இனியொரு...
12/23/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

23.12.2008.

சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து, சர்வதேச பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்களில் உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டதன் விளைவே இன்றைய உலக பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

பேராசிரியர் க. கைலாசபதியின் 26 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளும் என்னும் தலைப்பில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் ஞாயிறு மாலை இடம்பெற்ற நினைவுப் பேருரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கணேசமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையும், கைலாசபதி நினைவுக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

உலக சோஷலிச அமைப்பின் நகர்வைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக, விரிவுரையாளர் கணேசமூர்த்தி தொடர்ந்து உரையாற்றுகையில்;

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் கணிசமான பொருளாதார மாற்றங்களை எம்மால் அவதானிக்க முடியும்.

சோவியத் ஒன்றிய நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பிளவானது, சோவியத் யூனியனைச் சார்ந்து, தமது பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து வந்த இந்தியாவும் சீனாவும் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறைக்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உலகின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை கொண்ட இவ்விரு நாடுகளும், தமது பொருளுற்பத்தி நடவடிக்கைகளுக்காக மேற்குலக முதலாளித்துவ நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதாரத்துக்கான பாரிய சந்தைக்கு வழிசமைப்பதாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகள் மத்தியில், உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டமையும் இவற்றைச் சார்ந்து ஒவ்வொரு நாளும் தத்தமது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமையும் இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மேற்குலக முதலாளித்துவ நாடுகள் வழங்கிய கடன் மற்றும் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைகள் கவனத்துக்குரியன.

சுய தேவைப் பூர்த்திக்கான பொருளுற்பத்தியை பரந்தளவில் முன்னெடுப்பதற்கும் அதனூடான பொருளாதார வளர்ச்சிக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்காத இந்த உலகப்படுகடன் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்ட நாடுகள் தம்மைச் சொந்தக்காலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில், மேற்குலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி மிகவும் படிப்பினைக்குரிய ஒன்றாகும்.

வீடமைப்பு, நிவாரணம் வழங்கல் போன்ற உற்பத்திசாரா கடனுதவி சார்ந்து வளர்ச்சிபெற்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிகள், உலக நாடுகளைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டிய மாற்று பொருளாதார நடவடிக்கை குறித்து சிந்திக்க வைத்துள்ளன.

இன்று ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி, இதுதான் முதற்தடவை அல்ல. 1929 33 காலப்பகுதியிலும் இவ்வாறான ஒரு மந்தநிலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டது. 1929 இற்கு முன்னர் பொருளாதார உற்பத்தி நடவடிக்கையில் தலையிடாக் கொள்கையே இருந்துவந்தது.

அதாவது, பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு தலையிடத் தேவையில்லை. சுதந்திரமான சந்தையின் கேள்வி நிரம்பல் நிலைமைகளுக்கேற்ப உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் தன்னியக்கமாக நடைபெறும் என்ற கொள்கையே அது.

192933 உலக பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து, தலையிடாக் கொள்கைக்கு பதிலாக அரசு இதுவிடயத்தில் தலையிட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டதையடுத்தே முதலாளித்துவ பொருளாதார அரசுகள் தோற்றம் பெற்றன. பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து நாடுகள் தரம்பிரிக்கப்பட்டன. உலகப் பொருளாதாரத்துக்கான சர்வதேச நிதி மூலதனத்தின் அவசியமும் அதற்கான அமைப்புகளும் இதன் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றன என்றார்.

செல்வி திருச்சந்திரனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகளின் பிரதேசத்திலிருந்து வெளியேறி வருபவர்களை தடுப்புக்காவலில் வைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும்:HRW.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In