இரண்டாவது நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் இலங்கையின் பல பாகங்களிலும் நில நடுக்கம் உண்ரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சுனாமி ஏற்பட்டால் சுமாத்திராவில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கை பகுதிகளை அடைவதற்கு 5 மணி நேரம் ஆகும் என வானிலை அவதான நிலையங்கள் கூறுகின்றன.








Comments 1