Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“மார்க்ஸியக் கோட்பாட்டின் எழுச்சியே சாதியத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க காரணம்”:கலாநிதி ந.இரவீந்திரன். “

இனியொரு... by இனியொரு...
03/03/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

03.03.2009.

மார்க்ஸிய கோட்பாட்டின் எழுச்சி காரணமாகவே சாதியத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தர்ஹா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ந.இரவீந்திரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்த போதிலும் அவரை தாழ்த்தப்பட்டவனாகவே பார்க்கின்ற நிலைமை இன்னமும் முடிவுக்கு வந்ததாகக் காண முடியவில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.

இலக்கிய உலகில் “துரைவி’ என அழைக்கப்பட்ட அமரர் துரைவிஸ்வநாதனின் 78 ஆவது பிறந்த தினத்தையொட்டி கலை இலக்கிய நண்பர்களால் கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் உள்ள பழைய நகர மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட நினைவுப் பேருரை நிகழ்வில் “சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ எனும் பொருளில் நினைவுப் பேருரையை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது துரைவியின் மகன் பீ.வி. ராஜ் பிரசாத் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

விரிவுரையாளர் இரவீந்திரன் தமதுரையில் தொடர்ந்து கூறியதாவது;

“சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ இத்தலைப்பு தொடர்பிலான புத்தகமொன்றை வெளியிடுவதற்காகத் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் பேசுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறதென்று யாராவது கேட்டால் எனக்குத் தகுதியில்லை என்பது உண்மை. ஆனால், அரசன் நிர்வாணமாக போகும் போது அதை சொல்லும் தைரியம் யாருக்குமில்லாத வேளையில் ஒரு சிறுவன் சொன்னானே. அந்த சிறுவனுக்குள்ள தைரியம் எனக்குள்ளது.

ஏற்கனவே சாதியமும் மார்க்ஸியமும் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளேன். அவை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. இது தொடர்பில் பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சாதியம் தற்போது அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகும். இச்சாதியம் தொடர்பான பாகுபாடுகள் நீண்ட காலமாக நமது சமூகத்தில் காணப்பட்டாலும் 1980களில் “தலித்’ சமூகம் பற்றிப் பேசப்பட தொடங்கப்பட்டது. இது தொடர்பில் கோ.கேசவன், நா. முத்துக் கோபன் ஆகியோர் ஆய்வுகள் செய்து நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

பிறப்பு அடிப்படையிலேயே ஒருவனின் அடையாளம் தீர்மானிக்கப்படுகின்றது தலித்தாகப் பிறந்த ஒருவன் அதி உயர் பதவியில் அமர்ந்தால் கூட அவர் அமர்ந்த ஆசனம் கழுவி தூய்மைப்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்தாலும் அவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கின்றான்.

இந்த “சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ எனும் உரைக்கு நானிட்ட உப தலைப்பு “தமிழர் வாழ்வியல் பார்வை’ ஏனெனில் இத்தலைப்பைப் பேசும் போது தமிழர் வாழ்வியல் பற்றியும் பேச வேண்டி ஏற்படுகிறது.

நிலவுடைமை சமூகத்துக்கான கருத்துடைமையே சாதியம். சாதியம் என்றால் தீண்டாமை. 80களுக்கு முன் காணப்பட்ட நிலவுடைமை சமூகத்தினுடைய எச்ச சொச்சமே சாதியம். சாதியம் பல்வேறு சமூக முறைக் கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழக் கூடியது என சாதியம் பற்றி ஆய்வு மேற்கொண்ட அறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசிய தோற்றம் பிராமண தேசியமாகவே ஆரம்பிக்கின்றது. அதன் நலனையே முன்னெடுக்கும் வகையிலுள்ளது. காந்தி, நேரு போன்றவர்களால் கூட அதை முற்றாகத் தவிர்க்க முடியாது போனது. அவர்கள் கூட தாராளவாத அரைப் பிராமண தேசியக் கொள்கையையே முன்னெடுத்தார்கள்.

அம்பேத்கரே இதற்கு எதிர் தேசியமாகத் தனித் தேசியத்தை முன்னெடுத்தார். கல்வி கற்றோர் உயர் பதவி வகிப்போர் பிராமணராக இருப்பதைக் கண்டே பெரியார் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டார்.

இலங்கையில் உருவான தமிழ்த் தேசியம் வேளாளர் தேசியமாகவே அமைந்தது. இங்கு எதிர் தேசியமாக எதுவும் அமையவில்லை. இலங்கையின் கம்யூனிஸ்ட்கள் எதிர் தேசியத்தை முன்னெடுக்காமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம். மற்றையது பண்ணை முதலாளித்துவ எதிர்ப்பு. இதனால், இங்கு எதிர் தேசியம் உருவாக்கப்படவில்லை என்றார்.

இந்நிகழ்வில் ஜானாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர், “மல்லிகை’ ஆசிரியர் டொமினீக் ஜீவா, எழுத்தாளர் கே.எஸ். சிவகுமாரன், தினக்குரல் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கவிஞர் மேமன் கவி நன்றியுரை வழங்கினார்.

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

செய்தித் திருத்தம்: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினரும்;மகளீர் அமைப்பின் செயலாளருமான பெண் அதிரடிப்படையினரால் கொலை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In