Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மக்கள் இயற்கை அனர்த்தத்தின் பிடியில்…

இனியொரு... by இனியொரு...
01/10/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மினி சூறாவளி, மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.; வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அரைநூற்றாண்டுக்குப் பின்னர் வட கீழ் பருவ மழை மிக உக்கிரமாகப் பெய்து வருகிறது. பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் 8 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 70 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. ஆயினும் தற்போதைய செய்திகளின் படி கிழக்கு மாகாணப் பாடசாலைகளை 5 தினங்களுக்கு மூடத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு இலட்சம் பேர்; மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இடம் பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள்.
குளங்களின் நீர் மட்டம் அதிகரித்த நிலையில் அவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. குளங்கள், வாவிகளுக்கு அருகில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல நாட்களாகவே படுவான்கரைப் பிரதேசத்தில் பல கிராமங்களும் வீதிகளும் வெள்ளத்தில் முழ்கியிருக்கின்றன. இதன் காரணமாக நகரப்பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் போக்கு வரத்திற்கு இயந்திரப் படகுச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராம மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீசிய பலத்த காற்றினால் கூரைகள் தூக்கியெறியப்பட்டுள்ளன.
பெருமளவு வயல் நிலங்கள் பல நாட்களாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன். மழை காரணமாக தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடாத்திய மக்கள் தொழில் மற்றும் வருமானத்தை இழந்து போயுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு மட்டும் சராசரியாக 200 மி.மீ மழை பெய்திருப்பதுடன் அக்கரைப்பற்றில் 215 மி.மீ மழை பெய்திருக்கிறது. கன மழையினால் அம்பாறையில் மூன்றரை இலட்சம் பேர் மோசமகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நூற்றுக்கணக்கான முகாம்களில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளார். வீதிகளில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கல்முனை – அம்பாறை வீதிப் போக்குரவத்தும் அக்கரைப்பற்று – பொத்துவில் வீதிப் போக்குரவத்தும் தடைப்பட்டுள்ளது. அதே வேளை பல பாடசாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடல் கொந்தளிப்பினால் மீன் பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருகோணமலையில் பெருமளவிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூதூர் பிரதேசத்திலுள்ள சகல கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இடம் பெயர்ந்து இதுவரை மீளக்குடியேற முயடிhத மக்கள் தங்கியிருந்த நலன்புரி நிலையங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மின்னல் தாக்கத்தினாலும் இருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கண்டியில் ஏற்பட்ட மண்சரிவினால் 7 பேர் உயிரிழந்திருப்துடன் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். பதுளையில் ஏற்பட்ட மண்சரிவில் இரு பிள்ளைகள் உயிருடன் புதையுண்டிருக்கிறார்கள பசறைப் பகுதியும் வீசிய மினி சூறாவளி மற்றும் கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணப் பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. ஆயினும் மழை தொடரும் நிலையில் மேலும் சில தினங்களிற்கு இப் பாடசாலைகளும்; மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆயினும் அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில் போதிய அக்கறை காட்டவில்லை எனவும் நிவாரணம் வழங்கக் கூடிய நிறுவனங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் போதிய நிவாரணங்களை வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிய வருகிறது. பல பகுதிகளிலிமிருந்தும் நிவாரண உதவிகளை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதியவர்களும் குழந்தைகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் நிலவும் மிக மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்ற நிலையில் நிலைமை மேலும் மோசமடையும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சி.வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே கவிதைகள் காலத்தின் கண்ணாடி : சை.கிங்ஸ்லி கோமஸ்

Comments 1

  1. jeeva says:
    15 years ago

    இயற்கைஅளிவும் தமிழினத்தை விடவில்லை என்பதற்கு அப்பால் மக்களின்துன்ப துயரம் சொல்லில் அடங்காதவை ஆனால் வணங்காமண் கப்பல் சமான்களை கூட கேப்பாரில்லாமல் போனதையும் தற்போதைய நிலையில் அப்படியான செயலை செய்து உதவ முன்வருவது கூட காலத்தின் கடமையாக மதிப்பான செயலாகவும் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...