எமக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. பங்காளர்களே தேவை. அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து 30 வருடப் பயங்கரவாதத்தை முடிபுக்குக் கொண்டு வந்துள்ளது. இப்போது மக்களோடு மறைந்திருக்கும் பயங்கரவாதிகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். அந்தச் சுத்திகரிப்பு நடவடிக்கை முடிவடைந்ததும் உதவி அமைப்புக்கள் நலன் புரி முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அதுவரைக்கும் யாருக்கும் அனுமதி வழங்க முடியாது என பசில் ராஜபக்ஷ என்ற இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் என இலங்கை அரசின் உத்தியோக பூர்வ இணையத் தளத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.







