தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினை அடுத்து, ஜனாதிபதி தேர்தலில், மஹிந்தவுக்கே ஆதரவளிக்கப்போவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அறிவித்துள்ளார்.எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகவை விட மஹிந்த நல்லவர் என குறிப்பிட்டிருப்பதுடன், தொடர்ந்து ஜனாதிபதியுடன் நல்லுறவை பேணிக்கொண்டிருப்பதாலும், அதனை நீட்டிக்கொண்டு செல்வதினூடாக நிர்வாக பிரச்சினைகளை தீர்த்து தமது கிழக்கு மாகாணத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்பதாலும் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், மஹிந்தராஜபக்சவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுந்ந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் வாக்குறுதிகளை நம்பி இரண்டில் ஒரு கட்சிக்கே மாறி மாறி தமிழ் பேசும் மனிதா;களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தலைமைகளுட் ஆதரவு செய்துவருகின்றனர். இதற்கான காரணம் இவர்களது சிந்தனை மற்றும் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். இன்றும் சிறிலங்காவின பிரதான கட்சிகள் இரண்டின்; தலைவர்களும் தமிழ் பேசும் மனிதா;களுக்கு பிச்சை கொடுப்போம் என வழங்கிய உறுதி மொழிக்காக சில தமிழ் தலைவர்கள் தமது ஆதரவை வழங்குகின்றனர். தோ;தலின் பின் அந்த பிச்சையைக் கூட வழங்காதுவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நாம் கடந்தகால அனுபவத்தில் இருந்து கற்றது. ஆனால் இது தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியமால் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் தமிழ் பேசும் தலைமைகள் புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர்.
…….இந்தடிப்படையில் நீண்ட காலம் தமது பல உறவுகளின் உயிர்களை இழந்து தமது சுயநிர்ணைய உரிமைக்காக போராடிய தமிழ் பேசும் மனிதா;களுக்கு இந்த தோ;தல் முக்கியமானது. ஆரசியல் தலைமையற்ற தமிழ் பேசும் மனிதா;கள் குறிப்பாக இலங்கையில் வாழும் தமழ் பேசும் மனிதா;கள் தமது அரசியல் செய்தியை உறுதியாக வெளியுலகுக்கு வெளிப்படுத்தவேண்டிய சூழலில் வாழ்கின்றனர். ஏனனில் இம் மனிதா;களை நீண்டகாலமாக எந்த ஒரு அரசியல் தலைமையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சந்தா;ப்பவாத அரசியல்வதிகளும் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுமே அதன் தலைமையுமே தமிழ்பேசும் மனிதா;களை பிரதிநிதித்துவப்படுத்தின. உண்மையான அரசியல் தலைமையற்ற அநாதைகளாகவே தமிழ் பேசும் மனிதா;கள் நீண்டகாலமாக வாழ்கின்றனர். அந்தடிப்படையில் இன்றைய தோ;தல் முக்கியமானது.
….சுப்றிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளையும் அவர்களது வாக்குறுதகளையும் இதுவரை நம்பியது போதும். இன்று அவர்கள் தருவதாக கூறும் பிச்சையும் தமிழ்பேசும் மனிதா;களுக்குத் தேவையில்லை. மேலும் இன்று தமிழ் அரசன் எல்லாளனை (பிரபாகரனை) தோற்கடித்த சிங்கள அரசனான துட்டகைமுனுவாக வலம் வரும் கருதப்படும் மகிந்தவே (சரத் அல்ல) இத் தோ;தலில் வெற்றி பெறுவார் என்பது சந்தேகமில்லை. தமிழ் பேசும் மனிதா;களின் பிரச்சனை தோ;தலில் யார் வெற்றிபெறுவார் என்பதல்ல. மாறாக நமது அடிப்படைய உரிமைகளை யார் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதே. தமிழ் பேசும் மனிதா;கள் கேட்பதெல்லாம் தமது அடிப்படை உரிமையையே. அதாவது சுயநிர்ணைய உரிமையையே. இதுவே தமிழ் பேசும் மனிதா;களை சுதந்திரமானவர்களாகவும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழவழிவகுக்கும். இந்தக கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்கின்றதோ அவர்களையே தமிழ் பேசும் மனிதா;களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தமிழ் கட்சிகளும் ஆதாப்க்கவேண்டும். இவ்வாறனா ஒரு கட்சி சிறிலங்காவில் இருக்கின்றது என்றால் அது விக்கிரமபாகுவின் தலைமையில் செயற்படும் நவசமசமாஜக் கட்சி மட்டுமே. இவர்கள் மட்டுமே தமிழ் பேசும் மனிதா;கள் அவர்களை தோ;தல் காலங்களில் கணக்கெடுக்காமல் தூக்கி ஏறிந்தபோதும் தமிழ் பேசும் மனிதா;களின் அடிப்படை உரிமைக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்துவந்துள்ளனர். தமிழ் பேசும் மனிதா;கள் பல தோ;தல்களில் தம்மை பல தடவைகள் நிராகாப்த்தார்கள் என்பதற்காக பிற கட்சிகளைபோல் (ஏன் தமிழ் பேசும் மனிதா;களுக்காக போராடிய இயக்கங்களைப் போல் கூட) தமது கொள்கைளை காவுகொடுக்காமால் தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்துச் செல்கின்றனர். சிங்களம் பேசும் மனிதா;கள் மத்தியில் அதற்காக உறுதியுடன் குரல் கொடுக்கின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக கொள்கைகளை மாற்றி அரசியல் சமரசமோ வியாபாரபோ இதுவரை செய்யவில்லை. ஆகவே தமிழ் பேசும் மனிதா;களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்காது அவர்களை அரசியலில் சம அந்தஸ்துள்ளவர்களாக மதிக்கும் அதற்காக குரல் கொடுக்கும் விக்கிரமபாகுவிற்கு தமிழ் பேசும் மனிதா;கள் வாக்களிப்பதே பொறுத்தமானது. ஆவ்வாறு இவர்களுக்கு வாக்களிக்காது விடுவது தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை மட்டுமல்ல இன்றைய சூழலில் தமது அரசியல் நிலைப்பாட்டையும் வெளியுலகுக்கு தொப்யப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்.
…முழுமையான கட்டுரையை வாசிக்க….க்ட்ட்ப்://ந்ந்ந்.அநகெனின்கநரெனெச்ச்.ஒர்க்/
MAHINDA HAVE MORE CHANCES THAN SARATH PONSEKA RESON BEING HE IS LITTLE BETTER ON ENGLISH AND SHARP THINKING AND MUCH CLEVER BUT IN SRILANKAN MENTALITY NEVER PUT VIVEK AS A HERO.COMEDIANS OR NUTTERS HAVE NO CHANCE TO BECOME HEROS.THATS ONLY HAPPEN IN LONDON LIKE BORIS JONSON OR OBAMA FOR A EXAMPLE.SRILANKA WANT SONE ONE SPEAK THEIR FEELINGS AND EMOTIONS NOT ADVICERS.SO SARATH WILL END UP AS A COMEDIANS THAT YOU CAN SEE IN 2010.