போர்க்குற்றவாளி என்றும் தண்டிக்கப் போவதாகவும் மேற்கு நாடுகள் அவ்வப்போது கூறிக்கொள்ளும் மகிந்த ராஜபக்ச இன்று நியோர்க்கிற்குப் புறப்பட்டார். இன்று அதிகாலை விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதியும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச நியூயோர்க் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
ராஜபக்ச மட்டுமன்றி உலகின் பல போர்க்குற்றவாளிகளின் தரிப்பிடம் அமரிக்காவும் அதன் நேச நாடுகளுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்க்ஷ மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை அனுப்பியதாகவும், ராஜபக்க்ஷ அதை மதித்து சமூகமளிக்காமல் அவமதித்ததாகவும், முன்பு ஒரு செய்தி வந்தது. இன்று ராஜபக்க்ஷ அமெரிக்கா பயணமாகிறார் என்ற செய்திவருகிறது!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சட்டத்திற்குட்பட்டு அமெரிக்கா குற்றவாளி ராஜபக்க்சுவை கைது செய்யுமா. அமெரிக்கா மறந்துபோய்விட்டிருந்தால், குற்றவாளி தப்பி
தவறவிட்டுவிடாமல் கைதாவதற்கு, அமெரிக்காவில் குடியிருக்கும் “நாடு கடத்தி அரசு” என்று சொல்லப்படும் உருத்திரா அவர்களின் அரசாங்கம், ராஜபக்க்ஷவை கைது செய்யச்சொல்லி அமெரிக்க சட்டத்துறைக்கு நெருக்கடி கொடுக்குமா அல்லது கேபியின் சொல் கேட்டு அமைதி காப்பார்களா?
ஜனாதிபதி உண்மையில் போர்க்குற்றங்களைச் செய்து இருந்தால் கட்டாயமாக அதற்கு பதில் கூற வேண்டும்.யுத்ததின் போது;யுத்த விதிகள் மீறப்படுமாயின் யுத்த விதிகள் என்று ஒன்று காணப்படுவது எதற்கு?இலங்கை அரசியல் அமைப்பானது சட்டதின் முன் சகலரும் சமன் என்று கூறுகின்றது.அவ்வாறெனில் அநூராத புறத்தில் முஸ்லிம் பள்ளிவாயல் உடைக்கப்பட்டதற்கு அரசாங்கம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?1956ம் ஆண்டு மொழிச்சட்டம் மற்றும் 1970ம் ஆண்டு தரப்படுத்தல் சட்டம் இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமை போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை மக்களாகவே காணப்படுகின்றனர். இவை அனைத்திற்கும் பரிகாரம் இலங்கை அரசாங்கம் செய்து தருமா ?சர்வதேசம் தான் உதவ முன்வருமா?
புலிகளும் போர்க்குற்றம் செய்ததாக ஐ.நா விசாரணைக்குழு அறிக்கை கூறுகின்றது. புலிகளின் தலைவர் அமரர் பிரபாகரனின் முக்கிய அலோசகராக இருந்தவரும் பிரபாகரனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு தமிழீழம் சார்பில் கடை நடத்துபவருமான நாக்கழண்ட தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரனும் அதே அமெரிக்காவில் தான் இருக்கின்றார். அவரை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மகிந்த ராஜபக்ஸ மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றீர்களா? உருத்திரகுமார் தமிழர்களிடம் வியாபாரம் நடத்துகின்றார். ராஜபக்ஸ சிங்களவர்களிடம் வியாபாரம் நடத்துகின்றார். அமெரிக்கா இரண்டு பகுதியினரிடமும் வியாபாரம் செய்கின்றது.