டெயிலி ரெலி கிராபிற்கு வினாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா வழங்கிய செவ்வியொன்றில் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர் என்பது மிகைப்படுத்தப் பட்டதாகும். பாரிய பொதுமக்கள் இழப்பும் உள்ளது. ஜனாதிபதி இதை பாதிப்பு என்று கருதினாலும் தான் இதைத் தவறு என்றே எண்னுவதாகக் கருணா தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு வருடத்திற்குள்ளாகவே தாம்(அரசாங்கம்) மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து அகதிகளை மீள்குடியேற்றம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
இனப்படுகொலைக்கான ஆதாரங்களை மேற்கு நாடுகள் சேகரித்துக் கொண்டுள்ள சூழலில் கருணாவின் இப்பதில் முக்கியமானதாகும் என ரெலிகிறாப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.







