Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார் : சி.சிவசேகரம்

இனியொரு... by இனியொரு...
10/04/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா, கவிதைகள்
0 0
131
Home பிரதான பதிவுகள் | Principle posts

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இராணுவப் புலனாய்வுத்துறையினரின் பாலியல் வல்லுறவு : நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த பெண்ணின் வாக்குமூலம்

Comments 131

  1. thamilmaran says:
    16 years ago

    இந்தக் கவிதையை வாசித்த்தும் ஆதவன் தீட்சண்யா நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை ஏனோ மாட்டுத் தீவனமும் ஜாபகத்தில் வந்து தொலைக்கிறது.எந்தச் சூழலில் இருந்தாலும் காதலியின் நினைப்பு இருப்பதைப்போல்,

  2. P.V.Sri Rangan says:
    16 years ago

    “இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ…”

    சிவசேகரம் அவர்களது இக் கவிதையை மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.
    இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!
    புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம “பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!
    ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் “காய் அடிப்பு “அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது “இவர்களது” கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<< -Albert EINSTEIN
    "இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,
    அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,
    போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே." -அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

  3. யோகன் says:
    16 years ago

    அருமையான கவிதை தோழர் சிவசேகரம் அவர்களே !
    கொழும்பு நகர சுவர்களில் “இயேசு வருகிறார் ,இயேசு வருகிறார் ” என்று 20 வருடங்களாக எழுதியிருப்பதை பாத்திருக்கிறேன்.அவர் வந்த பாடில்லை.
    சில வேலை அவர் (மீட்பர் )அங்கு வந்துவிட்டாரோ ? அவர் தானோ ….

    நடிகர் .வடிவேலுவின் வார்த்தையில் சொன்னால் ” அவனா நீ ? “

  4. யோகன் says:
    16 years ago

    தோழர் சிவசேகரம் அவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானிருக்கிறார்.புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எங்கே எழுதிருக்கிறார் என்று
    ஸ்ரீ ரங்கன் நிரூபித்தால் நலம்.
    சும்மா பேராசிரியர்கள் என்று சகட்டுமேநீக்கு எழுதுவது முறையாகாது. ஸ்ரீரங்கனா புலிகளை ஒழித்தார்.?

    • ரூபன் says:
      16 years ago

      யோகன்,

      புலிகளைத் தவிர யாராவது (வேறு இயக்கத்தவர்) தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதுண்டா?

      அவ்வாறு இல்லை என்றால்: பழைய ‘சுவடுகளில்’ சிவசேகத்தின் கட்டுரையைப் படித்துப் படித்துப்பார்கவும்…

      அதுவும் ‘சயனைட் மரணம்’ தொடர்பாக…

      இதைவிட இன்னும் வேண்டுமென்றால்.. புனையெரையும் அறிமுகப்படுத்துகிறேன்.

      பி.கு:- புனைபெயர் தமதல்ல என்று மறுத்துரைத்தால்: என்னால் ஆராதரப்படுத்த முடியாது. இது அவரவர் ‘மனச்சாட்சிக்குரியது!’

      ஏனெனில் நான் எந்தவொரு ‘பத்திரிகை’ ஆசிரியனும்மல்ல…

      ரூபன்
      04 08 10

  5. xxx says:
    16 years ago

    யோகன், கொமிசார் ஒருவர் கையை உயர்த்தியிருக்கிறார்.

    இன்னும் சில கைகளும் உயரும் — முன்பு சில “இணையத் தளபதிகள்” திடுக்கிட்டது போல.
    தளபதிக்குக் கொமிசாராகப் பதவியுயர்வு கிடைத்துள்ளதல்லவா!

    • தங்க பாண்டி says:
      16 years ago

      யோகன் ஆகிய இரு பெயர்களும் ஒன்றா அல்லது இருவரும் ஒரே கட்சியா. இருவரது குரலும் ஒரே பாணியில் அமைந்துள்ளது. புரட்சிகரமான இம்மக்கள் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • தங்க பாண்டி says:
      16 years ago

      யோகன் xxx ஆகிய இரு பெயர்களும் ஒன்றா அல்லது இருவரும் ஒரே கட்சியா. இருவரது குரலும் ஒரே பாணியில் அமைந்துள்ளது. புரட்சிகரமான இம்மக்கள் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

      • xxx says:
        16 years ago

        சொன்னதில் எதுவுமில்லை– மூன்றரைப் பேர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

        வாழ்த்துக்களுக்கு நன்றி. கட்சி தொடங்கச் சொல்லுகிறீர்களா?

        நம்மை விட்டுவிட்டுக் கவிதையைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் — சீரங்கநாதர் கவிஞரைப் பற்றிச் சொல்லியிருக்கிற மாதிரியில்லாமல்.

  6. kingsley says:
    16 years ago

    இன்ற பலர் மக்கள் மரணத்தை ஞாயப்படுத்துவதற்கா மௌனித்துக்கிடக்கின்ரனர் என்ற கேல்வியை ரங்கா தன்னைத்தானே கேடடுக்கொண்டால் அவரது சந்தேகங்கள் தீரும்

  7. யோகன் says:
    16 years ago

    தங்க பாண்டி!
    ஒரே கருத்துடையவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம்.தோழர் சிவசேகரம்புலிகளுக்கு வக்காலத்து வாங்கி எங்கே எழுதிருக்கிறார் என்று கேட்டிருக்கிறேன் இதற்கு பதில் சொல்ல வேண்டும் .
    “கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால்
    கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு.. ”

    என்னுடைய கேள்விக்கு என்ன பதில் ?

    • suagathy says:
      16 years ago

      Yogan
      “கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால்
      கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு.. ”
      Are you going back to that Katpu-business? That is a reactionary concept

  8. thaathee says:
    16 years ago

    மண்ணாங்கட்டியை சர்கரையாகும் மெக்கானிசம் சட்டத்தரணி சிவசேகரம் தான் அறிவார் ..லண்டன் வாழ்வு கசந்து போய், கணக்கு பண்ணும் (விந்தை கூட்டத்துடன் )  வக்காலத்து வக்கீல் இவர்.

    • xxx says:
      16 years ago

      இக் கவிதையில் எந்த மண்ணாங்கட்டி சக்கரையாக்கப் பட்டுள்ளது?
      உங்களுக்கு லண்டன் வாழ்வு சக்கரையாக இனித்தால் எல்லாருக்கும் இனிக்க வேண்டுமா?

      கருத்துக்களுக்கு முகம் கொடுக்க இயலாத கோழைகள் தான் அவதூறான தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்குகிற பரிதாபமான நிலையிலுள்ளனர்.
      சீரங்கநாதர் ஒருவர், நீங்கள் இன்னொருவர்.
      இன்னும் இருப்பார்கள். அது உங்களுக்குப் பெருமையோ இல்லையோ தெரியாது.

  9. mooodan says:
    16 years ago

    இன்னொரு கொமிசார் இது சாட்சாத் நானே தான் என்று கையை உயர்த்தி “அவரது பாணியில்” கவிதை வேறு எழுதித் தொலைத்துவிட்டார். நான் இவர்களை கபடத்தனமான ஆட்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். இப்பத் தானே விளங்குகிறது பச்சை முட்டாள்கள் என்று! அப்போ, பரமார்த்த குருவும் சீடனும் கதைதான் கொமிசாரிக்கும் தளபதிக்கும். வெல் டன் தோழர் சிவசேகரம்.

  10. thaathee says:
    16 years ago

     வணக்கம் xxx!! இலக்கியம் பற்றி கொஞ்சம் அறிந்த பின்பு பேச வந்தால் நல்லது. உமக்கு புரியுதோ இல்லையோ சிவசேகரம் அறிவார். போட்டி ,பொறாமை களைந்து புதியபூமி படைப்போம் .எங்கள் தேசம் ,எமது மக்கள். மறப்போம். மன்னிப்போம். நன்றி.

    • xxx says:
      16 years ago

      எனக்குக் கவிதையைப் பற்றி உங்களளவுக்குத் தெரியாது எ ன்பதாலேயே ஒரு சின்ன விளக்கம் கேட்டேன். ஸ்கூல் தமிழ் வாத்தியார் போலக் கோபப் படுகிறீர்களே!

      இக் கவிதையில் எந்த மண்ணாங்கட்டி சக்கரையாக்கப் பட்டுள்ளது என்று தயவு செய்து விளக்குவீர்களா?

      என் மற்றக் கருத்துக்களுக்கும் என் கவிதை அறிவின்மைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

      • thaathee says:
        16 years ago

        ஒரு காலத்தில் சேரன் கவிதைக்கு சிவசேகரம் சொன்னது தான் அது. முதலில்  தேடி வாசியுஙக. பின்பு வாருங்கோ..அடியும் தெரியாமல்நுனியும் தெரியமல்… கருப்பு அங்கி போட்டால் போலை

      • ஜெயகாந் says:
        16 years ago

        xxx ஏன் தமிழ் வாத்தியார் மீது அவ்வளவு கோபமா? சில சமயங்களில் தமிழ் வாத்தியாரை நத்தி உயர்ந்த அப்புக்காத்தும் இப்படி கோபப்படுவது உண்டு. தயவுசெய்து அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு எதாவது பிரயோசனமாக எழுத முயற்சியுங்கள்.

      • xxx says:
        16 years ago

        தாதீ அவர்களே!
        கேட்ட கேள்விக்கு ஒரு பதிலையும் காணவில்லையே!
        சிவசேகரம் எந்த மண்ணாங்கட்டியைச் சக்கரையாக்கியுள்ளார்?

      • xxx says:
        16 years ago

        ஜெ,
        நான் முட்டையில் மயிர் பிடுங்குகிற என் கோபக்காரப் பண்டித வாத்தியார் ஒருவரை மனதில் வைத்து எழுதினேன். நீங்கள் அப்படி ஒருவரல்ல என்றுநம்புகிறேன்.
        இங்கே நான் சில்லரைத்தனமாக எதையுமே சொல்லவில்லையே! நக்கலடிக்கவும் நிந்திக்கவும் சீண்டவும் ஒருவருக்கு உரிமை இருந்தால், சொந்தப் பேர்ச் சூரரே, அதற்கேற்ற பதில் தர மற்றவர்கட்கும் உரிமை உண்டல்லவா!

    • ஜெயகாந் says:
      16 years ago

      thaathee நீங்கவேறு அவர் xxx எனற்பேரையே இத்தகைய சில்லறைத்தனமான விளையாட்டுகளுக்கும் ஒரு பலமான சித்தாந்தத்தை விஞ்ஞான பூர்வமாக எதிர்கொள்ள முடியாது செல்கின்றபோது இவ்வகையில் அதன் போக்கை மாற்றி விடுகின்ற பணியினையே அவர் இனியொருவில் செய்து வருகின்றார். காலத்தால் அவரது இத்தகைய தனிமனித புலம்பல்கள் அம்பலத்திற்கு வருகின்ற போது ”அவன் நானில்லை” என்று தப்பிவிடுவார். பொதுவாக இவர்களின் கருத்துக்களை கண்டுக்கொள்ளாமல் விடுவதே மக்கள் நலத்தில் அக்கரைக் கொண்டு செயற்படுகின்றவர்கள் செய்ய வேண்டி பணியாகும். இவர் உண்மையிலே நேர்மையானவர் என்றால் இவரின் சொந்தப் பெயரில் எழுத வேண்டியது தானே.

  11. யோகன் says:
    16 years ago

    ரூபன் ! தகவலுக்கு நன்றி .

    புலிகளை எதிர்ப்பதாக கூறி நாடத்தப்பட்ட பத்திரிகைகள் பல
    முன்னை நாள் தமிழீழ இயக்கங்களிலிருந்து வந்தவர்களால் நடாத்தப்பட்டது.ஆவற்றை எல்லாம் படிக்கும் “பாக்கியம்” எனக்கு கிடைக்கவில்லை .புலியை எதிர்க்கும் நபர்களின் வீடுகளில் அவப்போது பார்த்துள்ளேன் .அவ்வளுதான். புலிகளின் இடத்தில் அவர்களின் தலைமையும் இருந்தால் அவர்கள் அதையெல்லாம் ஏற்று கொள்வார்கள்.1990 களின் பிட் பகுதில் பலர் புலிகளை பச்சையாக ஆதரித்ததையும் கண்டேன்.
    மற்றபடி தோழர் சிவசேகரத்தின் கட்டுரையை படித்தால் தான் நான் சொல்ல முடியும்.
    நான் கேள்வி செவியன் அல்ல .

    • xxx says:
      16 years ago

      யோகன், ரூபன்,
      தற்கொலைத் தாக்குதல்கள் புலிகளுக்கு முன்னரே பிறரால் செய்யப்பட்டுள்ளன. 2ஆம் உலகப் போரில் ஜப்பான் அதைப் பெருமளவில் பாவித்துள்ளது.

      விடுதலைப் புலிகளுக்கு ‘ஆதரவாக’ சிவசேகரம் எழுதிய எதையுமே நான் கண்டதில்லை. விடுதலைப் புலிகளின் நியாயமான நிலைப்பாடுகளை ஏற்றும் தவறுகளைக் கண்டித்துமே அவரது கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என அறிவேன். இதை இலங்கைப் பிரச்சனை பற்றிய அவரது அண்மைய நூலிற் காணலாம்.

      ரூபன் குறிப்பிட்ட கட்டுரைப் பகுதியை இனியொருவில் இட்டால் அது உதவும். அது புனை பேரில் எழுதப்பட்டதாயின் ‘சுவடுகள்’ ஆசிரியரோ சிவசேகரமோ உறுதிப் படுத்தலாம். எனவே புனை பேரையும் குறிப்பிடுவது நல்லது.

  12. Nadchathiran chevinthian. says:
    16 years ago

    இக் கவிதை சிவசேகரம் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து எழுதிய கவிதைதான். சாட்சாத் கமிசார் சிவசேகரமேதான். எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழவனின் படிகள் இலக்கிய இதழில் ஈழத்தமிழ் மக்கள் ஒரு சுயநிர்ணய உரிமை இல்லாத மக்கள் என்று எழுதியவர் சி.சிவசேகரம். விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனத்தின் சதியாலேயே என்று கோகர்ணன் என்ற புனைபெயரில் தினக்குரலில் எழுதியவர் சி.சிவசேகரம்.
    மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரை தினக்குரலில் என்.ஜி.ஓ அடிவருடிகள் என்று கடும் அவதுறு கோகர்ணன் என்ற புனைபெயரில் தினக்குரலில் எழுதியவர் சி.சிவசேகரம்.

    -நட்சத்திரன் செவ்விந்தியன்.

    • THAMILMARAN says:
      16 years ago

      இப்போதுதான் இது ஒரு இலக்கிய் விவாதமாக் சுவை பெறூகிற்து தனிப்ப்ட்ட கோபங்களக் காட்டாது ஆதாரங்கள வைத்து விவாதிபது ஆரோக்கியமானது.இது வரவேற்கத்தக்கது.

    • ஜெயகாந் says:
      16 years ago

      சிறப்பான ஆதாரங்களுடன் நிறுவியுள்ளீர்கள் நட்சத்திரன் செவ்விந்தியன்.
      அவரது புலி ஆதரவுக்கு பயங்கரவாதி இருப்பதென்பது என்ற கவிதை அவரது “கல்லெறி தூரம்” என்ற கவிதை தொகுப்பில் இடம்பெறுகின்றது. அதனை தொடர்ந்து வரும் காலங்களில் பிரசுரிக்க முயற்சிக்கின்றேன். அத்துடன் அவர் இறுதியாக எழுதிய தமிழ் தேசியம் தொடர்பான நூல் மேலோட்டமாக பார்க்கும் போது புலி எதிர்ப்பு பிரச்சாரதை்தை மேற்கொள்வது போல தோன்றினாலும் அதன் அடிப்படை புலிகளின் அமெரிக்க சார்பு கொள்கையை ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது. இது குறித்த வமர்சனக் கட்டுரைகளையும் எழுத முயற்சிப்பது நன்று.

      xxx ஏன் தமிழ் வாத்தியார் மீது அவ்வளவு கோபமா? சில சமயங்களில் தமிழ் வாத்தியாரை நத்தி உயர்ந்த அப்புக்காத்தும் இப்படி கோபப்படுவது உண்டு. தயவுசெய்து அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு எதாவது பிரயோசனமாக எழுத முயற்சியுங்கள்.

      • xxx says:
        16 years ago

        “தயவுசெய்து அரட்டை அடிப்பதை விட்டுவிட்டு எதாவது பிரயோசனமாக எழுத முயற்சியுங்கள்.” என்ற ஆலோசனை உங்களுக்குத்தான் மிகப் பொருந்தும்.
        நீங்கள் கோரும் கட்டுரையை நீங்களே எழுதுங்கள். ஆனால் முழுமையான மேற்கோள்களையும் தாருங்கள்.
        சிவசேகரம் எழுதிய நூலை வாசித்துத் தான் கருத்துரைத்தீர்களா?
        நீங்கள் வாசிக்காமலே கருத்துரைக்கும் நூலை, வாசிக்க இயலாவிட்டால், யாரைக் கொண்டாவது முழுதாக வாசிப்பித்து அதன் பின் கட்டுரையை எழுத முயலுங்கள்.

  13. Kuppathan says:
    16 years ago

    இவர்கள’ ஏன’ துளளுதுகள’?
    குற’றவாள> தான’ துளளுவான’

  14. Nallinthan says:
    16 years ago

    இவர்கள் எல்லா Europe
    நாட்ல
    திண்டு கொள்தவர்கள். புரட்சியும் புண்ணாக்கும்.

  15. thams says:
    16 years ago

    சிறீ ரங்கன் கொமிசார் பொன்ம்மொழி
    “எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.”

    • xxx says:
      16 years ago

      ஒரு எதிரியைக் கொல்லும் போது அவனுடைய வலிமை வெல்லுபவனுக்குப் போய்ச்சேரும் என்ற கருத்து புராண இதிகாசங்களில் அடிக்கடி வரும்.
      அது போல புலிகளைக் கண்டபாட்டுக்குத் தாக்கித் தாக்கிப் புலிகளின் சர்வாதிகார ‘நற்பண்புகளிற்’ சில சிறீ ரங்கன் அவர்கட்கும் சேர்ந்திருக்கலாம்.
      சிவசேகரத்தின் மண்டையில் போடும்படி அன்னார் எப்போது ஆணை பிறப்பிப்பார் என்று இந்தப் பின்னூட்டத் தொடரிலேயே சிலர் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  16. யோகன் says:
    16 years ago

    சிவசேகரம் தமிழில் மிக குறிப்பிடத்தக்க கவிஞர் .
    வசனங்களை முறித்து ,முறித்து எழுதுபவர்கள் எல்லாம் கவிஞர்களாகவும் தங்களுக்கு புதுமையாக பேர் வைத்து கொண்டு ( அப்பொழுதானே மற்றவர்கள் கவனிப்பார்கள்.) புத்தகம் அடிப்பதும் ,சிலரை வைத்து அதை புகழ்ந்து ,பொற் காசுக்கு கவி பாடுவதுமான கேவலம் தமிழில் இருக்கிறது.
    தோழர் சிவசேகரத்தின் கவிதையில் நையாண்டி நிரம்பி வழிகிறது.சுட வேண்டியர்களை சுட்டு விட்டது.
    வாழ்த்துக்கள் சிவசேகரம். தொடர்ந்து எழுதுங்கள்.

    • suagathy says:
      16 years ago

      இக் கவிதை சிவசேகரம் தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து எழுதிய கவிதைதான்.—நட்சத்திரன் செவ்விந்தியன்–
      Is it really?……

  17. Rajan says:
    16 years ago

    இதுவரைக்கும் புரட்சிக்கான மென்னிகர் கமீசார் நான் தான் என்று நாலு பேர் உரிமை கோரியுள்ளனர். இன்னும் இருக்கிறார்களா இல்லை இத்தோடு முடிந்ததா?

  18. யோகன் says:
    16 years ago

    தமிழ்மாறன் !
    என்ன சொல்கிறீகள் ?இங்கே நடப்பது என்ன ஆரோக்கியமான விவாதமா ?இங்கே நடப்பது கவிதை பற்றிய விவாதம் அல்ல .தோழர் சிவசேகரம் பற்றிய விவாதம்.
    கொட்டைப்பாக்கு விவாதம் :”அது தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லுதல்.”
    ஆஸ்திரேலியாவில் கலாநிதி .ஆ .கந்தையா என்பரை வைத்து தான் இந்த விவாதங்களை மொழி பெயர்க்க வேண்டும்.அவர் அதி உத்தம ஜனாதிபதி J .R .ஜெயவர்த்தனா வின் தமிழ் வடிவம்.

  19. Guru Ratha says:
    16 years ago

    சிவசேகரம் தினக்குரல் வினவு போன்ற ஊடகங்களிலும் ரடிக்கல்நோட்ஸ் போன்றவற்றிலும் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். குட்டியாய் ஒரு கவிதை எழுதினதும் சிலருக்கு மூக்கைப் பொத்துக்கொண்டு வருகிறது. சரி, சிவசேகரம் மோசமான ஆளாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும் இதுவரைக்கும் இல்லாத ஆத்திரம் இப்போது ஏன் வருகிறது ? அதிலும் சிறீ ரங்கன் என்ற ஒரு விஷமி அவரை அரசியலில் இருந்தே அகற்ற வேண்டும் என்று கூறுகிறார். சரி, கவிதை எழுத முன்னம் ஏன் உங்களுக்கு இது தெரியவில்லை. கவிதை உங்களைச் சுடுகிறது. அவ்வளவுதான். எப்படிப்பட்ட கவிதை? மோசமான இயல்புகொண்ட மனிதர்களை நோக்கி எழுதிய கவிதை. ஆக, கவிதைக்கு எதிர்வினையாற்றுபவர்கள் தம்மைத் தாமே மோசமானவர்கள் என்று சொல்கிறார்கள். இதைக்கூடவா புரிந்துகொள்ள முடிடயாது ?

  20. Guru Ratha says:
    16 years ago

    //விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிரிந்து சென்றது அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனத்தின் சதியாலேயே என்று கோகர்ணன் என்ற புனைபெயரில் தினக்குரலில் எழுதியவர் சி.சிவசேகரம்.
    மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரை தினக்குரலில் என்.ஜி.ஓ அடிவருடிகள் என்று கடும் அவதுறு கோகர்ணன் என்ற புனைபெயரில் தினக்குரலில் எழுதியவர் சி.சிவசேகரம்// இவையெல்லாம் கருத்துக்கள் இவற்றைச் சரி தவறு என்று சீர்தூக்கிப் பார்க்கலாம் அதைவிடுத்து கவிதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? செவ்விந்தியன் ??!! உங்களுக்கும் சுடுகிறதா?? கண்ணாடி மாளிகை செவ்ஸ்.. கவனம்

  21. Guru Ratha says:
    16 years ago

    ஒரு கவிதை அது யாரையும் நேரடியாகத் தாக்கவில்லை.. எத்தனை வன்மம் பாருங்கள்!! ரயாகரன் , ரங்கன், ரூபன், சிறி இவர்கள் வன்மம், வன்முறை எழுத்துக்கள், மற்றவர்கள் மீதான வெறுப்பு, அருவருப்பு ….. வன்முறை என்பது நமது சமூகத்தோடு ஊறிப்போனதா? மேர்வின் டீ சில்வா மரத்தோடு கட்டிவைத்து அடித்தது போலத்தான் இவர்களும். மேர்வினின் உணர்வுடைய இந்தக் கூட்டமும் உணர்வுகளும் இனம்காட்டப்பட வேண்டும்

    • xxx says:
      16 years ago

      எத்தகைய பரிதாபமான ஒரு கூட்டணி அமைகின்றது என்பதைக் கவனிக்கும் போது வேடிக்கையாக இல்லை?
      ஒவ்வொருவரும் இன்னொருவர் திரித்துச் சொன்னதைத் தனக்கு ஆதாரமக்கிக் கொள்ளுவது பெரிய பரிதாபம் தான்.
      கொமிசார்கள் மட்டுமல்லாது கொமிசார்களாக விரும்புவோருமல்லவா கொதித்துப் போகிறார்கள்

  22. Nallinthan says:
    16 years ago

    சர்வாரதிகள் பலவிதம். புலிகள் ஆயுத சர்வாரதிகள், பொய் அரஙகக்காரர்கள் கருதது சர்வாரதிகள்.

  23. Nallinthan says:
    16 years ago

    சர்வாதிகாரர்கள் பலவிதம். புலிகள் ஆயுத சர்வாதிகாரர்கள் , பொய் அரஙகக்காரர்கள் கருதது சர்வாதிகாரர்கள். சின்ன் வித்தியாசம் தான். அலட்திக்கொள்ள வேண்டாம்.

  24. Kuppathan says:
    16 years ago

    குரு ராதா ச
    ரியாக சொன்னீர்கள். (ஒரு கவிதை அது யாரையும் நேரடியாகத் தாக்கவில்லை.. எத்தனை வன்மம் பாருங்கள்!! ரயாகரன் , ரங்கன், ரூபன், சிறி இவர்கள் வன்மம், வன்முறை எழுத்துக்கள், மற்றவர்கள் மீதான வெறுப்பு, அருவருப்பு ….. வன்முறை என்பது நமது சமூகத்தோடு ஊறிப்போனதா? மேர்வின் டீ சில்வா மரத்தோடு கட்டிவைத்து அடித்தது போலத்தான் இவர்களும். மேர்வினின் உணர்வுடைய இந்தக் கூட்டமும் உணர்வுகளும் இனம்காட்டப்பட வேண்டும்) மாவோ , ஸ்டலின் போன்ரவர்களீன் கொலைகலுக்கு ஆராத்தி எடுப்பவர்களீடம் எதை நாம் எதிர் பார்க்க முடியும்?

    • ரூபன் says:
      16 years ago

      ”மாவே , ஸ்ராலின் கொலையாளின்” (உங்கள் பாசையில்..) படங்களை ‘புதிய ஜனநாயகக் கட்சியின்’ (சிவசேகரத்தின் கட்சி) முதற் பக்கத்தில் இருந்து -கடைசி இரு படங்களையும் – அகற்றும் படி கோரும் தைரியம் உமக்கு உண்டா? பிறகு வாரும் தத்துவரீதியாக விலாவரியாகப் பேசலாம். சும்மா புழுதி கிளப்ப வேண்டாம்.

      ரூபன்
      060810

  25. Mac Donal`s maxsist says:
    16 years ago

    சிவசேகரம் அவர்களது இக் கவிதையில் ஒரு விடயம் விடுபட்டுவிட்டது. ஐரோப்பாவில் இருக்கும் பம்மாத்து மாக்சியவாதிகள் Mac Donals

    ல்` உண்டு Coco Cola

    ல்

    கை
    கழுவி, உணவு செமிப்பததாக மாக்சியம் கதைப்பவர்கள். உடல் வளையாத மேட்டுக்குடிகள். மக்கள் இவர்களது புரடசி வரும் என்றூ வானத்தை பார்த்திருக்கும் முட்டாள்கள் இல்லை.

  26. ரூபன் says:
    16 years ago

    குரு,

    தங்களின் ”கூட்டணிக்” க் கருத்து பிசகாக உள்ளது. செவ்விந்தியனுக்கு நீங்கள் வழங்கிய ‘விதிவிலக்கும்’ புரியாமலில்லை!

    ஏற்கனவே பின்னூட்டத்தில் ”நாலுபேரென” (நாலுபேருக்குச் சுட்ட கவிதையென) சொல்லிப்போட்டுப் போனார்.

    இதற்கு முதல் இந்த நாலுபேருக்காக சிவசேகரம் கவிதை எழுதியதாகவும், அதற்கு வதழ்து என்றும் யோகன் சொல்லிவிட்டுப் போனார்….

    நாலுபேருக்காக கவிதை எழுதும் அளவுக்கு என்ன சிவசேகரம் என்ற கவிஞர் மலிந்துவிட்டாரா?

    இந்தப் பின்னூட்டங்களில் நீங்கள் அமைத்த ‘கூட்டணி’ கணனியின் அற்புதம்.

    மூன்று தரம் அடுத்தடுத்து பின்னூட்டமிட்ட குருவே!

    உங்கள் பின்னூட்டத்தின் தன்மை என்ன என்பதை? இணையவாசகர்கள் தீர்மானிக்கட்டும்!!

    ரூபன்
    060810

  27. யோகன் says:
    16 years ago

    .

    ..வன்முறை எழுத்துக்கள், மற்றவர்கள் மீதான வெறுப்பு, அருவருப்பு ….. வன்முறை என்பது நமது சமூகத்தோடு ஊறிப்போனதா?…Kuppathan

    சைவத்தியும் தமிழையும் வளர்த்த புண்ணியவான் , துய்ய வந்த வெள்ளாளர் குலத்தில் உதித்த் ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தர்கள் ஒருவரை ஒருவர் கொன்றோளிப்பதிலும் ,துவேஷம் பார்ப்பதிலும் நாசிச்டுக்களுக்கே பாடம் சொல்லி கொடுக்கும் ஆற்றல் மிக்கவர்ககவும் ,உலகமெல்லாம் உணர்ந்தோதகற்றிய தேவாரங்களை படித்த சைவ மக்கள் உலகமெல்லாம் சென்று உலக மகா பாதகங்களை எல்லாம் செய்ததையும் கண்டோம்…
    .என்ஜினீயர்களும் ,டாக்குத்தர்களும் விஞ்ஞானம் படித்த மேதாவிகள் எல்லாம் கூடி கோவில் கட்டி தேர் இழுக்கிறார்களே ! ஏன் ? நமது சமூகத்தை இன்னும் காட்டு மிராண்டி சமுத்ஹயம் ஆக்கத்தான் .இதெல்லாம் கொண்டது தான் யாழ் சமுதாயம்.

    இந்த கண்ன்றாவிகளை ஒழிக்க வேண்டும் என்றால் ஸ்டாலினும் ,மாவோவும் தான் தேவை.சமய குரவர்களும் ,படித்த பண்டிதர்களும் அல்ல .

    “.மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்
    பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப்
    படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை
    வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் “மந்தரம்” என்றே “…பாரதி தாசன்

  28. Garammasala says:
    16 years ago

    முதலில் இங்கு விவாதத்துக்கு உட்பட்டது, கவிதை யாரைக் குறிக்கிறது என்பது தான். என்னைப்ப் பற்றி என்னைப் பற்றி என்று பல கைகள் உயர்ந்தன.
    அத்தோடு அரைகுறையான தகவல்களின் திரிப்புக்களொடு கவிஞர் பற்றிய வசைகளும் வந்தன.
    ஏதோ பழைய கோபங்களை வைத்துக் கொண்டு, சிலர், ஆமா மாடுகள் மாதிரித் தலை ஆட்டினார்கள். சிலர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்கள்.
    ஓன்று மட்டும் உறுதி: இக் கவிதையின் உட்பொருள் வாசித்த எல்லாரையும் பெருமளவும் சரியாகவே சென்றடைந்திருக்கிறது.
    தனிப்பட்ட தாக்குதல்களும் ஆதாரமற்ற அல்லது திரித்துப் புனையப்பட்ட குற்றச் சாட்டுக்களும் கவிதையின் தாக்கத்தை எதிர்கொள்ள இயலாத பலவீனத்தையே காட்டுகின்றன.
    இவ்வாறான நடத்தை புதியதல்ல. முன்னர் சுட்டிக் காட்டப் படாததுமல்ல.
    ‘சொந்தப் பெரில்’ எழுதுவதை மட்டுமே தமது ஒரே தகுதியாகக் கொண்டவர்கள் புனைபேரில் எழுதுவோரை விடப் பொறுப்பற்ற நிந்தனைகளில் ஈடுபடுவது நகைப்புக்குரியது.
    இவ்வாறான நிந்தனைகள் ஒருவரது மனத்தின் இழிநிலையைக் குறிப்பதாகவே கொள்ள இயலும். ஏனவே தனிப்பட்ட தாக்குதல்கள் புறக்கணிக்கத் தக்கன. ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களும் அவ்வாறே.

  29. tholar says:
    16 years ago

    தோழர் சிவசேகரம் அவர்கள் மாக்சிய லெனிச மாவோ சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட ஒரு நீண்ட கால மாக்சியவாதி என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். அவர் தோழர் சண்முகதாசனுடனும் அதன் பின்பும் தொடர்ந்து புரட்சிகர அரசியலை மேற்கொண்டு வருகிறார். அவர் எந்தக்காலத்திலும் மாக்சியத்திற்கு எதிராகவோ அல்லது மாக்சியத்தைக் கைவிட்டோ செல்லவில்லை. மாறாக கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தான் நம்பும் மாக்சிய அரசியலுக்காகவே பயன்படுத்தி வருகிறார்.

    தோழர் சிவசேகரம் புலிக்கு எதிராக வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. நான் கொழும்பில் அவரது பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். புலிகளுக்கு எதிரான அவரது துணிச்சலான விமர்சனங்கள் கண்டு ஆச்சரியப்பட்டிருக்���ிறேன். ஏனெனில் அந்த நேரத்தில் புலிகள் கொழும்பில் பலரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்று திரிந்த காலம் அது. தான் சுடப்படலாம் என்ற நிலையிலும் கொழும்பில் இருந்து கொண்டு புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமல்ல அதேவேளையில் புரட்சி அரசியலையும் முன்னெடுத்த அவர் பங்கை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது கொச்சைப்படுத்துவதோ அழகல்ல என்பதே என் கருத்தாகும்.

    யமுனா ராஜேந்திரன் 1996ம் ஆண்டளவில் மாக்சிய ஆசான்கள் மீது குறிப்பாக கால்மாக்ஸ் மீது அவதூறு பொழிந்தபோது அதற்கு எதிராக தோழர் சிவசேகரம் அவர்கள் எதிர் வினையாற்றி இருக்கிறார். அண்மையில் இது தொடர்பாக அவருடன் நான் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டபோது என்னை யார் என்று தெரியாத நிலையிலும் நான் எடுத்துக்கொண்ட விடயத்திற்காக தன்னுடைய விளக்கங்களையும் ஒத்துழைப்பையும் உடன் தந்து உதவினார். இது அவர் மாக்சியம் மீது வைத்திருக்கும் பெரு மதிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என நான் கருதுகிறேன்.

    இன்றும் கூட தன்னைத்தானே மாக்சியவாதி என்று கூறிக்கொள்ளும் சிலர் இந்திய எதிரி பற்றி வாய் திறப்பதில்லை. தங்களின் வெப்தளங்களில் இந்திய எதிர்ப்பு பின்னூட்டங்களை தணிக்கை செய்து தங்கள் இந்திய விசுவாசத்தைக் காட்டிவருகின்றனர். ஆனால் தோழர் சிவசேகரம் அவர்கள் பத்திரிகைகளில் எழுதும்போதும் சரி அல்லது ரேடியோவில் உரையாற்றும் போதும் சரி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றிலும் இந்திய எதிரியை நன்கு அம்பலப்படுத்தி வருகின்றார். எனவே அவரின் இத்தகைய பங்களிப்புகளை நினைவில் கொண்டே அவர் மீதான விமர்சனம் வைக்கப்படவேண்டும்.

  30. thillainathan says:
    16 years ago

    தனிpப்பட்ட தாக்குதல் வேண்டாமென அவ்வவப்போது நீங்களும் அழத்தான் செய்கிறீர்கள். சிவசேகரம் மீதான விமர்சனத்திற்கு அவர் பதில்சொல்லமுதல் நீங்கள் கருத்ததெதுவுமில்லாமல் வீணே குடைபிடிக்கிறீர்கள். நட்சத்திரன் செந்தப்பெயர்தானே! பதில் எழுதுங்கள்!

    • Garammasala says:
      16 years ago

      தில்லைநாதன், உங்கள் குறிப்பு எனக்கானது என்றால்,
      தனிப்பட்ட தாக்குதல் வேன்டாம் என்று கோருவது அழுகை அல்ல. அது பண்பாடு சார்ந்த ஒரு கருத்து.
      தனிப்பட்ட தாக்குதல்கள் பண்பற்ற விவாதங்களுக்கே கொண்டு செல்லும். அவற்றை எவராலும் தடுக்க இயலாது. கனதியான விவாதங்களை வேண்டுவோர் அவற்றைத் தவிர்ப்பர் என்பது எனது பணிவான எதிர்பார்ப்பு.

      நட்சத்திரனின் சொந்தப் பெயரோ வேறெவரதுமோ அல்ல என் கரிசனை.
      நட்சத்திரனோ வேறு எவருமோ முழுமையாகத் தமது ஆதாரங்களை முன் வைக்கட்டும்.
      சிவசேகரம் புலி ஆதரவாக என்ன சொன்னார் என்று நிறுவுவது குற்றஞ்சாட்டுவோரது பொறுப்பே ஒழிய வேறெவரதும் அல்ல.
      விடுதலைப் புலிகள் பற்றிய அவரது மதிப்பீடு என்ன என்பதை அரை வாக்கியங்களிலிருந்து எவரும் அறிய இயலாது.
      நிச்சயமாக அகச் சார்பான வியாக்கியானங்களிலிருந்து உறுதிப்படுத்த இயலாது.
      அவர் சொன்னது என்ன என்று எடுத்துக்காட்டப்படின் அதை அவர் விளக்கட்டும். விளக்கம் ஏற்புடையதோ இல்லையோ என்பதை வாசிப்போர் முடிவு செய்யலாம்.

  31. யோகன் says:
    16 years ago

    கருத்துக்களை எதிர் கொள்ளும் வல்லமை முற்போக்கு பேசுபவர்களிடம் தாழ்ந்திருப்பது வருந்ததக்கது.பிரபாகரன் துவக்கு வைத்திருத்தார் சுட்டார் .இவர்களிடமும் துவக்கு இருந்தால் நமது நிலை என்னாவாகும்.!!!??புலிகளிடம் இருந்து நாம் எந்த படிப்ப்பினையும் பெறவில்லை.”

    இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.”என்று ஸ்ரீரங்கன் சொல்வது வருந்ததக்கது.
    பொதுபடையான ஒரு கவிதைக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்வு.!!!???

    தோழர் சிவசேகரம் தன்னை வெளிப்படையாக தனது கருத்துக்களை எழுதி வருபவர்.மார்க்சிய எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்.அவருடன் முரண்பட்ட ஒரு முக்கியமான கவிஞர் என்னிடம் சொன்னார் “விவாதித்து அவரை வெல்ல முடியாது ”
    மு.நித்தியானந்தன் ,ஜமுனா ராஜேந்திரன் போன்றோரை போலே யாழ்பானத்தவருக்கு அட்வகேட் வேலை பார்க்காதவர்.

    • kannan nallavan says:
      16 years ago

      யோகன் ஏன் ஒருவகை யாழ்ப்பான எதிர்ப்பு?
      உங்களிடம் பலமுரை இது கன்டேன்.
      – கண்ணன்

  32. rukku says:
    16 years ago

    முழு லூசுகளா அந்தக்கவிதை சாட்சாத் ஆண்டவனை இறைவனைக்குறிக்கிறது போதுமா,

    • xxx says:
      16 years ago

      ருக்கு
      நீங்கள் சொல்லுவது உண்மை என்றாலும், சாட்சாத் ஆன்டவனே தனது பல் வேறு கொமிசார்கள் மூலம் இந்தத் தெய்வ நிந்தனையைக் கண்டித்துப் பேசியுள்ளார். அதை அவர் நேற்று என் கனவிலும் சொன்னார்.
      உங்களிடம் சொல்லவில்லையா?
      எங்களை எல்லாம் லூசுகள் என்று சொல்லிவிட்டுப் போங்கள், பரவாயில்லை. எங்களில் சில பேருக்கு, நான் உட்பட, நாங்கள் முழு லூசுகள் என்று தெரியும். சிலர் அதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள். சிலர் உங்களுக்குத் தான் லூசு என்று சொல்லுமளவுக்கு லூசுகளாக இருப்பார்கள்.

      ஆனால் கொமிசார்களை மட்டும் லூசுகள் என்று சொல்லி விட்டு நீங்கள் தப்ப முடியாது. சீரங்கக் கொமிசார் போன்றவர்கள் சிவசேகரத்துக்கு விதிக்கப் போகிற தண்டனையை உங்களுக்கும் விதிக்கக் கூடும். எனவே, தயவு செய்து சொந்தப் பேரில் எழுதாதீர்கள்– ஒரு “காலஞ்சென்ற சொந்தப்பேர்ச் சூரராக” அறியப்பட விரும்பினாலொழிய.

  33. kingsley says:
    16 years ago

    ரஸ்ய கவிஞன் மாயாகோவ்ஸ்கியின் கவிதைகள் எவ்வாறு தீங்கினை விரட்டும் ஆயுதங்களாக காணப்பட்டனவோ அதற்கு சமாந்தரமாக சிவசேகரத்தின் கவிதைகளும் காணப்படுகின்றன . தொப்பிகள் தைக்கப்பட்டு குவிக்கப்பட்ட பின் எடுத்து தலைகளில் மாட்டிக் கொண்டு ஐய்யய்யோ ஐய்யய்யோ………….. என்று கத்துபவர்கள் செந்தப் பெயரோ புனைப் பெயரோ தங்களின் தலைகளுக்கு தைத்து தந்த தொப்பிகள் மிகப் பொருத்தம் என்று காட்டி விட்டார்கள் படைப்பிற்கு வெற்றி

    பயங்கரவாதியாய் இருப்பது பற்றிய சிந்தனை எனனும் கவிதை(கல்லெறி தூரம்);பயங்கரவாதிகளாக இருப்பவர்களின் பால் வயது வர்க்க சமய பிரதேச வேறுபாடுகளை விமர்சிக்கும் வகையிலேயே காணப்படுகின்றது என்பதனை சுயப் பேர் சுயம்புவான ஜெயகாந்த் பிழையாக வாசித்திருப்பது கவலையைத் தறுகின்றது இதே தொகுப்பில் காணப்படும் போராளித் தோழருக்கு என்னும் கவிதையினையும் மற்றய கவிதைகளையும் பொருமையுடன் வாசித்து விமர்சிப்பது நல்ல வாசகனின் விமர்சிப்புக்கு உகந்ததாகும்

    • xxx says:
      16 years ago

      நீங்கள் குறிப்பிடும் கவிதை இலங்கைச் சூழலை முன்வைத்து எழுதப்பட்டதா?
      அது பொதுவாக இராணுவ அடக்குமுறை சாதாரண மக்களைக் குறிவைப்பதைப் பற்றியது போலவே உள்ளது.
      மக்கள் எவ்வாறு போராளிகளாகுமாறு தூண்டப் படுகின்றனர் என்பதை அது உணர்த்தி நிற்கிறது என்பதே என் வாசிப்பு.
      அதில் ஒருவர் புலி ஆதரவைக் காண இயலும் என்றால், அல் கைதா ஆதரவைக் கூட அதில் அவர் காணலாம்.

  34. Kuppathan says:
    16 years ago

      
    மேட்டுக்குடி ருபன் ஐயாவுக்கு, குப்பத்தானின்  கோடி டாலர்$$ வணக்கம்!

    உலகத்தின் எந்த  நாட்டிலும் எந்த அடக்கு முனற வந்தாலும் முதலில் கிளர்ந்து போராடுவது எங்கள் குப்பத்து மனிதர்கள் தான். எங்களப் பார்த்து இப்படி ஒரு கேள்வி? தூ!  
    சிவசேகரம் கொம்பரா இருந்தால் என்ன, றாசகரன் பண்னையாரக இருந்தால் என்ன,நான் தயார்,!  ஆனால் பிரபா விட்ட இடத்தை பிடிக்கத்துடிக்கும் றாசகரன் பண்னையார் கூட்டத்தின் பொய்மை, திரிபு, மிரட்டல்,சர்வாதிகாம்…………..-எதிர்த்து உம்மால் குரல் கொடுக்க தான் முடியாவிட்டாலும் ( பாவம்$$$$!)  பரவாயில்லை, ஒரு கொட்டாவியாவது விட துணீவு இருக்குதா?  

    உண்மை செத்த உலகில், உண்மை உள்ள, 
    –குப்பத்தான்.

  35. ரூபன் says:
    16 years ago

    குப்பத்தான்

    ரூபன் மேட்டுக்குடிதான். நான் அதை ஒருபோதும் மறுக்கவில்லை. மறைத்து ஒழித்து நடித்து வாழவுமில்லை. வெளிநாட்டுக்கு வருபவர்கள் காசுக்காரர்கள் தான்.

    வெளிநாட்டில் உடல்வளைக்காத மேட்டுக்குடிகள் இருப்பதாகவும், குப்பங்கள் நிறைந்து வழிவதாகவும் பலர் ‘மனப்பால்’ குடிக்கின்றனர். ”அரைப் பாட்டாளி, முக்கால் பாட்டாளி” என்று பலர் வேசம் கட்டியதும் இந்த உலகத்தில் தான்!

    ”பிரபா விட்ட இடத்தைப் பிடிப்பதற்கா” இப்போ சண்டை??

    நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர்! ஓ நீர் வெளிநாட்டுக் குப்பத்தில் இருக்கிறீர் நாதான் மறந்விட்டேன்.

    பிரபாகரனுக்கு பிறகும், வெளிநாட்டில் வட்டுக்கோட்டையும், நாடுகடந்த தமிழீழமும், மே’18 உம், கே.பி யின் குழுவும் என்று….நிரம்பிவழிகிறதே!!

    குப்தான் நான் இலங்கைப் பிரஜை அல்ல. எனதுநாட்டில் ஒரு தொழிலாளி எப்படி இருக்கிறானோ, அவன் போலவே நானும் இருக்கிறேன். இலங்கையில் இருந்து வந்ததால், இலங்கைப்பிரச்சனை பற்றி கருத்துச் சொல்வதால், செயற்கையாக நான் இலங்கைப் பிரசைபோல நடிக்கத் தேவை இல்லைத்தானே.

    எனக்கு விளங்கியவரை…உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்: நீர் ”உண்மை செத்த உலகில், உண்மை உள்ள குப்தானாக” வாழ்கிறீர். நான் உண்மையான உலகத்தில் ஒரு சராசரி மனிதனாக வாழ முயற்சிக்கிறேன்.

    இந்த முரண்பாடுதான் என்னையும் உம்மையும் பேசவைக்கிறது.

    எதிரும் புதிருமாக.

    ரூபன்
    080810

  36. suagathy says:
    16 years ago

    this is a pseudo-debate of pseudo intellectuals. A KIND OF PSEUDO INTELLECTUAL- CANNIBALISM…the main aim of this kind of debate is CHARACTER ASSASSINATIO..

  37. நவீனன் says:
    16 years ago

    புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்! ‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின் புரட்சிக்கான ஆஸ்தானக் கொமிசார்’ நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்றிடுவார்! – இருப்பினும் இவரறியாக் கருத்துக்கள் வந்திட்டால் – யாரிவர் இச்சமூக – விஞ்ஞான – மெய்ஞ்ஞானங்களை இவர் எங்கே படித்திட்டார்? இவரென்ன ‘மெய்நிகர்க் கொமிசாரோ’? – எனக் குழம்பிடுவார் அவர் தம் ‘அரசசபை’யில்! வந்தது பழையதோ புதியதோ விஞ்ஞானமோ மெயஞ்ஞானமோ எனவும் ஆராயார் எழுதிடுவார் எழுந்தமானத்திலோர் விமர்சனம்! எழுதியோன் இவர் முன்னிதைப் பகிரங்கமாக பகிர்த்தாராய்ந்தால் பதிலின்றி மௌனமே காப்பார்! பின் அப்பால் சென்று – இதன் பொருள் குற்றம் குற்றமேயென்பார்! – இவரோ கூந்தலில் வாசனை இயற்கையாயும் வருமென்பார்! புலியைப் பாசிசம் என்றிட்டால் – அதைப் போராட்ட சக்தி என்றிடுவார்! மூத்தகவிஞர் புலியைப் போற்றிட்டாலும் – அவர் முக்காலும் முற்போக்குக் கொண்டவரே என்றிடுவார்! – இவர் முற்போக்கேன் உங்கள் பதிப்பில் இல்லயெனறிட்டால் – இது தான் எங்கள் ‘புதிய ஜனநாயக சமூக விஞ்ஞான’ அரசியல் என்றிடுவார்! ஓ! ஆஸ்தானக் கொமிசாரே! இவ்வுலகு ஒற்றைப் பரிமாணமின்றிய பன்முகத் தன்மையியுள்ளது! ஒற்றை-இரட்யைல்ல பல்தேசியங்களினால் பர்ணமித்துள்ளது! இது நூறு மலர்களாய், நூறு கருத்துக்களாய் முட்டிமோதுகின்றது! இதில் அடக்கி-ஓடுக்கலுக்கெதிரானவை மக்கள் விடிவிற்காயானவை முன்னேறிப்பாயும் – மற்றவை வழக்கிழந்தே போகும்! – இதற்கு நீங்களல்ல, மக்களே சரியான பட்டத்தை வழங்குவர்! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு! -அகிலன் (07/08/2010) நன்றி: http://www.ndpfront.com/?p=8938

  38. நவீனன் says:
    16 years ago

    புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்!

  39. நவீனன் says:
    16 years ago

    புரட்சிக்கான “ஆஸ்தானக்” கொமிசார்! ‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின்

    புரட்சிக்கான ஆஸ்தானக் கொமிசார்’

    நுர்று மலர்கள் மலரட்டும்,

    நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்

    என்றிடுவார்! – இருப்பினும்

    இவரறியாக் கருத்துக்கள் வந்திட்டால் – யாரிவர்

    இச்சமூக – விஞ்ஞான – மெய்ஞ்ஞானங்களை

    இவர் எங்கே படித்திட்டார்?

    இவரென்ன ‘மெய்நிகர்க் கொமிசாரோ’? – எனக்

    குழம்பிடுவார் அவர் தம் ‘அரசசபை’யில்!

    வந்தது பழையதோ புதியதோ

    விஞ்ஞானமோ மெயஞ்ஞானமோ எனவும் ஆராயார்

    எழுதிடுவார் எழுந்தமானத்திலோர் விமர்சனம்!

    எழுதியோன்

    இவர் முன்னிதைப் பகிரங்கமாக

    பகிர்த்தாராய்ந்தால்

    பதிலின்றி மௌனமே காப்பார்!

    பின் அப்பால் சென்று – இதன்

    பொருள் குற்றம் குற்றமேயென்பார்! – இவரோ

    கூந்தலில் வாசனை இயற்கையாயும் வருமென்பார்!

    புலியைப் பாசிசம் என்றிட்டால் – அதைப்

    போராட்ட சக்தி என்றிடுவார்!

    மூத்தகவிஞர் புலியைப் போற்றிட்டாலும் – அவர்

    முக்காலும் முற்போக்குக் கொண்டவரே என்றிடுவார்! – இவர்

    முற்போக்கேன் உங்கள் பதிப்பில் இல்லயெனறிட்டால் –

    இது தான் எங்கள் ‘புதிய ஜனநாயக

    சமூக விஞ்ஞான’ அரசியல் என்றிடுவார்!

    ஓ! ஆஸ்தானக் கொமிசாரே!

    இவ்வுலகு ஒற்றைப் பரிமாணமின்றிய

    பன்முகத் தன்மையியுள்ளது!

    ஒற்றை-இரட்யைல்ல

    பல்தேசியங்களினால் பர்ணமித்துள்ளது! இது

    நூறு மலர்களாய்,

    நூறு கருத்துக்களாய்

    முட்டிமோதுகின்றது! இதில்

    அடக்கி-ஓடுக்கலுக்கெதிரானவை

    மக்கள் விடிவிற்காயானவை

    முன்னேறிப்பாயும் –

    மற்றவை வழக்கிழந்தே போகும்! – இதற்கு

    நீங்களல்ல, மக்களே

    சரியான பட்டத்தை வழங்குவர்!

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

    -அகிலன் (07/08/2010)நன்றி: http://www.ndpfront.com/?p=8938

    • xxx says:
      16 years ago

      அகிலன்/நவீனன் ,
      “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!”
      “கவிதை” முடிவிற் சொல்லப்பட்டிருக்கும் இவ் வரிகள் அது பற்றிய உன்னதமான மதிப்பீடாக அமைகின்றன. பாராட்டுக்கள்.

  40. ஜெயகாந் says:
    16 years ago

    சிறப்பான கவிதை புரட்சியை வைத்து இன்று பிழைப்பு நடாத்துபர்களுக்கு நெத்தியடி……. இப்போது மற்றவர்களுக்கு தொப்பி போடும் பணியில் ஈடுபடுகின்றவர்களும் அடிமாட்டு வேலை செய்பவர்களும் சிறிது ஓய்வெடுக்கலாம். அது நேரடியாகவே பெரும் கவிஞனை அழகாக எடுத்துச் சொல்லுகின்றது. இன்னும் இவர் அலையில் செயற்பட்ட காலத்தையும் யாராவது கூறினால் கவிதை முழுமைபெறும். இதற்காக நடிகமணி யோகன் கொதித்தெழுவாரோ தெரியவில்லை.

    • kingsley says:
      16 years ago

      அடிமாட்டு தனம் என்பது யார் யாருக்கு செய்வதென்பது கேல்வி கேட்பவன் தன்னைத்தானே கேட்டக் கொள்ள வேண்டும் 1)தன்னை வளர்த்துக்கொள்ள தான் சார்ந்தவர்களை அடிமாட்டுதனம் செய்ய வைப்பது 2)தனக்கு தலைமைகிடைக்கவில்லை என தான்சார்ந்திருந்த அமைப்பிற்கும் கட்சிக்கும் சேற்றை வாரி வீசி ஏகாதிபத்தியத்திற்கு அடிமாட்டு தனம் செய்வது 3)பல வருடங்கள் மாக்சியத்துள் வாழ்ந்து இரண்டு வருட இடைவேலையில் பின்நவீனத்துவவாதியாகி பின்நவீனத்துவத்திற்கு அடிமாட்டு தனம் செய்வது4)பிரதியமைச்சருக்கு பயந்து போய் பல வடங்கள் மெளனித்து கிடந்து இ.தொ.கா விற்கு அடிமாட்டுத்தனம் செய்தத இவற்றோடு ஒப்பிடும் போது கொள்கைக்காய் அடிமாட்டுத்தனம் மட்டும் அல்ல எதையும் செய்யலாம்

      • xxx says:
        16 years ago

        சிவசேகரம் நீங்கள் உட்பட எந்த விசரனையும் உருவாக்கவில்லை. எவரையும் உருவாக்கியதற்கு உரிமை கோரவும் இல்லை.
        தனிப்பட எவரையும்நையாண்டி செய்ததாகவும் தெரியாது. சில கோமளித்தனங்களை எடுத்துக்கட்டி ஒரு சில கவிதைகள் வந்துள்ளன.
        வாசித்த ஒவ்வொரு கோமாளிக்கும் விளங்கிவிட்டது. அது தான் பிரச்சனையே ஒழிய வேறெதுவுமல்ல.

        • xxx says:
          16 years ago

          ஏற்கெனவெ கோழி இறகு தங்கள் தலையிலா என்று தேடிப் பார்த்து எத்தனையோ கோமாளிகள் தங்கள் கொமிசாரிசத்தை அம்பலபடுத்திவிட்டனர். அதற்குள் நீங்கள் வேறு.

          விரும்பியோரெல்லாம் அணிந்து பிறர் தலைகளிலும் வைக்க முயலும் தொப்பி சிவசேகரத்தின் கவிதை.

          ஏல்லாரையும் பேச விடுங்கள். யார் யாரை அக் கவிதை துன்புறுத்துகின்றது என்று தானே விளங்கட்டும்.

          • maniyan says:
            16 years ago

            ரஷ்ய பாரசீக கவிதைகளில் வன்கொடுமைகளை சாடும் நவீன கொமிசார்கள் பிறப்பெடுப்பது போல மெய்நிகர் கொமிசார் பிறந்திருக்கலாம் .குருத்தெலும்பு தெறிக்காதென்பது தத்துவம் .இஙகு முத்திய எலும்பு வழைக்கப்பட்டிருக்கிறது.அவ்வளவுதான் மாறுபாடு,சிந்தனை வேறுபாடு,புரிதல், இவைதான் பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன ,செவ்விந்தியனின் கோபம் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்,அவ்வளவுதானே வேறுபடுகிறது,,,

      • xxx says:
        16 years ago

        “அண்டை நாடொன்றன் தொலைக்காட்சியில்
        பயங்கரவாதம் பற்றிய ஒரு விவரணத்தில்
        ஊடகவியலாளர் பொலிஸ் மேலதிகாரியிடங் கேட்டது
        ….
        ….”
        இது இலங்கை பற்றியது மாதிரியா தெரிகிறது?

        காமாலைக் கண்களுக்குக் கன்டதெல்லாம் மஞ்சள்.
        சில வகைக் காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் புலி.

        கஷ்டப்ப்படுகிற உங்கள் ஆஸ்தானத்தைக் கேளுங்கள்.

  41. kingsley says:
    16 years ago

    நேர்மையானவர்களுக்கு சிவசேகரம் எழுதியது கவிதை சாக்கடை சக்கரவர்த்திகலுக்கு அதுஉமிழ் நீர் ;;; சிவசேகரத்தின் பேனையில் இருந்து வந்தது உமிழ் நீர் என்றால் யார் யார் முகத்தில் பட வேண்டும் என்பது சிவசேகரம் எதிர்பார்த்ததை விட வேகமாகவும் அதிகமானவர்களின் முகங்களிலு பட்டு
    விட்டது துடைத்துக்கொள்வதற்கு பதிலாக இன்னும் இன்னும் அள்ளி பூசிக்கொண்டு அழகுபார்த்து ரசித்துதிரிவது இன்டர்நெசனல் ஜோக்

  42. யோகன் says:
    16 years ago

    அலையில் சிவசேகரம் என்ன மார்க்கிய எதிர்ப்பா செய்தார்.?”கப்டன் செம்பக கண்ணன் “விஜய காந்த ,மன்னிக்கவும் ஜெயகாந்த் விளக்கினால் கோடி புண்ணியம் .
    இங்கே பிரச்னை கவிதையே தவிர தோழர் சிவசேகரம் அல்ல.
    அளவான தொப்பி என்றால் போட்டு கொள்ளவும் .

  43. யோகன் says:
    16 years ago

    அலையில் சிவசேகரம் மார்க்கசிய எதிர்ப்பா நடாத்தினார்.?
    தமிழ் சினிமா காரங்கள் போலே ,போலே பெரிய எடுப்பில் தொடங்குவது பின் நம்மக்கே வம்பு என்று ஒதுங்குவது போலே கப்டன் ஜெயகாந்த ஏதோ உளறுகிறார்.
    இங்கே விவாதம் கவிதை பற்றியே ,சிவசேகரம் பற்றி அல்ல.

    வாதம் வம்பு பண்ண கூடாது- அறிஞர்கள் (கப்டன் ஜெயகாந்த,நவீனன்,அகிலன் )
    வகையில்லா பொருளை வேண்டி எப்போதும்
    வாதம் வம்பு பண்ண கூடாது

    • ஆராய்ச்சிமணி. கு. மாதவா says:
      16 years ago

      இப்ப எல்லாம் வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். வர வர மட்டுமில்லாம போக போக கூட யோசிக்கிறேன். இப்ப உதாரணமா இந்த வரேன் இதை எடுத்துகோங்களேன். ஆமா வரேன் அப்படின்ற வார்த்தையை எடுக்க முடியுமா என்ன ? கேட்டுக்கோங்களேன் அப்படின்னு தானே சொல்லணும் ஆனா எடுத்துகோங்கன்னு ஏன் சொல்லறோம். மனசுல எடுத்துகோங்க அப்படிங்கறதுக்காக அப்படி இருக்குமோ? அப்ப மனசு கேட்கலைன்னு சொல்லறோமோ அது சரியா தப்பா. அது சரின்னா இது தப்பா இது சரின்னா அது தப்பா.

  44. Garammasala says:
    16 years ago

    ‘இனியொரு’ ஒரு பின்னூட்டக் கொள்கையைப் பிரகடனம் செய்திருந்தது.
    நான் ‘சொந்தப் பேர்ச் சிங்கம்’ என்ற பதத்தைப் பிரயோகித்ததால் வெகுண்ட சிலரது மனத்தாங்கல்களுக்கு மதிப்புக் கொடுத்த இனியொரு, இப்போது எவ்வளவு கேவலமான தனிப்பட்ட தாக்குதல்களை அனுமதித்துள்ளது.ஒவ்வொரு தாக்குதலும் முட்டையில் மயிர் பிடுங்குகிற தோரணையில், முருகையன் சொன்னது போல ‘முட்டையில் மயிர் பிடுங்கி அதில் பேனும் பார்க்கிற’ தோரணையில் தான் உள்ளது.
    தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்ற
    நிபந்தனை நடைமுறையில் உள்ளதா?
    பின்னூட்டக் கொள்கை இனிமேலும் இல்லை என்றால் அதை அறிவியுங்கள்.

    இங்கே நடப்பதெல்லாம், நானும் தான் நானும் தான் என்று தமிழரங்கக் கொமிசாரின் தொண்டரடிப் பொடிகளும் நாளைய கொமிசார்களும் கை உயர்த்துவது மட்டுமே.
    இது பயனுள்ள உரையாடலா?

  45. யோகன் says:
    16 years ago

    Ram உமக்கு பொருத்தமான பாடல் ஒன்று .

    ” சொன்னாலும் புரியாது
    சுயமாவும் தெரியாது
    மன்னாதி மன்னன் (Ram) என்று
    மனதுக்குள்ளே நினைத்திடுவார்”.!!!!

    • Ram says:
      16 years ago

      “எங்க வீட்டு நாயைக் காணோம் யோகன் சார்…
      “”அடையாளம் சொல்லுங்க…
      “”அது குரைக்கும் பொழுது, உங்க மாதிரியே இருக்கும்…….!!

  46. KRISHNAN says:
    16 years ago

    வாவ்,
    ஒரு நாலு வரிக் கவிதை இவ்வளவு கோமாளிகளை அம்பலப்படுத்த முடியுமாயின் அதன் வலிமையே தனி.
    சிவ சேகரத்தின் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  47. rukku says:
    16 years ago

    கோழி இறகும் தொப்பியும் சரி அளவான எல்லாரும் போட்டாச்சு சால்வையை மட்டும் எவரும் திரும்பிப்பாற்கவில்லை,கொமிசார்மட்டும் பரலோகத்திலுள்ள பிதாவே இன்னுமொருமுறை இன்னுமொருமுறை என்பது எனக்குக்கேட்கிறது.நீங்கள்மட்டும் மௌனம் சாதிக்கலாமோ.

    • xxx says:
      16 years ago

      ருக்கு
      எல்லாரையும் லூசுகள் என்று சொல்லிவிட்டீர்கள். பரமண்டலதில் உள்ள பிதாவனவர் இதற்குள் நுழைந்து லூசுப் பட்டம் வாங்க அவர் உண்மையிலேயே முழு லூசாகத்த் தான் இருக்க வேண்டும் — இந்த லூசுகளை எல்லாம் படைத்த அவர் பற்றிச் சந்தேகம் எழுவது இயல்பானதல்லவா!

  48. suganthy says:
    16 years ago

    It is only a poem…a political poem….. I think after many years a satire poem. why everybody shells him`? may be he has succeeded in his aim??????

  49. maniyin says:
    16 years ago

    ரஷ்ய பாரசீக கவிதைகளில் வன்கொடுமைகளை சாடும் நவீன கொமிசார்கள் பிறப்பெடுப்பது போல மெய்நிகர் கொமிசார் பிறந்திருக்கலாம் .குருத்தெலும்பு தெறிக்காதென்பது தத்துவம் .இஙகு முத்திய எலும்பு வழைக்கப்பட்டிருக்கிறது.அவ்வளவுதான் மாறுபாடு,சிந்தனை வேறுபாடு,புரிதல், இவைதான் பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றன ,செவ்விந்தியனின் கோபம் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்,அவ்வளவுதானே வேறுபடுகிறது,

  50. யோகன் says:
    16 years ago

    அன்பு படர்ந்த நெஞ்சினிலே – ஒரு
    அகந்தை குரங்கு தாவும்
    கொம்பும் ஒடிந்து கொடியும் சரிந்து
    குரங்கும் விழுந்து சாகும் – சிலர்
    குணமும் இது போல் குறுகி போகும்
    கிறுக்கு உலகமடா தம்பி
    திருந்தி நடந்து கொள்ளடா -இதயம்
    திருந்த மருந்து சொல்லடா – பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    • Ram says:
      16 years ago

      திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
      பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

  51. கள்வன் says:
    16 years ago

    சிக்ப்புத் தொப்பி எனது மட்டுமெ,

    ஏகபோக உரிமை கோரி

    ஏகபிரதிநிதி ஆனார்!

    ஒரு மழையில் வெளூத்ததூ சாயம்!

    வேண்டாம் என வீசி ஏறிந்தார்…

    மீண்டும் வெய்யில்..

    நிழல் ஒதுஙக ஓடுகிறார்……

  52. Naadoode says:
    16 years ago

    இரயாகரனையும் கவிஞராக்க முயற்சி செய்த சிவசேகரத்திற்கு முதற்கண் நன்றி. 
    ஆனாலும் சிவசேகரம் எழுதிய கவிதைக்கு இரயாகரனும் சிறிரங்கனும் ஏனையவர்களும் ஏன் எழும்பி நின்று ஆடுகிறார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. 
    அதில் இரயாகரனைப்பற்றியோ சிறிரங்கனைப் பற்றியோ எதுவும் நேரடியாக அவர் குறிப்பிடவில்லையே. 
    உட்கார்ந்து ஆசுவாசமாகப் புரட்சி ‘செய்பவர்’களைத் தானே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
    அது இனியொருவுக்கும் கூடப் பொருந்தும் அல்லவா? 
    தொப்பி அளவென்றால் டபக்கென்று தூக்கிப் போட்டுவிட்டார்களோ? தங்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது என்று கண்டு பிடித்த திறமையை நாங்கள் மெய்ச்சத் தான் வேண்டும். 
    பின்னூட்டம் விடுகிறவை யாராகிலும் இனியாவது கவிதையைப் பற்றி விடுங்களேன். 
    அட நட்சத்திரன் செவ்விந்தியன் என்ற கவிஞரும் களமிறங்கியிருக்கிறார் போல. அவர் தான் எப்பவும் தலையை விட்டு வாலைப் பிடிப்பவராயிற்றே. 
    இப்பவும் அப்பிடித்தான் பிடிச்சிருக்கிறார். 
    அவர் கவிதை பற்றி எழுதுவார் என்று எதிர்பார்ப்பது கழுதை முட்டை போடும் என்று எதிர்பார்ப்பதைப் போலத் தான். 

  53. Kalanesan says:
    16 years ago

    தமிழ்சார் அறிவுலகத்தின் ஓர் குறுக்குவெட்டு இந்த பின்னூட்டஙகள்.
    இந்த பின்னூட்டங்களை வைத்து பலவிடயங்களை ஆய்வு செய்யலாம். அதில் இனியொருவும் ஒன்று.

  54. Ram says:
    16 years ago

    புலிகளின் அராஜகத்தை விட உங்கள் அராஜகம் கொடுரமானது. யாராவது மாற்றுக் கருத்து கூறிவிட்டால் அவர்கள் தொப்பியை போட்டுக் கொண்டார் எனவும். துப்பிய எச்சில் அவரது மாறுப்பட்ட கருத்தாளர்களின் முகத்தில் பட்டதெனவும் பயமுறுத்துவது மிகவும் கீழ்த்தரமான செயல். கருத்துக்களை கருத்துகளுடன் விவாதிப்பதே நாகரிகமான செயலாகும்.

  55. Hei Ram says:
    16 years ago

    Ram சார் வாகோழி பூமிக்குள் தலைய விட்ட கதையா இருக்கு….

    • Garammasala says:
      16 years ago

      (Hei Ram, minor correction: வான்கோழி இல்லை, தீக்கோழி.)
      Ram, கவிதை யாரைப் பற்றியது என்று சிவசேகரம் சொல்லவில்லை. கவிதை ஒரு வகையான நடத்தையை விமர்சிப்பது.
      அந்த நடத்தைக்குரியோர் மட்டுமே சினக்க நியாயம் இருந்தது. மற்றவர்களை அது சிரிக்கவோ சிந்திக்கவோ செய்திருக்கலாம்.
      தொப்பி என்பதே ஒரு உவமை, அது ஆங்கிலத்தில் வரும் “if the cap fits you, wear it” என்ற வழக்கில் இருந்து வருவது.
      மல்லாந்து துப்பினால் மார் மேலே விழும் என்பது தமில் பழமொழி. (அதைப் பற்றியெல்லம் முட்டையில் மயிர் பிடுங்காவசியமில்லை.)

      அவசியமின்றிக் கவிதையை விட்டு விட்டு அதை எழுதியவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியொர் முட்டாள்களானதையே மேற் கூரிய சொற்கள் குறித்தன. ஆதில் ஒரு வன்முறையும் கிடையாது.

      கோபப் பட்ட ஒவ்வொருவரும் அக் கவிதை யாரை இலக்கு வைத்தது என்று நினைத்தார்கள் என்று நேர்மையாகச் சொல்லத் துணிவார்களா?

  56. தயா says:
    16 years ago

    யார் சொன்னார் சூரியத்தேவன் ம்ரித்தார் என்றூ?
    வன்னி `பஙகருக்குள்` போராடி,
    முள்ளவாய் பக்கம் காணாமல் போனவர்,

    மீண்டுகம் உயிர்த்தெழுந்த்தார்
    பாரிஸ் `பஙகருக்குள்`,

    சூரியத்தேவனை வணஙகி,
    காவடி
    எடு பக்தா……

    • xxx says:
      16 years ago

      பாரிஸ் பங்கர்ச் சூரியத்தேவர் இருபது முப்பது வருஷமாக் எல்லார் மீதும் கடும் வெய்யில் எறிந்து கொண்டல்லவா இருக்கிறார். அவர் சாக மாட்டார். செத்தாலும் அவருடைய Cloneகள் இருக்கின்றனவே!

  57. Nallinthan says:
    16 years ago

    xxx அவர்க்ளே, Cloneகள் என்றால் சூரியத்தேவனும், பொட்டு அம்மானும் ஒன்றா?

    • xxx says:
      16 years ago

      “பாரிஸ் பங்கர்ச் சூரியத்தேவர்” யாராயிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

  58. பாட்டாளி says:
    16 years ago

    கோமாளிகள், இதை “இணையத்தளபதிகள்”, “கொமிசார்” என்ற தங்கள் இருப்பு சார்ந்த நிலையை தக்கவைக்க வசைபாடுகின்றார்

  59. பாட்டாளி says:
    16 years ago

    நாம் பல்லைக்காட்டும், சந்தர்ப்பாத பிரமுகராக இல்லாமல் இருக்கின்றோம். புலத்தில் நாம் இருந்தாலும், இதுதான் எமது நிலை. இதனால்தான் எம்முடன், மார்க்சியம் பேசும் அறிவுசார் பிரமுகர்களுடனான முரண்பாடுகள் தொடருகின்றது.

    இல்லை என்று இதை நீங்கள் மறுத்தால், மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுங்கள்.

    • பாரதிக்குஞ்சு, says:
      16 years ago

      ஐயா , மார்க்சியம், லெனினசம், எல்லாம் பட்டுப்போன பாலைமரம், சனநாயக விழுமியங்களைத்தான் சமூகம் இன்று ஏற்றுக்கொள்ளுகிறது , யதார்த்தமும் அவ்வாறுதான் பயணிக்கிறது, அந்தக்காலங்களில் நிலச்சுவாந்தார்களையும் குறுநில மன்னர்களையும் எதிர்த்துப்போராடும் போது,கார்ல் மார்க்கின் ததுவங்கள் சரியாகப்பட்டன,
      உலகத்தைவிட்டே கொம்யூனிசம் கரைந்துபோய் நெடுங்காலமாகிவிட்டது, நீங்கள் குறிப்பிட்ட “வர்க்கப்போராட்டம்” என்றசொல்லே சிரிப்பு வரவழைக்கிறது, இடதுசாரி வலதுசாரி என்றால் என்ன. எப்படி அந்தச்சொற்றொடர் உருவாகியதென்பது தெரியாத அரசியல்வாதிகள்தான் 70%, பேர் இருக்கின்றனர், சுதந்திரத்திற்கான போராட்டக்குழுக்கள் கொள்கைகளை வெளிப்படுத்துவதற்காகவும், ,ஜனநாயகக்கோள்கைகளை வைத்துக்கொண்டு போராட்டம் நியாயப்படுத்தமுடியாது என்பதற்காகவும் ,மாக்சின் சித்தாந்தங்களை துணைகொள்ளவேண்டிய சங்கடம் உண்டு, பாருங்கள் நீங்கள் உங்களை” பாட்டாளி” என்றுதான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் அந்தச்சிந்தனை அப்படித்தான், நல்லதத்துவம் ,தொழிலாளர் சங்கங்கள் இன்றும் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு மக்சிசத்தை பிபற்றுகின்றன ,சில அமைப்புக்கள் ஜனநாயக முன்னணியாக மாறிவிட்டன ,,இந்தக்காலத்திற்கல்ல என்பது எனது தாழ்மையான் அபிப்பிராயம்,

  60. பாரதிக்குஞ்சு, says:
    16 years ago

    ஐயா , மார்க்சியம், லெனினசம், எல்லாம் பட்டுப்போன பாலைமரம், இனி அவைகள் விறகுக்குரியவை, சனநாயக விழுமியங்களைத்தான் சமூகம் இன்று ஏற்றுக்கொள்ளுகிறது , யதார்த்தமும் அவ்வாறுதான் பயணிக்கிறது, பிறந்த குழந்தையின் செயற்பாடுகள் கூட சனநாயகத்தைத்தான் பிரதிபலிக்கின்றன, அந்தக்காலங்களில் நிலச்சுவாந்தார்களையும் குறுநில மன்னர்களையும் சமூக விரோதிகளையும் எதிர்த்துப்போராடும் போது,கார்ல் மார்க்கின் ததுவங்கள் சரியாகப்பட்டன,
    உலகத்தைவிட்டே கொம்யூனிசம் கரைந்துபோய் நெடுநேரமாகிவிட்டது, நீங்கள் குறிப்பிட்ட “வர்க்கப்போராட்டம்” என்றசொல்லே சிரிப்பைத்தான் வரவழைக்கிறது, இடதுசாரி வலதுசாரி என்றால் என்ன. எப்படி அந்தச்சொற்றொடர் உருவாகியதென்பது தெரியாத அரசியல்வாதிகள்தான் 70%, பேர் இருக்கின்றனர், சுதந்திரத்திற்கான போராட்டக்குழுக்கள் கொள்கைகளை வெளிப்படுத்துவதற்காகவும், ,ஜனநாயகக்கொள்கைகளை வைத்துக்கொண்டு போராட்டம் நியாயப்படுத்தமுடியாது என்பதற்காகவும் ,மாக்சின் சித்தாந்தங்களை துணைகொள்ளவேண்டிய சங்கடம் உண்டு, இப்போ பாருங்கள் நீங்கள் உங்களை” பாட்டாளி” என்றுதான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், அந்தச்சிந்தனை அப்படித்தான்மனிதனை வழிப்படுத்துவதர்க்கு முனையும், ஒருவன் பாட்டாளியாகவே வாழ்வை முடித்துவிடக்கூடாது, கார்ல் மார்க்ஸ் அவர்களால் அந்தக்கால நடை முறைக்கு ஏற்றாற்போல் சிந்தித்து எழுதப்பட்ட நல்லதத்துவம் அது,, ,தொழிலாளர் சங்கங்கள் இன்றும் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு மாக்சிசத்தை பிபற்றுகின்றன ,சில அமைப்புக்கள் ஜனநாயக முன்னணியாக மாறிவிட்டன ,, சில புரட்சிகர சனநாயக முன்னணி என்றாகிவிட்டன, சில புரட்சிகர சனநாயக சோசலிச முன்னணி என்றாகிவிட்டது, “நாளடைவில் சனநாயகம் மட்டும்தான்” வாழும், அந்தப்பழைய தத்துவங்கள் இந்தக்காலத்திற்கல்ல என்பது எனது தாழ்மையான் அபிப்பிராயம்,

    • kingsley says:
      16 years ago

      ‘ உலக பொருளாதார வீழ்ச்சி காரணத்தினால் அமேரிக்க பேராசிரியர்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸின் மூலதனத்தைத் தேடித் தேடிப் படிப்பதாக மலையகத்தில் ஒரு மூலையில் வாழும் நான் அறிந்த விடயத்தைப்பற்றி முற்றும் தெறிந்த மேதாவி நீங்கள் அறியாதிருப்பது …. உங்கள் மேதாவித்தனத்திற்கும் உங்கள் சிந்தனைக்கும் எட்டாதது ஏனோ? Mr.Baradi Kunjan………..

      • பாரதிக்குஞ்சு, says:
        16 years ago

        மன்னிக்கவும் உங்கள் இயலாமை புரிகிறது, வருந்துகிறேன், நான் மேதாவியென்றோ நான்சொல்லுவதை பின்பற்றுங்களென்றோ ஒரு இடங்களிலும் நான் வலியுறுத்தவில்லை //மலையகத்தில் ஒரு மூலையில் வாழும் நான் அறிந்த விடயத்தைப்பற்றி முற்றும் தெறிந்த மேதாவி நீங்கள் அறியாதிருப்பது உங்கள் மேதாவித்தனத்திற்கும் உங்கள் சிந்தனைக்கும் எட்டாதது ஏனோ// மலையகத்தில் ஏன் ஒரு மூலையில் வாழ்ந்து சங்கடப்படுகிறீர்கள் உச்சி மலையில் ஏறி உட்காருங்கள் நானா இடைஞ்சலாக இருக்கிறேன், நீங்கள் அறிந்ததை நான் அறிந்திருக்க வேண்டும் என விதியுமில்லை, நான் குறிப்பிட்டிருக்கும் கருத்தை தயவுசெய்து மீண்டுமொருமுறை படித்துபுரிந்துகொள்ளுங்கள் அவை என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே,என தாழ்மையான அபிப்பிராயம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்,

        மலையகத்தின் மூலையிலிருந்து நீங்கள் அறிந்ததை என்னால் அறியமுடியாமல் போனது கவலைக்குரியதுதான், கார்ல் மார்க்ஸின் ,மூலதனமொன்றை கையில் வைத்திருந்தால் கோடீசுவரர் ஆகிவிடலாம் என்பது இந்த மரமண்டைக்கு ஏறாமல்ப்போய்விட்டது, அமெரிக்காவுடன் ,இப்போ யப்பானும் பணக்கஸ்டத்தில் இருப்பதாகக்கேள்வி, கிறிஸ், இந்தியா, இங்கிலாந்தும் ஏன் ஸ்ரீலங்காவும் தள்ளாட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள், (கேள்விப்பட்டது மட்டுந்தான் இவற்றையும் மேதாவித்தனமென்று கூறி கடியவேண்டாம்),,,எல்லோருக்கும் தயவுசெய்து ஒவ்வொன்று அனுப்பிவைத்தீர்களானால் , படித்து உலக பணவீக்கத்தை குறைக்க உதவிய உங்களுக்கு , கார்ல் மாக்ஸின் சிலையிருக்கும் பெர்லின் அலெக் ஷாண்டர் பிளற்சின் பக்கத்தில் வருங்காலத்தில் உங்களுக்கும் சிலை அல்லது பெயராவது பொறிக்கப்படலாம், நன்றி , பாரதிக்குஞ்சு,,

    • xxx says:
      16 years ago

      விஷயமே தெரியாமல் சீண்டலுக்கு எழுதப்படுகிறவற்றுயடன் நேரத்தை வீணாக்காத்கிற்கள் கிங்ஸ்லி..

  61. கள்வன் says:
    16 years ago

    ஓடினார். ..ஓடினார் ..

    புழுதி வாரி இனறத்து ஓடினார்.

    வாய்க்கால்ப் பக்கம் பதுஙகி .
    ஆசுவாசப் படுத்தி மீண்டும் வந்தார்

    கையில் பச்சை, நீலம் என
    பல வர்ணத் தொப்பியுடன்.

    இப்போ அவர் ஓர் வியாபாரி,

    அதுவும் ஏகபோக உரிமை கோரி
    மொத்த வியாபாரி ஆனார்!

  62. Thivakar says:
    16 years ago

    தம்பி சிறி ரங்கன்,
    சிவசேகரத்தின்ட கவிதை உங்களை நல்லா சுட்டுப்போட்டுதெண்டு விளங்குது.புலிகளின்ட துப்பாக்கிக்கு பயந்து ஐரோப்பிய நாடுகளில பதுங்கி நீஙள் திரியேக்க, இஞ்சை நாட்டிலை இருந்து செயற்பட்டவர் சிவசேகரம். 
    கனக்க கதைக்கிற நீஙள், இப்ப புலியள் இல்லைத்தானே, நாட்டுக்கு திரும்பி வந்து ‘மக்களுக்காக வேலை செய்யலாமே… 
    ஐரோப்பிய சாய்மனை கதிரைல சாய்ந்து இருந்து கொண்டு வெத்து வேட்டு விமர்சனம் செய்துகொண்டு இருக்கிற ———- எல்லாம் சிவசேகரத்தின்ட மயிரை கூட விமர்சிக்க தகுதி இல்லாததுகள்….
    ஆது சரி சுய விமர்சனம் என்ட சொல்லை பாவிச்சு இருக்கிறிங்கள்… அந்த சொல்லின்ட அர்த்தம் தெரியுமோ உங்களுக்கு?

    • maniyan says:
      16 years ago

      //ஆது சரி சுய விமர்சனம் என்ட சொல்லை பாவிச்சு இருக்கிறிங்கள்… அந்த சொல்லின்ட அர்த்தம் தெரியுமோ உங்களுக்கு?// புலிகளையும் போராட்டத்தையும் காய்கிறதை தவிர இவையள் வேறை என்னதான் சொல்லுகினம் ,காகம் திட்டி மாடு சாகப்போறதுமில்லை, வடக்கு சிலபேராலை தெற்காகப்பொறதுமில்லை, ஆனால் நல்ல பொழுது போக்குமட்டும்,

      • P.V.Sri Rangan says:
        16 years ago

        //சுய விமர்சனம்//
        உது என்ன சாமான் மணியண்ணே?ஐயன் ஸ்ரையன்து ரலேற்றிவிற்ரேற் தியரியோ(Das Relativitätsprinzip , Z.B E = m \cdot c^2)அல்லது சொறுடிங்கர் பூனை (Bei Schrödingers Katze handelt es sich um ein Gedankenexperiment,)விளக்கமோ?புரியவில்லைச் சொல்லுங்களேன்…
        P/S:சும்மா பூச்சுத்தாமல் ஆகிற வேலையளப் பாருங்க.அப்புறம் துணியக்காணோம் துண்டக்காணோம்தானுங்க…

        • maniyan says:
          16 years ago

          அனுபவுஸ்தரான நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ,அலஸ் கிளா ,auch vieder sehn,

          • P.V.Sri Rangan says:
            16 years ago

            *_* //auch vieder sehn// 🙁

            Auf Wiedersehen,! ; Ja Kinder!

    • P.V.Sri Rangan says:
      16 years ago

      சிவசேகரம் அவர்களது மயிரை ஏன் அண்ணே விமர்சிக்க வேணும்?அவ்வளவும் பொன்னாலான மறு நாட்டலா?ஏதோ சொல்லுங்கோ-சொல்லுங்கோ!”தகுதி”குறித்துவேற பேசுறீங்க…என்ன தகுதி?அதையுஞ் சொல்லுங்கோ. பெயருக்குப் பின்னால-முன்னால போடும் தகுதியா அல்லது…

      • Thivakar says:
        16 years ago

        //பொன்னாலான மறு நாட்டலா?//
        தம்பி ரங்கன், (Definitely I didn’t mean ‘drunken’ ) பொன்னாலை செய்திருந்தால் தான் நீங்கள் விமர்சிப்பிங்களோ?இப்ப எனக்கு நல்லா விளங்குது….உங்கட விமர்சனத்தின்ட நேர்மை…
        //என்ன தகுதி?அதையுஞ் சொல்லுங்கோ. பெயருக்குப் பின்னால-முன்னால போடும் தகுதியா அல்லது//

        உங்கட தாழ்வு சிக்கல் எனக்கு விளங்குது கன்டியளோ…நான் அந்த தகுதிய சொல்லவில்லை…. (சிவசேகரம் ஒருகாலமும் தன்ட கல்வி தகமைகளை இலக்கிய உலகத்தில முன்னிறுத்தி செயற்படுவதில்லை)அதைவிட நிச்சயமாக அதி உன்னத தோழர்கள் கொண்டிருக்கும் “ஐரோப்பிய நாடொன்றில் ஸ்கொட்ச் விஸ்கியினதும் விலை கூடின சுறுட்டினதும் இததிதில் சுகமாக இருந்துகொண்டு தாய்நாட்டில் இருந்துகொண்டு மக்களோட வேலைசெய்யிற்வைய விமர்சிக்கிற” தகுதிய நான் சொல்லவில்லை….

    • xxx says:
      16 years ago

      சிறீ ரங்கன் கொமிசார் பொன் மொழி:
      “எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை! ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.”
      (முன்னர் இங்கு மேற்கோள் காட்டப்ப்பட்டது)

      “சிவசேகரம் அவர்களது மயிரை” விமர்சிக்க மட்டுமல்ல அரசியல் நீக்கஞ் செய்யவும் ஆணை பிறப்பித்தவரல்லவா பி.வி.சி. கொமிசார். அவரோடு கொழுவாதீர்கள். உங்களையும் அரசியல் நீக்கஞ் செய்ய ஆணை யிட்டு விடுவார். கவனம்.

  63. ஒளவை says:
    16 years ago

    புரட்சிக்கு இட்ட கருத்துநீர் முள்ளிவாய்க்கால் வ்ழி ஓடி,
    கொமிசார்
    பொய்யுக்கும் பொசியுமாம்..

    • Thivakar says:
      16 years ago

      புல்லுக்கு பொசிஞ்சாப்பறவாயில்லை. புல்லுருவிகளுக்குமெல்லோ பொசிஞ்சு துலைக்குது…

  64. P.V.Sri Rangan says:
    16 years ago

    திவாகரூ,உங்கட சமூக உளவியலைப் புரியக்கூடியதாகத்தாம்”விஸ்க்கியும்-விலைமிகு சுருட்டும் “உங்களைப்படாத பாடு படுத்திடின் யான் என் கொல்?

    சிவசேகரத்தின் கல்வித்”தகமை”பற்றி வேறு புளுத்திறியள்…நான் ஒன்றும் இது குறித்துப் பேசிவில்லை.கேள்விதாம் எது “தகுதி”என்பதே.

    அதுசரி.நான் ரொம்பத் தாழ்வு மனம் உடையவன்தாம்.அது குறித்து எப்போதும் கவலையும் கொள் காணேன் திவாகரூ.

    அது போகட்டும்.

    இலங்கையிலிருந்து சிவசேகரம் என்னத்தைப் *?புலிகளது அரசியலில் காயடிக்கப்பட்ட இடதுசாரிய போக்குகள் குறித்துப் பரவலாக வகுப்பெடுத்து,எழுதியவரோ அல்லது வீதிக்கிறங்கி மக்களுக்கு விளக்குவதற்கான தெருவோரப் போராட்டங்கள் செய்தவரோ?எல்லோரும்போல நித்திரைக்குப் போன ஆசான் மீளப் புலிசாகப் பேசும் “இடதுசாரியம்”புரியத் தக்கதே!

    ஒரு நோம் சோம்ஸ்கி( Noam Chomsky)அமெரிக்காவில்,கொன்டுராஸ்சில் ஒரு போவென்ரூறா(Dr.Boaventura de Sousa Santo),ஜேர்மனியில் ஒரு சாக்ஸ் ஸ்னைடர்(Prof. Dr. Schachtschneider ),கூவ் சிமித் (Prof.Dr.Juerg Huffschmid),இத்தாலியில் ஒரு அன்ரோனியோ நிக்கறி(Antonio Negri),பிரான்சில் ஒரு டானியல் பென்சாய் (franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd), இந்தியாவில்… Arundhati Roy என இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம்.இவர்களெல்லாம் பாசிசத்தை எதிர்பதிலிருந்து ஏகாதிபத்தியத்தைத் தினமும் புரட்டியெடுத்தவர்கள்-எடுப்பவர்கள்.இதில் டானியல் பென்சாய் சாகும்வரை போராடிச் செத்துப் போனார்.

    இங்கே,சிவசேகரம் இலங்கையிலிருந்த என்ன போராட்டாஞ் செய்தார்?பேராதலைக்குள் மார்க்சியப் போதனை செய்தாரா அல்லது மாலையில் இளைஞர்களைக் கூட்டிவைத்துப் புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக வகுப்பெடுத்தாரா?இப்படியெல்லாம் நோம் சோம்ஸ்கி செய்து வருகிறார்.

    இப்படி விசாரிக்கப் போனால் சொல்வீர்கள்,இலங்கையானது மிகக் கெடுதியான இராணுவப் பயங்கரவாத நாடு,அதுள் புலிகளோ மிகப் பரவலான ஒடுக்குமுறையாளர்கள்…அல்லது, “சிவசேகரம் பாரம்பரியமாக இடதுசாரியப் போராட்டங்களில் பங்குபற்றித் தன்னாலான போராட்டங்களை செய்தவர்.மறைவாக அணி திரட்டியவர்…” புடுங்கியவர்!

    அதுசரி,நீங்க யாரப்பா சிவசேகரத்துக்கு வக்காலத்து வேண்ட?அவருடைய செயலாளரா நீர் திவாகர்?அல்லது,அவரது மறு அவதாரமா?அன்றிப் பாலசூரியப் பொம்மானா, என்னே உங்க விசாரிப்பு…எதற்கெடுத்தாலும் விஸ்கி,சுருட்டு…
    புலிகள், பாசிசத்தை உலகெல்லாம் பரப்பிப் பிசசாகச் செயற்பட்டபோது நாம் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள்.இது கருத்தியலாகவும்,நடைமுறையாகவும்.இந்தப் புள்ளியற்றாம் சிவசேகரத்தைக் கேள்வி கேட்கிறோம்.அதற்கு”தகுதி”தேவையென நீர் பகர்வது,எந்தத் “தகுதி”எனச் சொல்வதைக் குறித்தான உமது உணர்திறனை வெளிப்படையாக வைப்பதற்கு மேற்காணும் விஸ்கி,சுருட்டுப்… என நீங்கள் குவிக்க விரும்பும் குப்பைகளைக் கொட்ட இனியொருவும் சம்மதிக்கிறதே…அதுதாம் இந்தப் புலத்தின்-தமிழர்களது தலையெழுத்து!

    • Thivakar says:
      16 years ago

      ஓம் ஓம் இனியொருவில் இப்பிடி சின்னபிள்ளை தனமா வேலை மினைக்கெட்டு உங்களோட சண்டை பிடிக்க எனக்கும் ஒரு மாதிரித்தான் இருக்கு. சிவசேகரம் ஒன்டையும் புடுங்கேலை என்டு குதிக்கிற நீங்கள், இலங்கைக்கு வந்து வீதிலை இறங்கி மக்களைதிரட்டி புரட்சிய முன்னெடுக்க தயாரா? அப்பிடி என்டா நானும் உங்களொட கை கோக்க தயார். இதை நான் உங்களுக்கு விடுக்கிற பகிரங்க சவாலா எடுத்துக்கொள்ளுங்கோ. நீங்க இலங்கைக்கு வாங்கோ, மக்களோட இருந்து வேலை செய்யுங்கோ, அப்ப நானும் உங்களோட சேர்ந்து நீங்கள் சொல்லுறமாதிரி நித்திரைக்குப் போன ஆசான்களை நானும் விமர்சிக்கிறன்…என்ன? Deal Ok ya?

    • xx.xx.xxxx says:
      16 years ago

      அறிவித்தல்
      இத்தால் சகல இணையத் தளபதிகளும் இணையப் புரட்சிக்கான கொமிஸார்களும் அறிய வேண்டியது.

      சிவசேகரம் என் கிற எதிர்-இணையப்-புரட்சிக்காரர் மீதான “கோட் மார்ஷல்” இத்தால் அறிவிக்க்சபபடுகிறது:

      குற்றச்சாட்டுக்கள்:
      1. நோம் சோம்ஸ்கி செய்து வருகிறது போல்வும் மு.க. ஸ்டாலின், லெனின் மதிவானம் மற்றும் சொந்தப் பேர்ப் புரட்சிச் சிங்கங்கள் எல்லாரும் செய்து வருவது போலவும் பேராதனைக்குள் மார்க்சியப் போதனைகள் செய்யாமலும் இணையத் தளபதி இரயாகரன் சிந்தனைகளை மெச்சிப் பேசாமலும் பி.வி.சி. கொமிசாரின் சிலிக்கோன் தத்துவங்கள் பற்றி மாணவர்கட்கு அறிவுறுத்தாமலும் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் நுண்ணுயிரியல் பொறியியல் வரைதல் கட்டிடக் கலை, இலத்திரனியல் தகவல் தொழினுட்பம் மருத்துவம் கணக்கியல் சட்டம் போன்ற எதிர்ப் புரட்சிகரப் பாடங்களில் ஒன்றையோ பலவற்றையோ கற்பித்து மாணவர்களை புரட்சிக்கர இணையத்தளங்களிலிருந்து திசைதிருப்பியமை.
      2. நோம் சோம்ஸ்கி செய்து வருகிறது போலவும் அவருக்கு முதல் தோழர்கள் ஹோ சி மின், அமில்கார் கப்ரால், மாஓ சேதுங், ஸ்டாலின், லெனின், மாக்ஸ், ஏங்கல்ஸ், அடம் சிமித், கவுட்ஸ்கி, புகாரின், பிளகனோவ்,, ட்ரொட்ஸ்கி, பாகுனின் ஆகியோர் செய்து வந்தது போலவும் மாலையில் இளைஞர்களைக் கூட்டிவைத்துப் புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக வகுப்பெடுக்காமல், எதிர்ப் புரட்சிகர ஒப்படைகளையும், டியூடோரியல்களையும் பரீட்சை விடைத்தாள்களையும் திருத்துவதில் நேரத்தைச் செலவிட்டு பாடங்களில் விளக்கம் கேட்டும் பிற தனிப்பட்ட ஆலோசனைகட்காகவும் வருகிற மாணவர்களுக்கு கேட்ட கேள்விகட்கு மட்டுமே விடை சொல்லி அதன் மூலம் மறைமுகமாகப் புலி ஆதரவுப் பிரசாரம் செய்து சிங்களப் புலிகளையும் உருவாக்கியமை.
      3. தன்னுடைய.அலுவலக அறையில் தமிழரங்கநாதத் தளபதியாரதும், சீரங்கத் தொண்டரடிபொடியாழ்வாரினதும் படங்கள்க் கண்ணுக்குத் தெரியும் படியோ தெரியாத படியோ எவ்விடத்தும் வைத்திராமை.
      4. தன்னுடைய ஓய்வுநேரங்களில் தமிழ்ரங்கர் தற்புகழ்த் துதிப் பாடல்களையும் பி.வி.சி. குழாயரஙகர் தற்புகழ்த் துதிப் பாடல்களையும் தானும் கேட்டுப் பிறரும் கேட்கும் வண்ணம் உரக்க ஒலிபரப்பாமை.

      இப் பட்டியல் இன்னும் முழுமை பெறவில்லை.

      இதனை முழுமைப் படுத்தவும் கோட் மார்ஷலைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து சரத் பொன்சேக்காவுக்கு முதல் சிவசேகரததை அரசியல்நீக்கம் செய்யவும் தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சகல இணையத் தளபதிகளும் இணையப் புரட்சிக்கான கொமிஸார்களும் இத்தால் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்..
      ஒத்துழைக்கத் தவறுவோர் பதவி நீக்கம் பெறுவதுடன் தாமும் ஒரு கோட் மார்ஷலுக்கு உட்பட்லாம் எனவும் இத்தால் எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
      இவண்
      இணையத் தள தாளபதிகள்
      பி. ரபாகரன்; பி.வி.சி. ரங்கநாதாச்சார்யத் தொண்டரடிப்பொடியாழ்வார் கள்

    • xxx says:
      16 years ago

      பி.வி.சிறீரங்கன் (பி.வி.சி.) பட்டியல் போட்டுப் பேர் குறிப்பிட்டவர்களுள் நோம் சொம்ஸ்கி மார்க்சியத்தை ஏற்காதவர். திட்டவட்டமாகவே லெனினை நிராகரிப்பவர். அருந்ததி ராய் மாஓ மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர். பெரும்பாலோர் தம்மை எவ்வகையான மார்க்சியர்களாகவும் அறிவிக்காதவர்கள். அதைப் பற்றி, மார்க்சியம் லெனினியம் மாஓ சிந்தனையின் ஏகபோக இணையத்தள உரிமை கொண்டாடும் எங்கள் ஒட்டுமொத்த விற்பனயாளர்கள் எதுவும் சொல்ல உண்டா?

    • Thivakar says:
      16 years ago

      “விஸ்க்கியும்-விலைமிகு சுருட்டும் “உங்களைப்படாத பாடு படுத்திடின் யான் என் கொல்”என்று ஒரு சாதாரணனை பார்த்து எகத்தாளமாக கேட்டும் உங்களது மாட்ட்சிமை தங்கிய மேட்டுக்குடித்தனம் அப்பட்டமாக புரிகிறது. இப்போதெனக்கு புரிகிறது தாங்கள் பேசும் புரட்சி, மாக்சிசம், ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் வர்க்கம் எல்லாமே…

  65. kariyavan says:
    16 years ago

    //ஒரு நோம் சோம்ஸ்கி( ணொஅம் Cகொம்ஷ்ய்)அமெரிக்காவில்,கொன்டுராஸ்சில் ஒரு போவென்ரூறா(Dர்.Bஒஅவென்டுர டெ ஸொஉச ஸன்டொ),ஜேர்மனியில் ஒரு சாக்ஸ் ஸ்னைடர்(Pரொf. Dர். ஸ்ச்கஷ்ட்ச்ஷ்னெஇடெர் ),கூவ் சிமித் (Pரொf.Dர்.Jஉஎர்க் Hஉffச்ஷ்மிட்),இத்தாலியில் ஒரு அன்ரோனியோ நிக்கறி(ஆன்டொனிஒ ணெக்ரி),பிரான்சில் ஒரு டானியல் பென்சாய் (fரன்ழொஎசிச்ச்கெ Tகெஒரெடிகெர் உன்ட் ஆக்டிவிச்ட் Dஅனிஎல் Bஎன்சïட்), இந்தியாவில்… ஆருன்ட்கடி றொய் என இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம்.இவர்களெல்லாம் பாசிசத்தை எதிர்பதிலிருந்து ஏகாதிபத்தியத்தைத் தினமும் புரட்டியெடுத்தவர்கள்-எடுப்பவர்கள்.//
    இவர்கள் எல்லாம் குகநாதன் வழக்க்கு விவகாரத்தில் தொடர்பா என ரஜாகரனிடம் கேட்டு சொல்வீர்களா?

  66. Corporal Zero says:
    16 years ago

    இவ்விடத்தில் ஒரு சிறு குறிப்பு உதவும் என்று நினைக்கிறேன்.
    சில மாதங்கள் முன்பு “வினவு” இணையத்தளம் வெளியிட்ட கவிஞர் சிவசேகரத்தின் “தளபதிகள் தவறு செய்வதில்லை” என்ற கவிதைக்கு பி.வி.சிறீ ரங்கன் இட்ட பின்னூட்டம் கவிதையைப் பற்றியதாக இல்லாமல் கவிஞர் மீதான வசைமாரியாக இருந்தது.
    அதை யார் “வினவு”வின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்களோ தெரியாது. இரண்டே நாட்களில் அது நீக்கப்பட்டு விட்டது.
    அந்த இடுகையைப் பார்த்த சிலருக்கு அதை எழுதியவர் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனைகளை உடையவர் என்று விளங்கியிருக்கும்.
    முடிந்தால் பி.வி.சிறீ ரங்கன் இதையும் மறுக்கட்டும்.
    மாமூலான அவருடைய பொய்களில் இன்னொன்றாக அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்.

  67. Mathavan says:
    16 years ago

    பொய்கள் மூலம் புரட்சியின் எழுச்சியை தடுக்க முடியாது.
    ஆனால் உண்மைகள் இன்றி புரட்சி எழவே முடியாது!
    –லெனின்

  68. யோகன் says:
    16 years ago

    இந்த
    திண்ணை பேச்சு வீரரிடம் – ஒரு
    கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – நாம
    ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    நல்ல கவிதை எழுதிய திரு.சிவசேகரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் இது போன்ற தரமான கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  69. P.V.Sri Rangan says:
    16 years ago

    இந்தத் தளத்தில் குதர்க்கமாகவே விமர்சிக்கப் பலர் இருப்பது தெரிகிறது.
    எனக்கு XXX / xx.xx.xxxx இவரது புரிதலையிட்டு லேபிள் குத்தப்பட்ட மதவாதிகளது புரிதலைக்குறித்து யோசிக்கிறேன்.
    நான் கூறியவர்கள் எவரும் மார்க்சியர்கள்-மார்ச்சியத்தை ஏற்காதவர்களென்பதையுந் தாண்டி ஏகாதிபத்தியத்தையும்,முதலாளித்துப் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பவர்களென்பதுவரைச் சொல்லப்பட்டது.
    போர்த்துக்கீசிய புத்திஜீவியான போவென்ரூறா(Dr.Boaventura de Sousa Santo)கொன்டிராசிலுள்ள ஏகாதிபத்தியங்களும் அவர்களது அடிப்பொடிகளும் வெளியேறெப் போராடுகிறார்.இன்று மார்க்சியத்தை ஏற்றவர்கள்தாம் போராட்டத்தில் நிற்கவேணுமென எவரும் கருதார்.
    அடுத்துப் பல்கலைக் கழகங்களோ பேரிசியர்களோ வர்க்கப் போராட்டத்தில் முன்னனியாளர்களில்லை என்பது எவருக்கும் தெரியும்.இங்கே,இருபத்தியோராம் நூற்றாண்டு, மரபுசார்ந்த பாட்டாளிய வர்க்கச் சர்வதிகாரம்-யுத்தத் தந்திரம் போன்ற அனைத்தையும் தலைகீழாக்கி வைத்திருக்கிறது.இதற்கு அன்ரோனியோ நிக்கறியின் காமன்வெல்த் (Commonwealth)மற்றும் Empire and Beyond,குட்பாய் Mr சோசலிசம்(Goodbye Mr. Socialism )போன்ற நூல்கள் மாறுபட்ட புரிதல்களைத் தருகிறது.அனைவரையும் மார்க்சிசிட்டுக்கள்-மார்க்சிச எதிர்ப்பாளர்களென அட்டையிட்டுக்கொண்டு இருப்பதும் ஒரு கலைதாம்…

    • xxx says:
      16 years ago

      “அனைவரையும் மார்க்சிசிட்டுக்கள்-மார்க்சிச எதிர்ப்பாளர்களென அட்டையிட்டுக்கொண்டு இருப்பதும் ஒரு கலைதாம்…” — பி.வி.சி.
      அக் கலையில் பி.வி.சியை விஞ்சவல்லோர் அருமை. (பி. ரபாகரன் கோபிக்க மாட்டார் என நம்புகிறேன்). அதற்கான எடுத்துக்காட்டாகவே அவரது பல்வேறு இடுகைகள் இருந்து வருகின்றன.

  70. xxx says:
    16 years ago

    இங்கே எல்லாவாற்றையும் “தர்க்கரீதியாகவே” சொல்லுகிற பி.வி.சி.யின் பொன்மொழிகளின் அடிப்படையிலேயே எதிர்வினைகளை எழுதினேன்.
    வாய்க்கு வந்தபடி பிறர் மீது அபாண்டம் சுமத்தித் தர்க்கரீதியாகப் பேசும் ஒருவரது தர்க்கங்களைத் தலை கீழாகக் கவிழ்ப்பது குதர்க்க்கம் என்றால் அது பி.வி.சி.யின் எந்தத் தர்க்கத்தையும் விடப் பெறுமதி வாய்ந்த்தது.

    ஒரு நல்ல புரட்சி வாதிக்குத் தேவையானவற்றுள் நேர்மை, தன்னடக்கம், சிறிது நகைச்சுவை உணர்வு என்பன அடங்கும்.
    வன்மமும் வக்கிரமும் அகம்பாவமும் கொண்ட தொனியில் பேசுவோர் நல்ல புரட்சி வாதிகளாக இருக்க இயலாது.
    இதைப் பற்றீ ப் பி.வி.சி.க்குச் சொலலிப் பயனில்லை எ.ன்றூ அறிந்தே சொல்லுகிறேன். அவர் என்றுமே புரட்சிவாதியல்ல, வெறும் வரட்டுப் போதகர் என்பதையே இதுவரை நாம் கண்டுள்ளோம்.

  71. தில்லாலங்கடி says:
    16 years ago

    ஐயா பெரியவர்களே, நீங்கள் ஆயிரம் விதண்டாவாதம் புரியுங்கள். ஆனால் எங்கட தேசிக்காய்த் தலைவர் போன நாள்ல இருந்து வெந்து நொந்து கிடந்த எனக்கு நம்பிக்கை நாட்ச்சதுரமாகத் தெரிவது தலைவர் கொமிசார் மட்டும் தான்.! காரணம் தேசிக்காய்த் தலைவர் போலவே ச(க)ர்வமும், (அகம்)பாவமும், எல்லோரையும் சமமாக ( அதேசமயம் எதிரியாக) பார்க்கும் பண்பும் நிரம்பியவர்.
    ஆகவே மகாஜனங்களே! என்னைப் போலவே எந்த கேள்வி முனறயும் இல்லாமல் தேசிக்காய்த் தலைவராக கொமிசார மட்டும் ஏற்றுகொள்ளுங்கள்!!

  72. mathavan says:
    16 years ago

    “மார்க்சியம் ஒரு வறட்டுச்சூத்திரம் அல்ல. புரட்சி நடைமுறைப்பணிக்கு மார்க்சியம் ஒரு வழிகாட்டி” என திரும்பத்திரும்ப லெனின் கூறிவந்தார். கொமிசார்
    பண்னையார் கூட்டம், புலத்தில் குந்தியிருந்து 20 வருடமாக
    புரட்சி நடைமுறைப்பணிக்கு என்னத்தை செய்து கிழித்தார்கள்?

    • rukku says:
      16 years ago

      லெனின் வேறெதைத்தான் பகரமுடியும் அவரும் ஒரு கொம்யூனிஷ குப்பை கிளறி, தனக்குத்தெரிந்த வித்தையை பாமரக்கூட்டங்களுக்கு குறளிவித்தை காட்டி கடைசியில் என்னத்தைத்தான் ”கிழித்தார்” ,கடைசியாக ரஷ்ய மக்கள் லெனின் அவர்களின் சிலையைக்கூட விட்டுவைக்கவில்லை குப்பையோடு குப்பையாக்கிய வரலாற்றை நீங்கள் அறியவில்லையா, சீனர்களுக்கு பாம்பு சிறந்த உணவு , பலருக்கு பாம்பு வழிபாட்டுக்குரிய தெய்வம் , பலருக்கு பாம்பு கொடிய விஷ பிராணி, அப்படித்தான் எல்லாம் உங்களுக்கு கல்லைத்தின்றால் சமிபாடு ஆகிறதென்பதற்காக எல்லோரும் உண்ணமுடியாது , கோவிக்காதீங்க அண்ணாச்சி கிழிப்பு,,,, புடுங்கி,,,,இதெல்லாம் நேரில் வேணுமானால் பேசிக்கொள்ளுங்க எழுத்துக்கு நல்லாவா இருக்கு,

  73. புல்லரித்தவன். says:
    15 years ago

    மே 18 அன்று எமக்கு எதராக அரங்கேற்ற முனைந்தனர். இரண்டு வெவ்வேறு இடத்தில் பிரிட்டிஸ் பொலிசாரி எம் தோழர்களை இநதக் புலிக் காடையர் கும்பலிடம் இருந்து பாதுகாத்தனர்.

    புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
    20.05.2011.

    ஆகா, பெருமையாக இருக்குது ஏகாதிபதிய எதிர்ப்பாளரகள் ஏகாதிபதியத்திடமே பாதுகாப்பு கேட்டு புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.

  74. குருடன். says:
    15 years ago

    கொமிசார்
    பண்னையார் கூட்டம் கதைக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்பது எப்போதோ தெரிந்த விடயம் தான்.! !!!!!!!!?

  75. ஊமை says:
    15 years ago

    ஒரு விடயம் தெரியுமா? புலிக்ளுக்கும் ஐரோப்பாவில் வாழும் இணைய புரட்சிவாதிகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. கடைசிக் காலங்களில் புலிகளின் தளபதிகளோ குனிந்து கிரனைட் எடுக்க முடியாமல் திண்டு பெருத்துப்போய் இருந்தார்களாம். அதை மாதிரித்தான் ஐரோப்பாவில் வாழும் இணைய தளபதிகளும் திண்டு பெருத்துப்போய் இருக்கிறார்கள். இணைய தளபதிகள் குனிந்து எப்படி தொழிலாளர்களுடன் வேலை செய்யமுடியும்? விடுஙகள் பாவம் !!!!

  76. தயா says:
    15 years ago

    “புரட்சி என்பது ஒரு இராப்போசன விருந்தல்ல, அது இலகுவான ஒன்றும் அல்ல, அது அழகான ஒரு ஓவியமோ அல்லது துணியில் புனையப்பட்ட சித்திரத் தையலும் அல்ல. அதை மென்மையாக, படிப்படியாக, கவனமாக, பரிவாக, மரியாதையாக, அமைதியாக, பதட்டமில்லாமல் முன்னோக்கி நகர்த்த முடியாது”
    – மாவோ சே துங்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...