Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாசிஸ்டுகளும்(புலிகளும்) பச்சோந்திகளும்(புலிஎதிர்ப்பாளர்களும்): பாண்டியன் தம்பிராஜா/செய்தி ஆய்வு

இனியொரு... by இனியொரு...
08/20/2008
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, பெளத்த, பேரினவாத அரசுகள் ஏற்படுத்தியமையும்É அந்த இரசாயன தாக்கத்தின் விளைவாக பாசிஸ கூட்டமான புலிகள் உருவாகியமையும் எங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.இலங்கையில் மக்கள் சிந்திய இரத்தமும், பிய்த்தெறியப் பட்ட அவர்களின் உடல்களுமே எமக்கெல்லாம் குடியுரிமைகளை பெற்றுத் தந்ததை மறந்து நாம் எங்கேயோ, எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம்.
 
இந்த இனப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என பல முறை கூட்டங்கள் போட்டுப் பேசி எந்தவித முடிவும் இல்லாமல் கலைந்து சென்றுள்ளோம்.ஒரு பகுதியினர் இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கும் புலிகளை தமிழ்மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதற்கும்இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வொன்றை வைக்க வேண்டும் (நான் உட்பட)எனவும்- மறுபகுதியினர் புலிப்ப பாஸிசத்ததை மாத்திரமே கருத்திற் கொண்டு எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை புலிகள் தோற்கடிக்கப்பட்டாற் போதும் எனவும்(எஸ.எல்.டி யின் முன்னணி உறுப்பினர்கள்)பேசி முடிவின்றி முடித்துள்ளோம்.
 
நாம் ஒன்றும் மிக இறுக்கமாக கட்டப்பட்ட இராணுவ இயக்கத்தை நடத்தவில்லை.அத்துடன் இங்கு இலங்கை மக்களின் இனப்பிரச்சனை பற்றி பேசப்படுவதாலும் இங்கு வெளிப்படையாக எல்லோருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களின் கருத்ததை கூறுவதையே விரும்புகிறேன்.
 
திரு இராஜநாயகம் அவர்கள் ஒரு கூட்டத்தில் ‘நாய்க்கு கல்லை எறிந்தால் எப்போதும் காலைத்தான் து}க்கும்.அது போல் நாங்களும் எப்ப பார்த்தாலும் இலங்கை அரசு ஒன்றும் தராது தராது எனத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்’என பேசினார்.இதற்கு மறுதலையாக கடந்த பதினைந்து வருடங்களாக எதற்கும் புலிகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்  என்பதை மறந்து விட்டார்.புலியின் இருப்பிற்கான காரணமே சிங்கள பெளத்த இனவாத அரசுகளே என்பதை (சிங்கள மக்களை குறிப்பிடவில்லை)ஒரு இடதுசாரி அமைப்புடன் தொடர்புடைய அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு மிக வியப்பாய் உள்ளது.
 
இந்த இணையத்தளங்களில் வாசிப்பவர்கள் எழுதுபவர்கள் தொண்ணூற்றைந்து வீதமானவர்களுக்கு தம்மை ஜனநாயகவாதிகள் என சொல்லிக் கொள்வோருடன் நெருக்கமான தொடர்புடையவர்கள்.ஆதலால் பல உதாரணங்களை சொல்லவில்லை.அப்படி இருந்த போதும் ஒரே ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது.ஒன்றுமே வேண்டாம் என சொன்ன எஸ்.எல்.டிஎப் பின் முன்னணி உறுப்பினர்கள் திடீரென இவங்கை அரசு முன்வைத்த குற்றுயிரும் குலையுயிருமான(என்னை பொறுத்த வரை)தீர்வை மிக வேகமாக நிராகரித்ததன் பின்னணி எனக்கு புரியவில்லலை.
 
மீண்டும் பாசிஸ புலிகள் தொடர்பான ஏராளமான தகவல்கள் உங்களுக்கு தெரியும் எனபதால் அவற்றை குறிப்பிடவிலலை.தயைகூர்ந்து என்னை புலிமுத்திரை குத்தி விடாதீர்கள்.
 
அண்மைக்காலம் வரை புலியுடன் நெருக்கமாய் இருந்து விட்டு புலிகள் தமக் கெதிராய் திரும்பியவுடன் புலிகளை எதிர்த்துவருபவர்களுடன் ஒருபோதும் நாம் இயங்க முடியாது என்பதை பலரிடம் பல தடவைகள் சொல்லி வந்துள்ளேன்.ஏனெனில் என்னைப் போல் சுப்பமார்க்கெட்டில் கூலித் தொழில் செய்பவர்கள்தான் புலியாதரவாளர்களுடன் நேரடியாக பேசக் கூடியதாய் உள்ளது.அவர்கள் எப்போதுமே புலிகளுக்கெதிராக நாம் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காது அல்லது அதை ஏற்றுக் கொண்டு பின்பு புலிகளுடன் ஒட்டுறவாய் இருந்து விட்டு தற்போது எம்மிடம் வேலை செய்பவர்களைப் பற்றி காரசாரமாக விவாதம் செய்வார்கள்.இது ஓரளவிற்கேனும் வென்றெடுக்க கூடிய புலியாதரவாளர்களை வென்றெடுக்க முடியாதுள்ளது.
 
புலியெதிர்ப்பு அரசியலுக்குள் பலரும் வந்ததால் இங்கு போட்டி அதிகரித்துள்ளது.ஆதலால் பலர் வேறு வேறு தளங்களை நோக்கி-உதாரணமாக சாதி அரசியல், பெண்ணியப் பிரச்சனைகள்,புலம் பெயர் இலக்கிய சந்திப்பு என தாவுகிறார்கள்.அங்கும் ஒரு தீர்மானகரமான சக்திகளாய் உருவெடுக்காது மோதிக் கொள்கிறார்கள்.இவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகளால் புலிப்பாசிஸத்திற்கெதிரான போராட்ட சக்திகளின் கவனம் திசைதிருப்பப்படுவதுடன் அச் சக்திகளின் ஆற்றல்களும் நேரமும் முற்றாக விரயமாகின்றது.
 
இணையத் தளங்களில் வரும் புலிப் பாஸிசத்திற்கெதிரான எழத்துக்கள் எல்லாம் தன்னலமற்று ஈழக்கனவுகளுடன் இறந்து போன ஆயிரக்கணக்கான போராளிகளை கொச்சைப் படுத்துவனவாய் வெளிவருகின்றன.உதாரணத்திற்கு தேனியில் கேதீஸ் லோகநாதனையும் லக்ஸ்மன்கதிர்காமரையும் ஒரே தராசில் வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மீள் பிரசுரம் செய்து (தினகரனிலிருந்து)கேதீஸ்லோகநாதனை மறுபடி கொலை செய்துள்ளார்கள்.ஒரு இளைஞனின் பரிதாப மரணம் என்ற தலைப்பில் செழியன் சிவகுமாரனைப் பற்றி எழுதிய கட்டுரை அந்தப் போராளிகளை மிகவும் கொச்சைப் படுத்துபவையாக அமைந்துள்ளது.
 
முன்பு தமிழ்ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாசிசப் புலிகளிடம் போராட்டத்தை பறி கொடுத்த பின்னர் விடுதலைப் போராட்டத்தற்கான அடிப்படை காரணிகளையே மறுதலிக்கின்றனர்.உதாரணமாகÉ
 
1)தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடகிழக்கின் கடற்கரைப் பிரதேசங்கள் இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கெனவும் அது தமிழருக்கு மி அதிகமானது எனவும்அத்தோடு நாம் கோரும் நிலப்பரப்பும் அதிகமானது எனவும்,
 
2)பல் கலைக் கழகங்களுக்கான தரப்படுத்தல் மிகச் சரியானது எனவும்,
 
3)தமிழ் தலைவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இனப்பிரச்சனையை அளவுக்கு மீறி பெருப்பித்து விட்டார்கள் எனவும்,
 
4)தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மிக அதிகம் எனவும் வசதிகளோடு உள்ளன எனவும்(இவர்களின் பிள்ளைகள் கம்êட்டரில் பயிற்சிகள் செய்ய அங்கே மின்சாரமின்றி பாடசாலைகள் இயங்க)என்றவாறாகபல காரணங்களை கூறி,
 
தொடக்க காலத்தில் இந்தப் போராட்டத்தை ஆதரித்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை பலிகொடுத்து இங்கு தப்பியோடி வந்த பின்பு இப்போது போராட்டத்திற்கான காரணங்களை மிகவும் கொச்சைப் படுத்துகிறார்கள்.

 
 
இது போன்ற ஏராளமான தவறான அரசியல் கணிப்புக்களை பாஸிஸப் புலிகளின் தொல்லை தாங்காமல் மேற் கொண்டு வருகின்றோம்.எனவே நண்பர்களே, நாம் இலங்கையிலுள்ள இனமுரண்பாட்டை தீர்ப்பதற்காக மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வோம்.உதாரணமாக,ரிபிசி றேடியோ இலங்கை அரசிடம் பணம் பெற்றதா என்பதை கூறலாம்.

அல்லது எஸ்.எல்.டிஎப் பின் முன்னணி உறுப்பினர்கள் இலங்கை து}தரக அதிகாரிகளை சந்திப்பதாக வரும் தகவல்களை (எமக்கு பகீரென்று இருக்கும்)வெளிப்படையாக சொல்லலாம்.

அல்லது தேசம் நெற்றில் வெளிவந்த சர்ச்சைக்குரிய பயணங்களை மேற் கொண்டவர்கள் தமது பயணம் தொடர்பாக வெளிப்டையாக கூறுவது போன்றவற்றை செய்வதன் மூலமே ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை தீர்ந்து பரஸ்பரம் இணைந்து இயங்க முடியும்.

எனவே முன்பு கூட்டணி அரசியல்வாதிகள் மாதிரி எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொள்கிறோம்,நீங்கள் எமக்கு தொண்டராக இருங்கள் என 21ம் நூற்றாண்டிலும் கூறாதீர்கள்.
 
தயைகூர்ந்து இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க முதலமைச்சா; கனவுகளை ஒதுக்கிவிட்டு(வடகிழக்கு கிராம சபை தலைவர்களின் பெயர்களை ‘முதலமைச்சர்’ என மாற்றினாற் கூட இங்கு முதலமைச்சர் கனவுகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு அடங்காது)திறந்த மனதுடன் கை கொடுக்க வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றேன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அமெரிக்கா திட்டமிட்டுள்ள போலந்தில் ஏவுகணை நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்தானது!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In