Sunday, June 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

இனியொரு... by இனியொரு...
06/09/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

jeya-oldதனது மாநிலத்திலேயே ஈழத்தமிழர்களை மிருகத்தனமாக ஒடுக்கி விலங்குகள் போல் சிறையிலடைத்து சித்திரவதை செய்யும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஈழப் போராட்ட வரலாறு முழுவதுமே அதிகாரவர்க்கம் நாடகமாடிய வரலாறாகிப் போயுள்ளது.

முக்கியமான பிரச்சினை ஒன்றை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் பண்டார தசநாயகே, மேஜர் ஹரீஸ் சந்திரா ஹெட்டியாராய்ச்சி, ஆகியோருக்கு நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ந் தேதி தொடங்கிய பயிற்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு ஏவிவிட்டுள்ள கொடூரங்கள் நீடித்து வருவதால் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உள்ளது. இந்த உணர்வுப்பூர்மான நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை அழைத்து பயிற்சி அளிப்பது கடும் அதிர்ச்சியையும், உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

நான் ஏற்கனவே 16-7-2012, 25-8-2012, 28-8-2012 ஆகிய தேதிகளில் உங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் அளித்த பயிற்சி தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை குறிப்பிட்டு இருந்தேன். இது தமிழகம் தழுவிய மிக கடுமையான உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை இன ஒழிப்பு செய்யும் நடவடிக்கைகள் நீடித்து வருவதாலும், மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாலும், இந்திய தமிழ் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல் நீடித்துக் கொண்டு இருப்பதாலும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது.

இது தொடர்பாக நாங்கள் பலமுறை எங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு சட்டசபையிலும், கண்டன தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். இவ்வளவு கடுமையாக எதிர்ப்புக்கு மத்தியிலும், அதை கண்டு கொள்ளாமல் தமிழ்நாட்டின் உணர்வுகளையும், கோபத்தையும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி அளிக்க அனுமதித்து இருக்கிறீர்கள்.
பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் : ஜெயலலிதாவின் புதிய நாடகம்

27-ந் தேதியில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தான் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இலங்கை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள உணர்வை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சிகளை நாங்கள் புரிந்து வைத்து உள்ளோம். தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஏ.கே. அந்தோணி கூறியிருக்கிறார். அவருடைய பேச்சை அவரது துறையே மீறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான விஷயத்தில் மத்திய அரசு இட்டை வேடம் போடுகிறது. எங்களை ஏமாற்றுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இதை சொல்லிக் கொள்வதற்காக நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 அதிகாரிகளையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான கொள்கையை பின்பற்ற வேண்டும். எனவே இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோ, ஒத்துழைப்பு கொடுப்பதோ நடக்க கூடாது. இலங்கை அரசு அங்கு முற்றிலுமாக தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரையிலும், தமிழ்நாடு மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையிலும் அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க கூடாது. இதில் விரைவான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 5) : கிளிங்டன்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 5) : கிளிங்டன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Her government had allocated funds for Sri Lankans still living as refugees in Tamil Nadu, India. I appreciate that. She should stop with that.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...