Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நோர்வேயில் வாசித்தலுக்கான உரையாடல் வெளியில் கணேசன் (ஐயரின்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ : நோர்வே நக்கீரா

இனியொரு... by இனியொரு...
12/04/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
22
Home பிரதான பதிவுகள் | Principle posts

இனியொருவின் வெளியீட்டான ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஏனும் கணேசன் ஐயரின் நூலில் தான் கடந்துவந்த போராட்டப்பாதையில் தொடர்ந்து வந்த அனுபவங்களையும், மறைந்திருந்த உண்மைகளையும், தவறுகளையும், சுயவிமர்சனமாகயும், பிரபாகனுடன் புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள் பற்றியும் இப்புத்தகத்தினூடு திரும்பிப்பார்க்கிறார்.

உண்மையுடன் கூடிய இப்படியான புத்தகங்கள் வெளிவருவதனூடாக மட்டுமே எமது போராட்டத்தில் விட்டதவறுகளை, மறைந்து கிடக்கும் உண்மைகளை மறுபரிசீலனை செய்துகொண்டு எம்மக்களின் எதிர்காலவாழ்வையோ, போராட்டத்தையோ செப்பனிடமுடியும். இப்புத்தகங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும்போதும், வாதம் பிரதிவாதங்களூடும் உண்மைகளைக் கண்டறிவதுடன் புத்தகத்தின் நேர்மைத்தன்மையும் புலனாகும். இன்றும் புலிகள் அமைப்பினுள் என்ன நடந்தது, முள்ளிவாய்கால் எப்படி முடிந்தது என்பன யாருக்கும் புரியாத புதிராகவே இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே இன்று உயிர்த்தெழும் ஜனநாயகப்போராட்டம் சாண் ஏற முளம் சறுக்குவதுபோல் மீண்டும் 1958ல் இருந்து ஆரம்பமாகிறது. காரணங்கள் பலவாக இருந்தாலும் மறைக்கப்பட்ட, தெளிவற்ற புலிகளின் போராட்ட வரலாறு வெறும் இராணுவமாகவே கட்டியெழுப்பப்பட்டது. மாற்றுவழிப்போராட்டம் பற்றிப்பேசியவர்களும் இந்த இராணுவமயமான புலிகளால் பாதிக்கப்பட்டதாலும், தற்காப்பு நோக்கியும் இராணுவத்தையே கட்டி எழுப்பினர். இராணுவமாயை பொய்கள், மிகைப்படுத்தல்களினூடாக வளர்ச்சியும் பெற்று இறுதியில் முற்றாக நிர்மூலமாக்கப்படும் போது மக்களினதும், அரசியல்வாதிகனதும் தன்னம்பிக்கையும், போர்குணமும் அழிக்கப்பட்டது என்பதே தெளிவு. இராணுவமைப்பு மட்டும் கட்டியெடுப்பப்பட்டதன் விளைவை மக்கள் போராட்டம் என்று பிரிந்துவந்தவர்கள் கூட இராணுவத்தைக் கட்டியமைப்பது பற்றியும் ஐயர் சுயவிமர்சனம் செய்து கொள்கிறார்.

புலிசார்ந்த, சாராத அமைப்புக்களின் இப்புத்தகத்தை அறிமுகம் செய்ய முயன்றபோது விடைகள் இல்லாத கேள்விகளுடன், புலிப்புத்தகம் என்றும், புலியை விமர்சிக்கும் புத்தகம் என்றும், குழுக்களின் பதில் தேவை என்ற தட்டிக்களிப்புக்களுமே மீதியாயின. புலிமுத்திரையின் பின்னால் புலியெதிர்ப்பு நடவடிக்கைகளை உணரக்கூடியதாகவும், அன்று தம்மைப்புலிகளாகக் காட்டிக் கொண்டவர்களே இன்று நேரடியாக புலியெதிர்ப்புபாளிகளாகவும், அரசஆதரவாளர்களாக இருப்பதையும் இப்புத்தகவெளியீட்டு முயற்சியின்போது கண்ணுற்றேன். பதிலில்லாக் கேள்விகளாலும், கேள்வியற்ற பதில்களாலும், காரியமறுப்புக்கான மௌனங்களாலும், பயக்கெடுதியாலும், முதுகில் முத்திரை குற்றப்படும் என்ற எண்ணங்களாலும் புத்தகத்தை அறிமுகம் காலதாமதமானது.இதைத்தீர்க்கும் முகமாக ஒருதிறந்த உரையாடல்வெளியை அமைப்பதனூக மட்டுமே முடியும் என்பதை என்நண்பர் சஞ்சயனும் நானும் உணர்ந்தோம். இப்புத்தகம் இதற்கு ஒருவடிகாலாக அமைந்தது மகிழ்ச்சிக்குரியதே.

இதனால் 2.12.2012 ஞாயிற்றுக்கிழமை ஐயரின் புத்தகத்துடன் காலஞ்சென்ற புஸ்பராஜாவின் ஈழவிடுதலைப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் என்று புத்தகத்தையும், 11.11.2011 நோர்வே அரசால்வெளியிட்ட நோவேயின் அனுரசணைப் பதிவில் தனது பார்வை என்ற பொருளடக்கத்தில் லிமானின் உரையையும், செல்வினின் 13திருத்தப்பற்றி தெளிவான விளக்கவுரையும் நடந்தேறியது. இங்கே ஐயரின் புத்தகவறிமுகம் பற்றிய பதிபை மட்டம் தற்போது பிரதிசெய்கிறேன்.

எனது தொடர்பில் இப்புத்தகத்தை அறிமுகம் செய்பதற்காக ஆயுதப்போராட்டத்தின் பிதாமகனான சத்தியசீலண்ணரும், வெளியீட்டாளரும் இனியொருவின் பிரதம ஆசிரியருமான சபா நாவலனும் நோர்வேக்கு விஜயம் செய்திருந்தார்கள். இப்புத்தகத்தின் முதலில் நான் அறிமுகம் செய்தபோது, வெளியிடுவதற்கான காரணம், போராட்டப்பங்களிப்புப், புத்தம் பற்றிய எனது சிறுபார்வை, முக்கியமாக உயிருடன் இருப்பவர்களின் வாழ்வியல் காரணங்களால் மறைக்கப்பட்ட விடயங்கள்;, இப்படியான புத்தகங்கள் வெளிவரவேண்டிய அவசியம், என்னுடன் தொடர்பான, அறிந்த, செவிமடுத்த விடயங்களில் நான் காணும் உண்மைகளையும், முதலாவது புதியபாதை எழுதும்போது குமணனின் வீட்டில் ஐயரை சந்தித்த விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

என்னைத்தொடர்ந்து நாவலன் சபைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஐயரின் உழைப்புப்பற்றியும், போராட்ட குணம்கொண்ட நோவேயியர்கள்;, புரட்சி என்றும் எற்றுமதி செய்யப்பட முடியாது என்றும், போராட்டத்தில் கொலை என்பது தற்காப்பு மட்டுமே என்றும் கூறியிருந்தார்.

நாவலனின் உரையை சிறியவிரிவாக்கம்:

நோவேயியர்கள் போராட்டங்களினூடு வளர்ந்ததால் போர்குணமும், இடதுசாரித்தியப்பண்பியலையும் காணக்கூடியதாக உள்ளதாகவும், ஒரு மக்கள் கூட்டம் அடக்கு முறைக்கு உள்ளாகும் போது அது தனக்கான போராட்டவடிவத்தை தானே தெரிவு செய்யும் என்பதையும், உதாரணமாக உப்பு விலைஉயரும் போது அதற்காக நாம் இங்கு போராடமுடியாது. போராட்டம் ஏற்றுமதி செய்யமுடியாதது என்றும், போராடவேண்டியவர்கள் தேவையுள்ளவர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார்.
போராட்டங்கள் என்றும் முடிந்துவிடுவதில்லை உதாரணமாக குறுடிஸ் இனத்தவர்களின் ஆயுதப்போராட்டம் அவர்களின் தலைவன் பிடிபட்டதும் அழிந்துவிடவில்லை. அது வேறுமுறையில் புதியவடிவம் பெற்று வெற்றியைக் கண்டுள்ளது. அதேபோல் பாலஸ்தீனப்போராட்டமும் அழிந்துவிடவில்லை. இன்று இலங்கையில் பாதிக்கப்படும் மாணவ, தொழிலாளவர்க்கப் போராட்டங்கள் தெற்கில் முனைப்புக் கொள்வதைக் காணலாம். எமது போராட்டத்தையும், போராட்டவடிவங்களையும் திரும்பிப்பார்த்தல் எமது புதியபோராட்டகளைச் செப்பனிடும் என்பதையும் அறிவுறித்தினார்.
இதனைத்தொடர்ந்து சபையின் கேள்விகள், கருத்துக்கள், பதில்கள் என்பன இடம்பெற்றது. இவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. தொடர்ந்து இடைவேளையின் போது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன ஏறக்குறைய வந்த அனைவருமே வாங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாணவர்பேரவை ஸ்தாபகரும் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தாவுமான சத்தியசீலன் அவர்கள் தனது போராட்ட அனுபவத்தையும் ஐயரின் புத்தகம் பற்றியும் பேசினார்.
மாணவர்பேரவையிள் தோற்றமும் தேவையும், அதுபற்றிய வெளிவந்த குறிப்புகளாக நெடுமாறன், குப்புசாமி, எஸ் சிவஞானம், தந்தைசெல்வாவின் அரசியல் பற்றி சபாரட்ணம் எழுதிய குறிப்புக்கள், பெரதேனியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞன் அமைப்பு, 1970 தரப்படுத்தலுக்கெதிரான போராட்டம், 23.11.1970 ல் நடைபெற்ற 10000 போருக்கு மேல் பங்குபற்றிய பகிஸ்கரிப்பு என்பன பற்றி விளக்கமாக விபரித்தார். மாணவர்பேரவையின் முடிவும் இளைஞர்பேரவையின் ஆரம்பமும், 1973களில் இளைஞர்பேரவையின் பிரிவும், புலோலி வங்கிக்கொள்ளை (ஈழவிடுதலை இயக்கம் ரெலோ அல்ல) பற்றியும் விபரித்தார். தொடர்ச்சியாக தான் கைது செய்யப்பட்டு 77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.

தொடர்சியாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் தொடரும்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களிற்கு ஆதரவு : புதிய திசைகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களிற்கு ஆதரவு : புதிய திசைகள்

Comments 22

  1. pathmanathan says:
    13 years ago

    என்னால் வர்முடியாமல் போனது கவலைதான் ..அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம்…நன்றாக நடைபெற்றது என்று கேள்விப்பட்டேன்..

  2. Ravi says:
    13 years ago

    வணக்கம்!
    ஒழுங்கு செய்யப்பட்ட இந்த உரையாடல் நிகழ்வு காலத்தின் தேவையெனினும், பன்முகத்தரப்பினரின் கலந்துகொள்ளல் சரிவர அமையவில்லை என்பதே என் கருத்து. ஆவணப்படுத்தல் முக்கியமானதும் காலத்தின் கடமையுமாகும். நிகழ்வுக்கு வந்தவர்கள் சிலரின் தற்புகழ்ச்சி பாடல் சற்று அருவருக்க வைத்தது. இருப்பினும் அவரவர் மனக்கிடைக்கைகளை உணரக்கூடியதாக இருந்தது.

    • Norway Nackeera says:
      13 years ago

      இரவி உங்களுடைய கருத்து “பன்முகத்தரப்பினரின் கலந்துகொள்ளல் சரிவர அமையவில்லை என்பதே என் கருத்து.” மிகவும் சரியான கூற்று இரவி. ஆனால் இந்த அறிமுகம் பற்றி சகல தரப்புகளுக்கும் தனிப்பட்ட முறையில் தகவல்கள் கொடுக்கப்பட்டன. அவர்களை இப்புத்தகத்தை அறிமுகப்படுத்துமாறும் கேட்கப்பட்டது. இதனால் தான் வாசித்தலுக்கான உரையாடல்வெளி உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நன்றி இரவி.

  3. நெருஞ்சி says:
    13 years ago

    இதன் நேரடி ஒலி அல்லது ஒளிப்பதிவை வெளியிட முடியாத அவல நிலை,
    இந்தப் “படங்காட்டிகளிடம்” அல்லது “எழுத்து வலிப்பாளர்களிடம்” இருப்பது ஏன்?

    • Mullu says:
      13 years ago

      நெருஞ்சி குத்தவே நிற்கிறது. இனியொரு என்ன தொலைக்காட்சியா நடத்துகிறது படங்காட்ட? அதை நீங்களே செய்யலாமே.  எழுதுபவர்களுக்கு எல்லாம் வலிப்பு என்றால் நீங்கள் என்னமாதிரி? வலிப்பில் நாக்கைக் கடிக்காது இருப்பதற்கு வாய்க்குள் திறப்பு வைத்துவிட்டார்களோ?

      • Mullu says:
        13 years ago

        மெரிஞ்சி முனையை சேர்ந்த நோர்வே வாழ் வில்லங்கங்கள் விஞ்ஞானி ஒருவரின பேருடன் நெ(ரு)ஞ்சி வஞ்சம் கொண்டு இணையத்தளங்களில் காழ்புணர்வுகளைக் கக்குவது வளக்கம். 

  4. நெருஞ்சி says:
    13 years ago

    வாசகர் பதிவு December 4, 2012 திகதியுடன்,”நோர்வேயில் வாசித்தலுக்கான உரையாடல் வெளியில் கணேசன் (ஐயரின்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ : நோர்வே நக்கீரா” என்று “இனியொரு” வில் எழுதி விட்டு,

    பின் அதைக் கத்தரித்து,

    நோர்வேயில் ஐயரின்-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : நோர்வே நக்கீரா December 6, 2012 என்ற தலைப்பில் “தேசம்நெட்” டிற்கு எழுதிற யோக்கியதை அல்லது தில்லுMullu யாருக்கு வேண்டும்?

    விளங்காமல் போனதுகள் எல்லாம் எழுதுதுகள்.

    • manimaran(watchdog) says:
      13 years ago

      நெருஞ்சி முள்  கோவை  என்ற பெயரிலும்  கலாய்க்கிறார்.இந்த முள்ளுக்கு சொந்த பெயரில் கலாய்க்க தில்லு இல்லை பாருங்கோ . இவரு இன்னும் சில பெயருகளுல ரீல் விடுகிறார்;சொந்த  அடையாளம் தெரிந்துபுட்டா தன்னை துரத்தியடிப்பார்கள் என்ற பயம் தான் இந்த இணைய மே(கா)ய்ச்சல்காரர்களின் குலத்தொழிலாகப்போய்விட்டது.
      அடையாளமில்லா விலாசக்காரர் கோள் சொல்வது தற்போதய தேசிய  பாசன் கண்டியளோ.

      மணிமாறன் (காவல் நாய்)

    • Mullu says:
      13 years ago

      விளக்கம் குறைந்தால் எல்லாம் நெருஞ்சியகத்தான் இருக்கும். ஒருகட்டுரை வேறு இணையத்தளங்களில் பதிவு செய்யப்படாது என்று ஒரு சட்டம் யார் போட்டது. படத்தக்கும் பதிவுக்கும் வித்தாயசம் தெரியாததுகள் எழுதினால் இப்படித்தால் தில்லில்லாவர்கள் முல்லைப்பற்றி கதைக்க என்ன உரிமை இருக்கிறது. நானும் இதை தேசத்தில் பாத்தனான் அதில் என்ன தவறு இருக்கு. நெருங்சிய நெரித்து பின் எதித்தால்தான் நெருங்சி படராது இருக்கு. இல்லையென்றால் போற வாறவர்களின் காலில் குத்தும் இந்தநச்சு முள்ளு

      “விளங்காமல் போனதுகள் எல்லாம் எழுதுதுகள்.” விளங்காதது எனக்கு நக்கீராவுக்கு உமக்கா? நெருஞ்சிக்கு விளங்காது நெருஞ்சியும் விளங்காது.  விளங்காட்டில் கம் என்று இருக்க வேண்டியதுதானே.அது சரி நெருஞ்சிக்கு ஏன் எரியுது. நெருஞ்சியை எரித்தால்தான் மனிதர்கள் நல்ல வழியில் போய் வரலாம். 

  5. நெருஞ்சி says:
    13 years ago

    அடைப்பிற்குள் இருக்கும் காவல் நாய்,”அடையாளமில்லா விலாசக்காரர்” மீது மோப்ப நாயாக மாறக் கூடாது.

    சும்மா ஏவல் நாயா வந்து,தெருக்குலைப்பு செய்யக்கூடாது.

    moneyமாறா(watchநாய்)! உன் சொந்தப்பேர் எது,சோந்த பேர் எது என்பதா கட்டுரை?

    விளங்காமல் போனதுகள்,வில்லங்கமா ஏன் எழுத வாறியள்?

  6. shan Naran says:
    13 years ago

    ஒரு புத்தகத்தில் உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது உருவாகிய முறை, எழுதப்படும் சூ நிலை , வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
    எமது போராட்ட வரலாற்றில் விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட விதத்தையும்
    நாங்கள் விடப்பட்ட பிழைகளை மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது

  7. shan Naran says:
    13 years ago

    ஒரு புத்தகத்தில் உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது உருவாகிய முறை, எழுதப்படும் சூ நிலை , வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது

  8. Mullu says:
    13 years ago

    நெருஞ்சி போன மனம் நெரிஞ்சவர்கள்: வக்கில்லாது போனவர்கள் வசைவாடுவது ஒன்றும் எமக்கு விசித்திரமானதில்லை. என்ன கவலை என்றால தன்பெயரைக் கொண்டவர்கள் இப்படிப் போனார்களே என்று அப்பிள் விழுந்த விஞ்ஞானியின் ஆத்மா கவலைப்படப்போகிறது. ஒரு படைப்பு எத்தனை ஊடகங்களிலும் வரலாம் என்பதைத் தெரியாமல் மற்றவர்களை மட்டம் தட்டுவது நெருஞ்சி நெரிஞசு போய் உள்ளது- இன்று இணையங்களில் தேடியபோது இப்புத்தக வெளியீடு பற்றி இன்னொரு இணையத்தளத்தில் போட்டிருந்தார்கள். அதிலுள்ள படத்தில் 13 பேர் உள்ளார்கள். புத்திதான் சுவாதீனம் என்றால் கண்ணிலுமா? இப்படத்தில் தெளிவாகவும் பெரிதாகவும் ஒரு பக்கம் பட்டமே உள்ளது. அதிலேயே 13 போர் உள்ளனர்.  அக்கினிக்குஞ்சுகள். கொம் ஐப்பார்க்கவும்.

  9. Mullu says:
    13 years ago

    http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=5888:2012-12-08-11-56-15&catid=307:intro

  10. நெருஞ்சி says:
    13 years ago

    தில்லுMullu! ஊரில இருக்கிற தெரிஞ்ச எல்லாரையும்,என்ர எழுத்தோடை சிண்டு முடியாத ராசா.
    சத்தியசீலன் முகத்தை மறைத்த படத்தைப் போட்டு,”இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.” என்ற முடிவுரையுடன் எழுதப்பட்ட “நோர்வே நக்கீரா”த் தொடர், “Thankyou Inioru.com”என்ற அடிகுறிப்பற்று,”…..ஏறக்குறைய வந்த அனைவருமே வாங்கினார்கள்…..”
    “…இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.தொடர்சியாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் தொடரும்” என்பதை நீக்கி,தேசம்நெட்டில் வெளியிட்டது,எந்த வகை யோக்கியத்தனம்?

    • Mullu says:
      13 years ago

      நெருஞ்சி குப்பை எதுவாயினும் இருக்கவேண்டிய இடம் குப்பைத்தொட்டிதானே. அதற்குள் சீண்டமுடியாத ராசா. எந்த எந்தக்கேள்வியை யாருடம் கேட்பது என்தை அறியாமல் விசும்புக்கு வேட்டையாதை ராசா. எதற்கும் வக்கில்லாதவர் வசைபாடுவது வளக்கமான ஒன்றுதானே. உமது பின்நோட்டம் முழுவதையும் வாசித்துப்பாரும். ஏதாவறு பெறுமாதியானது உண்டா? எதையும் விளங்காத வில்லங்கங்கள் நெருஞ்சிதான். இது ஒரு நச்சு பூண்டு. இது மற்றவர்களை குத்துவதற்கே பிறந்தது. இதனிடம் வேறு எதை எதிர்பாக்கலாம் நெருஞ்சிப்பூண்டுடன்

    • manimaran(watchdog) says:
      13 years ago

      இவர் என்ன தமிழ்  இணைய வலையமைப்பின் சென்சார் போட்டின் தல போல கிடைக்கு? 
      முகமூடிக்குள்  மறைந்து கொண்டு  மற்றவர்களின் யோக்கியதை பற்றி கதையளக்கிறார் ?
      25வருட எழுத்துலக வாசிப்பின் அனுபவத்தின் படி சொல்கிறேன் இந்த நெருஞ்சி தான் கோவை ;

  11. நெருஞ்சி says:
    13 years ago

    எழுத்துலகில் அஞ்சு வயசு முதல் வாசிக்க முனைந்திருந்தால்,கன பேர் கொண்ட,முகமூடியற்றவருக்கு முப்பது வயசு போல.

    இன்னும் முப்பது வருஷம் காத்திரும்.

    அப்பவாவது மோப்ப சக்தி கிடைக்கிதா எண்டு பாப்பம்.

  12. Aathie says:
    13 years ago

    Tracking you is not hard but who can be bothered, not worth the effort.

    • நெருஞ்சி says:
      13 years ago

      Aathie!
      கொலையாளியாக செயற்படும் கைக்கூலியால் மட்டுமே,”Tracking you”,” not worth” போன்ற சொற்பதங்களை,தானறியாமலே,இயல்பாக பிரயோகிக்க முடியும்.

      • Aathie says:
        13 years ago

        Like I said if someone wants to they can and it is bound to happen if you keep taunting them. I can assure you I am least interested to know who you are. It sounds like you lack the technical realities of what is possible and what is not. 

  13. நெருஞ்சி says:
    13 years ago

    Aathie!
    சம்பந்தமற்ற உரையாடலில் வலிந்து வந்து,
    எனக்கு வெளிப்படுத்தும் மிரட்டலும் (…..bound to happen….),
    இதை வைத்து யாருடமோ பேரம் பேசுகிற சூசகமும்(….least interested….) எழுத்தில் வெளிப்பட்டு நிற்கிறது.

    பழைய தொழில் பெருமை கொண்டு, “புதிய வரவு” தேடுபவனாக…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...