இராக்கில் அமெரிக்கா மீண்டும் தவறு செய்கிறது என்று சதாம் உசேனின் வெளியுறவு அமைச்சராக இருந்த தாரிக் அசிஷ் கூறி னார். பாக்தாத் சிறையில் இருக்கும் அசீஷ் பிரிட்டிஷ் தினப்பத்திரிகையான ‘கார் டியனு’க்கு அளித்த பேட்டி யிலேயே இவ்வாறு கூறி னார். தமதுபேட்டியில் சதாம் உசேனை முழுமை யாக ஆதரித்தார் அசிஷ்.30 ஆண்டுகளில் சதாம் கட்டி எழுப்பிய நாட்டைத் தகர்த்த அமெரிக்கா இப் போது முற்றிலும் மோச மான சூழ்நிலைமையில் நாட்டைவிட்டுச் செல் கிறது என்று அவர் கூறி னார்.இராக்கின் அமெரிக்கப் படையின் நடவடிக்கைகள் இம்மாதம் 31ம்தேதி முடி வுக்கு வரும் என்று ஜனா திபதி பாரக் ஒபாமா அறி வித்திருப்பது குறித்து கருத் துத் தெரிவிக்கையிலேயே தாரிக் அசிஷ் இவ்வாறு கூறினார்.
சதாம் தவறு செய்ய வில்லை. அவர் உலகிடம் பொய் சொல்லவில்லை. தனது நாட்டையும், மக்க ளையும் சதாம் பராமரித் தார். அவர் குற்றவாளி என்று அமெரிக்கா கூறுவதை நான் ஏற்கவில்லை. எனக்கு இப் போதும் அவர் மீது மதிப் பும் மரியாதையும் உண்டு. 30 ஆண்டுகளில் சதாம் நாட் டைக் கட்டி எழுப்பினார். இன்றைய நிலைமை மிக வும் பரிதாபகரமாக உள் ளது. மக்களைக் கவனிக்க யாரும் இல்லை. நோயா லும், பட்டினியாலும் மக் கள் வாடி வதங்குகின்றனர்.தினமும் நூற்றுக்கணக் கானோர் வன்முறைகளில் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்காவும், பிரிட்ட னும் தான் இதற்குப் பொறுப் பாளிகள். அவர்கள் எங்க ளது நாட்டை அழித்துவிட் டனர் என்றும் தாரிக் அசிஷ் கூறினார். பல்வேறு குற்றங் களைச் சுமத்தி அமெரிக்க பொம்மை அரசு தாரிக் அசி ஷுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.அமெரிக்கா இராக்கில் பாதுகாப்பை பலப்படுத்து வதாக கூறி நாட்டின் செல் வத்தை கொள்ளையடித்து வருவதை உலகமே அறியும். இரா க்மீது போர் தொடுக்க ஏதாவது ஒரு பொய் கார ணம் வேண்டுமென்று கரு திய அமெரிக்கா இராக் கிடம் பேரழிவு ஆயுதம் இருப்பதாக கூறி ஆக்கி ரமிக்க தொடங்கியது.